search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Menopause"

    • எலும்புகளின் ஆரோக்கியத்தை மெனோபாஸ் காலத்துக்குப் பின்பு பராமரிப்பது மிகவும் முக்கியம்.
    • எலும்புகளின் ஆரோக்கியத்திற்கான சில வழிகளை பார்ப்போம்...

    மெனோபாஸ் வயது வந்துவிட்டது... இனிமேல் எதற்கு உடற்பயிற்சி எல்லாம்என்கிற எண்ணம் பல பெண்களுக்கும் உண்டு. ஆனால் அது தவறு. அத்தனை காலம் நீங்கள் உடற்பயிற்சியே செய்யாதவர் என்றாலும் மெனோபாஸ் நெருங்கும் போதாவது உடற்பயிற்சிகளை தொடங்க வேண்டியது அவசியம்.

    வெயிட் பேரிங் பயிற்சிகள் என்பவற்றை உடற்பயிற்சி நிபுணரிடம் கேட்டு செய்ய ஆரம்பிக்கலாம்.ஒரே ஒரு பயிற்சியை மட்டும் செய்வதைவிட வேறு வேறு பயிற்சிகளை செய்வது உங்கள் ஆரோக்கியத்தை இன்னும் மேம்படுத்தும். வெயிட் பேரிங் (Weight bearing) மற்றும் தசைகளை உறுதிப்படுத்தும் பயிற்சிகள் எல்லா வயதினருக்குமே மிக அவசியம். மெனோபாஸ் வயதிலிருக்கும் பெண்களுக்கு எலும்புகளின் ஆரோக்கியம் காப்பதில் இந்த பயிற்சிகள் மிக மிக முக்கியமானவை.

    எலும்புகளின் உறுதிக்கும் ஆரோக்கியத்துக்கும் கால்சியம் சத்து மிக முக்கியம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். கூடியவரையில் உணவின் மூலமே கால்சியம் சேரும்படி பார்த்து கொள்ளுங்கள். கொழுப்பு குறைந்த பால் மற்றும் பால் பொருட்கள், மீன்களில் சார்டைன், சாலமன் போன்றவையும் கால்சியம் சத்து நிறைந்தவை. பிரோக்கோலி, கீரைகள், முளைகட்டிய பயறுகள் போன்றவற்றிலும் கால்சியம் அதிகமுள்ளதால் அவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளவும்.

    கால்சியம் சத்து மட்டும் சரியாக இருந்தால் போதாது. எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் டி சத்தும் மிக முக்கியம். அது போதுமான அளவில் இருந்தால்தான் கால்சியம் சத்து கிரகிக்கப்படும்.

    முட்டை, ஈரல் போன்றவற்றில் வைட்டமின் டி இருக்கிறது. காலை மற்றும் மாலையில் இளம் வெயில் உடலில் படும்படி வாக்கிங் போகலாம், தோட்ட வேலை செய்யலாம். இதுவும் வைட்டமின் டி சத்தை அதிகரிக்கும். மருத்துவரின் ஆலோசனையின்படி தேவைப்பட்டால் வைட்டமின் டி மற்றும் கால்சியம் சப்ளிமென்ட்டுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.

    பெரும்பாலான பெண்கள் காலை உணவை எடுத்துக்கொள்ளாமல் அடிக்கடி காஃபி மட்டுமே அருந்தி பசியாற்றி கொள்வதை பார்க்கிறோம். அதிகளவில் காஃபி குடிப்பதால் அதிலுள்ள கஃபைன், கால்சியம் கிரகிக்கப்படுவதைத் தடுத்துவிடும். காஃபி மட்டுமில்லை, கஃபைன் உள்ள எந்த பானமும் தவிர்க்கப்பட வேண்டும். மெனோபாசை நெருங்கும் பெண்கள் இவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

    வயதாக ஆக உடற்பயிற்சியை தவிர்த்தீர்களானால் உங்கள் தசைகள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியம் பெரியளவில் பாதிக்கப்படும். சிறுவயதிலிருந்தே உடற்பயிற்சி செய்வதை வாழ்க்கை முறையாக பின்பற்றினால் மெனோபாஸ் வயதில் எலும்புகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.

    உடற்பயிற்சிகள் செய்வது உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். அதன் மூலம் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் வலிகள் தவிர்க்கப்படும். வயதாக ஆக நீங்கள் உட்கொள்ளும் உணவின் அளவும் குறைய தொடங்கும். அதன் தொடர்ச்சியாக உணவின் மூலம் உடலுக்குள் சேரும் ஊட்டச்சத்துகளின் அளவும் குறையும். குறிப்பாக மெனோபாஸ் வயதிலிருக்கும் பெண்களுக்கு கால்சியமும், வைட்டமின் டியும் மிக முக்கியம். உணவு குறைவதால் இவை போதிய அளவு உடலுக்கு சேர்வதில்லை. உடற்பயிற்சி செய்வதால் மட்டுமே உடலின் வளர்சிதை மாற்றம் சீராக இருந்து, உடலை உறுதியாக வைக்கும்.

    மெனோபாசுக்கு பிறகு உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவு குறையும். அதன் தொடர்ச்சியாக எலும்புகள் வலுவிழப்பதும், ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னை வருவதும் சகஜமாக இருக்கும்.மெனோபாஸ் காலத்தில் பெண்கள் சந்திக்கிற பல பிரச்னைகளுக்கும் ஹெச்ஆர்டி எனப்படுகிற சிகிச்சை பலனளிக்கும். ஆனால் இதை எடுத்துக்கொள்வதற்கு முன் மருத்துவரிடம் முழுமையான ஆலோசனை பெற்றே, அவரவர் உடலுக்கு ஏற்றபடியான சிகிச்சையை ஆரம்பிப்பது நல்லது.

    எடை அதிகரிப்பு எப்படி எல்லா பிரச்னைகளுக்கும் காரணமாக சொல்லப்படுகிறதோ அதே போல அதிக அளவில் எடையை குறைப்பதுகூட ஆரோக்கியமற்றதுதான். அதிலும் குறிப்பாக மெனோபாஸ் வயதிலிருக்கும் பெண்கள் அளவுக்கதிகமான எடையை குறைப்பது அவர்களது எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும்.

