search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Governor Tamilisai"

    • புதுவையில் கொரோனா நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
    • கொரோனாவுக்கு முதியவர் பலியாகியுள்ளார்.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் சமீபகாலமாக கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

    புதுவையிலும் சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து பின் குறைந்தது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு முதியவர் பலியாகியுள்ளார். இதனால் புதுவையில் கொரோனாவுக்கு பலியா னவர்கள் எண்ணிக்கை 1,979 ஆக உயர்ந்தது.

    இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களிலும் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தியது. இதையடுத்து புதுவை கவர்னர் தமிழிசை சுகாதாரத்துறை அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார்.

    கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், கவர்னரின் தனி செயலாளர் அபிஜித்விஜய் சவுத்ரி, இயக்குனர் ஸ்ரீராமுலு மற்றும் அரசு மருத்துவமனைகளின் முதல்வர், மருத்துவ கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், மத்திய அரசின் சுகாதார திட்டங்கள் செயல்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    • தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு உலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • பிறருக்கு உதவி செய்து, நாட்டின் வளர்ச்சியில் நமது பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு செயலாற்ற உறுதியேற்று தமிழ்ப் புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாடுவோம்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு உலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த புத்தாண்டு அனைவரது வாழ்விலும் அன்பும், அமைதியும் நிலைக்கவும், இன்பமும் மகிழ்ச்சியும் பெருகவும், ஆரோக்கியமான வாழ்வு சிறக்கவும் வழிவகை செய்யட்டும் என்று வாழ்த்துகிறேன்.

    அனைவரும் மகிழ்ச்சியோடு, பிறருக்கு உதவி செய்து, நாட்டின் வளர்ச்சியில் நமது பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு செயலாற்ற உறுதியேற்று தமிழ்ப் புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாடுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • புதுவை மாநிலத்தில் கால்நடை வளர்ப்பு, சுகாதாரம், பால் உற்பத்தி, மீன்வள மேம்மாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் கவர்னர் மாளிகையில் நடைபெற்றது.
    • மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தவும், கால்நடை வளர்ப்பு திட்டங்களில் மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி பெற வழிமுறைகளை கண்டறிய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் கால்நடை வளர்ப்பு, சுகாதாரம், பால் உற்பத்தி, மீன்வள மேம்மாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் கவர்னர் மாளிகையில் நடந்தது.

    கவர்னர் தமிழிசை தலைமை தாங்கினார்.தலைமை செயலர் ராஜுவ் வர்மா, கால்நடை பராமரிப்புத்துறை செயலர் உதயகுமார், மீன்வளத்துறை செயலர் கேசவன், கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி மற்றும் கூட்டுறவுத்துறை, கால்நடைப் பராமரிப்புத்துறை, மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை, பாண்லே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கால்நடை வளர்ப்பு, சுகாதாரம் ஆகியவற்றுக்கான மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் அவற்றின் செயலபாடுகள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தவும், கால்நடை வளர்ப்பு திட்டங்களில் மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி பெற வழிமுறைகளை கண்டறிய வேண்டும். மத்திய அரசின் கால்நடை அபிவிருத்தி, சுகாதார திட்டங்களில் செலவு செய்யாத தொகையை பயனாளிகள் பயன்பெறும் வகையில் குறித்த காலத்தில் செலவு செய்ய வேண்டும்.

    மத்திய அரசின் கடன் மற்றும் மானியம் பெறுவதற்கான வாய்ப்பு களை பயனாளிகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

    புதுவையில் பால் உற்பத்தியை அதிகப்படுத்தி பாண்லே பால் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் பால் உற்பத்தி மற்றும் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும்.

    புதுவையில் கடல்வாழ் உயிரின காட்சியகம், அறிவியல் அரங்கம், கடல் மீன்கள் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அது சுற்றுலா வளர்ச்சிக்கு உதவும். மீன் கண்காட்சியை நடத்த வேண்டும்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை பேசினார்.

