என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Jaya death probe"
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகிறார்கள்.
இந்த டாக்டர்களிடம் ஏற்கனவே சசிகலா தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளனர். அடுத்தகட்டமாக மீண்டும் குறுக்கு விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
டாக்டர்களிடம் விசாரணை நடத்தி முடித்ததும் அமைச்சர்கள் மற்றும் கட்சி பிரமுகர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என்று ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. #JayaDeathProbe #ArumugasamyinquiryCommission
சென்னை:
ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு திடீர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சை பெற்ற அவருக்கு என்ன செய்தது? எத்தகைய சிகிச்சை கொடுத்தார்கள்? என்பன போன்ற விஷயங்களில் மர்மம் நிலவுகிறது.
ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது முதல் மரணம் அடைந்தது வரை மர்மங்கள் நிலவுகிறது. இதில் உண்மையை கண்டு பிடிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த ஆணையம் சார்பில் கடந்த ஆண்டு முதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவுடன் பழகியவர்கள், சிகிச்சை அளித்தவர்கள், அதற்கு ஏற்பாடு செய்தவர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் விசாரணை நடக்கிறது.
இதுவரை சுமார் 100 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் அளித்த தகவல்கள் வாக்கு மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் சசிகலா வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை எல்லையை விரிவுபடுத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது அவரது சிகிச்சை குறித்து நேரில் சென்று கேட்டறிந்த துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, அப்போதைய கவர்னர் வித்யாசாகர் ராவ் இருவரையும் அழைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
ஜெயலலிதா உடல் நிலையை வெங்கையா நாயுடு விசாரிக்க வந்தபோது அவர் மத்திய மந்திரியாக இருந்தார். தற்போது துணை ஜனாதிபதியாக இருப்பதால் அவரை விசாரணை ஆணையத்துக்கு அழைக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி துணை ஜனாதிபதி மற்றும் முன்னாள் கவனர்ருக்கு சம்மன் அனுப்ப உள்ளனர். இதற்கிடையே தலைமை செயலாளர் உள்பட பலரிடம் தகவல் தரும்படி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது பதிவான சி.சி.டி.வி. காட்சிகள் அழிந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. இது மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் சுப்பையா விசுவநாதன் வரும் 25-ந்தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி தகவல்கள் அளிக்க உள்ளார். அவரிடம் சசிகலா வக்கீல் ராஜாசெந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தவுள்ளார். #JayaDeathProbe #ArumugasamyCommission
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது.
இதுவரை 100-க்கும் அதிகமானவர்களிடம் விசாரணை நடந்தி இருக்கிறது. டாக்டர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், அரசு அதிகாரிகள், சசிகலா குடும்பத்தினர், எய்ம்ஸ் டாக்டர்கள் உள்ளிட்டவர்கள் இந்த ஆணையத்தில் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
ஆஜராகாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த சம்மனில் எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்று டாக்டர்கள் சுப்பையா விஸ்வநாதன் ஆஜரானார்.