    வயதாவது மற்றும் எடைகுறைப்பு இரண்டும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட விரும்பும் பெண்கள் அதற்கு முன் மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களின் ஆலோசனை பெற்றே செய்வது சிறந்தது.

    • சிலருக்கு மெனோபாஸ் மிகவும் வேதனையாக அமையலாம்.
    • மாதவிடாய் நின்றவர்கள் மிகவும் ஜாக்கிரதையாய் இருப்பது அவசியம்.

    பெண்களில் மாதவிடாய் சுழற்சியின் முடிவைக் குறிக்கும் ஒரு நிலை மெனோபாஸ். இது மிகவும் பொதுவான, இயல்பான நிகழ்வு. இந்த நிலையில் மாதவிடாயின் அசௌகரியத்தை இனி சமாளிக்க வேண்டிய அவசியமில்லை என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் சிலருக்கோ மெனோபாஸ் மிகவும் வேதனையாக அமையலாம். கவலை, மனநிலை மாற்றங்கள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு போன்றவற்றுடன் இது சேர்ந்து நடக்கலாம். சில சந்தர்ப்பங்களில், பெண்களின் இதய, எலும்பு ஆரோக்கியமும் கணிசமாக பாதிக்கப்படுகிறது.

    குறிப்பாக மெனோபாஸ் அல்லது மாதவிடாய் நின்ற காலகட்டத்தை அனுபவிக்கும் பெண்கள் இந்தப் பிரச்சினையில் அக்கறை காட்ட வேண்டும். எலும்பு இழப்பைத் தடுக்க முயல வேண்டும். மெனோபாஸ் காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ்(எலும்புச் சிதைவு நோய்) ஆபத்து அதிகரிக்கிறது, எலும்பு இழப்பு தூண்டப்படுகிறது. ஒரு ஆய்வின்படி, மெனோபாஸ் காலத்தில் 20% எலும்பு இழப்பு ஏற்படலாம். உலகளவில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பத்து பெண்களிலும் ஒருவரை ஆஸ்டியோபோரோசிஸ் பாதிக்கிறது.

    எலும்பு சேதம் அதிகரிப்பு, எலும்பு வலிமைக்குப் பாதிப்பு போன்றவற்றை ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுத்துகிறது. வலி அல்லது அறிகுறிகள் இல்லாமலேயே இந்த நோய் ஏற்படலாம். பெண்களின் எலும்பு வலிமையைப் பராமரிப்பதில் ஈஸ்ட்ரோஜன் முக்கிய பங்கு வகிக்கிறது. மெனோபாஸ் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் எலும்பு இழப்பு ஏற்படுகிறது. மாதவிடாய் நின்ற முதல் ஐந்து வருடங்களில் பெண்கள் 10% வரை எலும்பை இழப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் குறிப்பாக மாதவிடாய் நின்றவர்கள் மிகவும் ஜாக்கிரதையாய் இருப்பது அவசியம். ஏனெனில் இவர்களுக்கு எலும்பு உடைந்துவிட்டால் சரிசெய்வது சற்று கடினம்.

    எலும்பை வலுவாக வைத்திருக்க வைட்டமின் D முக்கியம். சத்தான உணவினை நாம் சாப்பிடுவது மிக முக்கியம் இல்லையெனில் என்றாவது ஒருநாள் இதுபோன்ற நோய்களுக்கு ஆளாகக்கூடும். அன்றாட உணவில் வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்களை சேர்த்து கொள்ள வேண்டும்.

    • வாதம் பாதிக்கப்பட்ட பலருக்கு தூக்கமின்மை உண்டாகும்.
    • தூக்கமின்மை என்பது மெனோபாஸ் நிலையில் பெண்களை மிக அதிக அளவில் பாதிக்கும்.

    தூக்கமின்மை என்பது மெனோபாஸ் நிலையில் பெண்களை மிக அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாக்கும் குறிகுணமாக உள்ளது. இதில் பெண்கள் பலருக்கும் அனுபவம் இருக்கும். வாதம் பாதிக்கப்பட்ட பலருக்கு தூக்கமின்மை உண்டாகும். வாதத்தை சீராக்கி தூக்கமின்மையை போக்க உதவும் மூலிகையில் முக்கியமான ஒன்று பிரம்மி கீரை தான்.

    நீர்பாங்கான இடங்களில் சாதாரணமாக வளரும் மூலிகை இது. இதில் உள்ள 'ப்ரமினோசைடு' எனும் வேதிப்பொருள் நரம்புகளை வலுப்படுத்தி இயற்கையாக தூக்கத்தை உண்டாக்கும். 'பிரம்மி நெய்' என்ற சித்த மருந்தையும் இதற்கு பயன்படுத்தலாம். வாரம் இருமுறை பெண்கள் முக்கியமாக செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பிரம்மி தைலம் கொண்டு எண்ணெய் முழுக்கும் எடுக்கலாம்.

    மேலும் தகரை மற்றும் சடாமாஞ்சில் ஆகிய மூலிகைகள் தூக்கமின்மையில் பலன் தருவதாக உள்ளன. இதில் 'வெலராநோன்' மற்றும் 'வெலபோட்ரைட்' ஆகிய மருத்துவக் குணமுள்ள வேதிப்பொருட்கள் இரண்டு மூலிகையிலும் உள்ளது.

    இவை நமது மூளையில் சுரக்கும் வேதி அமிலமான காபா-வின் சிதைவைத் தடுத்து தூக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் தகரை வேர் அதிக வேதிப்பொருளைக் கொண்டு தூக்கமின்மையில் சிறப்பாக செயல்படக்கூடியது. இதனையும் தூக்கத்திற்காக ஏங்கும் பெண்கள் பயன்படுத்தி பலனடையலாம்.

    • மெனோபாஸ் என்பது மாதவிடாய் இயற்கையான நிறுத்தமாகும் நிலை.
    • வாதத்தை குறைக்க பல்வேறு மூலிகைகள் பயன்படுவதாக உள்ளன.

