search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் மகளுக்கு தொல்லை கொடுத்த தந்தை கைது
    X

    கோவையில் மகளுக்கு தொல்லை கொடுத்த தந்தை கைது

    கோவையில் மகளுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை கணுவாய் பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது பெற்றோருக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டு கடந்த 14 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். நான் தந்தை பராமரிப்பில் பள்ளி மற்றும் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்தேன். எனது தந்தை 2-வதாக திருமணம் செய்து விட்டார். அவருக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

    இந்நிலையில் நான் கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்து கல்லூரி சென்று வருகிறேன். எனது தந்தை எனக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தொல்லை கொடுத்தார். இதனை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியின் தந்தையை கைது செய்தனர்.
    Next Story
    ×