என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Erode Rain"
ஈரோடு:
வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. ஈரோட்டிலும் கடந்த 2 நாட்களாக மிதமான மழை முதல் கன மழை பெய்து வருகிறது.
நேற்று ஈரோடு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை கொட்டியது.
டி.என்.பாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை பகுதியில் அதிகபட்சமாக 30 மி.மீட்டர் மழை பெய்தது.
மேலும் பவானிசாகர், சத்தியமங்கலம், கவுந்தப்பாடி, பவானி உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகயிலும் மிதமான மழை பெய்தது.
இந்த மழையால் வெப்பம் அடியோடு தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.
வனப்பகுதியான தாளவாடியில் நேற்று முன்தினம் நல்ல வெயில் அடித்தது. அதே சமயம் இரவில் சாரல்மழை தூறிக்கொண்டிந்தது. தாளவாடி பகுதியில் 18 மி.மீ. மழை பெய்தது.
ஈரோடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் மழைதூறிக்கொண்டே இருந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக மழை பெய்வதுபோல் மேகக்கூட்டங்கள் சூழ்ந்தாலும் மழை பெய்யவில்லை.
நேற்று பகலில் வழக்கம் போல் வெயில் அடித்தது. மாலையில் மேகக்கூட்டங்கள் சூழ்ந்து வந்தாலும் மழை பெய்யாமல் ஏமாற்றியது.
அதே சமயம் இரவில் பொதுமக்கள் யாரும் எதிர்பாராத வகையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
கன கனமழையாக பெய்யா விட்டாலும் மாவட்டம் முழுவதும் பரவலாகமழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பெருந்துறை, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்துள்ளது.
இதனால் அந்த பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
இதேபோல கோபி, கவுந்தப்பாடி, ஈரோடு, கொடிவேரி அணை பகுதியிலும் இரவில் இடி மின்னலுடன் மழை பெய்தது. வனப்பகுதியான பவானிசாகர், தாளவாடி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வனப்பகுதி ரம்மியமாக காட்சி அளித்தது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-
கொடிவேரி அணை-8.2
பெரும்பள்ளம் அணை -6
ஈரோடு -5
மொடக்குறிச்சி -1
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கோடைமழை கொட்டி வருகிறது. நேற்றும் வழக்கம் போலவெயில் வறுத்தெடுத்தாலும் மாலையில் திடீரென கருமேகக் கூட்டங்கள் சூழ்ந்தன.
மாலை 6 மணிக்கு மேலும் இரவு 8 மணிக்கு மேலும் இடி-மின்னலுடன் மழை கொட்டத்தொடங்கியது.
பவானி, மொடக்குறிச்சி மற்றும் சிவகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதேபோல் பெருந்துறை, பவானிசாகர் மற்றும் வனப்பகுதியான தாளவாடியிலும் பரவலாக மழை பெய்தது. சூறை காற்றுடன் மழை பெய்ததால் இக்களூர் கிராமத்தில் 10-க்கும் மேற்பட்டமரங்கள் முறிந்து விழுந்தது. மின்சார கம்பம் மீது மரம் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.
தாளவாடி பகுதியில் தொடர்ந்து 3 நாட்களாக கோடைமழை கொட்டி வருகிறது. அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் பலத்த இடியும்- மின்னலுமாக இருந்தது. கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிதமான மழை மட்டுமே பெய்தது.
எனினும் ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து கோடை மழைபெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்