search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
    X

    மீன்பிடி படகுகள்

    எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

    • எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 12 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது.

    ராமேஸ்வரம்:

    தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படை சிறைபிடித்து செல்வது வழக்கமாக உள்ளது. இதனை தடுக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீனவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் சிறைபிடிப்பு மட்டும் நின்றபாடில்லை.

    இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணக் குடாநாடு பகுதியில் உள்ள மீன்பிடி இயக்குனரகத்தில் ஒப்படைக்கப்படுவார்கள் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×