    • தேசிய இளைஞர் திட்டத்தின் சார்பில் சர்வதேச அளவிலான இளைஞர் அமைதி முகாம் சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் நடந்தது.
    • இளைஞர்கள் இடையே நட்புணர்வை வளர்க்கும் வகையில் நாட்டுப்பற்று பாடல்கள், விவாதங்கள், உலக அமைதி, யோகா பயிற்சி, தொடர்பாக பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    தேசிய இளைஞர் திட்டத்தின் சார்பில் சர்வதேச அளவிலான இளைஞர் அமைதி முகாம் சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் நடந்தது.

    இந்த முகாமில் மத்திய அரசின் தேசிய விருதுபெற்ற சமூக சேவகர் ஆதவன்தலைமையில் புதுவையில் இருந்து மனோ, சபரீஸ்வரன், ஜெயப்பிரதா, காயத்திரி, குணசாவித்திரி, சுக்தேவ், ராகவன், வெங்கடசுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

    அவர்களுக்கு இளைஞர்கள் இடையே நட்புணர்வை வளர்க்கும் வகையில் நாட்டுப்பற்று பாடல்கள், விவாதங்கள், உலக அமைதி, யோகா பயிற்சி, விளையாட்டுகள், சமூகப்பணி, மத நல்லிணக்கம் தொடர்பாக பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    முகாமில் பங்கேற்ற இளைஞர்களை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கவர்னர் மாளிகைக்கு அழைத்து பாராட்டினார்.

    • மாதந்தோறும் 15ம் தேதி அரசு அலுவலகங்களில் மக்கள் சந்திப்பு நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.
    • விதவை பெண் தனக்கு வருமானம் கிடைக்கும் வகையில் வேலை வாங்கித்தரும்படி கோரிக்கை வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை மாதத்தின் முதல்நாள் அரசு ஊழியர்கள் பாரம்பரிய உடை அணிந்து அலுவலகம் வர வேண்டும்.

    மாதந்தோறும் 15-ந் தேதி அரசு அலுவலகங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும். அதில் உயரதிகாரிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.

    இந்நிலையில் இம்மாதம் 15-ந் தேதியான இன்று புதுவையில் உள்ள அரசு அலுவலகங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

    கவர்னர் மாளிகையில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, கல்மேடுபட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மனைவி அஞ்சலை(67). கவர்னரிடம் மனு அளித்தார். அதில், தனது வீட்டையும், சுற்றியுள்ள நிலத்தையும் 2-வது மகள் அபகரித்துவிட்டதாகவும், அதை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

    இதேபோல கோர்க்காடை சேர்ந்த விதவை பெண், தனது மகனை தனியார் பள்ளியில் படிக்க வைப்பதாகவும், கட்டணம் செலுத்த முடியாததால் பள்ளியிலிருந்து வெளியே அனுப்பிவிட்டதால், அரசு பள்ளியில் சேர்க்க உதவ வேண்டும். தனக்கு வருமானம் கிடைக்கும் வகையில் வேலை வாங்கித்தரும்படியும் கோரிக்கை வைத்தார்.

    இதேபோல் பெரியவர் ஒருவர் தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் மிரட்டுவதாக பென்டிரைவ்வில் ஆதாரத்துடன் புகார் செய்தார்.

    கவர்னர் மாளிகையில் சந்தித்த பலர் நிலமோசடி தொடர்பாகவே புகார் அளித்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கவர்னர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். சம்பந்த ப்பட்ட அதிகாரிகளுக்கு மனுவை அனுப்பி வைத்தார்.

    புதுவை தலைமை செயலகம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் இன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர்.

