search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
    X

    கோப்பு படம்.

    வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

    • அரியாங்குப்பம் மணவெளியை சேர்ந்த சூரியா என்ற பெண்ணுக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது
    • சுதாகரன் மதகடிப்பட்டில் செல் போன் கடை நடத்தி வந்தார்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே கல்மண்டபம் நத்தமேடு சாலை அந்தராசி குப்பம் புதுநகரில் வசித்து வருபவர் ராணி. இவரது மகன் சுதாகர் (வயது 32). இவருக்கும் அரியாங்குப்பம் மணவெளியை சேர்ந்த சூரியா என்ற பெண்ணுக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    சுதாகரன் மதகடிப்பட்டில் செல் போன் கடை நடத்தி வந்தார். கடையில் ஏற்பட்ட நஷ்ட்டத்தால் சுதாகரனுக்கு கடன் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் செல் போன் கடையை மூடிவிட்டு சுதாகரன் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    இதன் காரணமாக சுதாகரனுக்கு அவரது மனைவி சூரியாவுக்கும் குடும்பப் பிரச்சினை ஏற்பட்டு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சூரியா கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தாய் வீட்டு சென்று விட்டார். அதில் இருந்து சுதாகரன் மனஉளைச்சலுடன் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சுதாகரனின் தாய் ராணி அரும்பார்த்த புரத்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றிருந்த நேரத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த சுதாகரன் வீட்டின் சாமி அறையில் சிமெண்டு கூரையின் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார்.

    அப்போது அவரது உறவினர் புகழ் எதேச்சையாக சுதாகரன் வீட்டுக்கு வந்த போது அங்கு சுதாகரன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து சுதாகரனை மீட்டு நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுதாகரன ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது உறவினர் யுவராஜ் கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×