    மெனோபாஸ் என்பது மாதவிடாய் இயற்கையான நிறுத்தமாகும் நிலை ஆகும். பெண்களின் கருவுறுதல் காலம் முடிவடையும் தருணமும் இதுதான். அந்நிலையில் பெண்களிடம் ஏற்படும் உடலியல் மற்றும் மனவியல் மாற்றங்களுடன் தொடர்புடைய பல்வேறு அறிகுறிகளை உள்ளடக்கியதை 'மெனோபாஸல் சின்ரோம்', 'கடைபூப்பு குறிகுணங்களின் தொகுப்பு' என்று அறியப்படுகின்றது. இத்தகைய குறிகுணங்கள் அனைத்தும் உடலின் இயல்பான நிகழ்வுகள் தான் என்பதை பெண்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

    உடல் பருமன் உள்ளவர்கள் விரைவிலே மெனோபாஸ் நிலையை எய்துவதாகவும், மெலிந்த தேகம் உள்ள பெண்களின் இறுதி மாதவிடாய் காலம் அதிகமானதாக உள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. மாதவிடாய் நிகழும் வரை தான் ஓவுலேஷன் எனும் அண்ட விடுப்பு நிகழும். அத்தகைய காலம் தான் கருவுறுதல் நடைபெறும் காலம். ஆக தாமதமாக திருமணமான பெண்கள், கருத்தரிப்பு தாமதமாகும் பெண்கள் உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. அப்போது தான் மாதவிடாய் சீராக இருக்கும். மெனோபாஸ் உண்டாகும் காலம் தள்ளி போகும். இது கருத்தரிப்புக்கு ஏதுவாக இருக்கும்.

    மேலும் இறுதி மாதவிடாய் நிலையை பல்வேறு உணவுப் பொருட்களும், உணவு முறை மாற்றங்களும், வாழ்வியல் மாற்றங்களும், இன்றைய நவீன வாழ்வியலில் மதுபானம், புகையிலை போன்ற பழக்க வழக்கங்களும் தீர்மானிக்கும் தன்மையுள்ளதாக உள்ளது. இத்தகைய கடைசி பூப்பில் உண்டாகும் பல்வேறு குறிகுணங்களுக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு குறைவு. அதற்கு தீர்வாக எச்.ஆர்.டி எனும் ஹார்மோன் மாற்று சிகிச்சையை மேற்கொள்வது பல்வேறு நோய்நிலைகளை உண்டாக்குவதாக நவீன அறிவியல் கூறுகிறது.

    முக்கியமாக ஈஸ்ட்ரோஜென் மாற்று சிகிச்சை அளிக்கப்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வழக்கத்தை விட 40 சதவீதம் வரை உண்டாக அதிகம் வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. அதோடு தொடர்ந்து இத்தகைய ஹார்மோன் மாற்று சிகிச்சை மேற்கொள்வோருக்கு மாரடைப்பு கூட வரக்கூடும் என்கின்றன சில ஆய்வுகள். இதுமட்டுமின்றி சர்க்கரை நோய், கருப்பை புற்றுநோய், பித்தப்பை நோய்கள், மன அழுத்தம் போன்ற நோய்நிலைகளை உண்டாக்க இந்த ஹார்மோன் மாற்று சிகிச்சை காரணமாக உள்ளதை ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. ஆக மருத்துவர் ஆலோசனைப்படி தேவைப்படும் நபர்கள் மட்டும் ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். இது ஒருபுறமிருக்க, பெண்கள் உடலுக்கு தேவையான தாவர ஈஸ்ட்ரோஜென் பல்வேறு மூலிகைகளில் இயற்கையாக உள்ளதால் அவற்றை நாடுவது நலம் பயக்கும்.

    அந்த வகையில் சித்த மருத்துவ தத்துவத்தின் படி வாதம், பித்தம் ஆகிய நாடி குற்றங்கள் இரண்டும் மாறுபாடு அடைந்து மெனோபாஸ் சார்ந்த குறிகுணங்கள் உண்டாவதால், அத்தகைய நாடிகளை சீர் செய்யும் பொருட்டு மருந்துகளையோ, மூலிகைகளையோ எடுத்துக்கொள்வது நல்ல முன்னேற்றம் தரும். பெண்களுக்கு மெனோபாஸ் தருணத்தில் வாதத்தின் சார்பாக நரம்பு தளர்ச்சி, மனப்பதட்டம், மனநிலை மாற்றங்கள், கருவாய் வறட்சி, தோல் வறட்சி, ஒழுங்கற்ற மாதவிடாய், தூக்கமின்மை, லேசான வெப்பம், மலச்சிக்கல், மார்பு படபடப்பு மற்றும் மூட்டு வலி போன்ற பல்வேறு குறிகுணங்களை உண்டாக்கும். இத்தகைய நிலைகளில் வாதத்தை குறைக்க பல்வேறு மூலிகைகள் பயன்படுவதாக உள்ளன.

    நரம்பு தளர்ச்சி, மன பதட்டம், மன அழுத்தம் போன்ற குறிகுணங்களுக்கு அமுக்கரா கிழங்கு நல்ல பலன் அளிக்கும். ஏற்கனவே கூறியதைப் போல் அமுக்கரா கிழங்கு பெண்களின் அனைத்து பருவ நிலைகளிலும் உண்டாகும் பல்வேறு நோய்நிலைகளுக்கு நல்ல பலன் தரும். இதனை தினசரி 2 முதல் 5 கிராம் வரை பாலுடன் கலந்து எடுத்துக்கொள்ளலாம். இதனால் நிம்மதியான தூக்கமும் வரும். ஏனெனில் இறுதி மாதவிடாய் நிலைகளில் தூக்கம் கெட்டு பல பெண்கள் அன்றாட வாழ்வில் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

    மூட்டு வலி, உடல் வலிகளுக்கு எளிய நல்ல பலன் தரும் மூலிகை நொச்சி தான். அவ்வப்போது நொச்சி இலையை மஞ்சள் பொடியுடன் சேர்த்து ஆவி பிடிக்கலாம். நொச்சி இலையை மிளகுடன் சேர்த்து கசாயமிட்டு குடிப்பதும் மூட்டு வலிக்கு நல்ல பலன் தரும். நொச்சி இலையில் உள்ள லூட்டியோலின், குர்சிடின் ஆகிய வேதிப்பொருட்கள் மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைப்பதாகவும், நமைச்சலை நீக்குவதாகவும் உள்ளது. இந்த எளிய மூலிகையை பெண்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

    • அக்டோபர் 20-ந் தேதி சர்வதேச எலும்புப்புரை நோய் தடுப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    • இந்த பாதிப்பானது ஆண்களை விட, பெண்களை அதிகம் பாதிக்கிறது.