    • தொடர்ந்து தியானம் செய்பவர்களின் நினைவாற்றல், புரிதல் திறன், மூளைத்திறன் மற்றவர்களை விட அதிகமாக இருப்பதை கண்டு பிடித்திருக்கிறார்கள்.
    • மனித வாழ்க்கைக்கான விழிப்புணர்வை, ஆன்மீக செய்தியை உலகம் முழுதும் எடுத்துச் செல்ல வேண்டும்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பவுன்டேஷன், யூனிட்டி கட்டிடத்தில் இன்று சர்வதேச ஆன்மிக மாநாடு தொடக்க விழா நடந்தது.

    ஆரோவில் செயலர் ஜெயந்திரவி வரவேற்றார். தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, புதுவை கவர்னர் தமிழிசை, ஆரோவில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், ஆரோவில் வாசிகள் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் புதுவை கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 2 லட்சம் மக்கள் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இதில் இளைஞர்கள் அதிகம். இது மிகவும் அச்சம் தரக்கூடிய ஒன்று. இளைஞர்களுக்கு வாழ்க்கையில் வரும் சவால்களை எதிர்கொள்ள கற்றுக் கொடுக்க வேண்டும். அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    தியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகளை பற்றி சொல்ல வேண்டும். தியானம் செய்வதால் மனது அமைதி பெறுகிறது. நம்முடைய உணர்வுகள் பண்படுகிறது. அதிக ஆற்றலோடு, ஆக்கப் பூர்வமாக செயல்பட உதவுகிறது. நம்முடைய நினைவாற்றலை, கவனத் திறனை பலப்படுத்துகிறது. இந்த உண்மையை இளைஞர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.

    இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.

    இத்தாலியில் நடந்த ஆராய்ச்சியில், தொடர்ந்து தியானம் செய்பவர்களின் நினைவாற்றல், புரிதல் திறன், மூளைத்திறன் மற்றவர்களை விட அதிகமாக இருப்பதை கண்டு பிடித்திருக்கிறார்கள். புதுவைக்கு வேதபுரி என்று பெயர் உண்டு. இது ஆன்மீக பூமி.

    இங்கு 30 முதல் 40 சித்தர் பீடங்கள் இருக்கின்றன. ஆரோவில் நகரமும் இந்த பகுதியில்தான் இருக்கிறது. இங்கிருந்து, மனித வாழ்க்கைக்கான விழிப்புணர்வை, ஆன்மீக செய்தியை உலகம் முழுதும் எடுத்துச் செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதுவை ஜிப்மர் மருத்துவமனை கலையரங்கத்தில் 18-வது தேிய குழந்தைகள் நல மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர்களின் வருடாந்திர மாநாடு நடந்தது.
    • இன்றைய காலத்தில் மருத்துவ தொழில் பழகுவது என்பது மிகவும் சவாலான ஒன்று. இந்த துறையில் இன்னும் பல்வேறு ஆராய்ச்சிகளை தொடர வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் மருத்துவமனை கலைய ரங்கத்தில் 18-வது தேிய குழந்தைகள் நல மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர்களின் வருடாந்திர மாநாடு நடந்தது.

    மாநாட்டை கவர்ன் தமிழிசை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    அரசு மருத்து வமனைகளை மேம்படுத்த புதுவை அரசு கவனம் செலுத்தி வருகிறது. மருத்துவத் துறையின் வளர்ச்சிகளும், தொழில்நுட்பங்களும் சாதாரண மக்கள் பயனடையும் வகையில் சென்றடைய வேண்டும். இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ேவண்டும். தொழில்நுட்பத்திற்கும், மக்களுடைய புரிதலுக்கும் இடையிலான ஒரு சமநிலையை மருத்துவர்கள் கடைபிடிக்க வேண்டும்.

    இன்றைய காலத்தில் மருத்துவ தொழில் பழகுவது என்பது மிகவும் சவாலான ஒன்று. இந்த துறையில் இன்னும் பல்வேறு ஆராய்ச்சிகளை தொடர வேண்டும். ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் மக்களுக்கு பயன்படும்.

    நான் ஒரு மகப்பேறு மருத்துவர் என்பதால் குழந்தைகள் மருத்துவத்திலும் நல்ல அனுபவம் கிடைத்தது. இருப்பினும் நான் கடந்த 2009-ல் இருந்து மருத்துவம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன். வேலை இல்லாதவர்கள் தான் அரசியலுக்கு வருவார்கள் என கூறுவார்கள். ஆனால் நான் மருத்துவராக இருந்தபோது அதிக வேலை பளு இருந்தது. இருந்த போதும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசையால் வந்தேன்.

    தற்போது கவர்னராக உள்ளேன். நான் தெலுங்கானாவில் கவர்னராக பொறுப்பேற்ற போது, இவர் ரொம்ப இளம் வயதானவர், கவர்னராக எப்படி இவரால் புதிய மாநிலத்தை பார்த்து கொள்வார் என்ற பேச்சுகள் வந்தது. பிறகு, கூடுதலாக புதுவை துணைநிலை கவர்னர் பொறுப்பும் கொடுக்கப்பட்டது.

    அப்போது இவர் எப்படி 2 மாநிலங்களை பார்ப்பார்? என்ற பேச்சுக்கள் வந்தன. ஆனால், நான் மகப்பேறு மருத்துவர் என்பதால் ஒரு குழந்தையாக இருந்தாலும் சரி, இரட்டை குழந்தையாக இருந்தாலும் சரி, நல்ல முறையில் பார்த்துக் கொள்ள தெரியும்.

    அதுபோல் 2 மாநில கவர்னர் பொறுப்புகளையும் நல்ல முறையில் பார்த்துக்கொள்வேன்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை பேசினார்.

    • சென்னையை அடுத்து ள்ள மாமல்லபு ரத்தில் தமிழ் ரத்னா விருது 2022 வழங்கும் விழா நடைபெற்றது.
    • இதன் மூலம் இவர்கள் புதுவைக்கு பெருமை சேர்ப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது' என தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    சென்னையை அடுத்து ள்ள மாமல்லபு ரத்தில் தமிழ் ரத்னா விருது 2022 வழங்கும் விழா நடைபெற்றது.

    இதில் சமூக நலனுக்காக பணியாற்றிய சேவகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி பாராட்டினார்.

    புதுவையை சேர்ந்த யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜூக்கு சிறந்த இளம் வயது சமூக சேவகருக்கான 'யுவ ரத்னா 2022' விருது வழங்கப்பட்டது. விருதை வழங்கி பேசிய கவர்னர் தமிழிசை, பிளாஸ்டிக் இல்லாத புதுவையை உருவாக்கிட கிருஷ்ணராஜூ திறம்பட செயல்பட்டு வருவதாகவும், இதேபோல் பிரதமர் மோடியின் திட்டமான காசநோய் இல்லா பாரதத்தை உருவாக்குவோம் என்பதை நிறைவேற்றும் விதமாக யுவர் பேக்கர்ஸ் மிகப் பெரிய பங்காற்றி வருகிறது.

    இதன் மூலம் இவர்கள் புதுவைக்கு பெருமை சேர்ப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது' என தெரிவித்தார். அவரை தொடர்ந்து பேசிய யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜூ, ' தாங்கள் எனக்கு விருது வழங்கியதால் மகிழ்ச்சி அடைகிறேன்.

    அதேசமயம் விருதிற்காக மட்டும நான் சேவை செய்யவில்லை , மக்களு க்காகவும் இளைய சமுதாயத்தினருக்கும் சிறந்த சுற்றுச்சூழலை உருவாக்கி கொடுப்பது எங்கள் கடமையென உழைத்து வருகிறோம்' என கூறினார்.

    • புதுவை கவர்னர் மாளிகையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. கடந்த மாதம் 8-ந் தேதி நடந்த சந்திப்பின் போது போக்குவரத்துக்கு உதவியாக 3 சக்கர கைவண்டி வழங்கும்படி கவர்னரிடம் மாற்றத்திறனாளி ஒருவர் கோரிக்கை வைத்தார்.
    • புதுவை கவர்னர் மாளிகையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. கடந்த மாதம் 8-ந் தேதி நடந்த சந்திப்பின் போது போக்குவரத்துக்கு உதவியாக 3 சக்கர கைவண்டி வழங்கும்படி கவர்னரிடம் மாற்றத்திறனாளி ஒருவர் கோரிக்கை வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் மாளிகையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.

    கடந்த மாதம் 8-ந் தேதி நடந்த சந்திப்பின் போது போக்குவரத்துக்கு உதவியாக 3 சக்கர கைவண்டி வழங்கும்படி கவர்னரிடம் மாற்றத்திறனாளி ஒருவர் கோரிக்கை வைத்தார். இதையடுத்து இன்று நடந்த நிகழ்ச்சியில், மண்ணாடி ப்பட்டு குமாரபாளையத்தை சேர்ந்த முருகன் என்ற மாற்றுத்திறனாளியிடம் 3 சக்கர வண்டியை கவர்னர் தமிழிசை வழங்கினார். இதன்பின் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்கள் சந்திப்பின் போது ஒரு மாற்றுத்தினாளி பெண் தனக்கு வேலை வேண்டும் என்றார். 3 சக்கர வாகனம் கேட்டார். அதன்படி வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மக்கள் சந்திப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட 3 சக்கர வாகனம் ஏற்பாடு செய்து தரப்படும்.

    இதுதான் மக்கள் சந்திப்பின் பலன். ஏன் மக்களை சந்திக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது? தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் மக்களை சந்திக்க வேண்டும் என கூறுபவர்களுக்கு இந்த செயல்தான் எனது பதில். இது போல மக்களை சந்திக்கும் போது அவர்களது சிறிய-சிறிய தேவைகளை நமது நோக்கத்தினால், முயற்சியினால் ஓரளவு சரிசெய்ய செய்ய முடியும்.

    எங்களால் உடனே சரி செய்துவிடக் கூடிய இன்னும் பல கோரிக்கைகளை சரி செய்துள்ளோம். ஜிப்மரில் கேட்ட உதவியை செய்துள்ளோம். மக்கள் சந்திப்பை அரசியல் ஆக்காமல் அவசியத்திற்காக, நல்ல மனது படைத்தவர்களால் செய்யப்படுகிறது என்பதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

    நல்லது யார் செய்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தொடரும். மக்கள் சந்திப்பு அரசியல் கிடையாது, அவசியம் என்பதை நான் பதிவு செய்கிறேன். தமிழக கவர்னரை மாற்றம் செய்ய அரசியல் கட்சிகள் கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது.

    மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்ப டக்கூடாது என்று அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே புதுவை அனைத்து விதத்திலும் பாதுகாப்பாக இருக்கும். பொது மக்கள் மழை காலங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    வாந்தி பேதி அறிகுறிகள் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வரவேண்டும். விஷப் பூச்சிகள் அதிகம் வரும். எச்சரிக்கையாக இருக்க் வேண்டும். குழந்தைகளை கையாளும் போது இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் எச்சரிக்கையாக இருந்தால் இந்த மழை நாள் வரும் பாதிப்புகளை நம்மால் தடுக்க முடியும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புதுவை விடுதலை நாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு புதுவை மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • புதுவை விடுதலை போராட்டத்தை நினைவு–கூறும் இந்த நாளில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவ கொள்கைகளோடு உலக சமுதாயத்திற்கே வழிகாட்டியாகத் திகழும் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்த நம்மை அர்ப்பணித்து கொள்ள உறுதி ஏற்போம்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள விடுதலை நாள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    புதுவை விடுதலை நாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு புதுவை மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எண்ணற்ற விடுதலை போராட்ட வீரர்கள் செய்த தியாகங்களால் 1954-ம் ஆண்டு நவம்பர் முதல் நாள் புதுவை முழுமையான விடுதலையை பெற்றது.

