search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jio"

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கிரிக்கெட் பயனர்களுக்காக புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • புதிய பேஸ் சலுகைகள் பயனர்களுக்கு ட்ரூ5ஜி டேட்டா மற்றும் இலவசமாக கூடுதல் டேட்டா வழங்குகின்றன.

    2023 ஐபிஎல் போட்டிகள் அடுத்த வாரம் துவங்க இருக்கின்றன. இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகளை பயனர்கள் ஜியோ சினிமா செயலியில் இலவசமாக கண்டுகளிக்க முடியும். இதையடுத்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கிரிக்கெட் பயனர்களுக்காக சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

    ஏற்கனவே ஜியோ சேவையை பயன்படுத்துவோருக்கு ரிலையன்ஸ் ஜியோ மூன்று பிரீபெயிட் சலுகைகளை அறிவித்துள்ளது. புதிய ஜியோ பிரீபெயிட் சலுகைகள் அதிகபட்சமாக தினமும் 3 ஜிபி டேட்டா, அதிகபட்சம் 84 நாட்கள் வேலிடிட்டி, கூடுதலாக இலவச டேட்டா வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 219, ரூ. 399 மற்றும் ரூ. 999 விலைகளில் மொத்தம் மூன்று புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

     

    இவற்றின் வேலிடிட்டி முறையே 14 நாட்கள், 28 நாட்கள் மற்றும் 84 நாட்கள் ஆகும். இத்துடன் ரிலையன்ஸ் ஜியோவின் ட்ரூ5ஜி சேவையை இலவசமாக பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. புதிய சலுகைகளில் அன்லிமிடெட் காலிங், தினமும் 3 ஜிபி டேட்டா உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.

    இந்த சலுகைகளுடன் கூடுதல் டேட்டா வழங்கும் வவுச்சர்கள் வழங்கப்படுகிறது. அதன்படி ரூ. 219 சலுகையுடன் 2 ஜிபி டேட்டா வழங்கும் ரூ. 25 வவுச்சர், ரூ. 399 சலுகையுடன் 6 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கும் ரூ. 61 வவுச்சர், ரூ. 999 சலுகையுடன் 40 ஜிபி வரையிலான டேட்டா வழங்கும் ரூ. 241 வவுச்சர் வழங்கப்படுகிறது.

    இந்த டேட்டா போதாது என்பவர்களுக்காக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கிரிக்கெட் ஆட் ஆன் சலுகைகளை கிரிக்கெட் பயனர்களுக்கு அறிவித்து இருக்கிறது. இவற்றை நேரலையில் போட்டிகளை ஸ்டிரீம் செய்ய விரும்பும் பயனர்கள் ஆர்வமுடன் பயன்படுத்தலாம். கிரிக்கெட் ஆட் ஆன் சலுகைகளின் விலை ரூ. 222, ரூ. 444 மற்றும் ரூ. 667 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

    இதில் ரூ. 222 சலுகையின் வேலிடிட்டி பயனர்கள் பயன்படுத்தும் பேஸ் சலுகை முடியும் வரை வழங்கப்படுகிறது. ரூ. 444 மற்றும் ரூ. 667 விலை சலுகைகள் முறையே 60 நாட்கள் மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகின்றன. டேட்டாவை பொருத்தவரை ரூ. 222 சலுகை 50 ஜிபி, ரூ. 444 மற்றும் ரூ. 667 சலுகைகள் முறையே 100 ஜிபி மற்றும் 150 ஜிபி டேட்டா வழங்குகின்றன.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக போஸ்ட்பெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • புதிய ஜியோ போஸ்ட்பெயிட் சலுகைகளை பயனர்கள் ஒரு மாதத்திற்கு இலவசமாக பயன்படுத்தி பார்க்க முடியும் என அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய போஸ்ட்பெயிட் சலுகைகளை- ஜியோபிளஸ் பெயரில் அறிவித்து இருக்கிறது. புதிய சலுகைகள் குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கிய பலன்களை வழங்குகிறது. இத்துடன் புதிய சேவையில் இணையும் பட்சத்தில் ஒருமாத காலத்திற்கு சலுகைகளை இலவசமாக பயன்படுத்தி பார்க்கலாம் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    இந்த சலுகைகள் ஜியோ வெல்கம் ஆஃபரின் கீழ், அன்லிமிடெட் ட்ரூ 5ஜி டேட்டாவை வழங்குகின்றன. இந்த சலுகைகள் ஜியோ வெல்கம் ஆஃபரின் கீழ் அன்லிமிடெட் ட்ரூ 5ஜி டேட்டா வழங்குகின்றன. ஒற்றை கட்டணத்தில் டேட்டா ஷேரிங், பிரமீயம் தரவுகளை வழங்கும் செயலிக்கான சந்தா உள்ளிட்ட பலன்களை வழங்குகிறது.

