search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl fell"

    பேருந்தில் சேலை சிக்கியதால் கணவருடன் மொபட்டில் சென்ற பெண் சாலையில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருச்சி:

    திருச்சி ஜீவாநகர் காந்தி தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 57). இவரது மனைவி தனலட்சுமி (52). கணவன்-மனைவி இருவரும்  மொபட்டில் காந்திமார்க்கெட் பழைய சப்ஜெயில் சாலையில் உள்ள சோலாப்பூர் மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக தனியார் பேருந்து வந்துள்ளது. திடீரென தனலட்சுமியின் சேலை காற்றில் பறந்து பேருந்தில் சிக்கியுள்ளது. இதனால் அவர் வண்டியில் இருந்து இழுக்கப்பட்டு சாலையில் விழுந்தார். இதில் அவரின் தலை, கழுத்து, தோல்பட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதா பமாக உயிரிழந்தார்.

    மேலும் பைக் சாலையில் விழுந்ததால் அவரது கணவர் முருகேசனுக்கும் காயம் ஏற்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டார். இது குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே செங்கம் சாலை ஒட்டக்குடிசல் பகுதியை சேர்ந்தவர் ஜெயராம். இவருடைய மனைவி பாக்கியம் (வயது 42). இவர் நேற்று பகல் சுமார் 11 மணி அளவில் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றார். அப்போது திடீரென அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் ஓடிச் சென்று கிணற்றுக்குள் பார்த்தனர்.

    கிணற்றில் உள்ள தண்ணீரில் பாக்கியம் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பொதுமக்கள் அவரை மீட்க முயன்றனர். எனினும் அவர்களால் முடியவில்லை.

    இதையடுத்து பொதுமக்கள் திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் அலெக்ஸ்சாண்டர் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றனர். கிணற்றுக்குள் வீரர்கள் குதித்து கயிறு கட்டி பாக்கியத்தை உயிருடன் மீட்டனர். தீயணைப்பு வீரர்களுக்கு பாக்கியம் மற்றும் பொதுமக்கள் நன்றி கூறினர்.

    ×