search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madhavan"

    • ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் படத்தின் மூலம் பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
    • இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

    ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்

    சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார். பிஜித் பாலா படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். ட்ரைகலர் பிலிம்ஸ், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ், 27 இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

    இந்த படத்தில் நடிகர் சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்காக சூர்யா எந்தவித சம்பளமும் பெறவில்லை என மாதவன் சமீபத்தில் கூறினார். இந்நிலையில், நடிகர் மாதவன் மற்றும் சூர்யா இருவரும் சமூக வலைதளத்தில் அவர்களின் நீண்டகால நட்பு மற்றும் படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து வந்தனர்.

    சூர்யா - மாதவன்

    அப்போது பேசிய மாதவன், " சூர்யா நடிப்பில் வெளியாகிய 'கஜினி' படத்தில் நடிப்பதற்கான முதல் வாய்ப்பு எனக்கு தான் கிடைத்தது. ஆனால் அந்தப் படத்தின் இரண்டாவது பாதி பிடிக்காததால் அந்த கதையை நிராகரித்து விட்டேன். தொடர்ந்து அந்தப் படத்தில் கமிட்டான சூர்யா, தன்னை வருத்திக்கொண்டு நடித்ததை பார்த்து நான் வியப்படைந்தேன்" என கூறினார்.

    • நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'.
    • இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்

    ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்

    இப்படத்தில் நடிகர்கள் சூர்யா மற்றும் ஷாருக்கான் ஆகியோர் கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக மாதவன் முன்பே அறிவித்திருந்தார். ராக்கெட்ரி படம் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாதவன் பேசியது சர்ச்சைக்குள்ளானது. அதன்பின் அதுகுறித்து விளக்கம் அளித்து மாதவன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

    மாதவன் - ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்

    மாதவன் - ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்

    இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா ராக்கெட்ரி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் வீடியோவை மாதவன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் விஞ்ஞானி நம்பி நாராயணனிடம், மாதவன் சூர்யாவை தன்னுடைய நெருங்கிய நண்பர் என்று அறிமுகப்படுத்திவைக்கிறார். நம்பி நாராயணன், தான் சூர்யா மற்றும் அவரின் தந்தை சிவகுமாரின் ரசிகன் என்று கூறுகிறார். இது வீடியோ குறித்து பதிவிட்டுள்ள மாதவன் நம்பி நாராயணன் சார் சூர்யா மற்றும் அவரது தந்தையின் படங்களின் தீவிர ரசிகர். என் சகோதரர் சூர்யாவால் மட்டுமே என்னை மிகவும் நன்றாக உணர முடியும் என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


    • மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில் சிறப்பு காட்சி டெல்லியில் திரையிடப்பட்டது.
    • விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு இந்தப் படம் சமர்ப்பிக்கப்படுகிறது.

    மூத்த விஞ்ஞானியும், இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையப் பொறியியல் வல்லுநருமான நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள , ராக்கெட்ரி: தி நம்பி விளைவு திரைப்படத்தை இயக்கியுள்ள நடிகர் மாதவன், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில், ராக்கெட்ரி: தி நம்பி விளைவு திரைப்படத்தின் சிறப்பு காட்சி டெல்லியில் உள்ள சிரி ஃபோர்ட் அரங்கத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை செயலர் அபூர்வ சந்திரா, சிபிஐ முன்னாள் இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன், முன்னாள் ஐஜி பி.எம்.நாயர், மூத்த அதிகாரிகள் மற்றும் ராக்கெட்ரி திரைப்படக் குழுவினர் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மாதவன், விண்வெளி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் ஆளுமையை போற்றும் படமாக இது இருக்கும் என்றார். விகாஸ் எஞ்சினை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நம்பி நாராயணனுக்கு இந்தப் படம் சமர்ப்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