    எலும்புகள் என்பது நமது உடலிற்கு நிலையானதொரு வடிவமைப்பை தருவதோடு, உடலின் மெல்லிய தசை உறுப்புகளான மூளை, இதயம், நுரையீரல் உள்ளிட்ட உள் உறுப்புகளை பாதுகாக்கிறது. மேலும் தசைகளுடன் இணைந்து உடல் அசைவுகளுக்கு உதவி புரிகிறது.

    இவ்வாறு உடலின் மேம்பட்டதொரு பணியினை செய்து வரும் எலும்புகளின் வெளிப்புற திட அமைப்பானது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாக உருவெடுத்து கொண்டே இருக்கும்.‌ மேலும் இதன் உட்புறத்தில் காணப்படும் திசுக்களின் அடர்த்தி குறையும் போது எலும்புப்புரை எனும் நோய் (ஆஸ்டியோபோரோஸிஸ்) ஏற்படுகிறது.

    வயதானவர்களையும், மாதவிடாய் நிறைவுற்றலுக்கு பின் அதிகமாக பெண்களை பாதிக்கும் இந்த நோயினை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, அதனை கண்டறிதல், சிகிச்சை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட நடைமுறைகளை ஏற்படுத்த ஆண்டுதோறும் அக்டோபர் 20-ந் தேதி சர்வதேச எலும்புப்புரை நோய் தடுப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எலும்பின் வெளிப்புற பகுதியில் பழைய எலும்புகள் சிதைவுற்று புதிய எலும்புகள் உருவாகின்றன. இவ்வாறு நடைபெறும் புதுப்பித்தல் நிகழ்வு 30-வயதினை அடைந்த(முழுமையான எலும்பு வளர்ச்சி) ஒருவருக்கு குறைய ஆரம்பிக்கிறது. இதன்படி எலும்புகளினுள் காணப்படும் அதன் அடர்த்தி குறைந்து கொண்டே வருவதால் எலும்புகள் பலவீனம் அடைகிறது.

    குறிப்பாக பெண்களின் மாதவிடாய் என்பது குறிப்பிட்ட காலத்துக்கு பின்பு நின்று விடுகிறது. இதன்பின் அவர்களிடம் ஈஸ்ட்ரோஜன் என்னும் எலும்பு புதுப்பித்தலுக்கு அத்தியாவசியமான ஹார்மோன் சுரப்பு குறைகிறது. இதனால் அவர்களின் எலும்புகள் பலவீனம் அடைய தொடங்குவதால் எலும்பு முறிவு, வளைந்த தோற்றம், உயரம் குறைதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.

    மவுன நோய் என்றழைக்கப்படும் இதன் பாதிப்பானது அதிகளவு வலி, முதுகுத்தண்டு மற்றும் இடுப்பு எலும்புகளில் முறிவு ஏற்படுதல், உள்ளிட்ட பிரச்சினைகளை சந்திக்கும்போதுதான் நோயாளிகள் அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு எலும்பு திசுக்களின் அடர்த்தி குறையும் போது ஏற்படும் இந்த பாதிப்பானது ஆண்களை விட, பெண்களை அதிகம் பாதிக்கிறது.

    சிறு வயதினில் ஆரோக்கியமான உணவினை உட்கொள்ளாததால் இந்த பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காரணம் எலும்பு புதுபித்தலின் போது அடர்த்தி அதிகரிக்க ஆரோக்கியமான உணவு பழக்கம் அவசியமாகிறது. குறைவான அடர்த்தியில் உற்பத்தியாகும் எலும்புகள் விரைவில் சிதைவுறுகிறது. எனவே கால்சியம் மற்றும் வைட்டமின்-டி நிறைந்த உணவு பொருட்களை உட்கொள்வதன் மூலம் இந்நோய் வராமல் பாதுகாத்து கொள்ள முடியும் என்பதை நாம் இந்நாளில் அறிந்து கொள்வோம்.

    • வயது அதிகரிக்கும்போது தசைகள் பலவீனமடையும்.
    • சத்தான உணவை உட்கொள்வது அவசியம்.

    50 வயதை நெருங்கும் பெண்கள் மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிறுத்த சுழற்சியை எதிர்கொள்ள நேரிடும். அந்த சமயத்தில் உடல் ஆரோக்கியம் சார்ந்த சில முக்கியமான நடைமுறைகளை பின்பற்றாவிட்டால் உடல் எடை அதிகரிக்க தொடங்கிவிடும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களுடன், முதுமை கால கட்டம், வாழ்க்கை முறை, மரபியல் ரீதியான காரணங்கள் போன்றவையும் உடல் பருமன் பிரச்சினைக்கு வழிவகுக்கலாம். அப்படி உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டால் சுவாச கோளாறு, டைப்-2 நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளை அனுபவிக்க நேரிடும். மெனோபாஸ் காரணமாக ஏற்படும் எடை அதிகரிப்புடன் தொடர்புடைய சில பொதுவான உடல்நலப் பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.

    நீரிழிவு நோய்: மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலகட்டத்தை எதிர்கொள்ளும் பெண்களில் சராசரி உடல் எடை கொண்டவர்களை விட, அதிக உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    இதய நோய்: மாதவிடாய் நின்ற பிறகு அதிக கொழுப்புள்ள உணவுகள் உண்பது, ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களை பின்பற்றுவது இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தலாம். அதிலும் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டால் இதய நோய்க்கு ஆளாக நேரிடும்.

    உயர் ரத்த அழுத்தம்: மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலகட்டத்தை நெருங்கும்போது ஈஸ்ட்ரோஜன் அளவு குறையக்கூடும். இத்தகைய குறைபாடு மாதவிடாய் நின்ற பிறகு உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுத்துவிடும். மேலும் மாதவிடாய் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது, இதயம் மற்றும் ரத்த நாளங்களில் விறைப்பு ஏற்பட்டும் உயர் ரத்த அழுத்தத்திற்கு வித்திடும்.

