search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government school students"

    • சதாசிவம் தான் படித்த வகுப்பறைகளை பார்வையிட்டு வகுப்பறைக்குள் அமர்ந்து நெகிழ்ந்தார்.
    • தொடர்ந்து தான் படித்த வகுப்பறையில் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

    அம்மாப்பேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மா பேட்டை அருகே சிங்கம்பேட்டை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்த முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் கவர்னருமான பி.சதாசிவம் பள்ளிக்கு திடீரென வந்திருந்தார்.

    அவரை கண்டதும் இன்ப அதிர்ச்சி அடைந்த ஆசிரி யர்கள் வரவேற்பு அளித்து பள்ளிக்கு அழைத்து சென்றனர். பள்ளிக்குள் சென்ற சதாசிவம் தான் படித்த வகுப்பறைகளை பார்வையிட்டு வகுப்பறைக்குள் அமர்ந்து நெகிழ்ந்தார்.

    தான் படித்த காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை நினைவு கூர்ந்து ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

    தொடர்ந்து தான் படித்த வகுப்பறையில் மாணவர்களிடம் கலந்துரையாடினார். பின்னர் நன்றாக படித்து தன்னை போல் ஒரு உயரிய பதவிக்கு வர வேண்டும் என மாணவர்களுக்கு அறி வுரை வழங்கினார்.

    பின்னர் அவர் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் மாணவர்களிடம் பள்ளியின் தற்போதைய வளர்ச்சி குறித்து கேட்ட றிந்தார்.

    மேலும் பள்ளியின் நலன் கருதி பள்ளிக்கு தேவையான வசதிகள். அதனை இந்த பள்ளியில் படித்து உயர்ந்த நிலையில் உள்ள உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என அனைவரிடமும் கலந்து ஆலோசித்து பள்ளிக்கு தேவையான வளர்ச்சிப் பணிகளை எவ்வாறு செய்ய லாம் என்பது குறித்தும் ஆசிரியர்களுடன் கலந்துரை யாடினார்.

    பின்னர் பள்ளி வளாக த்திற்குள் சென்று பள்ளி ஆசிரியர்கள் சார்பில் வைக்கப்பட்ட காய்கறி செடிகள் தோட்டத்தை பார்வையிட்டார்.

    அதே போல் பள்ளி வளாகத்திற்குள் செல்லும் மின் கம்பங்களால் மாணவர்க ளுக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் ஆசிரியர்களிடம் கேட்டுக்கொண்டார்.

    அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் நாகே ந்திரன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • மாணவ, மாணவிகள் பெருந்துறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு களப்பயணம் மேற்கொண்டனர்
    • மாணவர்களுக்கு வாழ்வியல் ஒழுக்கம் முறைகள் குறித்தும், சட்ட விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

    பெருந்துறை,

    இந்திய அரசியலமைப்பு நாள் மற்றும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான சர்வதேச வன்முறை எதிர்ப்பு நாளை முன்னிட்டு பெருந்துறை வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் 6, 7, 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பெருந்துறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு களப்பயணம் மேற்கொண்டனர்.

    அங்கு பெருந்துறை சார்பு நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண பிரியா, குற்றவியல் நீதித்துறை நடுவர் விபிசி, அரசு வக்கீல் திருமலை மற்றும் பெருந்துறை நீதிமன்ற சிராஸ்தார் கல்யாணசுந்தரம் ஆகியோர் மாணவ,மாணவிகளுடன் கலந்துரையாடி மாணவர்களுக்கு வாழ்வியல் ஒழுக்கம் முறைகள் குறித்தும், சட்ட விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    இதில் ஆசிரியர்கள் கோபிநாத், வெங்கடாஜலபதி, சுமதி, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தீபக்ராஜ் மற்றும் தினேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற தீவிர பயிற்சி மேற்கொள்ள வேண்டியதுள்ளது.
    • சனிக்கிழமைகளில் பயிற்சி வழங்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற தீவிர பயிற்சி மேற்கொள்ள வேண்டியதுள்ளது. ஏழை மாணவர்கள் தனியார் மையங்களில் பயில, போதுமான பொருளாதார வசதி இருப்பதில்லை.இவர்களுக்கு உதவும் வகையில், கல்வித்துறையும், பயிற்சிகள் அளிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில் போட்டித்தேர்வுகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு, வாரத்தில் சனிக்கிழமைகளில் பயிற்சி வழங்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றியத்திற்கு ஒரு மையம் வீதம் 412 பயற்சி மையங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன.

