search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "field"

    நகர பகுதியில் வயல்களை அழித்து வீடுகட்டுவதால் வெப்பம் அதிகரித்து வருகிறது என்று முன்னாள் வானிலை இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார். #MeteorologistRamanan

    கும்பகோணம்:

    சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன் கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாணவர்கள் செய்தித்தாள்களை படித்து குறிப்பெடுத்து கொள்ள வேண்டும். செல்போன் பயன்பாட்டை மாணவிகள் முழுவதும் குறைக்க வேண்டும். தமிழகத்தில் கல்வியின் தரத்தில் இன்னும் அதிகளவில் முன்னேற்றம் கொண்டுவர வேண்டும். ஒரே நாளில் படித்து ஐ.ஏ.எஸ். ஆக முடியாது. ஆரம்ப நாட்களிலிருந்து படித்து வந்தால்தான் சாத்தியமாகும். இதற்காக அனைத்து பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்.

    இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதனால் நீட் தேர்வுக்கு தகுந்தாற்போல் நாம் படிக்க வேண்டும். அதற்கு நமது மனநிலையை தயார் செய்து கொள்ள வேண்டும். ரெயில்வே மற்றும் மத்திய அரசு பணிகளில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகமானோர் உள்ளனர். அவர்களுக்கு கல்வி கற்பிப்பதில், அந்தந்த மாநிலங்கள் மாணவர்களை ஊக்குவித்து தயார்படுத்துகிறது.

    ஆனால் தமிழகத்தில் மாணவர்களை ஊக்குவிக்க உந்து சக்திகள் இல்லை. நாம் என்ன மேல்படிப்பு படிக்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்து கனவு காண வேண்டும். கனவு நிறைவேறாமல் போனாலும், கனவு காணுவதை விட்டுவிடக் கூடாது. கண்டிப்பாக ஒரு நாள் நடக்கும்.

    நகர பகுதிகளில் உள்ள வயல்கள், வெட்ட வெளிகளை அழித்து விட்டு வீடுகளை கட்டியுள்ளனர். பிளாட் போடப்பட்டு வருகிறது. இதனால்தான் தற்போது வெப்பம் அதிகரித்து வருகிறது. வருங்காலத்தில் இன்னமும் வெப்பம் அதிகமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MeteorologistRamanan

    வேதாரண்யம் அடுத்த கத்திரிப்புலத்தில் வயல் பகுதிகளில் மின்கம்பங்களை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    வேதாரண்யம்:

    டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி வீசிய கஜா புயலால் பெரும் பாதிப்புக்குள்ளானது.

    புயலால் சாய்ந்த மின்கம் பங்களை சீரமைக்கும் பணி நடந்தது. இதில் நகர்ப் புறங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. கிராமப்புறங்களில் மட்டும் இன்னும் 20 சதவீதம் மின் இணைப்பு கொடுக்கப்பட வேண்டியது உள்ளது.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கத்திரிப்புலத்தில் வயல் பகுதிகளில் மின்கம்பங்களை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கத்தரிப்புலத்தில் வள்ளுவர் சாலை பகுதியில் கஜா புயல் பாதிப்பிற்கு பிறகு தற்போது மின் வினியோகம் அளிப்பதற்கு மின் கம்பங்கள் நடப்படுகின்றன. அவ்வாறு நடப்படும் மின்கம்பங்கள் சாலையோரம் நடாமல் வயல் பகுதிகளில் நடப்பட்டு வருகிறது.

    இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக குற்றம் சாட்டினர்.

    மேலும் சாலை வழியே மின்கம்பங்களை நட்டு மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் வந்தனர்.

    ஆனால் வயல்பகுதிகளில் மட்டுமே மின்கம்பங்கள் நடப்பட்டு வந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கத்தரிப்புலம் -பனையடி குத்தகை சாலையில் , புயலால் சாய்ந்த தென்னை மரங்கள் மற்றும் மரங்களை சாலையின் குறுக்கே போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தபகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்து கரியாப்பட்டினம் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபறறி அதிகாரிகளுடன் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் மறியல் கைவிட்டு கலைந்து சென்றனர்.

