search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian PM Modi"

    • 40 வருடங்களுக்கு பிறகு அங்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் ஆவார்
    • சந்திரயான்-3 வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கான வெற்றி

    சரித்திர புகழ் பெற்ற பண்டைய கிரேக்க நாகரிகத்தின் அடையாளமாகவும், உலகெங்கிலும் உள்ள சுற்றுலா பிரியர்களின் விருப்பமான நாடாகவும் விளங்குகிறது, தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள கிரீஸ்.

    தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டமைப்பின் 3-நாள் உச்சி மாநாடு நிறைவடைந்ததும், இதில் பங்கேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஒரு நாள் சுற்றுப்பயணமாக கிரீஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். 1983-ல் ஒரு இந்திய பிரதமர் சென்றதை அடுத்து, 40 வருடங்களுக்கு பிறகு, மோடி, அங்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் ஆவார்.

    2019-ல் கிரீஸ் பிரதமர் கிரியகோஸ் மிட்சோடாகிஸ் இந்தியாவிற்கு வருகை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரீஸ் தலைநகர் ஏதென்சில் அவரை கிரீஸ் வெளியுறவு துறை அமைச்சர் ஜார்ஜ் கெராபெட்ரிடிஸ் வரவேற்றார்.

    மோடி தங்கியிருந்த ஓட்டலுக்கு வெளியிலும், அவர் சென்ற வழி நெடுகிலும் இந்தியர்கள் இந்திய கொடியை ஏந்தியபடி அவருக்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர். பல போர்களில் உயிர் நீத்த கிரீஸ் நாட்டு வீரர்களுக்கான போர் நினைவுச்சின்னம் உள்ள சின்டாக்மா சதுக்கத்தில் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    அதன் பிறகு மோடி மற்றும் கிரீஸ் அதிபர் கேட்டரீனா சகெல்லரோபவுலவ் (Katerina Sakellaropoulou) இடையே நடைபெற்ற சந்திப்பில், இரு நாடுகளுக்கிடையே நிலையான வளர்ச்சியை உருவாக்கவும், இரு நாட்டு நல்லுறவை வளர்க்கும் விதமாக பல விஷயங்கள் குறித்தும் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சந்திரயான்-3 வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்த கிரீஸ் அதிபருக்கு நன்றி தெரிவித்த மோடி, "சந்திரயான்-3 வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கான வெற்றி" என கூறினார். மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான கிராண்ட் க்ராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர் வழங்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, கிரீஸ் பிரதமர் மிட்சோடாகிஸை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேசினார்.

    தனது சுற்றுபயணத்தின் அங்கமாக பிரதமர் மோடி, இரு நாட்டு தொழிலதிபர்கள் மற்றும் கிரீஸ் நாட்டில் உள்ள இந்தியர்களையும் சந்திக்க இருக்கிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கேவிற்கும் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது
    • பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளினால் வெளியே வர நேரமாகி விடும் என தெரிவித்தார்

    இந்தியா முழுவதும் 77வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புது டெல்லியிலுள்ள மகாத்மா காந்தியின் நினைவகம் உள்ள ராஜ் காட் பகுதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    இதற்கு பிறகு புது டெல்லியில் உள்ள புகழ் பெற்ற செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதனையடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பிறகு பிரதமர் மோடி ஒரு நீண்ட உரையாற்றினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் முக்கிய விருந்தாளிகளுக்கு வழக்கம் போல் முன் வரிசையில் அமர இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதில் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கும் இருக்கை ஒதுக்கப்பட்டது.

    ஆனால், கார்கே நிகழ்ச்சிக்கு வரவில்லை. அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கை காலியாக இருந்தது. பிரதமர் உரையாற்றி கொண்டிருக்கும் போது கார்கேயின் இருக்கை காலியாக இருந்த காட்சியின் புகைப்படங்கள் இணையத்தில் பரவியது. இது குறித்து கார்கே ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    "எனக்கு கண் பார்வை பிரச்சனை இருக்கிறது. அதனால் சுதந்திர தின விழாவிற்கு வருவதை தவிர்த்து விட்டேன். மேலும் எனது வீட்டிலும், காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திலும் நான் தேசிய கொடி ஏற்றி வைக்க வேண்டி இருந்தது. நான் செங்கோட்டைக்கு வந்திருந்தால், அங்கு பிரதமருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளின் படி உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சபாநாயகர் அகியோர் வெளியே சென்ற பிறகுதான் நான் வெளியே வந்திருக்க முடியும். அதற்கு பிறகு நான் காங்கிரஸ் கட்சி அலுவகத்திற்கு வந்து கொடி ஏற்றி வைத்திருக்க முடியாது. இந்த காரணங்களால் நான் பிரதமர் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை."

    இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறியிருக்கிறார்.

    காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்று, முதல் முறையாக அக்கட்சி அலுவலகத்தில் கார்கே இன்று தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×