    அதன்படி திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள், பிளஸ் 1 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், (அதிகபட்சம் 50 மாணவர்கள் ஒரு ஒன்றியத்துக்கு), பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள், 10-ம்வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் (ஒரு ஒன்றியத்துக்கு அதிகபட்சம், 20 மாணவர்கள்) தேர்வு செய்யப்படவுள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது :- மாணவர்களில், ஓ.சி., மற்றும் ஓ.பி.சி., பிரிவை சார்ந்தவர்களுக்கு 60 சதவீத மதிப்பெண்களும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களாக கொண்டு, பிளஸ் 2 வகுப்பில் 50 சதவீத மாணவர்களும், பிளஸ் 1 வகுப்பில், 20 மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டு கல்வித்துறை சார்பில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

    2017-18, 2018-19, 2019-20ம் கல்வியாண்டுகளில் மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற பாட ஆசிரியர்கள் மைய ஒருங்கிணைப்பாளராக இருப்பர். இந்த வாய்ப்பை பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இந்த பயிற்சியின் வாயிலாக போட்டித்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடியும் என்றனர்.  

    • புதுவை அருகே உள்ள மீனாட்சி பேட்டை மற்றும் சொக்கநாதன் பேட்டை பள்ளி மாணவர்கள் இணைந்து, நெய்வேலி எல்.எல்.சி.க்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டனர்.
    • அங்கு சுரங்கத்தில் மின்சாரம் தயாரிப்பது, சோலார் மூலம் மின்சாரம் தயாரிப்பது, விளையாட்டு மண்டலங்கள், சுரங்கங்க ளின் பாதுகாப்பான பகுதிகள் என அனைத்தையும் பார்வையிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை அருகே உள்ள மீனாட்சி பேட்டை மற்றும் சொக்கநாதன் பேட்டை பள்ளி மாணவர்கள் இணைந்து, நெய்வேலி எல்.எல்.சி.க்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டனர்.

    புதுவை சுற்றுலா வளர்ச்சி கழகம், நெய்வேலி சுரங்க சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக எல்.எல்.எல்யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி பள்ளி துணை ஆய்வாளர் குமார் வழிகாட்டுதலுடன், பள்ளி தலைமையாசிரியர் அபர்னா தேவி, 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 150-க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலாவை மேற்கொண்டனர்.

    அங்கு சுரங்கத்தில் மின்சாரம் தயாரிப்பது, சோலார் மூலம் மின்சாரம் தயாரிப்பது, விளையாட்டு மண்டலங்கள், சுரங்கங்க ளின் பாதுகாப்பான பகுதிகள் என அனைத்தையும் பார்வையிட்டனர்.

    • 2 ஆயிரத்து 700 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.
    • திருப்பூர் மாவட்டத்தில் அழைக்கப்பட்ட 166 பேரில், 84 பேர் முதல் நாள் கவுன்சிலிங்கில் பங்கேற்றனர்.

    திருப்பூர் :

    அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் உள்ள மொத்த இடங்களில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான கவுன்சிலிங், கடந்த 20ந் தேதி துவங்கியது. சென்னையில் நேரடியாக நடந்த இந்த கலந்தாய்வில் அரசு பள்ளி ஒதுக்கீட்டில், 2 ஆயிரத்து 700 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

    திருப்பூர் மாவட்டத்தில் அழைக்கப்பட்ட 166 பேரில், 84 பேர் முதல் நாள் கவுன்சிலிங்கில் பங்கேற்றனர். இதில் ஜெய்வாபாய் மாதிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மட்டும் 7 மாணவிகளுக்கு விரும்பிய கல்லுாரியில் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்துள்ளது.

    குறிப்பாக சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, கோவை மருத்துவ கல்லூரி, கோவை இ.எஸ்.ஐ., பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லூரி, கே.எம்.சி.எச்., மருத்துவ கல்லூரி, ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரி, ராஜா முத்தையா கல்லூரி, சென்னை, துாத்துக்குடி, கடலூர் பல் மருத்துவமனை, நந்தா பல் மருத்துவமனை ஈரோடு, மதுரை, திருச்சி, அரியலூர், கரூர், திருப்பூர் போன்ற மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து பயில மாணவ, மாணவிகள் தேர்வாகியுள்ளனர்.

    அதிகபட்சமாக ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் பள்ளியில் 7 பேர், கணபதிபாளையம் பள்ளியில் 3, உடுமலை பெண்கள் பள்ளியில் 3, அய்யன்காளிபாளையத்தில் 2, பெருமாநல்லூர் ஆண்கள் பள்ளியில் 2, கணக்கம்பாளையத்தில் 2 பேர் வீதம் மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது. எம்.பி.பி.எஸ்., படிப்பில், 18 பேர், பி.டி.எஸ்., பல் மருத்துவ படிப்பில் 15 பேருக்கு சீட் கிடைத்துள்ளது.

