search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gst tax"

    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் - டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநில வாட் வரியையும் சேர்த்து பெட்ரோல், டீசல் மீது 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
    புதுடெல்லி:

    தெற்காசிய நாடுகளில் இந்தியாவில்தான் பெட்ரோல், டீசல் விலை மிக அதிகமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மிக, மிக அதிக அளவில் வரிகள் விதிப்பதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

    ஒரு லிட்டர் பெட்ரோல் மீது ரூ.19.48-ம் ஒரு லிட்டர் டீசல் மீது ரூ.15.33-ம் மத்திய அரசால் கலால் வரியாக விதிக்கப்படுகிறது. இது தவிர பெட்ரோல், டீசல் மீது மாநில அரசுகளும் வாட் வரியை விதிக்கின்றன. இதனால் பெட்ரோல், டீசல் விலையில் பாதி அளவு மத்திய, மாநில அரசுகளின் வரியாகவே உள்ளது.

    கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப விலை நிர்ணயம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் அதிக அளவில் உயர்ந்தன. இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையடுத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட வேண்டும் என்றும் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

    இதைத் தொடர்ந்து மத்திய பெட்ரோலியம் அமைச்சகம் இது பற்றி ஆய்வு செய்தது. அப்போது கலால் வரியை குறைத்தால் மத்திய அரசுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்படும் என்று தெரிய வந்தது. அதாவது கலால் வரியில் ஒரு ரூபாய் குறைத்தால் கூட அரசுக்கு ரூ.13 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.

    இந்த நிலையில் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. பெட்ரோல், டீசல் மீது 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறையை அமல்படுத்தினால் மத்திய அரசுக்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மத்திய அரசின் வரியை குறைப்பது போல மாநில அரசுகளும் வரியை குறைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இத்தகைய நடைமுறையால் பெட்ரோல், டீசல் விலை அதிக அளவு குறையாது என்று கூறப்படுகிறது.

    மத்திய-மாநில அரசுகளின் தற்போதைய வரி விதிப்பும், பரிசீலிக்கப்பட்டு வரும் வரி விதிப்பும் பெரிய அளவில் வித்தியாசமாக இல்லை. எனவே பெட்ரோல், டீசல் விலையை எப்படி குறைப்பது என்று தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது.

    உலகில் எந்த நாட்டிலும், பெட்ரோல், டீசல், ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் இல்லை. ஆகையால் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் அவை வரும்பட்சத்தில் ஏற்படும் சாதக-பாதகங்கள் பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது.
    காரைக்குடியில் நடந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம், அடுத்த ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி. முறையை திருத்தி அமைப்போம் என தெரிவித்தார். #Congress #PChidambaram #GST
    காரைக்குடி:

    காரைக்குடியில் நடந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த நான்கு ஆண்டுகளாக மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. ஆனால், இந்தியாவில் மத சிறுபான்மையினர் அச்சத்தில் உள்ளனர்.

    இந்தி திணிப்புக்கும், இந்துத்துவாவுக்கும் தமிழகத்தில் இடமில்லை. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுமேயானால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். #Congress #PChidambaram #GST
    பக்தர்கள், பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்கி வரும் ஆன்மிக தொண்டு நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. வரிச்சலுகை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. #GSTTax
    புதுடெல்லி:

    எவ்வித பாகுபாடும் இல்லாமல், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்கி வரும் ஆன்மிக தொண்டு நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. (சரக்கு, சேவை வரி) சலுகை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ‘சேவா போஜ் யோஜனா’ என்ற புதிய திட்டத்தை மத்திய கலாசார அமைச்சகம் அறிமுகப்படுத்தி உள்ளது.

    இதன்படி, இலவச உணவு வழங்கும் ஆன்மிக தொண்டு நிறுவனங்கள், மத்திய ஜி.எஸ்.டி., ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ஆகியவற்றில் இருந்து மத்திய அரசின் பங்காக கிடைக்கும் வரியை திரும்பப் பெறலாம். இதனால், அந்நிறுவனங்களின் நிதிச்சுமை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்துக்காக 2 நிதி ஆண்டுகளுக்கு ரூ.325 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #GSTTax
    ×