என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Fitness"
- உடல் எடையை குறைப்பதற்கு ஸ்கிப்பிங் பயிற்சி பொருத்தமானதாக இருக்கும்.
- விரைவில் உடல்எடை குறைய இந்த பயிற்சிகள் நல்ல பலனை தரும்.
உடல் எடையை குறைப்பது என்பது சட்டென்று நடந்துவிடும் விஷயமல்ல. எடை குறைப்புக்கு வித்திடும் வழக்கங்களை பின்பற்றினாலும் பலன் தராது. அதனை சரியாக கடைப்பிடிக்கிறோமா? என்பதை பொறுத்தே பலன் கிடைக்கும். அப்படி பின்பற்ற முடியாதவர்கள் எளிமையான 'ஜம்பிங்' பயிற்சிகளை முயற்சித்து பார்க்கலாம். அவை சிறந்த முறையில் எடை குறைப்புக்கு அடிகோலும்.
ஜம்பிங் ஜாக்ஸ்: தினசரி வழக்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டிய பயிற்சிகளுள் இதுவும் இன்று. இந்த பயிற்சியை மேற்கொள்ளும்போது கால்களை நேராக வைத்தபடி நிமிர்ந்த நிலையில் நிற்க வேண்டும். இரு கைகளையும் தொடைப்பகுதியில் வைக்க வேண்டும். பின்பு கால்களை தரையில் அழுத்தியபடி துள்ளிக்குதிக்க தொடங்க வேண்டும். அதே வேகத்திற்கு கைகளையும் மேல்நோக்கி உயர்த்திக்கொள்ள வேண்டும். படிப்படியாக கால்களை நன்றாக விரித்தபடி உற்சாகமாக துள்ளிக்குதிக்க வேண்டும்.
சில நிமிடங்களுக்கு பிறகு குதிக்கும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். துள்ளிக்குதிக்கும்போது கால் தரைக்கு வரும் சமயத்தில் வேகத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். அது கால்களுக்கு அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க உதவும். நல்ல காலணிகள் அணிவதும் அவசியம். உடற்பயிற்சி நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று சில நாட்கள் அவர்களின் நேரடி கண்காணிப்பில் பயிற்சி செய்யலாம். பின்பு சுயமாகவே பயிற்சியை மேற்கொள்ளலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் விரைவான பலன் தரக்கூடிய பயிற்சி இது.
ஸ்கிப்பிங்: உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் எளிய வழியை தேடுகிறீர்கள் என்றால் ஸ்கிப்பிங் பயிற்சிதான் பொருத்தமானதாக இருக்கும். ஸ்கிப்பிங் கயிற்றின் துணையோடு உற்சாகமாக துள்ளிக்குதித்து விளையாடலாம். இந்த பயிற்சி உடலில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் உடல் எடையை அதிகரிக்கவிடாமல் தடுத்துவிடும். உடல் பருமனுக்கு இடம் கொடுக்காமல் கட்டுடல் அழகை பேணவும் உதவும். இதன் மூலம் அதிக உடல் எடையினால் ஏற்படும் புற்றுநோய், நீரிழிவுநோய் போன்றவற்றை நெருங்க விடாமல் தடுத்துவிடலாம்.