    ஒருவேளை இந்த பலன்கள் பிடிக்காத பட்சத்தில் பயனர்கள் எப்போது வேண்டுமானாலும், போஸ்ட்பெயிட் இணைப்பை துண்டித்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது பயனர்களிடம் எவ்வித கேள்வியும் கேட்கப்படாது என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்து இருக்கிறது.

    ஜியோபிளஸ் போஸ்ட்பெயிட் சலுகை பலன்கள்:

    ரூ. 399 மாத கட்டணத்தில் துவங்குகிறது

    கூடுதலாக ரூ. 99 கட்டணத்தில் மூன்று இணைப்புகளை பெறும் வசதி

    4 பேர் அடங்கிய குடும்பத்திற்கு மாதம் ரூ. 696 கட்டணம்

    ஒரு சிம் இணைப்பிற்கு சராசரியாக மாத கட்டணம் ரூ. 174

    டேட்டாவை குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ளும் வசதி

    தினசரி டேட்டா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை

    ஜியோ ட்ரூ 5ஜி வெல்கம் ஆஃபரின் கீழ் அன்லிமிடெட் இலவச 5ஜி டேட்டா

    நீங்கள் விரும்பும் மொபைல் நம்பர்

    நெட்ஃப்ளிக்ஸ், அமேசான், ஜியோடிவி மற்றும் ஜியோசினிமா சந்தா

    வெளிநாட்டு பயணங்களின் போது விமானத்தினுள் கனெக்டிவிட்டி

    சர்வதேச ரோமிங்கின் போது வைபை காலிங் கட்டணம் நிமிடத்திற்கு ரூ. 1

    129 நாடுகளுக்கு ஒரு சர்வதேச ரோமிங் சலுகை

    ஜியோஃபைபர் பயனர்கள், கார்ப்பரேட் ஊழியர்கள், மற்ற நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்கள், ஆக்சிஸ், ஹெச்டிஎப்சி மற்றும் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு பாதுகாப்பு முன்பணம் இல்லை.

    ஒரே க்ளிக்-இல் கால்-பேக் சேவை

    டவுன்டைம் இன்றி ஜியோ நம்பருக்கு மாறும் வசதி

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் காதலர் தினத்தை ஒட்டி கூடுதல் பலன்களை அறிவித்து இருக்கிறது.
    • புதிய அறிவிப்பின் கீழ் மூன்று பிரீபெயிட் சலுகைகளில் முன்பை விட கூடுதல் பலன்களை வழங்குகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் சலுகைகளில் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி காதலர் தின ஆஃபர்களை அறிவித்து இருக்கிறது. இதில் ரூ. 121 மதிப்புள்ள 12 ஜிபி கூடுதல் டேட்டா, வேலிடிட்டி மற்றும் கூப்பன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. கூடுதல் பலன்கள் ரிலையன்ஸ் ஜியோ ரூ. 349, ரூ. 899 மற்றும் ரூ. 2 ஆயிரத்து 999 விலை சலுகைகளில் மட்டும் வழங்கப்படுகிறது.

