என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் மேலாளரை மிரட்டி பணம், செல்போன் பறிப்பு
    X

    கோவையில் மேலாளரை மிரட்டி பணம், செல்போன் பறிப்பு

    • சபரிநாதன் சுந்தராபுரத்தில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.
    • 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கும்பல் திடீரென சபரிநாதனிடம் தகராறு செய்தனர்

    கோவை,

    கோவை கவுண்டம்பாளையம் அசோக் நகரை சேர்ந்தவர் சபரிநாதன் (வயது 27). இவர் சுந்தராபுரத்தில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.

    இவர் சம்பவத்தன்று குனியமுத்தூர்-சுண்டாக்காமுத்தூர் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கும்பல் திடீரென சபரிநாதனிடம் தகராறு செய்தனர். பின்னர் அவரை மிரட்டி அவரிடம் இருந்த ரூ.2,500 பணம் மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து சபரிநாதன் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காமிரா காட்சிகளை ஆய்வு செய்து 4 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×