என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "girl fell"
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே செங்கம் சாலை ஒட்டக்குடிசல் பகுதியை சேர்ந்தவர் ஜெயராம். இவருடைய மனைவி பாக்கியம் (வயது 42). இவர் நேற்று பகல் சுமார் 11 மணி அளவில் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றார். அப்போது திடீரென அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் ஓடிச் சென்று கிணற்றுக்குள் பார்த்தனர்.
கிணற்றில் உள்ள தண்ணீரில் பாக்கியம் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பொதுமக்கள் அவரை மீட்க முயன்றனர். எனினும் அவர்களால் முடியவில்லை.
இதையடுத்து பொதுமக்கள் திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் அலெக்ஸ்சாண்டர் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றனர். கிணற்றுக்குள் வீரர்கள் குதித்து கயிறு கட்டி பாக்கியத்தை உயிருடன் மீட்டனர். தீயணைப்பு வீரர்களுக்கு பாக்கியம் மற்றும் பொதுமக்கள் நன்றி கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்