நீதிபதி ஆறுமுகசாமியிடம் ஜெயலலிதா சிகிச்சை பற்றி வாக்குமூலம் அளித்தார். நீதிபதி கேட்ட கேள்விகளுக்கும் பதில் கூறினார். #JayaDeathProbe #ApolloHospital
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதா மரணம் குறித்து பெங்களூரு சிறையில் இருந்து வரும் சசிகலா வக்கீல்கள் மூலம் தனது வாக்குமூலத்தை தாக்கல் செய்துள்ளார். சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவர்கள், செவிலியர்கள் என 75-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆணையம் இதுவரை விசாரணை நடத்தி உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்ட போதும் நவம்பர் 22-ந் தேதி தான் ஆணையம் நேரடி விசாரணையை தொடங்கியது. ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய ஆரம்பத்தில் 3 மாதம் மட்டுமே தமிழக அரசு கால அவகாசம் வழங்கியது. அதன்பின்பு, ஒரு முறை 6 மாதமும், மற்றொரு முறை 4 மாதமும் கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த கால அவகாசம் அக்டோபர் 24-ந் தேதி முடிவடைகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர்கள் பெரும்பாலானோரிடம் விசாரணை முடிவடைந்து விட்டது. அப்பல்லோ மருத்துவர்கள் சிலரிடமும், லண்டன் மருத்துவர் ரிச்சர்டுபீலே, எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்டோரிடமும் மட்டுமே விசாரணை நடத்த வேண்டியது உள்ளது. இந்த பணிகளை விரைந்து முடித்து அக்டோபர் 24-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அப்பல்லோ மருத்துவமனையின் இரைப்பை மற்றும் உணவுக்குழாய் சிறப்பு மருத்துவர் பழனிசாமி நேற்று ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
அவர் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
2016-ம் ஆண்டு செப்டம்பர் 25, 27, 29 ஆகிய தேதிகளில் ஜெயலலிதாவுக்கு வயிற்று கோளாறு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நான், அவருக்கு சிகிச்சை அளித்தேன். உரிய மருந்து, மாத்திரைகளுக்கு பின்பு வயிற்று கோளாறு சரியானது. இதன்பின்பு, அக்டோபர் 10-ந் தேதிக்கு பின்னர் ஒரு நாள் ஜெயலலிதாவுக்கு மீண்டும் வயிற்று கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த சமயத்தில் நான் அமெரிக்காவில் இருந்தேன். இதனால் அவருக்கு அளிக்கப்பட்ட உணவு மற்றும் மருந்து சம்பந்தமான விவரங்கள் இ-மெயில் மூலம் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த விவரங்களை பார்த்து உணவில் புரோட்டீன் அளவை குறைக்க ஆலோசனை தெரிவித்தேன்.
அதன்படி, புரோட்டீன் அளவு குறைக்கப்பட்டதும் வயிற்று கோளாறு சரியானது. அதன்பின்பு நான், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை. வயிற்றுக்கோளாறு பிரச்சினையை தவிர்க்க இனிப்பு மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களை கொடுக்க வேண்டாம் என்று பரிந்துரை செய்திருந்தேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இனிப்பு மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களை கொடுக்க வேண்டாம் என்று பரிந்துரைத்த போதிலும் ஜெயலலிதாவுக்கு இனிப்பு வழங்கப்பட்டுள்ளதே? என்று ஆணையத்தின் வக்கீல் மதுரை எஸ்.பார்த்தசாரதி மருத்துவர் பழனிசாமியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு, ஜெயலலிதாவுக்கு இனிப்பு வழங்கியது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று மருத்துவர் பதில் அளித்துள்ளார்.
செவிலியர் அனுஷா நேற்று ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் நேற்று ஆஜராகவில்லை. அவர், வெளிநாடு சென்றிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மற்றொரு நாள் அவரிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. #Jayadeathprobe
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.
இந்த விசாரணை கமிஷனில் முன்னாள் தலைமை செயலாளர்கள் ராம்மோகன் ராவ், ஷீலா பாலகிருஷ்ணன், ஜெயலலிதா உறவினர்கள், உதவியாளர்கள், சசிகலாவின் உறவினர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், அரசு டாக்டர்கள் உள்பட பலர் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தனர்.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எய்ம்ஸ் டாக்டர்கள் கைலாணி, அஞ்சன் டிரிகா, நிதிஷ்நாயக், நிகில் தண்டன் ஆகியோர் ஆலோசனை வழங்கி உள்ளனர். அவர்கள் 3 முறை அப்பல்லோ மருத்துவமனை வந்தனர்.
எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியாவின் மெயிலுக்கு இந்த சம்மனை விசாரணை ஆணையம் அனுப்பி உள்ளது. ஆனால் இந்த சம்மனுக்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதே போல ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது ஆலோசனை வழங்கிய லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலேவுக்கு சம்மன் அனுப்ப விசாரணை கமிஷன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா உதவியாளர்கள் பூங்குன்றன், கார்த்திகேயன் ஆகியோர் ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் நேற்று குறுக்கு விசாரணை செய்தார்.
