search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fishermen arrest"

    • ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
    • கைது செய்யப்பட்ட மீனவர்களை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படை கொண்டு சென்றது.

    ராமேஸ்வரம்:

    ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் தனுஷ்கோடி, தலைமன்னார் இடையே கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது எல்லையை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 6 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    கைது செய்யப்பட்ட மீனவர்கள் 6 பேரையும் முகாமுக்கு இலங்கை கடற்படை கொண்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

    சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் இன்னும் இந்தியா திரும்பாத நிலையில், மீண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • நாகை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
    • கைது செய்யப்பட்ட மீனவர்கள் 9 பேர் திரிகோணமலை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படை கொண்டு சென்றது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்படியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.

    அப்போது இந்திய எல்லையை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    கைது செய்யப்பட்ட மீனவர்கள் 9 பேரையும் திரிகோணமலை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படை கொண்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனே மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை அத்துமீறி நமது கடற்பரப்பில் நுழைந்து கைது செய்வதை ஒன்றிய அரசு தடுத்தி நிறுத்திடாமல் அலட்சியப்போக்குடன் வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
    • தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதையும், தாக்குதலுக்கு உள்ளாவதையும் கண்டித்தும் ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரியும், ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

    துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் ஒரு நாளைக்கு 5 கோடி ரூபாய் வரை மீன்பிடி வர்த்தகம் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை அத்துமீறி நமது கடற்பரப்பில் நுழைந்து கைது செய்வதை ஒன்றிய அரசு தடுத்தி நிறுத்திடாமல் அலட்சியப்போக்குடன் வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

    தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
    • இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் எங்களை அத்துமீறி கைது செய்கிறார்கள்.

    சென்னை:

    தமிழக மீனவர்கள் சிலர் விசைப்படகுகளில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி மீனவர்கள் 5 பேரை படகுடன் கைது செய்தனர்.

    இலங்கை மன்னார் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

    • இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ராமேசுவரம்:

    ராமேஸ்வரத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

    இந்நிலையில், கச்சத்தீவுக்கும் கோடியக்கரைக்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகு மற்றும் 6 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 6 மீனவர்கள் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்களா அல்லது புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றவர்களா என மீன்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

    • ஒரு தரப்பினர் இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
    • சிறிய கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ராமேசுவரம் மீனவர்களிடம் இங்கு மீன்பிடிக்க அனுமதி இல்லை.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இவர்களில் ஒரு தரப்பினர் இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது சிறிய கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ராமேசுவரம் மீனவர்களிடம் இங்கு மீன்பிடிக்க அனுமதி இல்லை.

    எனவே உடனடியாக வேறு பகுதிக்கு செல்லுங்கள் என எச்சரித்தனர். தொடர்ந்து இலங்கை கடற்படை வீரர்கள், ராமேசுவரம் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை பறிமுதல் செய்ததோடு, வலை, மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர். இந்தப்பகுதியில் மீன்பிடிக்க வந்தால் சிறைபிடிக்கப்படுவீர்கள் எனக்கூறி மீனவர்களை தாக்கி இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.

    உயிருக்கு பயந்த மீனவர்கள் மீன் பிடிப்பதை பாதியிலேயே கைவிட்டு கரைக்கு திரும்பினர். இதுபற்றி பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறும்போது, இலங்கை கடற்படையின் இதுபோன்ற செயல்களால் பல லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து இலங்கை கடற்படை தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர்.

    • இலங்கை கடற்படையால் நாகப்பட்டினம் மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ராமேசுவரம்:

    நாகப்பட்டினம் பகுதியில் இருந்து ஒரு விசைப்படகில் 5 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் படகு மற்றும் அதில் இருந்த 5 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். அதன்பின் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே, காரைக்காலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மறுநாளே நாகை மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக மீனவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 12 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது.

    ராமேஸ்வரம்:

    தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படை சிறைபிடித்து செல்வது வழக்கமாக உள்ளது. இதனை தடுக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீனவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் சிறைபிடிப்பு மட்டும் நின்றபாடில்லை.

    இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணக் குடாநாடு பகுதியில் உள்ள மீன்பிடி இயக்குனரகத்தில் ஒப்படைக்கப்படுவார்கள் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

    ×