    வயல்களில் மின் வேலிகளை அமைப்பது கூடாது எனவும் அது தண்டனைக்குரிய குற்றம் எனவும் மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    தமிழக மின்சார வாரியத்தின் அரியலூர் மின்வாரிய செயற்பொறியாளர் செல்வராசு வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மின் விபத்துக்களை தடுக்கும் வகையில், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மின்பாதையில் உள்ள மின்சார கம்பிகள் அறுந்து கிடந்தால், அதனருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம். மின் கம்பங்கள் பழுதடைந்திருந்தாலோ, கம்பங்கள் சாய்ந்த நிலையிலோ, மின்கம்பிகள் தொய்வாக இருப்பதை கண்டறிந்தாலோ பொதுமக்கள் அதனை தொடாமல் உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

    மின்தடையை சரி செய்யும் பொருட்டு மின்கம்பத்திலோ, மின்மாற்றியிலோ ஏறி மின் வாரியத்தில் இல்லாத நபர்கள் பணி செய்யக்கூடாது. மின்தடை ஏற்பட்டால் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தெரிவித்து வாரிய பணியாளர் மூலம் மட்டுமே மின்தடையை சரி செய்ய வேண்டும். மின்பாதைக்கு அருகில் கட்டிடம் கட்டும்போது போதிய இடைவெளி விட்டு பணி மேற்கொள்ள வேண்டும். கால்நடைகளை மின்கம்பத்திலோ அல்லது அதன் இழுவை கம்பியிலோ கட்டக் கூடாது. உயரமான வாகனங்கள், டிப்பர் லாரிகளை மின்கம்பிகளுக்கு கீழே இயக்குவதை தவிர்க்க வேண்டும். வயல்களில் மின் வேலிகளை அமைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். #tamilnews
    திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாய பணிகளுக்கு வேலை ஆட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மலைகள் சூழ்ந்த பகுதியாக உள்ளது. இந்த மாவட்டத்தில் பெரியஅளவில் ஆறு, குளங்கள் எதுவும் இல்லை. எனவே மானாவரி நிலங்களில் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் நடைபெறுகிறது.

    குறிப்பாக பருத்தி, நிலக்கடலை, எள், மக்காச்சோளம், உளுந்து ஆகியவை மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப் படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப்போனதால் மானாவாரி நிலங்கள் அனைத்தும் தரிசாக காணப்பட்டது.

    எனவே விவசாயிகளும், இதனை நம்பியிருந்த விவசாய கூலித்தொழிலாளர்களும் மாற்று வேலைகளுக்கு திருப்பூர், கோவை போன்ற நகரங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஓரளவு பெய்தது. அதோடு கடந்த சில நாட்களாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    வடகிழக்கு பருவமழை தொடங்கினால் ஓரளவு விவசாய பணிகள் நடைபெறும். அதற்கு முன்னதாகவே தற்போது மழை பெய்து வருவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. சத்திரப்பட்டி, பழனி, ஆயக்குடி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், குஜிலியம்பாறை, எரியோடு, ஆர்.கோம்பை பகுதியில் உள்ள மானாவாரி நிலங்களில் ஏர்பூட்டி விதை விதைக்கின்றனர்.

    ஒட்டுமொத்தமாக விதைவிதைப்பு பணி நடைபெறுவதால் விவசாய பணிகளுக்கு வேலை ஆட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுஒருபுறம் இருக்க விவசாய கூலித்தொழிலாளர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்ற செல்கின்றனர். அங்கு குறைந்த கூலி என்றாலும் அதிகநேரம் ஓய்வு எடுப்பதால் இந்த வேலைக்கு ஏராளமான கூலித்தொழிலாளர்கள் சென்று விடுகின்றனர்.

    இது போன்ற நிலையால்தான் மாவட்டத்தில் கூலி ஆட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் எந்திரம் மூலம் தங்களது பணிகளை தொடங்க உள்ளனர்.

    ×