முழங்கால் பயிற்சி: 'ஹை கினீ' என்று அழைக்கப்படும் இந்த முழங்கால் பயிற்சி எளிமையானது. நேர் நிலையில் நின்றபடி இரு கைகளையும் இடுப்பு பகுதியை யொட்டிய நிலையில் வைத்தபடி நேராக நீட்ட வேண்டும். பின்பு குள்ளிக்குதிக்க தொடங்க வேண்டும். அப்போது தொடைப்பகுதி மேல் நோக்கி வந்து கைகளை தொட்டுவிட்டு செல்ல வேண்டும். கைகளை நேர் நிலையில் வைத்தபடியே தொடைப்பகுதியை தொட்டுச் செல்லும்படி பயிற்சியை தொடர வேண்டும். தொடைப்பகுதியை எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு மேல் நோக்கி உயர்த்தியும் பயிற்சி செய்யலாம். தினமும் குறைந்தபட்சம் கால் மணி நேரமாவது பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
பர்பீஸ் பயிற்சி: இதுவும் எளிமையான பயிற்சி முறைதான். தரையில் நேர் நிலையில் படுத்துக்கொள்ள வேண்டும். பின்பு கைகளை தரையில் ஊன்றியபடி இடுப்பு பகுதிவரை உடலை நிமிர்த்திக்கொள்ள வேண்டும். பின்பு கைகளை நன்றாக அழுத்தியபடியே கால்களுக்கும் அழுத்தம் கொடுத்து குதித்த வாக்கில் எழுந்து நிற்க வேண்டும். இப்படி தினமும் 50 முறை செய்து வரலாம். அதன் மூலம் 500 கலோரிகள் வரை எரிக்கலாம். எடையும் குறைய தொடங்கிவிடும்.
- புதுவை காவல்துறையில் காவலர்கள் மற்றும் ஓட்டுநர்கள் காலி பணியிடங்களை நிரப்பும் பணி தொடங்கியுள்ளது.
- தினமும் 500 முதல் 800 பேர் வரை உடல்தகுதி தேர்வு நடைபெறுகிறது.
புதுச்சேரி:
புதுவை காவல்துறையில் காவலர்கள் மற்றும் ஓட்டுநர்கள் காலி பணியிடங்களை நிரப்பும் பணி தொடங்கியுள்ளது.
மொத்தமுள்ள 279 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இதில் காவலர்களுக்காக 14 ஆயிரத்து 173 மற்றும் ஓட்டுனர்களுக்கான 877 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு கோரிமேடு காவலர் மைதானத்தில் கடந்த 13-ந் தேதி தொடங்கியது.தினமும் 500 முதல் 800 பேர் வரை உடல்தகுதி தேர்வு நடைபெறுகிறது. முதலில் உடல் எடை, உயரம், மார்பக அளவு எடுக்கப்படுகிறது.
பின்னர் முழுமையான கணினி முறையில் ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டுதல், அகலம் தாண்டுதல் தேர்வுகள் நடத்தப்படுகிறது. 12 நாட்களாக ஆண் காவலர்களுக்கான உடற் தகுதி தேர்வு நடந்தது. இதை தொடர்ந்து பெண் காவலர்களுக்கான உடற் தகுதி தேர்வு தொடங்கியது.
முதல்நாளான 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதை போலீஸ் ஐ.ஜி. சந்திரன் நேரில் ஆய்வு செய்தார். பெண்களுக்கு 30-ந் தேதி வரை ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், அகலம் தாண்டுதல் உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இறுதியாக 31-ந் தேதி ஓட்டுநனர்களுக்கான தேர்வு நடக்கிறது.
- மதுரையில் 2-வது நாளாக சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் திறன் தகுதித்தேர்வில் 525 பட்டதாரிகள் பங்கேற்றனர்.
- இந்த தேர்வு பணிகளை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார், டி.ஐ.ஜி. பொன்னி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மதுரை
தமிழக போலீஸ் துறையில் காலியாக உள்ள 444 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்து தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. 197 மையங்களில் நடைபெற்ற இந்த எழுத்து தேர்வை 1 லட்சத்து 73 ஆயிரத்து 487 பேர் எழுதினர்.
இந்த நிலையில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆயுதப்படை மைதானங்களில் நடந்து வருகிறது.
மதுரையில் சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி திறன் தேர்வுகள் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தென் மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் 525 பேர் கலந்து கொண்டனர். இதில் அவர்கள் உடல் தகுதிகள் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.
இந்த நிலையில் 2-வது நாளான இன்று அவர்களுக்கான உடல் திறன் தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டன. குண்டு எறிதல், கயிறு ஏறுதல், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதி பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
இந்த தேர்வு பணிகளை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார், டி.ஐ.ஜி. பொன்னி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்