search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mamta"

    வரும் பாராளுமன்ற தேர்தலில் 22 கட்சிகள் மெகா கூட்டணியாக மாறி பாஜகவை வீழ்த்துமா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. #ParliamentElection #PMModi

    புதுடெல்லி:

    கொல்கத்தாவில் முதல்- மந்திரி மம்தா பானர்ஜி 22 கட்சி தலைவர்களை திரட்டி ஒட்டு மொத்த நாட்டின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து விட்டார்.

    இதில் பேசிய தலைவர்கள் அனைவரும் பிரதமர் மோடியையும், பா.ஜனதாவையும் கடுமையாக தாக்கிப் பேசினார்கள். ஒட்டு மொத்த மோடி எதிர்ப்பு கூட்டமாகவே இது நடத்தப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று காங்கிரஸ் கூறி வந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெங்களூர் மற்றும் சென்னையில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.

    எதிர்க்கட்சி கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்த போது தேர்லுக்குப் பின் அது பற்றி முடிவு செய்யலாம் என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்தது.

    இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் மாயாவதியும், அகிலேஷ் யாதவும் சேர்ந்து தனியாக ஒரு கூட்டணி அமைத்தனர். இதில் காங்கிரஸ் சேர்க்கப்பட வில்லை. இதன் மூலம் பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கு எதிரான புதிய கூட்டணியாக இது அமைந்தது. இதனால் காங்கிரஸ் அதிருப்தி அடைந்தது.

    மாயாவதி- அகிலேஷ் கூட்டணிக்கு மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில் மாயாவதியை பிரதமர் ஆக்குவோம் என்று அகிலேஷ் யாதவ் அறிவித்தார். இதன் மூலம் மாயாவதி பிரதமர் பதவி மீது குறிவைத்து காய் நகர்த்துவது தெரியவந்தது.

    இதையடுத்து மம்தா பானர்ஜியும் கொல்கத்தாவில் தனியாக நேற்று எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்று திரட்டினார். தனக்கும் பிரதமராகும் தகுதி உள்ளது என்பதை எடுத்துக்காட்டவே எதிர்க்கட்சி தலைவர்களை மம்தாபானர்ஜி திரட்டியதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

    இதை அறிந்துதான் அகிலேஷ் யாதவ் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் மாயாவதி கலந்து கொள்ளவில்லை. அதை வெளிக்காட்டாமல் இருக்க தனது கட்சி சார்பில் பிரதிநிதியை அனுப்பிவைத்தார்.

    இதேபோல் ராகுல் காந்தியும் மம்தாபானர்ஜி கூட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் காங்கிரஸ் பிரதிநிதிகளை அனுப்பிவைத்தார். இதனால் எதிர்க்கட்சி தலைவர்களிடையே ஒற்றுமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    பிரதமர் யார் என்ற கேள்வி இப்போதைக்கு எழவில்லை. பா.ஜனதாவை வீழ்த்தவே இந்த கூட்டணி என்று திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.

    மம்தா கூட்டிய கூட்டத்தில் உள்ளூர் அரசியல் இருப்பதாகவும் கருதப்படுகிறது. மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜிக்கு எதிராகவும், பா.ஜனதாவுக்கு எதிராகவும் காங்கிரஸ்- கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இது மம்தாவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    இதற்கிடையே மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் பிரதமராக வேண்டும் அதற்கான தகுதி மம்தா பானர்ஜிக்கு இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள். இந்த கோ‌ஷம் மேற்கு வங்காள வாக்காளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

    இதையடுத்துதான் தனது பக்கம் தேசிய அளவில் எதிர்க்கட்சி தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டவும், இதன் மூலம் கம்யூனிஸ்டு கூட்டணியை முறியடித்து உள்ளூர் வாக்காளர்களிடம் ஆதரவை பெறலாம் என்ற எண்ணத்திலும் இந்த கூட்டத்தை கூட்டியதாக கூறப்படுகிறது. #ParliamentElection #PMModi

    ×