அப்போது ஆணையத்தின் தரப்பு வக்கீல்கள் எஸ்.பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர், ‘ஜெயலலிதா ஒரு முடிவு எடுத்தால், தீர்க்கமாக எடுப்பார். தனது முடிவை சாதாரணமாக மாற்றிக்கொள்ள மாட்டார். சம்பந்தப்பட்டவர் மீது தவறு இல்லை என்று உறுதியாக தெரிந்தால் மட்டுமே மீண்டும் சேர்த்துக்கொள்வார். 2011-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 12 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஜெயலலிதா நீக்கம் செய்தார்.
2012-ம் ஆண்டு சசிகலாவை மீண்டும் சேர்த்துக்கொண்டார். மற்ற 11 பேரை ஜெயலலிதா கடைசிவரை சேர்த்துக்கொள்ளவில்லை. அவர்கள் தவறு செய்தவர்கள் என்று தெரிந்து தான் ஜெயலலிதா அவர்களை சேர்த்துக்கொள்ளவில்லை’ என்று கூறி ‘இது சரிதானா’ என்று கார்த்திகேயனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘ஆமாம்’ என்று பதில் அளித்தார்.
அதேபோன்று, ‘ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவின் உறவினர்கள் 11 பேர் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து சென்றார்கள். இது அனைத்து அமைச்சர்களுக்கும் தெரியும். ஆனால், அவர்கள் யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அவரால் ஒதுக்கப்பட்டவர்களை சசிகலா தன்னுடன் நெருக்கமாக இருக்க அனுமதித்தார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை பொறுப்பேற்றுக்கொண்டதும், இதுசம்பந்தமாக முடிவு எடுக்கும்போது ஜெயலலிதாவால் விலக்கி வைக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்’ என்று கூறி ‘இதுவும் சரிதானா’ என்று ஆணையத்தின் வக்கீல்கள் கேள்வி எழுப்பினர். அதற்கும், ‘ஆமாம்’ என்று கார்த்திகேயன் பதில் அளித்தார்.
ஆணையத்தில் ஆஜரான பூங்குன்றனிடம், ஜெயலலிதாவின் பணிப்பெண்கள் குறித்தும், அவர்களது பணிகள் குறித்தும் ஆணையத்தின் வக்கீல்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, ‘ஜெயலலிதா எனது தாய்க்கு நிகரானவர்’ என்று கூறி பூங்குன்றன் கண்கலங்கினார்.
அதேபோன்று, 2015-ம் ஆண்டு கோடநாடு எஸ்டேட்டுக்கு பதிவாளரை வரவழைத்து ஏதேனும் பத்திரம் பதிவு செய்யப்பட்டதா? என்றும் கேள்வி எழுப்பினர். அதற்கு பூங்குன்றன், ‘அதுபோன்று எதுவும் இல்லை’ என்று பதில் அளித்தார். ஆணையம் தரப்பு வக்கீல்களின் இந்த கேள்விகளுக்கு சசிகலா தரப்பு வக்கீல் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
இதன்பின்பு ஆணையத்தில் இருந்து வெளியே வந்த வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன், ‘ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க வேண்டிய ஆணையத்தில் தேவையில்லாமல் பல கேள்விகளை ஆணையத்தின் வக்கீல்கள் கேட்கின்றனர். ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆணையத்தின் வக்கீல்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது, மனதுக்கு வருத்தம் அளிக்கும் வகையில் இருக்கிறது’ என்று நிருபர்களிடம் கூறினார்.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர்.-அம்மா- தீபா பேரவை பொதுச்செயலாளருமான ஜெ.தீபா சார்பில் அவரது வக்கீல் தொண்டன் சுப்பிரமணி நேற்று ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘ ஆணையத்தில் ஆஜரான பலர் ஜெயலலிதா மரணம் குறித்து பொய்யான வாக்குமூலத்தை அளித்துள்ளனர். அவர்களது சொல்வது உண்மையா? இல்லையா? என்பதை ஆணையம் உறுதி செய்ய எனது தரப்பு வக்கீல் உடன் இருப்பது அவசியம் என கருதுகிறேன்.