    உடல் மாற்றங்கள்: பெண்களை பொறுத்தவரை வயதுக்கு ஏற்ப, உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட தொடங்குகின்றன. வயது அதிகரிக்கும்போது தசைகள் பலவீனமடையும். வளர்சிதை மாற்றமும் படிப்படியாக குறையும். இத்தகைய மாற்றங்கள் மாதவிடாய் காலத்தில் எடை அதிகரிக்க வழிவகுக்கும். இருப்பினும், வேறு சில காரணங்களும் மாதவிடாய் நிறுத்தத்துடன் தொடர்புடையவை. சருமம் வறட்சி அடைவது, உடல் மெலிந்து போவது, முடி உதிர்தல் போன்றவை மாதவிடாய் நிறுத்தத்தின்போது ஏற்படும் மற்ற மாற்றங்களாகும். இத்தகைய மாற்றங்கள் பெண்கள் மனதில் எதிர்மறையான சிந்தனைகளை உருவாக்கி கவலை மற்றும் மனச்சோர்வுக்கு வழி வகுத்துவிடும்.

    ஆரோக்கியமான உணவு முறை: ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற சத்தான உணவை உட்கொள்வது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளை கூடுமானவரை தவிர்த்துவிட வேண் டும். கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். நிறைவுற்ற, கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

    உடற்பயிற்சி: மாதவிடாய் நிற்கும் சமயத்தில் எதிர்கொள்ளும் உடல் பருமனை குறைப்பதற்கு மட்டுமல்லாமல், அந்த சமயத்தில் உருவாகும் மன நிலை மாற்றங்களை கட்டுப்படுத்தவும் உடற்பயிற்சி அவசியமானது. உடல்வாகுக்கு பொருத்தமான உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுக்கலாம். அவை எலும்புகளை பலவீனமடைய செய்யும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் நோய் பாதிப்பு அபாயத்தை குறைக்க உதவும்.

    சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், தினமும் 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்தல் போன்ற பழக்கங்கள் வளர்சிதை மாற் றத்தை அதிகரிக்கவும், உடல் மற்றும் மனரீதியாகவும் ஆரோக்கியமாக உணரவும் உதவும். டம்ப்பெல்ஸ், 'எக்ஸ்சர்சைஸ் பேண்டு' எனப்படும் உடற்பயிற்சி செய்யும் பட்டைகள், யோகா போன்றவை தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்த உதவும். ஏரோபிக்ஸ் பயிற்சிகளை மேற்கொள்வது இதயம் மற்றும் நுரையீரலுக்கு நலம் சேர்க்கும்.

    தூக்கம்: உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க நன்றாக தூங்கி எழும் வழக்கத்தை கடைப்பிடிப்பதும் முக்கியமானது. இன்றைய காலகட்டத்தில் தூங்கச் செல்வதற்கு முன்பு மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்த்தாலே போதுமானது.

    மெனோபாஸ் என்பது பெண்களின் உடல் மற்றும் மன நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தலாம். இருப்பினும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலம் வாழ்க்கையை புதுப்பித்து, முழுமையாக வாழ முடியும்.

    • 75 சதவீத பெண்கள் மாதவிடாய் நின்ற காலத்தில் உடல்ரீதியான பிரச்சனைகளை சந்திப்பார்கள்.
    • உங்கள் எழும்பு ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.

    மெனோபாஸ் பெண்களின் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். அதன் அறிகுறிகளுள் எடை அதிகரிப்பு அல்லது பெண்ணுறுப்பு வறட்சி ஆகியவை அடங்கும். 75 சதவீத பெண்கள் மாதவிடாய் நின்ற காலத்தில் உடல்ரீதியாக பல பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள்.

    உங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியின் சரிவு எலும்புகளில் உள்ள கால்சியத்தின் அளவை பாதிக்கும். இது எலும்பு அடர்த்தியில் குறிப்பிடத்தக்க சரிவை ஏற்படுத்துவதால் உங்களை இடுப்பு, முதுகெலும்பு மற்றும் பிற எலும்பு முறிவுகளுக்கு ஆளாக்கும். எனவே, உங்கள் எழும்பு ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.

    பால் பொருட்கள், கீரை வகைகள் போன்ற கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உண்ணுங்கள்

    வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்

    தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்

    மது அருந்துவதை, புகைப்பிடிப்பதை தவிக்கவும்.

    தலைச்சுற்றல் அல்லது இதயத் துடிப்பில் மாற்றம் போன்றவை மாதவிடாய் நிற்கும் பருவத்தில் நீங்கள் அனுபவிக்கும் ஒன்று. ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் உங்கள் உடல் ஃப்ளெக்ஸிபில் ஆர்ட்ரீஸ்களை தக்க வைத்துக் கொள்ளலாம். இது இரத்த ஓட்டத்தை பாதிக்கும்.

    • 50 வயதுக்கு பிறகும் மாதவிடாய் வந்தால் அதை நிறுத்தவேண்டும் என்கிற விதிகள் எதுவும் கிடையாது.
    • அம்மாவுக்கு மெனோபாஸ் சீக்கிரம் வந்தால், நமக்கும் சீக்கிரம் வந்துவிடும் என்பதெல்லாம் உண்மை கிடையாது.

    மெனோபாஸ் வயது என்பது 50 தான். அந்த வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வருகிறது என்பதால் சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலில் இன்னும் ஹார்மோன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிரது என்று அர்த்தம்.

    50-களிலும் மாதவிடாய் இருந்தால் கண்டிப்பாக கருப்பை ஸ்கேன் மெமோகிராம் பாப்ஸ்மியர் ஆகிய பரிசோதனைகளைச் செய்துகொள்ளவேணடும். 50 வயதுக்கு பிறகும் மாதவிடாய் வந்தால் அதை நிறுத்தவேண்டும் என்கிற விதிகள் எதுவும் கிடையாது. அதனால் கை வைத்தியம் போன்ற வேறு ஏதேனும் முயற்சிகளை செய்யாமலிருப்பதும் நல்லது.

