search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    மெனோபாசுக்கு பின் பெண்களை அதிகமாக பாதிக்கும் எலும்புப்புரை நோய்
    X

    மெனோபாசுக்கு பின் பெண்களை அதிகமாக பாதிக்கும் எலும்புப்புரை நோய்

    • அக்டோபர் 20-ந் தேதி சர்வதேச எலும்புப்புரை நோய் தடுப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    • இந்த பாதிப்பானது ஆண்களை விட, பெண்களை அதிகம் பாதிக்கிறது.

    எலும்புகள் என்பது நமது உடலிற்கு நிலையானதொரு வடிவமைப்பை தருவதோடு, உடலின் மெல்லிய தசை உறுப்புகளான மூளை, இதயம், நுரையீரல் உள்ளிட்ட உள் உறுப்புகளை பாதுகாக்கிறது. மேலும் தசைகளுடன் இணைந்து உடல் அசைவுகளுக்கு உதவி புரிகிறது.

    இவ்வாறு உடலின் மேம்பட்டதொரு பணியினை செய்து வரும் எலும்புகளின் வெளிப்புற திட அமைப்பானது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாக உருவெடுத்து கொண்டே இருக்கும்.‌ மேலும் இதன் உட்புறத்தில் காணப்படும் திசுக்களின் அடர்த்தி குறையும் போது எலும்புப்புரை எனும் நோய் (ஆஸ்டியோபோரோஸிஸ்) ஏற்படுகிறது.

    வயதானவர்களையும், மாதவிடாய் நிறைவுற்றலுக்கு பின் அதிகமாக பெண்களை பாதிக்கும் இந்த நோயினை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, அதனை கண்டறிதல், சிகிச்சை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட நடைமுறைகளை ஏற்படுத்த ஆண்டுதோறும் அக்டோபர் 20-ந் தேதி சர்வதேச எலும்புப்புரை நோய் தடுப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எலும்பின் வெளிப்புற பகுதியில் பழைய எலும்புகள் சிதைவுற்று புதிய எலும்புகள் உருவாகின்றன. இவ்வாறு நடைபெறும் புதுப்பித்தல் நிகழ்வு 30-வயதினை அடைந்த(முழுமையான எலும்பு வளர்ச்சி) ஒருவருக்கு குறைய ஆரம்பிக்கிறது. இதன்படி எலும்புகளினுள் காணப்படும் அதன் அடர்த்தி குறைந்து கொண்டே வருவதால் எலும்புகள் பலவீனம் அடைகிறது.

    குறிப்பாக பெண்களின் மாதவிடாய் என்பது குறிப்பிட்ட காலத்துக்கு பின்பு நின்று விடுகிறது. இதன்பின் அவர்களிடம் ஈஸ்ட்ரோஜன் என்னும் எலும்பு புதுப்பித்தலுக்கு அத்தியாவசியமான ஹார்மோன் சுரப்பு குறைகிறது. இதனால் அவர்களின் எலும்புகள் பலவீனம் அடைய தொடங்குவதால் எலும்பு முறிவு, வளைந்த தோற்றம், உயரம் குறைதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.

    மவுன நோய் என்றழைக்கப்படும் இதன் பாதிப்பானது அதிகளவு வலி, முதுகுத்தண்டு மற்றும் இடுப்பு எலும்புகளில் முறிவு ஏற்படுதல், உள்ளிட்ட பிரச்சினைகளை சந்திக்கும்போதுதான் நோயாளிகள் அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு எலும்பு திசுக்களின் அடர்த்தி குறையும் போது ஏற்படும் இந்த பாதிப்பானது ஆண்களை விட, பெண்களை அதிகம் பாதிக்கிறது.

    சிறு வயதினில் ஆரோக்கியமான உணவினை உட்கொள்ளாததால் இந்த பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காரணம் எலும்பு புதுபித்தலின் போது அடர்த்தி அதிகரிக்க ஆரோக்கியமான உணவு பழக்கம் அவசியமாகிறது. குறைவான அடர்த்தியில் உற்பத்தியாகும் எலும்புகள் விரைவில் சிதைவுறுகிறது. எனவே கால்சியம் மற்றும் வைட்டமின்-டி நிறைந்த உணவு பொருட்களை உட்கொள்வதன் மூலம் இந்நோய் வராமல் பாதுகாத்து கொள்ள முடியும் என்பதை நாம் இந்நாளில் அறிந்து கொள்வோம்.

    Next Story
    ×