    காதலர் தின ஆஃபர் விவரங்கள்:

    ரூ. 349, ரூ. 899 மற்றும் ரூ. 2 ஆயிரத்து 999 பிரீபெயிட் சலுகைகளில் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. கூடுதல் டேட்டாவை பொருத்தவரை ரூ. 2 ஆயிரத்து 999 சலுகையில் 75 ஜிபி + 12 ஜிபி டேட்டாவும், ரூ. 899 மற்றும் ரூ. 349 சலுகைகளில் 12 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. வேலிடிட்டியை பொருத்தவரை ரூ. 2 ஆயிரத்து 999 சலுகையில் வழக்கமாக வழங்கப்படும் 365 நாட்களுடன் 23 நாட்கள் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

     

    இதர பலன்களை பொருத்தவரை மூன்று சலுகைகளுடன் மெக்டொணால்டு-இல் ரூ. 199 மற்றும் அதற்கும் அதிக விலையில் பொருட்களை வாங்கும் போது ரூ. 105 மதிப்புள்ள மெக் ஆலூ டிக்கி / சிக்கன் கேபாப் பர்கர் இலவசமாக பெறலாம்.

    இத்துடன் ஃபெர்ன் அண்டு பெட்டல்ஸ்-இல் ரூ. 799-க்கு வாங்கும் போது ரூ. 150 தள்ளுபடியும், இக்சிகோவில் விமான முன்பதிவு ரூ. 4 ஆயிரத்து 500-க்கும் அதிகமாக மேற்கொள்ளும் போது ரூ. 750 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    காதலர் தின சலுகைகள் தவிர, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்கி வருகிறது. இதற்கு பயனர்கள் ரூ. 239 அல்லது அதற்கும் அதிக தொகை கொண்ட சலுகைகளில் ரிசார்ஜ் செய்திருப்பது அவசியம் ஆகும். புதிய பிரீபெயிட் சலுகை ஜியோ வலைதளம், மைஜியோ செயலி மற்றும் மூன்றாம் தரப்பு ரிசார்ஜ் செக்பாயிண்ட்களில் கிடைக்கிறது.

    • ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கும் புதிய பிரீபெயிட் சலுகைகள் ஜியோ வலைதளம், மைஜியோ செயலிகளில் கிடைக்கிறது.
    • புதிய சலுகை 90 நாட்கள் வேலிடிட்டி, 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்ட பலன்களை வழங்குகிறது.

    இந்தியா முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடுவதில் மும்முரமாக ஈடுபட்டு வந்த போதிலும், ரிலையன்ஸ் ஜியோ தொடர்ச்சியாக தனது பிரீபெயிட் சலுகைகளை மாற்றியமைத்து வருகிறது. இம்முறை ரிலையன்ஸ் ஜியோ இரண்டு பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 349 மற்றும் ரூ. 899 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. இரு சலுகைகளின் பலன்கள் அதிகளவு வேறுபடுகின்றன.

    எனினும், இவற்றில் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் போன்ற செயலிகளுக்கான சந்தா இலவசமாக வழங்கப்படுகின்றன. பலன்களை பொருத்தவரை அதிகபட்சம் 90 நாட்கள் வேலிடிட்டி, 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்குகின்றன. இதுதவிர ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

    இரு சலுகைகளின் பலன்கள்:

    ரிலையன்ஸ் ஜியோ ரூ. 349 சலுகையில் தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். ஏற்கனவே குறிப்பிட்டதை போன்றே இந்த பலன்களுடன் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் போன்ற செயலிகளுக்கான சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு ஜியோ வெல்கம் ஆஃபரின் கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் வழங்கப்படுகிறது.

    புதிய ஜியோ ரூ. 899 சலுகையிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். அந்த வகையில், ரிலையன்ஸ் ஜியோ ரூ. 899 சலுகையில் வாடிக்கையாளர்கள் மொத்தம் 225 ஜிபி டேட்டா பெறலாம். இத்துடன் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் போன்ற செயலிகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ ரூ. 349 சலுகையை போன்றே இதிலும் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் ஜியோ வெல்கம் ஆஃபருக்கு அப்கிரேடு செய்யப்படுவர். இவர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படும்.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
    • ஜியோ தவிர ஏர்டெல் நிறுவனமும் நாடு முழுக்க தனது 5ஜி சேவைகளை தொடர்ச்சியாக பல நகரங்களில் வெளியிட்டு வருகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு 50 நகரங்களில் தனது ட்ரூ 5ஜி சேவைகளை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் தற்போது நாடு முழுக்க 184 நகரங்களில் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த நகரங்களில் வசிக்கும் ஜியோ வாடிக்கையாளர்கள் ஜியோ வெல்கம் சலுகையின் கீழ் 5ஜி சேவைகளை தங்களின் சாதனங்களில் பயன்படுத்த அழைக்கப்படுவர். ஜியோ ட்ரூ 5ஜி 1Gbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி பயன்படுத்தலாம்.