    மாதவிடாய் நேரத்தில் உடலில் நிகழ்கிற ஹார்மோன் மாற்றங்களால் தலைவலி மயக்கம் போன்ற தொல்லைகள் வருவது இயல்பானதுதான். இது மாதவிடாய்க்கு முந்தைய நிலைமையான பெரி மெனோமாஸ் நேரத்திலும் வரும்.

    ஒரு சிலருக்கு மாதவிடாய் நேரத்தில் தலைவலி வரும் அந்த நேரத்தில் மாத்திரை எடுப்பது தப்பில்லை, அதே நேரம் எல்லா மாதமும் இப்படி தலைவலி வருவதுதான் தவறு. இவ்வாறு தொடர்வது ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வேறு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

    அம்மாவுக்கு மெனோபாஸ் சீக்கிரம் வந்தால், நமக்கும் சீக்கிரம் வந்துவிடும் என்பதெல்லாம் மருத்துவரீதியாக உண்மை கிடையாது. இதெல்லாம் சம்பந்தப்பட்ட பெண்களின் உடல்நிலையைப் பொறுத்ததுதானே தவிர, மரபியல் சார்ந்தது கிடையாது.

    இந்தக் காலத்தில் காலதாமதமான திருமணம் காரணமாக, நாற்பதுகளில் மட்டுமல்ல, ஐம்பதுகளிலும் பெண்கள் இளமையாகவே உணர்கிறார்கள். அது அவர்களுடைய நடை, உடை, பாவனை என அத்தனை விஷயங்களிலும் பிரதிபலிப்பதை நாமெல்லாரும் பார்த்தும் வருகிறோம். இது வெளிப்படையாகத் தெரிகிற விஷயம். இதில் மறைமுகமானது இளமையான மனநிலை. இதன் காரணமாக, சில பெண்களுடைய மெனோபாஸ் வயது தள்ளிப்போக ஆரம்பித்திருக்கிறது.

    "50-களிலும் மாதவிடாய் இருந்தால் கட்டாயம் என்னென்ன பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும்?"

    "கருப்பை ஸ்கேன், மெமோகிராம், பாப்ஸ்மியர் ஆகிய பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும். 50 வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வந்தால் அதை நிறுத்த வேண்டும் என்கிற விதிகள் எதுவும் கிடையாது. அதனால், கை வைத்தியம் போன்ற வேறு ஏதேனும் முயற்சிகளை செய்யாமலிப்பது நல்லது."

    • மெனோபாஸ் பெண்களின் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.
    • 75 சதவீத பெண்கள் மாதவிடாய் நின்ற காலத்தில் உடல்ரீதியாக பல பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள்.

    குறிப்பிட்ட வயதை கடந்த பெண்கள் மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிற்கும் பருவத்தை அனுபவிப்பார்கள். மெனோபாஸ் என்பது ஒரு வருடத்திற்கு மாதவிடாய் வருவதில் மாறுபாடு ஏற்பட்டு படிப்படியாக குறையும் என வரையறுக்கப்படுகிறது. இது பொதுவாக பெண்களின் 40களின் பிற்பகுதியில் அல்லது 50களின் முற்பகுதியில் நிகழும்.

    மெனோபாஸ் பெண்களின் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். அதன் அறிகுறிகளுள் எடை அதிகரிப்பு அல்லது பெண்ணுறுப்பு வறட்சி ஆகியவை அடங்கும். சரி, இந்த மெனோபாஸ் குறித்து பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை குறித்து பார்க்கலாம்.

    மாதவிடாய் நிற்பதற்கான (மெனோபாஸ்) சராசரி வயது 51 என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பான்மையான பெண்களுக்கு 45 முதல் 55 வயதிற்குள் மாதவிடாய் ஏற்படுவது படிப்படியாக நிற்கிறது. கருப்பை செயல்பாடு குறைவதற்கான ஆரம்ப நிலைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே சில பெண்களுக்கு தொடங்கலாம். மற்றவர்கள் 50 வயதிற்கு பிறகும் மாதவிடாய் காலத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பார்கள்.

    75 சதவீத பெண்கள் மாதவிடாய் நின்ற காலத்தில் உடல்ரீதியாக பல பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள். ஹாட் ஃப்ளாஷ் எனப்படும் அதிகப்படியான காய்ச்சல் வெப்பத்தின் திடீர் உணர்வு என்பது மாதவிடாய் நிற்கும் பெண்கள் அனுபவிக்கும் பொதுவான அறிகுறிகளாகும். பகலில் அல்லது இரவில் இதுபோன்ற உணர்வு ஏற்படலாம். சில பெண்கள் தசை மற்றும் மூட்டு வலியை அனுபவிப்பார்கள். இது ஆர்த்ரால்ஜியா அல்லது மனநிலை மாற்றங்கள் (mood swing) என்று அழைக்கப்படுகிறது.

    சரியான உணவு பழக்க வழக்கங்கள், வாழ்வியல் முறைகளில் மாற்றம் மற்றும் ஆயுர்வேத வழிமுறைகளைப் பின்பற்றினால் மிகுந்த பலனை அடைய இயலும்.
    நாகர்கோவில் கோட்டாரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் கிளாரன்ஸ் டேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்று பரவலுக்கு பிந்தைய தற்போதையச் சூழலில் விடுபட்ட மாதவிடாய், ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்குடன் கூடிய மாதவிடாய் போன்ற பிரச்சினைகள் அதிகளவில் உயர்ந்துள்ளன. கொரோனாவால் மாதவிடாய் சுழற்சியில் ஏற்பட்ட தாக்கம் என தற்போது இதனை கூற இயலாது எனினும், பல காரணிகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஆகியவை பெரும்பங்கு வகித்து மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பு ஏற்படுவதை பார்க்க முடிகிறது.

    தற்போது செய்ய வேண்டிய வழிமுறைகள், தற்போது தவறாக நடந்தது என்ன? நாம் செய்த குறைகள் என்னென்ன? அவற்றை சரிசெய்வதற்கான வழிகளை அறிதல் மிக அவசியமாகும். முதன்மையாக டாக்டரைச் சந்தித்து இந்த நிலைக்கான காரணம் மற்றும் நோயறிதல் அவசியமாகும்.