எனவே, சாட்சிகளிடம் விசாரணை நடத்தும்போது எனது தரப்பு வக்கீலை அனுமதிக்க உத்தரவிட வேண்டும். அதேபோன்று அப்பல்லோ ஆய்வின் போது ஆணையத்துக்கு உதவுவதற்காக என்னையும், எனது தரப்பு வக்கீலையும் அனுமதிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட நீதிபதி ஆறுமுகசாமி, விசாரணை நடத்தி உரிய உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆடிட்டர் குருமூர்த்தி ஆஜராக ஆணையம் ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தது. ஜெயலலிதா மரணம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்பதால் தனக்கு அனுப்பிய சம்மனை திரும்ப பெற வேண்டும் என்று குருமூர்த்தி தனது வக்கீல் மூலம் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது சசிகலா தரப்பு வக்கீல், ‘ஆடிட்டர் குருமூர்த்தி ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தவறான தகவல்களை அளித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அவர் பேட்டி அளித்திருந்தார். அப்போது ஆதாரமில்லாத பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் கூறியிருந்தார்’ என்றார். இதற்கு குருமூர்த்தி தரப்பு வக்கீல்கள் பதில் அளிப்பதற்காக வருகிற 26-ந் தேதிக்கு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.
வருகிற 24-ந் தேதி அப்பல்லோ செவிலியர் ராஜேசுவரி, ஊட்டச்சத்து நிபுணர் புவனேசுவரி சங்கர் ஆகியோரும், 25-ந் தேதி துக்ளக் பதிப்பாளர் சுவாமிநாதன், அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர் ஆகியோரும், 26-ந் தேதி அப்பல்லோ மருத்துவர்கள் சுப்பிரமணியன், சுமனா மனோகர் ஆகியோரும், 27-ந் தேதி அப்பல்லோ மருத்துவர் சஜன் கே ஹெக்டே, செவிலியர் ஜோஸ்னோமோல் ஜோசப் ஆகியோரும் ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. #Jayalalithaa #JusticeArumugasamy #sasikala
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையில் செவிலியர்களாக பணியாற்றி வரும் சாமுண்டீசுவரி, அனீஸ் ஆகியோர் நேற்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். செவிலியர் சாமூண்டீசுவரி அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நான், ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் பல நாட்கள் பணியில் இருந்தேன். நான் பணியில் இருந்தபோது ஜெயலலிதாவை யாரும் பார்க்கவில்லை. கண்ணாடி வழியாகக்கூட யாரும் பார்க்கவில்லை. சசிகலா மட்டும் அவ்வப்போது வந்து செல்வார். ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த வார்டுக்குள் பிரத்யேக ஆடையுடன் தான் செல்ல வேண்டும்.
தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் இருக்கும் நோயாளிகளை வெளியில் இருந்து வருபவர்கள் பார்க்க அனுமதிப்பது குறித்து மருத்துவமனை நிர்வாகமும், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் தான் முடிவு செய்ய வேண்டும். ஜெயலலிதாவை பார்க்க இவர்களை மட்டும் தான் அனுமதிக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தவில்லை.
