என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "laal salam"
- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லால் சலாம்'.கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இத்திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால், "மனிதநேயத்தை விட பெரிய மதம் எதுவும் இல்லை" என்று 'லால் சலாம்' படப்பிடிப்பு தளத்தில் இருந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
There is no religion bigger than HUMANITY❤️
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) July 8, 2023
Good morning guys…
Have a gr8 day…#LalSalaamShootingSpot tweet:)
- நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பூளவாடி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 27). மண்பாண்ட கலைஞரான இவர் மண் பாண்டங்கள் மட்டுமல்லாமல் சிலைகள் மற்றும் கால்நடைகள் என அனைத்து விதமான உருவ பொம்மைகளையும் செய்து வருகிறார். தீவிர ரஜினி ரசிகரான இவர் தனது பெயரையே ரஜினி ரஞ்சித் என மாற்றிக் கொண்டுள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ரஜினியின் உருவ பொம்மை சிலை செய்த இவர் அதனை ரஜினியிடம் நேரில் கொடுத்து வாழ்த்து பெற்றுள்ளார்.
தற்போது ரஜினி மகள் ஐஸ்வர்யா தயாரிக்கும் 'லால் சலாம்' படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 'லால் சலாம்' படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்தநிலையில் மொய்தீன் பாய் சிலையை 2 அடி உயரத்தில் ஒரு மணி நேரத்தில் ரஞ்சித் செய்து முடித்துள்ளார். அந்த சிலையை ரஜினியை நேரில் சந்தித்து கொடுக்க உள்ளதாக ரஞ்ஜித் தெரிவித்துள்ளார்.
- நடிகர் ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மீது அதீத பக்தி கொண்டவர் நடிகர் ரஜினிகாந்த். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே கிரிவலப் பாதையில் மின்விளக்கு வசதி செய்து கொடுத்தார். அதனை தொடர்ந்து ராஜ கோபுரங்கள் மீது அதிக வெளிச்சம் கொண்ட மின்விளக்குகள் பொருத்த நிதி அளித்தார். 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதைகளிலும் நடிகர் ரஜினி கிரிவலம் சென்று தரிசனம் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை பகுதியில் நடந்து வருகிறது. இதற்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு ரஜினி திருவண்ணாமலை வந்தார். அவர் அங்குள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தங்கி உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். அம்மணி அம்மன் கோபுரம் முன்பு இறங்கியதும் கோபுரத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி வணங்கினார். நடிகர் ரஜினிகாந்துக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.
முதலில் அவர் தங்க கொடிமரம் அருகே உள்ள சம்பந்த விநாயகரை தரிசனம் செய்தார். பின்னர் அண்ணாமலையார் சன்னதிக்கு சென்றார். அங்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டன. அதில் கலந்து கொண்டு மனமுருக தரிசனம் செய்தார். தொடர்ந்து அம்மன் சன்னதிக்கு சென்று அங்கு தரிசனம் செய்தார்.
இதற்கிடையே ரஜினிகாந்த் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்த தகவல் திருவண்ணாமலை நகர பகுதியில் பரவியது. இதனால் கோவிலுக்கு ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் வந்தனர். அம்மன் சன்னதி அருகே ரஜினிகாந்த் இருப்பதைக் கண்ட ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டம் அதிகரித்ததால் உடனடியாக அங்கிருந்து ரஜினி வெளியேறினார். அம்மணி அம்மன் கோபுரம் வழியாக காரில் புறப்பட்டு சென்றார். சனி பிரதோஷத்தையொட்டி நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இன்றுடன் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு இந்த பகுதியில் நிறைவடைகிறது. அவர் இன்று மாலை சென்னைக்கு புறப்பட்டு செல்வார் என தெரிவித்தனர்.
- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ’லால் சலாம்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லால் சலாம்'.கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இத்திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடிக்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது நடிகர் ரஜினிகாந்த், கபில்தேவை சந்தித்து திரைப்படத்தின் கதைகளை பற்றி பேசினார். தொடர்ந்து இத்திரைபடத்தின் காட்சிகள் பல்வேறு இடங்களில் நடந்து வந்தது. தற்போது புதுவையில் 'லால் சலாம்' படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு 10 நாட்கள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், 'லால் சலாம்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பது குறித்து அவரது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரஜினியின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் 'நான் உங்களை பார்க்கிறேன். நான் உங்களை வைத்து படமெடுக்கும் ஒருநாள் வரும் என்று நான் கற்பனை கூட செய்ததில்லை. நான் உங்களை மிகவும் மதிக்கிறேன். சிலசமயம் நான் உங்கள் வழியாக பார்க்கிறேன். பெரும்பாலான முறை உங்களுடன் இந்த உலகத்தை பார்க்கிறேன். ஒவ்வொரு நாளும் நீங்கள்தான் நான் என்பதை உணர்கிறேன் அப்பா. உங்களை அதிகமாக நேசிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.