    ஒருவேளை ஏதேனும் நோய் அல்லது குறைபாடு கண்டறியப்பட்டால் அதனைச் சரிசெய்யவும், மீண்டும் பழைய உடல் இயக்க நிலைக்கு கொண்டுவர உடலில் நச்சுநீக்கம் செய்ய ஆயுர்வேதத்தின் பஞ்சகர்மா (உடல்நச்சு நீக்க சிகிச்சை வழிமுறைகள்) சிகிச்சை முறைகளை மேற்கொண்டு அதன் மூலம் சீரான மாதவிடாய் சுழற்சியினை ஏற்படுத்த இயலும். முறையான வழிமுறைகள், மருத்துவ வழிகாட்டுதலுடன் கூடிய உணவுப் பழக்க வழக்கங்கள் உடற்பயிற்சி. யோகாபயிற்சிகள் முதலானவை மேற்கொள்ளுதல் அவசியமாகும்.

    சரியான உணவு பழக்க வழக்கங்கள், வாழ்வியல் முறைகளில் மாற்றம் மற்றும் ஆயுர்வேத வழிமுறைகளைப் பின்பற்றினால் மிகுந்த பலனை அடைய இயலும். மாதவிடாய்க் கோளாறுகளுடன் அவதிப்படும் பெண்கள் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பெண்களுக்கான சிறப்பு வெளி நோயாளிகள் பிரிவில் சிறப்பு மருத்துவரின் ஆலோசனைகளை பெற்று உடல் நச்சு நீக்க சிகிச்சை வழிமுறைகள் குறித்து அறிந்து ஆயுர்வேத மருந்துகளை உட்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    இன்றைய சூழலில், இருபது வயதைத் தொடும் பெரும்பாலான பெண்களைப் பாதிக்கும் முக்கியமான இரண்டு பிரச்சனைகள், ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு.
    இன்றைய சூழலில், இருபது வயதைத் தொடும் பெரும்பாலான பெண்களைப் பாதிக்கும் முக்கியமான இரண்டு பிரச்சனைகள், ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு. மாதவிடாய்க் காலத்தில் எத்தனை நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி ஏற்படுகிறது, எத்தனை நாள்களுக்கு ரத்தப்போக்குத் தொடர்கிறது என்பதைப் பார்க்கவேண்டும். 28 முதல் 35 நாள்களுக்குள் ஏற்படும் சுழற்சியும், மூன்று முதல் ஏழு நாள்கள் வரை ரத்தப்போக்கு ஏற்படுவதும் ஆரோக்கியம். ஆனால், உடல் அமைப்புக்கு ஏற்றவாறு சுழற்சிக்கான காலமும் ரத்தப்போக்கின் அளவும் மாறுபடும்.

    எது அதிக ரத்தப்போக்கு?

    மாதவிடாய் நாள்களில்,

    * ஒரு நாளில் ஆறு நாப்கின் வரை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுவது

    * தாங்கமுடியாத வயிற்றுவலி ஏற்படுவது

    * ரத்தம் கட்டியாக வெளியேறுவது

    * ஏழு நாள்களுக்கும் மேலாக ரத்தப்போக்கு இருப்பது

    * அன்றாடப் பணிகளைக்கூட மிகவும் சிரமப்பட்டுச் செய்வது

    * மிகவும் பலவீனமாகவும் சோர்வாகவும் உணர்வது; மூச்சுவிடுவதில் சிரமம்

    சிலருக்கு, மூன்று நாள்கள் மட்டுமே மாதவிடாய் ஏற்படும். ஆனாலும், அந்தக் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தால், அவர்களும் அதிக ரத்தப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களே. மாதவிடாயின்போது வெளியேறுவது அனைத்தும் கெட்ட ரத்தம் என்று நினைத்து பலர் அதிக ரத்தப்போக்கை உதாசீனப்படுத்துவதுண்டு. அது நல்லதல்ல... மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு இருந்தால் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.  

    மருத்துவத்தைப் பொறுத்தமட்டில் அதிக ரத்தப்போக்குப் பிரச்சனையை `மாதவிடாய் மிகைப்பு' (Menorrhagia) என்று சொல்வார்கள்.

    அதிக ரத்தப்போக்கு உணர்த்தும் பிரச்சனைகள்...

    * ஹார்மோன் இம்பேலன்ஸ் (Hormone Imbalance): கர்ப்பப்பையின் சீரான செயல்பாட்டுக்கு, ஈஸ்ட்ரோஜென் (Estrogen), புரொஜெஸ்ட்ரோன் (Progestrone) ஆகிய ஹார்மோன்களே காரணம். இவை சுரப்பதில் சிக்கல் ஏற்பட்டால், ரத்தப்போக்கு அதிகமாகும். ஹார்மோன் சுரப்பதில் பிரச்னை ஏற்பட உடல்பருமன், நீர்க்கட்டி, தைராய்டு போன்றவை காரணங்களாக இருக்கக்கூடும்.

    * கர்ப்பப்பை செயல்பாட்டில் சிக்கல்: கர்ப்பப்பையிலிருந்து கருமுட்டை சரியாக வெளியேறாவிட்டால், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன் சுரப்பதில் சிக்கல் ஏற்படும். புரொஜெஸ்ட்ரோன் சீரான அளவு சுரக்காவிட்டால், ஹார்மோன் இம்பேலன்ஸ் ஏற்பட்டு, ரத்தப்போக்கு அதிகமாகும்.

    * கர்ப்பப்பையில் கட்டி: கர்ப்பப்பையின் சுவரிலோ, சுற்றுப்புறத்திலோ கட்டி ஏற்பட்டால் மாதவிடாய்க் காலத்தில் அதிக ரத்தப்போக்கு அல்லது தொடர்ந்து ஏழு நாள்களுக்கும் மேலாக ரத்தப்போக்கு, இடுப்பு வலி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு போன்றவை ஏற்படலாம்.

    * கருச்சிதைவு: கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, தொடர் ரத்தப்போக்கு போன்றவை கரு கலைந்துவிட்டதைக் குறிக்கும்.

    * புற்றுநோய்: கர்ப்பப்பையில் ஏற்படும் சில கட்டிகள், புற்றுநோய்க்கு வழிவகுக்கலாம். கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இரண்டுக்குமான முக்கியமான அறிகுறி, அதிக ரத்தப்போக்குதான்.