    அறிவியல் வளர்ச்சி மற்றும் மனிதவள மேம்பாடு ஆகியவற்றில் இந்தியாவின் திறமை குறித்து உலகிற்கு எடுத்துக்காட்டுவதாக இந்தப் படம் அமையும் என்றும் அவர் கூறினார். ராக்கெட்ரி: நம்பி விளைவு திரைப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'.
    • இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ராக்கெட்ரி படம் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது, அதில் மாதவான் பேசியதாவது, "ஆயிரம் ஆண்டுக்கு முன் நம் முன்னோர்கள் எழுதிய பஞ்சாங்கத்திற்கும், தற்போது உள்ள விஞ்ஞானத்திற்கும் தொடர்பு இருக்கிறது. நமது பஞ்சாங்கத்தில் கிரகங்கள் அதனுடைய ஈர்ப்பு விசை போன்றவற்றை ஆயிரம் வருடங்களுக்கு முன்பே எழுதி வைத்துள்ளனர். அந்த பஞ்சாங்கத்தில் இருக்கும் தரவுகள் தான் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் நமது செயற்கைகோள் வெற்றிகரமாக செல்ல உதவியாக இருந்தது" என்றார்.

    மாதவன் 

    மாதவன் 

    மாதவனின் இந்த கருத்து இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு செவ்வாய் கிரகத்துக்கு செல்வது முடியாத காரியம் என்று சொல்லி அவரை பலரும் கேலி செய்தும், விமர்சித்தும் பதிவுகள் வெளியிட்டனர். இந்த கருத்து பரபரப்பான நிலையில் சர்ச்சைக்கு மாதவன் பதில் அளித்து வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "'பழைய பஞ்சாங்கம் என்று கேலி செய்வதற்கு நான் தகுதியானவன்தான். நான் அறியாமையில் இருந்துள்ளேன். ஆனால், நாம் இரண்டு என்ஜின்களுடன் செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டை அனுப்பிய சாதனையை மறுக்க முடியாது. நம்பி நாராயணனின் விகாஸ் என்ஜின் ஒரு ராக்ஸ்டார்" என்று தெரிவித்துள்ளார்.



    • நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'.
    • இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார். பிஜித் பாலா படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். ட்ரைகலர் பிலிம்ஸ், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ், 27 இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' படக்குழுவினர்

    இதையடுத்து இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் இயக்குனர் மாதவன் கூறியதாவது, "விக்ரம் வேதா படம் முடிந்ததும், இஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து திரைப்படம் எடுக்க கூறி எனது நண்பர் பரிந்துரைத்தார். பாகிஸ்தான் ராணுவத்திற்கு தேசிய ரகசியத்தை தெரிவித்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட அந்த விஞ்ஞானி, சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தார்.

    அவர் நாகர்கோவிலில் பிறந்த தமிழர் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது என்பதும், நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மிகவும் மகத்தானது என்பதும், பொதுமக்களின் பார்வையில் படாமல் இருப்பதும் ஏமாற்றமாக இருந்தது. அதனால்தான் நான் 'ராக்கெட்ரி' தயாரிக்க முடிவு செய்தேன்.

    இப்படம் இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா மற்றும் செர்பியா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. ஃபிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா மற்றும் ரான் டோனாச்சி போன்ற புகழ்பெற்ற சர்வதேச நடிகர்களுடன், இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களான  ஷாருக்கான் மற்றும் சூர்யா ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர்" என கூறியுள்ளார்.

    • முன்னணி நடிகரான மாதவன் தற்போது இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
    • இவர் இயக்கியுள்ள படத்தின் டிரைலர் உலகின் மிகப்பெரிய விளம்பரப்பலகையில் வெளியானது.

    இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'அலைபாயுதே' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் மாதவன். இதைத்தொடர்ந்து 'மின்னலே', 'டும் டும் டும்', போன்ற பல படங்கள் நடித்ததன் மூலம் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இவர் சமீபத்தில் நடித்த 'மாறா' திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

    நடிகர் மாதவன் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கையை மையக்கருத்தாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் மாதவன் காதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சிம்ரன் இணைந்துள்ளார்.

