search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை- 10 குழந்தைகளின் தந்தை கைது
    X

    திருப்பத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை- 10 குழந்தைகளின் தந்தை கைது

    திருப்பத்தூர் அருகே 4 வயது சிறுமிக்கு பஞ்சு மிட்டாய் கொடுப்பதாக தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்த 10 குழந்தைகளின் தந்தை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பாரண்டபள்ளி பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சான்பாஷா (52). பஞ்சுமிட்டாய் வியாபாரி. இவருக்கு மனைவி, 10 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த சான்பாஷா பஞ்சு மிட்டாய் தருகிறேன் வா எனக்கூறி அருகில் உள்ள தனது வீட்டிற்கு சிறுமியை அழைத்து சென்றார்.

    பின்னர் அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் சிறுமி அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சான்பாஷாவை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    அவரை திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து சான்பாஷாவை கைது செய்தனர்.

    பின்னர், அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×