    * மெனோபாஸ் காலத்துக்குப் பிறகு ரத்தப்போக்கு ஏற்பட்டால், மருத்துவரை அணுகவும். மெனோபாஸ் காலகட்டத்துக்குப் பிறகும்  ரத்தப்போக்கு ஏற்படுவது, புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

    * மேற்கூறிய எந்தப் பிரச்னையும் இல்லாமல், ஊட்டச்சத்துக்குறைபாடு காரணமாக சிலருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம். இப்படியான அதிக ரத்தப்போக்கு, ஒருகட்டத்தில் ரத்தச்சோகை, இரும்புச்சத்துக் குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். தோல் வெளிறிக்காணப்படுதல், மிகவும் சோர்வாக உணர்தல், வலுவிழந்து காணப்படுதல் போன்றவை இதற்கான அறிகுறிகளாக இருக்கும். 
    அளவுக்கதிகமான இரத்தப்போக்கு உள்ளவங்க, அதெல்லாம் அந்தந்த வயதில் அப்படித்தான் இருக்கும் என்கிற அலட்சியத்தில், பரிசோதனையையோ, சிகிச்சையையோ தவிர்க்க வேண்டாம்.
    ‘பெண்களுக்கு உண்டாகிற ஹார்மோன் கோளாறுகளுக்கும், அவை உண்டாக்கும் பிரச்சனைகளுக்கும் பஞ்சமே இல்லை. அவற்றில் முக்கியமானது ‘டியுபி’ எனப்படுகிற Dysfunctional uterine bleeding. காரணமே இல்லாமல் மாதவிலக்கின் போது ரத்தப் போக்கு அதிகமிருப்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை பின்னணியாக இருக்கலாம்…

    மாதவிலக்கான முதல் 2 வாரங்களில் பெண்களோட உடம்புல ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரக்கும். 2 வாரங்கள் கழிச்சுதான் கருமுட்டை வெளியாகும். அதுக்குப் பிறகுதான் பிராஜெஸ்ட்ரோன் ஹார்மோன் சுரக்கும். இதுதான் முறை. சிலருக்கு கரு முட்டை உற்பத்தியே இருக்காது. ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாகி, பிராஜெஸ்ட்ரோன் சுரப்பே இல்லாம, மாதவிலக்கு தள்ளிப் போகும். எதிர்பாராத நேரத்துல ரத்தப் போக்கு அதிகமாகும். இவங்களுக்கு பிராஜெஸ்ட்ரோனுக்கான மருந்துகள் கொடுத்துதான் இதை சரியாக்கணும்.

    அடுத்து தைராய்டு பிரச்சனை இருக்கிறவங்களுக்கும், அதிக ரத்தப் போக்கு இருக்கும். அதை சரிபார்க்க வேண்டியது அவசியம். மூளைலேர்ந்து சுரக்கக் கூடிய ‘புரோலேக்டின்’ ஹார்மோன் அதிகமானாலும், ரத்தப் போக்கு அதிகமாகும். சோதனையின் மூலம், காரணத்தைக் கண்டுபிடிச்சு, சிகிச்சை எடுத்துக்கணும். கருத்தடை மாத்திரைகளுக்கு, இந்த ஈஸ்ட்ரோஜென், பிராஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களை சமன்படுத்தற குணமுண்டு.

    கல்யாணமாகாத பெண்களுக்குக் கூட இந்த மாத்திரைகளை 3 முதல் 6 வாரங்களுக்குக் கொடுத்தா, ஹார்மோன் பிரச்சனையை சரியாக்கி, ரத்தப் போக்கு கட்டுப்படும். மாத்திரைகளுக்கும் கட்டுப்படாத பட்சத்துல மாதம் ஒரு ஊசி மூலமா மருந்து செலுத்த வேண்டியிருக்கும். கல்யாணமாகி, குழந்தை பெற்ற பெண்களுக்கு இந்தப் பிரச்சனை இருந்தா, ‘மெரீனா’ என்ற கருவியை கர்ப்பப் பைக்குள்ள செலுத்தலாம்.

    இது காப்பர் டி மாதிரியான சின்ன கருவி. சரியான அளவுல ஹார்மோன் சுரக்க இது உதவி செய்யும். 5 வருஷங்களுக்குப் பிறகு அதை எடுத்துட்டு, தேவைப்பட்டா புதுசா பொருத்திக்கலாம். கல்யாணமாகாத மற்றும் குழந்தை பெறாத பெண்களுக்கு இது ஏற்றதில்லை. இது தவிர ‘பலூன் தெர்மல் அப்லேஷன்’னு ஒரு சிகிச்சையும் இருக்கு.

    கர்ப்பப் பைக்குள்ள பலூன் மாதிரியான ஒன்றை வச்சு, வெந்நீரை செலுத்துவோம். கர்ப்பப் பையின் உள்புறமுள்ள லேயர்களை அது சுருக்கிடும். அதன் விளைவா அதிகப்படியான ரத்தப் போக்கு கட்டுப்படும். அடுத்து ‘ஹிஸ்டெரஸ்கோபிக் என்டோமெட்ரியம்…’ இந்த சிகிச்சையில் கர்ப்பப் பையின் உள்பக்கத்துல உள்ள அழுத்தமான, கெட்டியான ஜவ்வை, பொசுக்கி, அகற்றுவோம். கர்ப்பப் பையை எடுக்காமலே இந்த சிகிச்சை சாத்தியம்.

    மேல சொன்ன அத்தனை சிகிச்சைகளுக்குமே கேட்காதப்ப, கடைசி கட்டமாதான் கர்ப்பப் பையை அகற்றுவதைப் பத்தி யோசிக்கணும். அதனால அளவுக்கதிக ரத்தப் போக்கு உள்ளவங்க, அதெல்லாம் அந்தந்த வயதில் அப்படித்தான் இருக்கும் என்கிற அலட்சியத்துல, பரிசோதனையையோ, சிகிச்சையையோ தவிர்க்க வேண்டாம். அதன் பின்னணில உள்ள காரணம் தெரிஞ்சு, சரியான சிகிச்சையை எடுத்துக்கிட்டா, அந்த 3 நாட்கள், அவதியில்லாமக் கழியும்…
    ×