    மாதவன் - ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்

    மாதவன் - ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்

    இப்படம் ஜூலை 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாதவன் மற்றும் படக்குழுவினர் புரோமோஷனுக்காக அமெரிக்கா முழுவதும் 12 நாட்கள் விளம்பர சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து உலகின் மிகப்பெரிய விளம்பர பலகையான டைம்ஸ் ஸ்கொயரில் உள்ள நாஸ்டாக் பில்போர்டில் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' டிரைலர் ஒளிபரப்பப்பட்டது. அப்போது படக்குழுவினருடன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.

    சைலன்ஸ் என்ற படத்தில் நடித்து வரும் அனுஷ்கா, மாதவனுக்கு அமெரிக்கா செல்வதில் விசா சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    அனுஷ்கா சைலன்ஸ் என்ற புதிய படத்தில் மாதவனுடன் இணைந்து நடிப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது. மாதவனுடன் ரெண்டு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அனுஷ்கா நீண்ட இடைவெளிக்குப் பின் அவருடன் இணைந்து நடிக்கிறார். 

    இவர்களுடன் ஷாலினி பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சனும் படக்குழுவில் இணைந்துள்ளார். ஹேமந்த் மதுகர் இயக்கும் இந்த படத்தில் அமெரிக்காவில் கதை நடைபெறுவதாக அமைக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு அங்கு தொடங்கியது. 



    தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு நிசப்தம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தை அடுத்த ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே அனுஷ்கா - மாதவன் அமெரிக்கா செல்வதில் விசா சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    மாதவன் தற்போது நடித்து வரும் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்திற்காக சிம்ரனை பாரீஸ் அழைத்து செல்ல இருக்கிறார்.
    இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ராக்கெட்ரி நம்பி விளைவு படம் தயாராகி வருகிறது. நடிகர் மாதவன் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    மேலும் ஆனந்த் மகாதேவனுடன் இணைந்து மாதவன் இப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படம் தமிழ், ஆங்கிலம், மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது. பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளை படக்குழு நிறைவு செய்துள்ளது.



    இறுதிகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு பாரீஸ், பெல்கிரேடு செல்ல உள்ளது. மாதவன் தற்போது இளவயது நம்பி நாராயணனின் தோற்றத்தில் நடித்துள்ளார். சிம்ரன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
    அனுஷ்கா நடிப்பில் ‘பாகமதி’ படம் கடைசியாக வெளியான நிலையில், தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அனுஷ்கா புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார்.
    நடிகை அனுஷ்கா மாதவன் ஜோடியாக ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி நாயகர்கள் பலருடன் இணைந்து நடித்து தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகியானார்.

    ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார். கடைசியாக அவரது நடிப்பில் ‘பாகமதி’ படம் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியானது. அதன்பின்னர் அனுஷ்கா படங்களில் நடிக்கவில்லை.

    இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்த போது ஏற்றிய தனது உடல் எடையை வெளிநாடு சென்று குறைத்துவிட்டு வந்திருக்கிறார். சமீபத்தில் தான் ஒல்லியாக இருக்கும் தோற்றத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவர் மீண்டும் நடிக்க வருகிறார்.



    ஹேமந்த் மதுகர் இயக்கும் சைலன்ஸ் படத்தில் மாதவனுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். நம்பி நாராயணன் வாழ்க்கைப் படத்தில் பிசியாகி இருந்த மாதவன், தனது புதிய தோற்றத்தை சமீபத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சைலன்ஸ் படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது.

    இதுதவிர அனுஷ்கா சிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இரண்டு வருடங்களாக தாடி, முடியுடன் சுற்றி வந்த நடிகர் மாதவன், தற்போது அதற்கு விடை கொடுத்து புதிய தோற்றத்திற்கு மாறி இருக்கிறார்.
    நடிகர் மாதவன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். அவரது தோற்றத்திற்கு மாறுவதற்காக நீண்ட காலமாக முடி மற்றும் தாடியை வளர்த்து வந்தார். 'மாதவனா இது?' என ரசிகர்கள் கேள்வி கேட்கும் அளவுக்கு வெள்ளை முடி மற்றும் தாடியுடன் புதிய கெட்டப்புக்கு மாறினார் மாதவன்.