    "17 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 50 கூடுதல் நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை வெளியிடுவதில் நெகிழ்ச்சி அடைகிறோம். இந்தியா மட்டுமின்றி உலகிலேயே 5ஜி சேவை வெளியீட்டில் இது மிகப்பெரியது ஆகும். ட்ரூ 5ஜி வெளியீட்டை வேகப்படுத்தி இருக்கிறோம். 2023 புத்தாண்டில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளின் பலன்களை ஒவ்வொரு ஜியோ பயனரும் அனுபவிக்க வேண்டும். " என ஜியோ செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.

    "டிசம்பர் 2023 முதல் நாட்டில் உள்ள அனைத்து ஜியோ வாடிக்கையாளரும் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை அனுபவிக்க முடியும். ஆந்திர பிரதேசம், அசாம், சட்டீஸ்கர், கோவா, ஹரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ் நாடு, தெலுங்கானா, உத்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகளுக்கு கடமைப்பட்டுள்ளோம்," என அவர் மேலும் தெரிவித்தார்.

    ஜியோ ட்ரூ 5ஜி சேவைகள் ஸ்டாண்ட்-அலோன் 5ஜி ஆர்கிடெக்ச்சரில் வேலை செய்யும். இது 5ஜி ஸ்பெக்ட்ரமை 700MHz, 3500MHz, 26GHz பேண்ட்களில் வழங்குகிறது. ஜியோ 5ஜி சேவைகள் 4ஜி நெட்வொர்க் சாராமல் இயங்கும் திறன் கொண்டிருக்கின்றன.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கும் புது சலுகையை அறிவித்து இருக்கிறது.
    • புதிய ரிலையன்ஸ் ஜியோ சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 630 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது.

    2023 புத்தாண்டை கொண்டாடும் வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 2023 விலையில் புது சலுகையை அறிவித்து இருக்கிறது. புத்தாண்டை குறிக்கும் ரூ. 2023 விலையில் புது சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய ரூ. 2023 சலுகையில் தினமும் 2.5 ஜிபி டேட்டா 252 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ ரூ. 2999 விலை சலுகையின் வேலிடிட்டியை நீட்டித்து இருக்கிறது.

    பலன்களை பொருத்தவரை புதிய ரூ. 2023 விலை சலுகையில் தினமும் 2.5 ஜிபி டேட்டா (மொத்தத்தில் 630 ஜிபி), தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோவின் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோகிளவுட் மற்றும் ஜியோ செக்யுரிட்டி போன்ற செயலிகளுக்கான சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

    மற்றொரு சிறப்பு சலுகையாக ஜியோ ஏற்கனவே வழங்கி வரும் ரூ. 2999 விலை சலுகையின் வேலிடிட்டியை 23 நாட்கள் நீட்டித்து இருக்கிறது. அதன்படி ரூ. 2999 விலையில் கிடைக்கும் ஜியோ சலுகையில் தற்போது 388 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 912.5 ஜிபி டேட்டா (தினமும் 2.5 ஜிபி), 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ செயலிகளுக்கான சந்தாவும் இலவசமாக வழங்கப்படுகிறது.

    இத்துடன் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு அன்லிமிடெட் 5 ஜி டேட்டா வழங்கப்படும் என்றும் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கிறது. இதற்கு பயனர்கள் குறைந்த பட்சம் ரூ. 239 விலை சலுகை அல்லது அதற்கும் அதிக விலை கொண்ட சலுகைகளை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும் போது ஜியோ வெல்கம் சலுகையின் கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது. புதிய பிரீபெயிட் சலுகை ஜியோ வலைதளம், மைஜியோ செயலியில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
    • 90 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புது சலுகையை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் புது சலுகையை அறிவித்து இருக்கிறது. பிரீபெயிட் பயனர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் புது சலுகையின் விலை ரூ. 749 ஆகும். இதில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புது சலுகையில் மொத்தம் 180 ஜிபி டேட்டா கிடைக்கும்.