லைகா தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இத்திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடிக்கின்றனர்.
லால் சலாம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது நடிகர் ரஜினிகாந்த், கபில்தேவை சந்தித்து திரைப்படத்தின் கதைகளை பற்றி பேசினார். தொடர்ந்து இத்திரைபடத்தின் காட்சிகள் பல்வேறு இடங்களில் நடந்து வந்தது. தற்போது புதுவையில் 'லால் சலாம்' படப்பிடிப்பு 10 நாட்கள் நடைபெறவுள்ளது.
மணமக்களை வாழ்த்திய ரஜினிகாந்த்
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பெங்களூர் சென்றுள்ளார். அதாவது, தன் நெருங்கிய நண்பரான மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் மகன் அபிஷேக் அம்பரீஷ் திருமணம் இன்று பெங்களூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
- நடிகர் ரஜினி தற்போது ‘லால் சலாம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி பகுதியில் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி ரோடியர் மில்லில் நடிகர் ரஜினி நடிக்கும் 'லால் சலாம்' படப்பிடிப்பின் 2-ம் நாளான நேற்று ரஜினியை பார்க்க குவிந்த ரசிகர்கள் போலீசாருடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
லால் சலாம்
லைகா நிறுவனம் தயாரிக்கும் 'லால் சலாம்' என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினி கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. 2-ம் நாளாக நேற்று ரோடியர் மில் பழைய வளாகத்தில் நடந்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினி கலந்து கொண்டார். இதையறிந்த ரசிகர்கள் படப்பிடிப்பு நடக்கும் ரோடியர்மில் வாயிலில் திரண்டனர். ரஜினியை பார்க்க அனுமதிக்குமாறு அங்கிருந்த போலீசாரிடம் கேட்டனர்.
ரசிகர்களை பார்த்து கையசைத்த ரஜினி
ஆனால் போலீசார் ரசிகர்களை அனுமதிக்க மறுத்தனர். ஏராளமான ரசிகர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் படப்பிடிப்பு முடித்து காரில் வெளியே வந்த ரஜினி, ரசிகர்களை பார்த்து கையை அசைத்தபடி வேகமாக புறப்பட்டு சென்றார். ரஜினியை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். 3-வது நாளாக தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.
- இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லைகா தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் 'லால் சலாம்' திரைப்படம் உருவாகி வருகிறது. கிரிக்கெட்டை மையமாக வைத்து தயாரிக்கப்படும் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு, விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இத்திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடிக்கின்றனர்.
லால் சலாம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது நடிகர் ரஜினிகாந்த், கபில்தேவை சந்தித்து திரைப்படத்தின் கதைகளை பற்றி பேசினார். தொடர்ந்து இத்திரைபடத்தின் காட்சிகள் பல்வேறு இடங்களில் நடந்து வந்தது. தற்போது புதுவையில் 'லால் சலாம்' படப்பிடிப்பு நடந்து வருகிறது.
புதுவை-கடலூர் சாலையில் உள்ள பழைமையான ரோடியர் மில் வளாகத்தில் நேற்று காலை முதல் 'லால்சலாம்' படப்பிடிப்பு நடந்தது. மாலை 3 மணி அளவில் நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு நடைபெறும் ரோடியர் மில்லுக்கு வந்தார். அங்கு அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்ததும் ரஜினி ரசிகர்கள் ரோடியர் மில்லுக்கு திரண்டு வந்தனர். ஆனால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட வில்லை. ரோடியர் மில்லில் மெயின் கேட் இழுத்து மூடப்பட்டது. இதனால் ரஜினியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
லால் சலாம்
ஆனாலும் தொடர்ந்து ரசிகர்கள் ரஜினியை பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில் ரோடியர் மில் முன்பு காத்திருந்தனர். மாலை 6 மணியளவில் ரஜினிகாந்த் அங்கிருந்து காரில் தான் தங்கிருக்கும் தனியார் ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார். இன்று காலை மீண்டும் ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. 2-வது நாளான இன்றும் காலை முதலே ரசிகர்கள் பட்டாளம் ரோடியர் மில்முன்பு திரண்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தொடர்ந்து ரஜினி நடிக்கும் லால்சலாம் படப்பிடிப்பு கோரிமேடு, லாஸ்பேட்டை மைதானம் உள்பட பல்வேறு இடங்களில் 10 நாள் நடைபெறும் என்று படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த்.
- இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ரஜினி
இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினி தனது மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'லால் சலாம்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.
சத்ய நாராயண ராவ் -ரஜினி
இந்நிலையில், நடிகர் ரஜினியின் சகோதரர் சத்ய நாராயண ராவ், திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ரஜினியின் ஜெயிலர், லால் சலாம் திரைப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. கடவுளின் அருளால் அவர் நீண்ட காலம் நலமாக இருக்க வேண்டும். ரஜினி இனி அரசியலுக்கு வரமாட்டார். வயதாகிவிட்டது அவர் இனி அரசியலுக்கு வந்தாலும் பிரயோஜனம் இல்லை. யாருக்கும் ஆதரவு அளிக்கவும் வாய்ப்பில்லை" என்று கூறினார்.
- நடிகர் ரஜினிகாந்த் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
- இவர் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் 'லால் சலாம்' படத்தில் நடித்து வருகிறார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லால் சலாம்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக குறிப்பிட்டு படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. சமீபத்தில் 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் மும்பைக்கு புறப்பட்டு சென்றார். இப்படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் நடிப்பதாக படக்குழு அறிவித்தது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மும்பையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- நடிகர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’.
- இப்படத்தின் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் ரஜினிகாந்த் மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
லால் சலாம்
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லால் சலாம்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக குறிப்பிட்டு படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. சமீபத்தில் 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.
ரஜினிகாந்த் -கபில்தேவ்
இந்நிலையில், 'லால் சலாம்' படத்தின் புதிய அப்டேட்டை நடிகர் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார். அதன்படி, இப்படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் நடித்துள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள ரஜினிகாந்த், "முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று இந்தியாவை பெருமைப்படுத்திய பழம்பெரும், மிகவும் மரியாதைக்குரிய மற்றும் அற்புதமான மனிதர் கபில்தேவ்ஜியுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
It is my honour and privilege working with the Legendary, most respected and wonderful human being Kapildevji., who made India proud winning for the first time ever..Cricket World Cup!!!#lalsalaam#therealkapildev pic.twitter.com/OUvUtQXjoQ
— Rajinikanth (@rajinikanth) May 18, 2023
- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் லால் சலாம்.
- இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுயடைந்ததாக படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது. அதில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
#LalSalaam ? everyone! 34 Days of extensive shoot & we wrapped our schedule yesterday! Now it's time to prep for the next ??
— Lyca Productions (@LycaProductions) April 10, 2023
? @ash_rajinikanth
? @arrahman
? @rajinikanth @TheVishnuVishal & @vikranth_offl
? @DOP_VishnuR
⚒️ @RamuThangraj
✂️?️ @BPravinBaaskar
? @NjSatz
?️… pic.twitter.com/lDGKVb46R5
- தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால்.
- இவர் தற்போது ’லால் சலாம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான விஷ்ணு விஷால் 'வெண்ணிலா கபடி குழு' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இவர் ராட்சசன், குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி போன்ற பல படங்களில் நடித்தார்.
லால் சலாம்
சமீபத்தில் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் -ஐஸ்வர்யா லட்சுமி நடித்த 'கட்டா குஸ்தி' திரைப்படம் வருமான ரீதியாக வரவேற்பை பெற்றது. இவர் தற்போது இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் 'லால் சலாம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
விஷ்ணு விஷால் பதிவு
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஷ்ணு விஷால் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "ஒரு அழகான சாலை ஒரு அழகான பயணம் மற்றும் இலக்குக்கு வழிவகுக்கிறது. இதை என் வாழ்க்கையின் மறக்க முடியாத பயணமாக மற்றியதற்கு இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
A beautiful road
— VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) March 27, 2023
leads to a beautiful journey and a wonderful destination#LalSalaam
Thankss to my director @ash_rajinikanth for making this as one of my most memorable journeys….
She is in full control :) pic.twitter.com/FEn2UJLPxb
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்