என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Gutka seller arrested"
- குட்கா விற்கப்படுவதாக கருமத்தம்பட்டி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
- மளிகை கடையில் இருந்து 97 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
சூலூர்,
சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் செம்மாண்டம் பாளையம் பகுதியில் குட்கா விற்கப்படுவதாக கருமத்தம்பட்டி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கருமத்த ம்பட்டி போலீஸ் இன்ஸ்பெ க்டர் ராஜதுரை உத்தரவின் பேரில் போலீசார் செம்மாண்டம் பாளையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மளிகை கடையில் குட்கா பொருட்களை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அதில் 97 கிலோ குட்கா கருமத்தம்பட்டி போலீசாரல் கைப்பற்றப்பட்டது மேலும் மளிகை கடை உரிமையாளரான மணிகண்டன்(33) கைது செய்யப்பட்டார். இவர் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் வேடசந்தூர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
- கஞ்சா, குட்கா பொருட்களை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
வேடசந்தூர்:
தென்மண்டல ஐ.ஜி தனிப்பிரிவு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி தலைமையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சுக்காம்பட்டியில் குட்கா விற்ற சிவக்குமார்(46), கவாஸ்கர்(30), முத்துச்சாமி(57) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 30 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
மேலும் விட்டல்நாயக்கன்பட்டி பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த தமிழரசன்(21) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 600 கிராம் கஞ்சாைவ பறிமுதல் ெசய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, குட்கா பொருட்களை வேடசந்தூர் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தென்மாவட்டங்களில் கஞ்சா, புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். எனவே கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்