    இது குறித்து மாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறுகையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வழங்க துவங்கியது முதல் நிறைய மாணவர்கள் ஆர்வத்துடன் மருத்துவ கல்வி பயில முன்வருகின்றனர். அரசின் 7.5 ஒதுக்கீடு திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    திருப்பூரில் கடந்தாண்டை விட 5 பேர் இம்முறை கூடுதலாக மருத்துவ கவுன்சிலிங்கில் தேர்வாகியுள்ளனர். அரசு பள்ளி அளவில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்தவர்களின் எண்ணிக்கையில், திருப்பூர் மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. திருப்பூர் அரசு பள்ளி மாணவர்களிடையே மருத்துவ கல்வி பயில்வதற்கான ஆர்வமும், முனைப்பும் அதிகரித்துள்ளதை காட்டுகிறது என்றார்.

    • ஆய்வுக்கூடத்தில் பல்வேறு உபகரண பொருட்கள் தரப்பட்டுள்ளது.
    • அனைத்து பொருட்களையும் கையாள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில் அடல் டிங்கரிங் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.அறிவியல் சார்ந்த பொறியியல், மின்னியல் மற்றும் ரோபோட்டிக் துறையில் மாணவர்களின் சிந்தனைகளை தூண்டவும், பற்பல கண்டுபிடிப்புகளில் ஈடுபட ஊக்கப்படுத்தவும் இந்த ஆய்வுக்கூடத்தில் பல்வேறு உபகரண பொருட்கள் தரப்பட்டுள்ளது.6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இந்த ஆய்வகம் மூலம் உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அனைத்து உபகரணங்களையும் கையாள வழிவகை செய்யப்பட்டுள்ளது.முதல் இரண்டு வகுப்புகளிலேயே மாணவர்கள் சுயமான தானியங்கி சென்சார் மூலம் திறந்து மூடும் கதவுகளை கொண்ட வீடு, தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரம்பியதை அறிவிக்கும் அலாரம், மனிதர்கள் வீட்டுக்குள் நுழைவதை கண்டறியும் தானியங்கி சென்சார் போன்றவற்றை வடிவமைத்துள்ளனர்.

    ஒவ்வொரு மாதமும் பிரத்யேகமாக உரிய நிபுணர்கள் மூலம் அனைத்து பொருட்களையும் கையாள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. ஆய்வுக்கூடத்தை முதன்மைக்கல்வி அலுவலர் திருவளர்செல்வி பார்வையிட்டார். புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி, செயல்முறை விளக்கம் அளித்த மாணவர்களை பாராட்டினார்.பள்ளி தலைமையாசிரியர் பழனிசாமி, இயற்பியல்துறை முதுகலை ஆசிரியர் கண்ணன், பள்ளி மேலாண்மைக்குழு துணைத்தலைவர் ஜெயமோகனகிருஷ்ணன், பி.டி.ஏ., துரைசாமி, நஞ்சப்பா பள்ளி முன்னாள் மாணவர்கள் அமைப்பின் நிர்வாகிகள் செந்தில்குமார், கிரீஷ், கிருஷ்ணமூர்த்தி, சண்முகம், ஸ்டாலின் மணிக்குமார், ஜெகன் அலெக்ஸ், ராமசாமி, ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கையில் கயிறு, நெற்றியில் விபூதி பூசக்கூடாது என கூறுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
    • மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைகளுக்கு சென்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கொங்கு மெயின்ரோட்டில் சின்னசாமியம்மாள் ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி உள்ளது.இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் 2பேர் ஒருமையில் பேசுவதாகவும், கையில் கயிறு, நெற்றியில் விபூதி பூசக்கூடாது என கூறுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

    சில நாட்களுக்கு முன்பு அந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளி தலைமையாசிரியரிடம் மாணவர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் தலைமையாசிரியர் எந்தவித நடவடிக்கை யும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவல்அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைகளுக்கு சென்றனர்.   

    • கள்ளக்குறிச்சி அரசு பள்ளி மாணவர்களை எம்.எல்.ஏ. பாராட்டினார்.

    கள்ளக்குறிச்சி:

    தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் 10 மற்றும் மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற சமீர் என்ற மாணவர் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 க்கு 466 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார்.

