search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 6 தமிழக மீனவர்கள் கைது
    X

    மீன்பிடி படகு

    கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 6 தமிழக மீனவர்கள் கைது

    • இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ராமேசுவரம்:

    ராமேஸ்வரத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

    இந்நிலையில், கச்சத்தீவுக்கும் கோடியக்கரைக்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகு மற்றும் 6 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 6 மீனவர்கள் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்களா அல்லது புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றவர்களா என மீன்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

    Next Story
    ×