என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "father arrested"
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே சில்லத்தூர் வெட்டிகாட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்தாண்டு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக பட்டுக்கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் போலீசார் ஒரு வாலிபரை கைது செய்தனர். பின்னர் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த சிறுமி, ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தை யாருக்கு சொந்தம் என்பதை அறிவதற்காக சிறுமிக்கு மரபணு சோதனை செய்யப்பட்டது.
அப்போது குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்பில்லை என தெரியவந்தது. இதையடுத்து மீண்டும் சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது சிறுமி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர் பாச்சூரை சேர்ந்த பொன்னையன் மகன் பால்ராஜ் (வயது 27) என தெரிவித்தார். இது தொடர்பாக விசாரித்து, பட்டுக்கோட்டை மகளிர் போலீசார் பால்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர்.
கைதான பால்ராஜூக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர்:
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பாரண்டபள்ளி பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சான்பாஷா (52). பஞ்சுமிட்டாய் வியாபாரி. இவருக்கு மனைவி, 10 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த சான்பாஷா பஞ்சு மிட்டாய் தருகிறேன் வா எனக்கூறி அருகில் உள்ள தனது வீட்டிற்கு சிறுமியை அழைத்து சென்றார்.
பின்னர் அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் சிறுமி அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சான்பாஷாவை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
அவரை திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து சான்பாஷாவை கைது செய்தனர்.
பின்னர், அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.
கோவை கணுவாய் பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது பெற்றோருக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டு கடந்த 14 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். நான் தந்தை பராமரிப்பில் பள்ளி மற்றும் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்தேன். எனது தந்தை 2-வதாக திருமணம் செய்து விட்டார். அவருக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் நான் கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்து கல்லூரி சென்று வருகிறேன். எனது தந்தை எனக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தொல்லை கொடுத்தார். இதனை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியின் தந்தையை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்