    இதேபோல் பிளஸ்-2 பொதுத் தேர்வில் சாய் பிரசன்னா என்ற மாணவர் 600 க்கு 516 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். இந்தநிலையில் கள்ளக்குறிச்சி செந்தில்குமார் எம்.எல்.ஏ. பள்ளிக்கு நேரில் சென்று 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற சமீர் மற்றும் சாய் பிரசன்னா ஆகிய இரண்டு மாணவர்களையும் பாராட்டி பொன்னாடை போர்த்தி, ரொக்கப் பரிசு வழங்கினார். அப்போது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் புதிய சீருடை அறிமுகம் செய்யப்படுகிறது.
    சென்னை:

    தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. கணினி வகுப்புகள், ‘ஸ்மார்ட்’ வகுப்புகள், ‘கியூ-ஆர்’ குறியீடு புத்தகங்கள் என்று அரசு பள்ளிகளில் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன.

    சீருடையிலும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றம் செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த ஆண்டு அறிவித்தார். அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதற்கட்டமாக 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தனி சீருடையும், 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தனி சீருடையும் கடந்த கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.



    1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு தனி சீருடையும், 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு தனி சீருடையும் இந்த கல்வி ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது.

    புதிய சீருடையாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டம் போட்ட பச்சை நிற அரைக்கை சட்டையும், பச்சை நிற அரைக்கால் டவுசரும், மாணவிகளுக்கு அரைக்கை சட்டையும், குட்டை பாவாடையும் (ஸ்கர்ட்) அறிவிக்கப்பட்டுள்ளது.

    6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டம் போட்ட பழுப்பு நிற சட்டையும், பழுப்பு நிற பேன்ட்டும், மாணவிகளுக்கும் அதே நிறத்தில் ஓவர் கோட்டுடன், சுடிதார் டைப்பில் சீருடையாக வழங்கப்பட உள்ளது.

    ஒவ்வொரு மாணவ-மாணவிகளுக்கும் தலா 4 சீருடைகள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
    அரசு பள்ளி மாணவர்களுக்கு, பொதுமக்கள் நிவாரண பொருட்களை வழங்கினர்.
    அன்னவாசல்:

    கஜா புயலினால் தஞ்சை, நாகை, திருவாரூர் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட கிராம நகர்புற பகுதிகளுக்கு தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கரூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை ஆசிரியர்கள் மற்றும் கரூர் குளத்துப்பாளையம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களால் சேரிக்கப்பட்ட 100 கிலோ அரிசி, பருப்பு, கோதுமை, ரவை, சீனி, சோப்பு, எண்ணெய், சேமியா, பிஸ்கட், பவுடர் மற்றும் மருந்து பொருட்கள் உள்ளிட்டவைகளை நிவாரணமாக உருவம்பட்டி கிராம மக்களுக்கு வழங்கியுள்ளனர்.

    அதனை மகிழ்வோடு பெற்று கொண்ட கிராம மக்கள் இந்த நிவாரண பொருட்களை கிராமத்தில் உள்ள அத்தனை குடும்பத்துக்கும் வழங்க இயலாது என்பதால் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சாந்தியிடம் வழங்கினர். பள்ளி மாணவர்களுக்கு தினமும் பிஸ்கட் வழங்கும் படியும், சமையல் பொருட்களை வைத்து பள்ளி நாட்களில் சமைத்து வழங்கும் படியும் கேட்டுக்கொண்டனர்.

    அதனை பெற்றுக்கொண்ட பள்ளி தலைமையாசிரியர் சாந்தி கூறியதாவது:-

    கஜாபுயலினால் உருவம்பட்டி கிராம மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் தங்களுக்கு வந்த நிவாரண பொருட் களை பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய செயலை நினைக்கும் போது பெருமையாக உள்ளது. வந்திருந்த பொருட்களில் சோப்பு, பிஸ்கட், ஷாம்பு, சீயக்காய், பற்பசை ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்கியுள்ளோம். மீதி உள்ள மளிகை பொருட்களை வைத்து மாணவர்களுக்கு சமைத்து வழங்கு முடிவெடுத்துள்ளோம் என்றார். பொதுமக்களும் மாணவர்களுக்கு உணவு தயாரிக்க எங்களை அழையுங்கள். நாங்கள் வந்து குழந்தைகளுக்கு சமைத்து தருகிறோம் என மகிழ்வோடு கூறி சென்றனர். இதில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கருப்பையா மற்றும் கிராம நிர்வாகிகள் முத்தன், முருகேசன், பால்கண்ணு, பழனிவேலு மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் முனியசாமி செய்திருந்தார்.
    ரெயில்வே சுரங்கப்பாதையை உடனே திறக்கக்கோரி இன்று வகுப்புகளை புறக்கணித்து ஏராளமான மாணவ, மாணவிகள் பள்ளி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவை:

    கோவை இருகூரில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

    இங்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இவர்கள் அப்பகுதியில் உள்ள ரெயில்வே கேட்டை தாண்டி செல்ல மிகவும் சிரமப்பட்டனர். இதனால் அங்கு சுரங்க நடைபாதை கட்டப்பட்டது. ஆனால் கட்டி பல மாதங்கள் ஆன பிறகும் அந்த சுரங்கப்பாதை இன்னும் திறக்கப்படவில்லை.

