search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hanging himself"

    • அரியாங்குப்பம் மணவெளியை சேர்ந்த சூரியா என்ற பெண்ணுக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது
    • சுதாகரன் மதகடிப்பட்டில் செல் போன் கடை நடத்தி வந்தார்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே கல்மண்டபம் நத்தமேடு சாலை அந்தராசி குப்பம் புதுநகரில் வசித்து வருபவர் ராணி. இவரது மகன் சுதாகர் (வயது 32). இவருக்கும் அரியாங்குப்பம் மணவெளியை சேர்ந்த சூரியா என்ற பெண்ணுக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    சுதாகரன் மதகடிப்பட்டில் செல் போன் கடை நடத்தி வந்தார். கடையில் ஏற்பட்ட நஷ்ட்டத்தால் சுதாகரனுக்கு கடன் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் செல் போன் கடையை மூடிவிட்டு சுதாகரன் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    இதன் காரணமாக சுதாகரனுக்கு அவரது மனைவி சூரியாவுக்கும் குடும்பப் பிரச்சினை ஏற்பட்டு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சூரியா கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தாய் வீட்டு சென்று விட்டார். அதில் இருந்து சுதாகரன் மனஉளைச்சலுடன் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சுதாகரனின் தாய் ராணி அரும்பார்த்த புரத்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றிருந்த நேரத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த சுதாகரன் வீட்டின் சாமி அறையில் சிமெண்டு கூரையின் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார்.

    அப்போது அவரது உறவினர் புகழ் எதேச்சையாக சுதாகரன் வீட்டுக்கு வந்த போது அங்கு சுதாகரன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து சுதாகரனை மீட்டு நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுதாகரன ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது உறவினர் யுவராஜ் கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • புதுவை முத்தியால் பேட்டை சோலைநகர் செங்கேணி அம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் முருகன்.

    புதுச்சேரி:

    மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுவை முத்தியால் பேட்டை சோலைநகர் செங்கேணி அம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் முருகன். (வயது 41). இவருக்கு தமிழ் என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். தமிழ் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.

    முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இவர் தினமும் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார். இதையடுத்து முருகனுக்கு குடிப்பழக்கத்தை மறக்க செய்ய அவரை கோட்டக்குப்பத்தில் உள்ள மறுவாழ்வு மையத்துக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து மருந்து மாத்திரை கொடுத்து வந்தனர்.

    சில நாட்களாக முருகன் மது குடிக்காததால் தனக்கு தலைவலி ஏற்பட்டுள்ளதாக கூறி கடந்த 2 நாட்களாக மீண்டும் மது குடிக்க தொடங்கினார். இதனை அவரது மனைவி தமிழ் கண்டித்து வந்தார். இந்த நிலையில் காலை வழக்கம் போல் தமிழ் மீன் வியாபாரத்துக்கு சென்று விட்டார். பின்னர் வியாபாரம் முடிந்து மாலை தமிழ் வீடு திரும்பிய போது வீட்டின் உள்ளே கணவர் இல்லாததால் சந்தேகம் அடைந்து வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தார்.

    அப்போது மீன் பிடிக்க பயன்படுத்தும் நைலான் கையிற்றால் முருகன் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உறவினர்கள் உதவியுடன் கணவரை தூக்கிலிருந்து மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி தமிழ் கொடுத்த புகாரின் பேரில் சோலை நகர் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஈரோட்டில் அடமானம் வைத்த வாலிபர் நகையை மீட்ட பணம் இல்லாமல் கடந்த சில நாட்களாகவே மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.
    • தற்கொலை செய்ய முடிவெடுத்த வாலிபர் திடீரென வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு ராம்நகர் ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (37). இவரது மனைவி சவுந்தர்யா (30). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கணவன்-மனைவி 2 பேரும் தறிப்பட்டையில் வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் சரவணன் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு இருந்துள்ளார். வீட்டில் இருக்கும் நகைகளை அடமானம் வைத்து பணத்தை செலவழித்து உள்ளார்.

    இதனையடுத்து அடமானம் வைத்த நகையை மீட்ட பணம் இல்லாமல் கடந்த சில நாட்களாகவே சரவணன் மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று இரவு கணவன், மனைவி இருவரும் தூங்க சென்று விட்டனர். பின்னர் தற்கொலை செய்ய முடிவெடுத்த சரவணன் திடீரென வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு கொண்டார்.

    அப்போது அவரது மகள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.

    உடனே சவுந்தர்யா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சரவணனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சரவணன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×