பிரத்யேக உடை அணிந்து கவர்னர் வார்டுக்குள் வந்து ஜெயலலிதாவை நேரில் பார்த்து இருக்கலாம். அவர், ஏன் அவ்வாறு செல்லவில்லை என்பது எனக்கு தெரியாது. ஜெயலலிதா பெரும்பாலான நாட்கள் வெண்டிலேட்டருடன் தான் இருந்தார்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆண் செவிலியரான அனீஸ் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி நான் பணியில் இருந்தபோது இரவு 10 மணிக்கு ஆம்புலன்சுடன் போயஸ்கார்டன் செல்லும்படி மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்படி நானும், மருத்துவர் சினேகாஸ்ரீயும் ஆம்புலன்சுடன் இரவு 10.06 மணிக்கு போயஸ்கார்டன் போய் சேர்ந்தோம்.
ஜெயலலிதா அறைக்குள் சென்றபோது அவர், கண்களை மூடியபடி சோபாவில் அமர்ந்து இருந்தார். மருத்துவர் சினேகாஸ்ரீ ஜெயலலிதாவின் கன்னத்தை தட்டி ‘மேடம்...மேடம்’ என்று அழைத்துப் பார்த்தார். அப்போது ஜெயலலிதா லேசாக முனகினார். ஜெயலலிதாவுக்கு ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவை பரிசோதித்த போது குறைவாக இருந்தது தெரிந்தது. உடனடியாக ஆக்சிஜன் சிலிண்டர் எடுத்து வந்து ஆக்சிஜன் செலுத்தினேன்.
பின்னர், நானும், ஆம்புலன்ஸ் டிரைவர் சுரேஷ்குமாரும் ஜெயலலிதாவை தூக்கி ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து படிக்கட்டுகள் வழியாக இறக்கி ஆம்புலன்சில் ஏற்றினோம். ஜெயலலிதா இருந்த அறையில் சசிகலா, சிவக்குமார் ஆகியோர் மட்டுமே இருந்தனர். ஆம்புலன்சில் நான், சசிகலா, சிவக்குமார், சினேகாஸ்ரீ ஆகியோர் இருந்தோம்.
போயஸ்கார்டனில் இருந்து அப்பல்லோ மருத்துவமனையின் அவரச சிகிச்சை பிரிவு வார்டுக்கு கொண்டு செல்லப்படும்வரை ஜெயலலிதா யாரிடமும் பேசவில்லை. யாரிடமும் பேசும் நிலையிலும் அவர் இல்லை.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.
போயஸ்கார்டனில் கண்களை மூடியபடி ஜெயலலிதா சோபாவில் அமர்ந்து இருந்ததாக அனீஸ் கூறியபோது குறுக்கிட்ட நீதிபதி அப்படியென்றால் ஜெயலலிதா தியானம் செய்து கொண்டிருந்தாரா? என்று கேள்வி எழுப்பினார்.
பின்னர் செவிலியரான உங்களுக்கு, ஜெயலலிதா மயக்கநிலையில் இருந்தாரா, இல்லையா... என்பது தெரியாதா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஜெயலலிதா மயக்கநிலையில் இருந்தாரா என்பது தெரியாது என்று அனீஸ் பதில் அளித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. அப்பல்லோ மருத்துவர் ஷில்பா, செவிலியர் ஹெலனா ஆகியோர் நேற்று ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
மருத்துவர் ஷில்பா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நான், 2016-ம் ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி பணியில் சேர்ந்தேன். அப்போது, ஜெயலலிதா உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அபாயகரமான கட்டத்தில் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருந்த நோயாளியாகவே ஜெயலலிதா இருந்தார். ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட டிசம்பர் 4-ந் தேதி அன்று நான், இரவு பணிக்கு வந்தேன்.
நான் பணிக்கு வந்தபோது, ஜெயலலிதாவுக்கு இருதயம் செயல் இழந்து போய் அதை செயலுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு இறுதியாக ‘எக்மோ’ பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. ஜெயலலிதாவுக்கு ‘எக்மோ’ பொருத்தப்படுவதற்கு முன்பாக அவரது இருதயத்தை கையால் மசாஜ் செய்து செயலுக்கு கொண்டுவர முயற்சித்து அது பயன் அளிக்காமல் போனதும் ‘கரண்ட் ஷாக்’ கொடுத்து செயலுக்கு கொண்டுவர முயற்சித்துள்ளனர்.
