search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayor saravanan"

    • வட கிழக்கு பருவ மழையை யொட்டி நெல்லை மாநகராட்சி பகுதியின் 4 மண்டல பகுதி களிலும் மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • நெல்லை மண்டலத்திற்குட்பட்ட 24-வது வார்டு பகுதியில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது.

    நெல்லை:

    வட கிழக்கு பருவ மழையை யொட்டி நெல்லை மாநகராட்சி பகுதியின் 4 மண்டல பகுதி களிலும் மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகிறது.

    காய்ச்சல் பாதிப்பு

    இந்நிலையில் பருவமழையையொட்டி சில இடங்களில் காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக நெல்லை மண்டலத்திற்குட்பட்ட 24-வது வார்டு பகுதியில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது.

    டவுன் பெரிய தெரு, நடுத்தெரு, வேம்படி தெரு, மாதா பூங்கொடி தெரு உள்ளிட்ட இடங்களில் சிறுவர்- சிறுமிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    மருத்துவ முகாம்

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் 24-வது வார்டு கவுன்சிலர் ரவீந்தர், தனது வார்டு பகுதியில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தார்.

    இதனை ஏற்று இன்று 24-வது வார்டு பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அதனை மேயர் சரவணன் தொடங்கி வைத்தார். இதில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா, மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ, கவுன்சிலர் ரவீந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காய்ச்சல், ரத்த கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ெபாது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு 24-வது வார்டு பகுதி முழுவதும் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

    • வாரந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது
    • போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பது வரவேற்கத்தக்கது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் சரவணன் தலைமையில் வாரந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்ப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், மாநகர பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அதில் அனுபவம் உள்ளவர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர். இதற்கிடையே கூட்டரங்கிற்கு வந்த கவுன்சிலர்களில் சிலர் கால்நடைகளை முன்னறிவிப்பின்றி ஏலம் விடக்கூடாது. சில அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்களை அவதூறாக பேசுகின்றனர். அதனை தடுக்க வேண்டும் என கூறினர்.

    ×