    ஷூட்டிங்கின் ஒருபகுதி தற்போது முடிந்துவிட்ட நிலையில் நடிகர் மாதவன் இரண்டு வருடங்கள் கழித்து ஷேவ் செய்துள்ளார். இளம் நம்பி நாராயணன் ரோலுக்கு தான் மாதவன் தாடியை நீக்கி இளமை தோற்றத்திற்கு மாறியுள்ளார். 



    ஷூட்டிங் பிரான்ஸ் நாட்டில் நடக்கிறது. புதிய கெட்டப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மாதவனின் அர்ப்பணிப்பை வியந்து பாராட்டி வருகின்றனர். இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்து வருகிறார்.
    நடிகர் மாதவன் இயக்கி நடிக்கும் ராக்கெட்ரி படத்தின் மூலம் விக்ரம் வேதா கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. #RocketryTheNambiEffect #Madhavan #NambiNarayanan
    முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை படமாக உருவாகி வருகிறது. நடிகர் மாதவன் இயக்கும் இந்த படத்தில் அவரே நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    ராக்கெட்ரி - தி நம்பி விளைவு என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்திற்கு இசையமைப்பாளராக சாம்.சி.எஸ் ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் ஏற்கனவே மாதவன், விஜய் சேதுபதி இணைந்து நடித்த விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


    இதுகுறித்த அறிவிப்பை சாம்.சி.எஸ்.தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ராக்கெட்ரி போன்ற ஒரு படத்திற்கு இசையமைப்பேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த படம் எனக்கு நெருக்கமானது. இந்த படத்திற்கு இசையமைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பிரம்மாண்ட படத்தில் எனக்கு வாய்ப்பளித்த மாதவனுக்கு நன்றி. இந்த படத்தில் பணிபுரியும் ஆவலோடு இருக்கிறேன் இவ்வாறு கூறியிருக்கிறார்.

    நம்பிநாராயணனின் இளம் வயது வாழ்க்கை, இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்தது, சாதனைகள், பொய்வழக்கில் சிக்க வைத்தது, கைது நடவடிக்கை ஆகியவை படத்தில் இடம்பெறுகின்றன. இந்த படத்தில் மாதவன் 3 தோற்றங்களில் வருகிறார். 

    தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் தயாராகிறது. #RocketryTheNambiEffect #Madhavan #NambiNarayanan #SamCS

    தாதா 87 படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் விஜய் ஸ்ரீஜி, மாதவனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். #Madhavan #DhaDha87 #VijaySriG
    கலை சினிமாஸ் தயாரிப்பில் விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் வெளிவந்து பலரது கவனத்தை ஈர்த்த படம் தாதா 87. இதில் சாருஹாசன், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீபல்லவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். 

    இப்படத்தில் திருநங்கைகளின் வாழ்க்கையையும், வலியையும் திரைக்கதையாக அமைத்திருந்தார் இயக்குனர். மேலும் திருநங்கைகளை பெண்கள் என்றே அழைக்கலாம் என்பதை பதிவு செய்திருந்தார். இதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக நாயகியாக நடித்த ஸ்ரீபல்லவி இதில் திருநங்கையாக நடித்திருந்தார். ஒரு பெண் திருநங்கையாக நடித்தது இதுவே முதல் முறை. இப்படம் தற்போது தெலுங்கில் ‘பவுடர்’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.



    அம்சவர்தன் தயாரித்து நடிக்கும் பீட்டரு படத்தை தற்போது இயக்குனர் விஜய் ஸ்ரீஜி இயக்கி வருகிறார். அதன்பின் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி, பிரைன் எனும் புதுவித சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை கலை சினிமாஸ் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தில் நடிப்பதற்காக மாதவனிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் நடிக்க ஒப்பந்தம் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ×