search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government school students"

    தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அமெரிக்காவில் வாழும் தமிழக என்ஜினீயர்கள் ‘ஸ்கைப்’ என்ற சமூக வலைதளம் மூலம் வகுப்புகள் எடுத்து வருகின்றனர். #GovernmentSchoolStudents
    தேனி:

    தேனி அல்லிநகரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுத்து, பலவிதமான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா ஆலோசனையின் பேரில், தமிழாசிரியர் செந்தில்குமார் முயற்சியால் அமெரிக்காவில் வாழும் தமிழகத்தை சேர்ந்த மென்பொருள்(சாப்ட்வேர்) என்ஜினீயர்கள் ஆங்கில இலக்கணம் கற்றுக் கொடுத்து, ஆங்கில பேச்சுப் பயிற்சி அளித்து வருகின்றனர்.

    கடந்த 2 வாரகாலமாக இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ‘ஸ்கைப்’ எனப்படும் சமூக வலைதள செயலி வாயிலாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுத்து வருகின்றனர். ‘ஸ்கைப்’ வலைதளமானது நேரடி வீடியோ காட்சிகள் மூலம் உரையாடும் வசதியை கொண்டது. அமெரிக்காவில் இருந்தபடி அல்லிநகரம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் எடுத்து வருகின்றனர். இதற்காக பள்ளியில் ஒரு வகுப்பறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து பள்ளியின் தமிழாசிரியர் செந்தில்குமார் கூறியதாவது:-

    அமெரிக்காவில் மென்பொருள் என்ஜினீயர்களாக பணியாற்றும் சிலர் ஒரு குழுவாக சேர்ந்து இதுபோல் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில பயிற்சி அளித்து வருகின்றனர். நமது கிராமம், நமது கடமை என்ற பெயரில் இந்த பயிற்சி அளிக்கின்றனர். இந்த பயிற்சியின் ஒருங்கிணைப்பாளராக கவிதா பாண்டியன் என்பவர் உள்ளார். சமூக வலைதளம் மூலம் அவருடன் ஏற்பட்ட நட்பு, இப்படி ஒரு திட்டத்தை அவர்கள் செயல்படுத்தி வருவதை அறிய வைத்தது. அல்லிநகரம் பள்ளிக்கு இதை செயல்படுத்த விருப்பம் தெரிவித்தவுடன், தினமும் ஒரு மணி நேரம் வீதம் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பயிற்சி அளித்து வருகின்றனர்.

    கடந்த 2 வாரமாக நடந்து வரும் பயிற்சியின் மூலம் மாணவ, மாணவிகளின் ஆங்கிலம் கற்கும் திறன் மேம்பட்டுள்ளது. பேசுவதற்கே கூச்சப்பட்ட மாணவ, மாணவிகள் தற்போது ஓரளவு ஆங்கிலம் பேச தொடங்கி விட்டனர். ஏற்கனவே இந்த பள்ளிக்கு அரசு மூலம் புரொஜக்டர் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளதால் அதன் மூலம் இந்த பயிற்சியை தொடர்வது எளிதாகி விட்டது. இந்த பள்ளிக்கு அமெரிக்காவில் இருந்தபடி பாலகுரு செந்தில்குமார், பட்டு திருவேங்கடம், அருணாசலம் ராமநாதன், ராஜமுருகன், கலைசெல்வம் ஆகிய 5 பேரும் பயிற்சி அளித்து வருகின்றனர். தற்போது 8, 9-ம் வகுப்பு ஆங்கில வழிக்கல்வியில் படிக்கும் சுமார் 40 மாணவ, மாணவிகளுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து, பயிற்சி அளிக்கும் அமெரிக்காவில் உள்ள அருணாசலம் ராமநாதனை தொடர்புகொண்டு கேட்ட போது, ‘நான் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறேன். அமெரிக்காவில் வாழும் தமிழகத்தை சேர்ந்த என்ஜினீயர்கள் 30 பேர் ஒரு குழுவாக இணைந்துள்ளோம். நாங்கள் அமெரிக்காவில் வெவ்வேறு மாகாணங்களில் வசித்து வருகிறோம். இணையதளம் மூலம் குழுவாக இணைந்து எங்களால் முடிந்த அளவுக்கு தமிழகத்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். சுமார் 10 ஆண்டுகளாக இதை செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் 35-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தற்போது இதுபோல் வகுப்புகள் எடுத்து வருகிறோம். நமது கிராமப்புற மாணவ, மாணவிகள் தயக்கம் இன்றி ஆங்கில மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்’ என்றார்.  #GovernmentSchoolStudents
    அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி ஜூலை மாதம் தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #ministersenkottaiyan #NEETexam #NEETtraining
    சென்னை:

    தென்னிந்திய மண்டல பட்டயக் கணக்காளர்களின் 6-வது மாநாடு சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த கல்வியாளராக மாறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மாணவர்களின் திறன்களை வளர்க்கக்கூடிய 15 பாடத்திட்டங்கள் வருகின்ற கல்வியாண்டில் கொண்டு வர இருக்கிறோம். அப்படி வருகின்ற போது மாணவர்கள் அந்தந்த பகுதியில் இருக்கின்ற நிலைக்கேற்ப கல்வியினை கற்று வேலைவாய்ப்பினை பெறுவதற்கு இந்த அரசு உத்தரவாதம் அளிக்கிறது.

    இன்று படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் சிறந்த நூலக வசதியை தர வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து மாவட்டங்களுக்கும் நடமாடும் நூலகங்கள் மிக விரைவில் ஏற்பாடு செய்ய இருக்கிறோம்.

    அதன் மூலமாக ஒவ்வொரு பள்ளிகளுக்கும் காலையிலும், மாலையிலும் மாணவர்கள் செல்லுகின்ற போது நூல்களை கற்று சிறந்த கல்வியாளராக உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அதன் அடிப்படையில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனம் இதனை ஒருங்கிணைக்க ஏற்பாடு செய்துள்ளது. அதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது.

    மேலும் நம்முடைய மாணவர்கள் சிறந்த ஆங்கிலத்தை கற்றுக் கொள்வதற்கு ஜெர்மன், இங்கிலாந்து நாடுகளில் இருந்து பயிற்சியாளர்கள் மிக விரைவில் வருகை தர இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறந்த ஆங்கிலத்தை கற்று தருவார்கள்.

    மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் தேர்வுகள் எப்போது நடைபெறும், முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்பதை இந்திய நாட்டின் வரலாற்றில் தமிழகத்தில் மட்டும்தான் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஆண்டு நீட் தேர்வில் ஏறக்குறைய 1412 மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். மதிப்பெண் வேறு, தேர்ச்சி என்பது வேறு. இந்த மாணவர்களுக்கு 4 வார காலம்தான் பயிற்சி அளிக்கப்பட்டன.

    இனி வரும் காலங்களில் ஜூலை மாதத்தில் பயிற்சி தொடங்கப்படும். 412 மையங்களில் பயிற்சி அளிப்பதன் மூலம் வரும் காலங்களில் தமிழகம் நீட் தேர்வில் முன்னணி மாநிலமாக திகழ்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



    அனைத்தும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி இலவசமாக கற்றுத் தரப்படும்.

    எம்.பி.பி.எஸ். கட்-ஆப் மதிப்பெண் 3 நாட்களில் வந்து விடும். குறைந்தது 150 பேர் மருத்துவ படிப்பிற்கு செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று நம்புகிறேன்.

    மாணவர்கள் தொழில் கல்வியை பெறும் வகையில் அந்தந்த மாவட்டங்களில் எந்த தொழிலுக்கு சிறப்பு இருக்கின்றதோ அதன் அடிப்படையில் வரும் கல்வி ஆண்டில் 12 பாடப் பிரிவுகள் தொடங்கி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஓட்டல் நிர்வாகம், மருத்துவமனை நிர்வாகம் போன்ற படிப்புகளை இந்த ஆண்டே கற்று தருகிறோம். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஓட்டல்கள், மருத்துவமனைகளில் வேலை வாய்ப்பை பெற முடியும்.

    வேளாண்மை தொழில் சார்ந்த பயிற்சியும், காய்கறிகளை பதப்படுத்துதல் போன்ற பயிற்சியும், ஜவுளி தொழில் குறித்த பயிற்சியும் இந்த ஆண்டு முதல் அளிக்கப்பட இருக்கிறது.

    தொழிற்சாலைகளிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.

    பள்ளி மாணவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டங்கள் வரலாற்று திட்டமாக அமைந்துள்ளது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களில் 40 சதவீத நீட் தேர்வு சம்பந்தமான பாடப் பகுதி இடம் பெற்றுள்ளது.

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதில் இந்த அரசு அழுத்தம் திருத்தமாக இருக்கிறது. மத்திய அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறார்கள். வழக்கு நிலுவையில் இருக்கிறது.

    பொறியியல் படித்து விட்டு ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் பயிற்சி வழங்கப்படும். பிளஸ்-2 முடித்தவுடன் வேலை பெறும் வகையில் அரசு பயிற்சி வழங்கி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ministersenkottaiyan #NEETexam #NEETtraining

    ×