search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனிப்படை போலீசார் அதிரடி"

    • சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் வேடசந்தூர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
    • கஞ்சா, குட்கா பொருட்களை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து அவற்றை பறிமுதல் செய்தனர்.

    வேடசந்தூர்:

    தென்மண்டல ஐ.ஜி தனிப்பிரிவு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி தலைமையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சுக்காம்பட்டியில் குட்கா விற்ற சிவக்குமார்(46), கவாஸ்கர்(30), முத்துச்சாமி(57) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 30 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

    மேலும் விட்டல்நாயக்கன்பட்டி பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த தமிழரசன்(21) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 600 கிராம் கஞ்சாைவ பறிமுதல் ெசய்தனர்.

    கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, குட்கா பொருட்களை வேடசந்தூர் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தென்மாவட்டங்களில் கஞ்சா, புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். எனவே கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.

    ×