    ஜியோ ரூ. 719 சலுகையும் இதே போன்ற பலன்களை வழங்கி வருகிறது. எனினும், இதன் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இவை தவிர ரூ. 249 - 23 நாட்கள், ரூ. 299 - 28 நாட்கள், ரூ. 533 - 56 நாட்கள், ரூ. 2 ஆயிரத்து 879 - 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் சலுகைகளை ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வருகிறது. இந்த சலுகைகள் அனைத்திலும் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்குகின்றன.

    மற்ற சலுகைகளை போன்றே புது சலுகையிலும் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் என ஏராளமான ஜியோ சேவைகளின் சந்தா வழங்கப்படுகிறது. புது சலுகை மட்டுமின்றி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்கி வருகிறது. எனினும், இந்த சலுகை ரூ. 239 அல்லது அதற்கும் அதிக சலுகையை ரிசார்ஜ் செய்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

    ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கும் புதிய ரூ. 749 விலை சலுகை ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளம், மைஜியோ செயலி உள்ளிட்ட தளங்களில் கிடைக்கிறது. இதுதவிர மூன்றாம் தரப்பு செக்பாயிண்ட்களிலும் இந்த சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

    • இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
    • நாட்டின் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கப்பட்டு விட்டதாக நிறுவனங்கள் தினந்தோரும் அறிவித்து வருகின்றன.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பூனேவில் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டதாக அறிவித்து இருக்கிறது. இந்த பகுதியில் 5ஜி சேவை வழங்கிய முதல் நிறுவனம் ஜியோ தான் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் ஸ்டாண்ட்அலோன் ட்ரூ 5ஜி நெட்வொர்க் கிடைத்தால் மட்டுமே ட்ரூ 5ஜி நெட்வொர்க்கில் பீட்டா டெஸ்டிங் துவங்கப்படுகிறது என்றும் ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

    முன்னதாக டெல்லி-NCR பகுதிகளான- டெல்லி, குருகிராம், நொய்டா, காசியாபாத், ஃபரிதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டன. இவை மட்டுமின்றி பெங்களூரு, ஐதராபாத் நகரங்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரனாசி மற்றும் சென்னை போன்ற நகரங்களில் கடந்த மாதம் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்பட்டன.

    பூனே அதிக மாணவர்கள் வசிக்கும் பகுதியாக திகழ்கிறது. இதோடு முன்னணி தகவல் தொழில்நுட்ப பகுதியாகவும் விளங்குகிறது. இந்தியாவில் ஆட்டோமொபைல் உற்பத்தியின் பெரும்பாலான பகுதிகள் பூனே சுற்றுவட்டார பகுதிகளிலேயே நடைபெறுகிறது. அந்த வகையில், ஜியோ 5ஜி வெளியீடு இந்த பகுதிவாசிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    சேவைகள் வழங்கப்பட்டதை அடுத்து பூனேவில் வசிக்கும் ஜியோ பயனர்கள் ஜியோ வெல்கம் ஆஃபருக்கு இன்வைட் செய்யப்படுவர். இந்த திட்டத்தின் கீழ் பயனர்கள் அதிகபட்சம் 1Gbps+ வேகத்தில் மொபைல் டேட்டா பயன்படுத்த முடியும். இதற்கு எந்த விதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. 

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையில் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • தீபாவளி பண்டிகை துவங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் ஜியோ 5ஜி சேவைகள் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பெங்களூரு மற்றும் ஐதராபாத் நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை வெளியிட்டு உள்ளது. முன்னதாக தசரா பண்டிகை காலத்தில் நாட்டின் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளின் பீட்டா வெளியீடு நடைபெற்று வந்தது.