    எனவே பள்ளிக்கு செல்ல மாணவ, மாணவிகள் சுமார் 2½ கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் பாதிக்கப்பட்ட ஏராளமான மாணவ, மாணவிகள் ரெயில்வே சுரங்கப்பாதையை உடனே திறக்கக்கோரி இன்று வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இதுகுறித்து தகவலறிந்ததும் சிங்காநல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரெயில்வே அதிகாரிகள் சம்பவஇடத்துக்கு வந்து சுரங்கப்பாதையை உடனே திறக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என மாணவ, மாணவிகள் கூறினர். #tamilnews
    ‘நீட்’ தேர்வு பாதிப்பால் இந்த வருடம் அரசு பள்ளியில் படித்த 4 மாணவர்கள் மட்டுமே எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளனர். #NEET #MBBS
    சென்னை:

    அரசு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதற்கு நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் தகுதியாக கருதப்படுமே தவிர அரசு ஒதுக்கீட்டு இடங்களை பெற இயலாது.

    தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2447 எம்.பி.பி.எஸ். இடங்களில் சி.பி.எஸ்.சி. மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து நீட் பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகள்தான் அதிக இடங்களை கைப்பற்றி உள்ளனர்.

    அரசு பள்ளிகளில் படித்த ஏழை-எளிய மாணவர்களால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாமல் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

    இந்த வருடம் அரசு பள்ளியில் படித்த 4 மாணவர்கள் மட்டுமே எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளனர். இது ஒரு சதவீதம் கூட இல்லை என்பது வேதனையான வி‌ஷயமாகும்.

    2016-ம் ஆண்டில் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்தபோது 3.0 அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவு எம்.பி.பி.எஸ். இடங்களை பெற்றனர்.

    2016-ம் ஆண்டை ஒப்பிடும்போது இந்த வருடம் மிகவும் குறைந்த அளவிலேயே அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் மிக குறைந்த கட்டணத்தில் படிக்க முடியாமல் ஏழை மாணவர்கள் வாய்ப்பை இழந்துள்ளனர். அவர்களுக்கு அளிக்கப்பட்ட நீட் பயிற்சியும் சிறப்பாக அமையவில்லை என்பது கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.

    தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் அதிகமாக இருப்பதால் ஏழை அரசு பள்ளி மாணவர்களால் செலுத்த முடியவில்லை.

    மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பயிற்சியினை சில வருடங்களுக்கு முன்பே தொடங்கி இருந்தால் தனியார் பள்ளி மாணவர்களை போல அரசு பள்ளியில் படித்த மாணவர்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பார்கள் என்று சமுதாய சமத்துவ மருத்துவர் சங்க பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திர நாத் தெரிவித்துள்ளார்.

    அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் குழப்பம் அடைய காரணம் தமிழ் கேள்வித்தாளில் உள்ள தவறுகள்தான் என்று ஆசிரியை ஒருவர் தெரிவித்தார். தமிழில் தேர்வு எழுத மாணவர்களை ஆர்வப்படுத்திய நிலையில் 49 வினாக்கள் தவறாக அமைந்து விட்டதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த வருடம் நீட் தேர்வு மதிப்பெண் ஒதுக்கீட்டிலும் மாறுபாடு ஏற்பட்டதால் ஏழை மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அதிகளவு சேர முடியாத நிலை ஏற்பட்டது.



    இந்த வருடம் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே நீட் தேர்வு பயிற்சி அளிக்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. 320 பள்ளி ஆசிரியர்களுக்கு நீட் சிறப்பு பயிற்சி நேற்று முதல் தொடங்கியுள்ளது. மாவட்டத்திற்கு 10 பேர் வீதம் 32 மாவட்டங்களில் இருந்தும் 320 ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. 400 நீட் பயிற்சி மையங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

    அந்த மையங்களில் தற்போது பயிற்சி பெறும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்துவார்கள். இதுதவிர இந்த பயிற்சியாளர்களுக்கு பாடம் வாரியாக தனி பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.

    இந்த வருடம் அரசு பள்ளி மாணவர்களின் நீட் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. #NEET #MBBS

    ×