அதுவும் பயன் அளிக்காமல் போகவே, இருதயத்தை பிளந்து நேரடியாக இருதய பகுதியில் மசாஜ் செய்து உயிரூட்ட முயற்சித்துள்ளனர். அதுவும் பயன் அளிக்காததால் மார்பு எலும்புகள் துண்டிக்கப்பட்டு இருதய பகுதியில் ‘எக்மோ’ பொருத்தப்பட்டதாக தெரிந்துகொண்டேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது.
செவிலியர் ஹெலனா அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நான், 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பணியில் சேர்ந்தேன். நான் பணியில் இருந்த நாட்களில் சசிகலா, மருத்துவர் சிவக்குமாரை தவிர வேறு யாரும் ஜெயலலிதாவை அவர் சிகிச்சை பெற்று வந்த வார்டில் பார்க்கவில்லை. கண்ணாடி வழியாகவும் யாரும் பார்க்கவில்லை. டிசம்பர் 2-ந் தேதி மூச்சுத்திணறல் காரணமாக ஜெயலலிதாவுக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டது.
3-ந் தேதி காலை 11 மணிக்கு வெண்டிலேட்டர் எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மதியம் 1 மணிக்கு மீண்டும் சீரியஸ் ஆனதால் உடனடியாக வெண்டிலேட்டர் இணைக்கப்பட்டது. இதன்பின்பு, இருதயம் செயல் இழக்கும் வரை ஜெயலலிதாவுக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. சிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு இனிப்பு கொடுத்ததாக கூறுவது தவறு. எனக்கு தெரிந்தவரை ஜெயலலிதா இனிப்பு, பழங்கள் எதுவும் சாப்பிடவில்லை.
இவ்வாறு வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.
‘டிசம்பர் 4-ந் தேதி அதிகாலை ஜெயலலிதா 50 மில்லி காபி குடித்தார். அதன்பின்பு, ஜெயலலிதா எந்த உணவும் எடுத்துக்கொள்ளவில்லை’ என்று ஹெலனா தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாட்சியம் அளித்த அப்பல்லோ மருத்துவர் ரமா, டிசம்பர் 4-ந் தேதி மதியம் ஜெயலலிதா சாப்பாடு சாப்பிட்டதாக கூறி உள்ளார்.
டிசம்பர் 2 மற்றும் 3-ந் தேதி ஜெயலலிதாவுக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டதாக செவிலியர்களின் குறிப்பில் உள்ளது. இதுதொடர்பாக செவிலியர் ஹெலனாவும் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால், மருத்துவர்களின் குறிப்பில் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டது சம்பந்தமாக எந்த குறிப்பும் இல்லை. மாறாக டிசம்பர் 2 மற்றும் 3-ந் தேதிகளில் ஜெயலலிதாவின் உடல்நிலை நார்மலாக இருந்ததாக மருத்துவர்களின் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
‘நவம்பர் 22-ந் தேதி தேர்தல் வெற்றியை கொண்டாட ஜெயலலிதா இனிப்பு எடுத்துக்கொண்டார்’ என்று அப்பல்லோ மருத்துவர் ஜெயஸ்ரீகோபால் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்பல்லோ மருத்துவ அறிக்கையில், ‘ஜிலேபி, ரசகுல்லா, பாதுஷா மற்றும் திராட்சை, மாம்பழம், மலைவாழைப்பழம் போன்றவற்றை ஜெயலலிதா எடுத்துக்கொண்டார்’ என்று கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா இனிப்பு, பழங்கள் சாப்பிடவில்லை என்று செவிலியர் ஹெலனா வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுபோன்று அப்பல்லோ மருத்துவர்கள், செவிலியர்களின் வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. அதேபோன்று மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்களும், மருத்துவர்கள், செவிலியர்களின் வாக்குமூலமும் முரண்பாடாக உள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்