    பீட்டா சோதனை மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் வாரனாசி போன்ற நகரங்களில் வெளியிடப்பட்டது. பின்னர் தீராவளி சமயத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாத்வாராவில் ஜியோ 5ஜி சேவைகள் வெளியிடப்பட்டன. எனினும், ஜியோ பயனர்கள் 5ஜி சேவையை பயன்படுத்த "ஜியோ வெல்கம் ஆஃபர்"-க்கான இன்வைட் பெற காத்திருக்க வேண்டும். இவ்வாறு இன்வைட் செய்யப்பட்டவர்கள் அதிகபட்சம் 1Gbps வேகத்தில் இணைய சேவையை பயன்படுத்தலாம்.

    முந்தைய அறிவிப்புகளை போன்றே இம்முறையும், வெளியீட்டுக்கு எந்த விதமான கட்டணங்களும் கூடுதலாக வசூலிக்கப்படவில்லை. "ஜியோ ட்ரூ 5ஜி சேவை இந்த இரு தொழில்நுட்ப நகரங்களில், இந்தியர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதோடு, மனித குலத்திற்கு சில அதிநவீன தொழில்நுட்பங்களின் உண்மை திறனை உணர செய்யும்." என ஜியோ வெளியிட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ட்ரூ 5ஜி சேவைகளின் வெளியீடு இந்தியாவில் படிப்படியாக நடைபெறும் என ஜியோ ஏற்கனவே அறிவித்து இருந்தது. தற்போது ஜியோ ட்ரூ 5ஜி சேவையில் பயனர்கள் 500 Mbps முதல் அதிகபட்சம் 1 Gbps வேகத்தில் இணைய சேவைகளை ஸ்மார்ட்போனில் பயன்படுத்த முடியும் என ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து உள்ளது.

    • பிரதமர் மோடி கடந்த ஒன்றாம் தேதி இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துவைத்தார்.
    • 5ஜி மூலம் இயங்கும் வைபை சேவைகளை நாத்வாராவில் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்தது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ஜியோ நிறுவனம் அதன் 5ஜி வசதியை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாத்துவாராவில் அறிமுகம் செய்துள்ளது. அப்போது ஆகாஷ் அம்பானி பேசியதாவது:

    இந்தியாவின் உண்மையான 5ஜி வசதிகொண்ட பொதுமக்கள் பயன்படுத்தும் வைபை வசதியை புனித நகரமான நாத்துவாராவில் அறிமுகம் செய்து பொதுமக்களுக்கும் கடவுளுக்கும் சமர்ப்பிக்கிறோம்.

    இதைத்தொடர்ந்து இன்னும் பல இடங்களுக்கு இந்த 5ஜி சோதனை செய்யவுள்ளோம். அதில் புதிதாக சென்னையும் சேர்ந்துள்ளது.

    5ஜி சேவை இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகன், ஒவ்வொரு வீடு மற்றும் ஒவ்வொரு வணிக அமைப்புக்கும் கிடைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

    5ஜியில் இயங்கும் வைபை சேவையை மக்கள் அதிகம் கூடும் ரெயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள், ஆன்மீக தலங்கள், பேருந்து நிலையங்கள், வர்த்தக நிலையங்கள் போன்ற இடங்களில் விரிவாக்க திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.

    அக்டோபர் 1 அன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் 5ஜி சேவையை வெளியிட நோக்கியா நிறுவனத்துடன் கூட்டணி அமைக்கிறது.
    • இதற்காக நோக்கியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இடையே பல ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.