    புதுவை விடுதலை போராட்டத்தை நினைவு–கூறும் இந்த நாளில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவ கொள்கைகளோடு உலக சமுதாயத்திற்கே வழிகாட்டியாகத் திகழும் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்த நம்மை அர்ப்பணித்து கொள்ள உறுதி ஏற்போம்.

    இயற்கை வளமும் ஆன்மீக நலமும் நிறைந்த புதுவை மாநிலம் பிரெஞ்சு-இந்திய கலாச்சாரத்தின் பண்புகளைக் கொண்டிருந்தாலும், இந்திய ஒருமைப்பாட்டின் வளர்ச்சிக்கு பெருந்துணை புரிந்து மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது என்பது உண்மை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

    • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உதவியோடு புதுவை பல்கலைக்கழக புவிசார் அறிவியல் துறை மற்றும் மகாராஷ்டிரா, கோலாப்பூர் சிவாஜி பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 'ஒருங்கிணைந்த பயிற்சித் திட்டத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் பயன்பாடு குறித்த கருத்தரங்கினை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.
    • மக்களுக்காகதான் அனைத்து அலுவலகமும். மக்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என கூறுவது தவறானது.

    புதுச்சேரி:

    மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உதவியோடு புதுவை பல்கலைக்கழக புவிசார் அறிவியல் துறை மற்றும் மகாராஷ்டிரா, கோலாப்பூர் சிவாஜி பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 'ஒருங்கிணைந்த பயிற்சித் திட்டத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் பயன்பாடு குறித்த கருத்தரங்கினை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.

    புதுவை பல்கலைக்கழகத் துணைவேந்தர் குர்மீத் சிங், சிவாஜி பல்கலைக்கழகப் பேராசிரியர் சொங்காவதே ஆகியோர் விழாவில் பங்கேற்றனவிழாவினை தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மக்களுக்காகதான் அனைத்து அலுவலகமும். மக்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என கூறுவது தவறானது. நான் மக்களை பார்க்க கூடாது என கூறும் அதிகாரத்தை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு யார் கொடுத்தது? மக்களின் பிரச்சனைகளை தெரிந்துகொண்டு அதை அதிகாரிகளுக்கு சொல்வதற்கு தான் இந்த சந்திப்பு கூட்டமே. கவர்னர் அன்போடு மக்களை சந்தித்து குறைகேட்பதில் என்ன தவறு?

    இந்த பிரச்சனையை நான் மக்களிடமே விட்டுவிடுகிறேன். மக்களே இதற்கு பதில் கூறட்டும். அதிகாரிகள் தினமும் மக்களை எளிதில் சந்திக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். இதற்கு முதல்- அமைச்சர் எப்போதும் தடை போட மாட்டார். அண்ணன் நாராயணசாமி அன்று இருந்த கவர்னரிடமும் பிரச்சனை செய்வேன். இன்று உள்ள கவர்னரிடமும் பிரச்சனை செய்வேன் என செயல்பட்டு வருகிறார்.

    நான் மக்களை சந்திப்பதை யாரும் தடுக்க முடியாது. கொரோனாவில் இருந்து தடுப்பூசி மூலம் மக்களை காப்பாற்றி, அவர்களுக்கு உணவு கொடுத்து காப்பாற்றியுள்ளோம். இதனை உலக நாடுகளே வியந்து பாராட்டுகின்றன.இன்று 3- வது பொருளாதாரமாக முன்னெடுத்து செல்கிறோம்.

    உலகத்தில் பல நாடுகள் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாமல் தடுமாறி வரும் நிலையில், இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறது. நாட்டில் 7500 ஸ்டார்ட் அப் கொண்டு வரப்படுகிறது. இணையதளத்தில் என் படங்களை வைத்து விமர்சனம் செய்வதும், தவறாக பயன்படுத்துவதும் நடந்துவருகிறது. நான் உண்மையாக இருக்கிறேன் அதனை பற்றி நான் கவலைப்படவில்லை. மக்களுக்கான எனது பணி தொடரும்.

    தெலுங்கானா மக்கள் என்னை பாராட்டி வருகின்றனர். அரசுக்கும் எனக்கும் சில பிரச்சனைகள் உள்ளன. அங்குள்ள முதல்வர் மத்திய அரசை எதிர்க்கிறார். அதனால் நான் அங்கு சில பணிகளை மேற்கொள்ளும்போது என்னை எதிர்க்கிறார். அண்ணன் நாராயண சாமிக்கு என்ன பிரச்சனை. மக்கள் நலனை விட அவர்களது நலன் தான் முக்கியமாக உள்ளது. கவர்னர் என்றாலே நாராயணசாமிக்கு அலர்ஜியாக உள்ளது நேர்மையான ஆட்சி புதுவையில் நடந்து வருகிறது. தவறு செய்யும் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறை நடுவர் I மற்றும் II நீதிமன்றங்களை கவர்னர் தமிழிசை இன்று திறந்து வைத்தார்.
    • நீதியை தாமதப்படுத்தக் கூடாது. தாமதப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று சொல்வதுண்டு.உலகத்தில் பல நாடுகள் கற்காலத்தில் இருந்த சூழலில் நீதி வழுவாமல் இருந்த நாடு தமிழ்நாடு என்பதில் தமிழகத்தைச் சேர்ந்த அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறை நடுவர் I மற்றும் II நீதிமன்றங்களை கவர்னர் தமிழிசை இன்று திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி இளந்திரையன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் கலந்துகொண்டனர்.

    விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

    நீதியை தாமதப்படுத்தக் கூடாது. தாமதப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று சொல்வதுண்டு.உலகத்தில் பல நாடுகள் கற்காலத்தில் இருந்த சூழலில் நீதி வழுவாமல் இருந்த நாடு தமிழ்நாடு என்பதில் தமிழகத்தைச் சேர்ந்த அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.

    மனுநீதி சோழனை போல் பசுவிற்காக தன் மகனை தேர்க்காலில் இட்டு கொன்ற அரசனைப் போல உலகத்தில் எங்கேயும் மக்களுக்கு நீதி வழங்கியவர்கள் இல்லை. எந்த ஒரு மாநிலத்தில் நீதி வழுவாமல் அரசாட்சி நடக்கிறதோ அங்கே செல்வம் செழிக்கும். மக்கள் வாழ்க்கை பெருகும்.

    2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட நீதிநூல் திருக்குறள். அறத்துப்பால், பொருட்பால் சொல்லியிருக்கிறார்கள். நடுநிலை தவறாக தராசைப் போல நீதித்துறை இருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். உலகம் முழுவதும் நீதித்துறைக்கு இருக்கும் சின்னம் துலாக்கோல் தான்.

    துலாக்கோல் போல் நீதித்துறை இருக்க வேண்டும் என்று மற்ற நாடுகளுக்கெல்லாம் தமிழர்கள் வழிகாட்டி இருக்கிறார்கள் என்பது சிறப்பு. எளியவர்களுக்குக் கூட சிறப்பான மருத்துவம் கிடைக்கும் என்று நினைப்பதைப் போல எளியவர்களுக்கு சிறப்பான சட்ட ஆலோசனை கிடைக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

    எளியவர்கள் என்பதற்காக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்பட்டு விடக்கூடாது.

    அதேபோல நீதி வழங்குவதை விரைவாக செய்யுங்கள்.

    கிடப்பில் போடப்பட்ட. வழக்குகளை எல்லாம் மிக விரைவாக முடித்துக் கொண்டு இருக்கிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்ற செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. அதற்காக அவரைப் பாராட்டுகிறேன்.

    அரசியல்வாதிக்கு வாக்கு மூலதனம் வக்கீலுக்கு நாக்கு மூலதனம். விவாதம் சரியாக செய்தால் எந்த வழக்கிலும் வெற்றி பெற்று விட முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×