    ஆகஸ்ட் மாத வாக்கில் நடத்தப்பட்ட ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் சர்வதேச அளவில் நெட்வொர்க் தொழில்நுட்பம் வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இருப்பதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்து இருந்தது. தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு 5ஜி ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் உபகரணங்களை பல ஆண்டுகள் வழங்குவதற்கான உரிமத்தை வென்று இருப்பதாக நோக்கியா நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    இதை அடுத்து இரு நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. ஒப்பந்தத்தின் படி நோக்கியா நிறுவனம் பேஸ் ஸ்டேஷன்கள், அதிக திறன் கொண்ட 5ஜி MIMO ஆண்டெனா, பல்வேறு ஸ்பெக்ட்ரம் பேண்ட்களை சப்போர்ட் செய்யும் ரிமோட் ரேடியோ ஹெட்கள், நெட்வொர்க் மென்பொருள் உள்ளிட்டவைகளுக்கான உபகரணங்களை நோக்கியா வினியோகம் செய்ய இருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ மட்டுமின்றி ஏர்டெல் நிறுவனத்திற்கும் நோக்கியா தனது ஜி உபகரணங்களை வழங்க இருக்கிறது. முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவைகளின் பீட்டா சோதனையை- மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரனாசி என நான்கு நகரங்களில் துவங்கி இருக்கிறது. வரும் வாரங்களில் இந்த சேவை மேலும் அதிக நகரங்களுக்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிசம்பர் 2023-க்குள் நாட்டின் ஒவ்வொரு நகரங்களிலும் 5ஜி சேவையை வழங்க இலக்கு நிர்ணயம் செய்து இருப்பதாக ரிலையன்ஸ் குழும ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி தெரிவித்து இருந்தார். ரிலையன்ஸ் ஜியோ 5ஜி ஸ்டாண்ட்-அலோன் நெட்வொர்க்-ஐ வழங்க திட்டமிட்டு இருப்பதாக நோக்கியா தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ மேம்பட்ட 5ஜி சேவைகளை வழங்க முடியும்.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி சேவைகளை வெளியிடுவதற்கான ஆயத்த பணிகளை துவங்கி விட்டது.
    • முதற்கட்டமாக 5ஜி பீட்டா சோதனையை ரிலையன்ஸ் ஜியோ துவங்கி இருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரனாசி என இந்தியாவின் நான்கு நகரங்களில் 5ஜி சேவைகளை வெளியிடுவதாக அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக 5ஜி சேவைகளின் பீட்டா டெஸ்டிங் நடைபெற இருக்கிறது. தசரா பண்டிகையை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இந்த நகரங்களில் 5ஜி சேவைகளுக்கான வெளியீடு தயாராகி வருகிறது. மேலும் 5ஜி பீட்டா டெஸ்டிங்குடன் அறிமுக சலுகைகளையும் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கிறது. பீட்டா டெஸ்டிங்கின் அங்கமாக ரிலையன்ஸ் ஜியோ தேர்வு செய்த வாடிக்கையாளர்கள் முழுமையான 5ஜி சேவைகளை அனுபவிக்க முடியும். இத்துடன் சேவை பற்றிய கருத்துக்களை தெரிவிக்க முடியும்.

    தீபாவளி வாக்கில் இந்தியாவில் 5ஜி சேவைகளை வெளியிடுவதாக ரிலையன்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிவித்து இருந்தது. இதை அடுத்து தற்போது 5ஜி பீட்டா டெஸ்டிங் துவங்கப்பட்டு உள்ளது. ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவைகள் ஸ்டாண்ட்-அலோன் (SA) தளத்தில் வெளியாகிறது.

    ஜியோ ட்ரூ 5ஜி அறிமுக சலுகைகள்:

    டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரனாசியில் ஜியோ 5ஜி அறிமுக சலுகைகள் இன்விடேஷன் முறையில் வழங்கப்படுகிறது.

    தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அதிகபட்சம் 1Gbps வேகத்தில் இணைய வசதி வழங்கப்படுகிறது.

    நான்கு நகரங்களை தொடர்ந்து மற்ற நகரங்களிலும் பீட்டா டெஸ்டிங் துவங்கும். இதுபற்றிய அறிவிப்பு படிப்படியாக வெளியிடப்படும்.

    சிறந்த கவரேஜ் மற்றும் பயனர் அனுபவம் அனைத்து வாடிக்கையாளருக்கும் கிடைக்கும் வரை பயனர்கள் பீட்டா டெஸ்டிங்கில் பயன்பெற முடியும்.

    இன்வைட் செய்யப்பட்ட ஜியோ அறிமுக சேவை பயனர்கள் தானாக 5ஜி சேவைக்கு அப்கிரேடு செய்யப்படுவர். இவர்கள் தனியே 5ஜி சிம் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

    ஒவ்வொரு மொபைல் போனிலும் தலைசிறந்த 5ஜி சேவையை வழங்க ஏதுவாக மொபைல் போன் உற்பத்தியாளர்களுடனும் ஜியோ தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

    ×