search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Embalam Selvam"

    • பள்ளி மாணவ-மாணவியர்கள் தேர்வினை எளிதாக எதிர்கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு வழிகாட்டியாக வும் சிறந்த வழிமுறைகளையும் ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற நூலில் எழுதி பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டுள்ளார்.
    • இதனை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    பள்ளி மாணவ-மாணவியர்கள் தேர்வினை எளிதாக எதிர்கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு வழிகாட்டியாக வும் சிறந்த வழிமுறைகளையும் 'எக்ஸாம் வாரியர்ஸ்' என்ற நூலில் எழுதி பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டுள்ளார். மாணவர்களுக்கு மந்திரமாக தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் மணவெளி ராதா ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் ஓவியப் போட்டி நடைபெற்றது.

    இதனை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பரமானந்தம், தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் மற்றும் பா.ஜனதா கட்சி மாவட்ட தலைவர் தெய்வசிகாமணி, ெதாகுதி தலைவர் லட்சுமிகாந்தன், நிர்வாகிகள் கலை வாணன், எஸ்.வி.எஸ்.குமரன், தங்கதுரை , இளஞ்செ ழியன், செந்தில் முருகன், சசி வெங்கடேசன், முருகன், மதியழகன், சிவப்பிரகாசம், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை மாநிலம் மணவெளி ெதாகுதிக்குட்பட்ட டி.என்.பாளையம் மற்றும் பூரணாங்குப்பம் பஞ்சாயத்துகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை ஊறுதி திட்டத்தின் மூலம் டி.என்.பாளையம் வரதராஜ பெருமாள் நகரில் ரூ.9 லட்சத்து 27 ஆயிரத்து 400 செலவில் மண் சாலை அமைத்தல் பணி நடைபெற்றது.
    • ரூ.12 லட்சத்து 39 ஆயிரத்து 400-க்கான பணிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் மணவெளிதொகுதிக்குட்பட்ட டி.என்.பாளையம் மற்றும் பூரணாங்குப்பம் பஞ்சாயத்துகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை ஊறுதி திட்டத்தின் மூலம் டி.என்.பாளையம் வரதராஜ பெருமாள் நகரில் ரூ.9 லட்சத்து 27 ஆயிரத்து 400 செலவில் மண் சாலை அமைத்தல் மற்றும் பூரணாங்குப்பம் கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட சந்திரகுளத்தை ரூ.1 லட்சத்து 29 ஆயிரம் செலவில் ஆழப்படுத்துதல், காட்டுவா குட்டையில் ரூ.1 லட்சத்து 83 ஆயிரம் செலவில் பராமரிப்பு செய்தால் என மொத்தம் ரூ.12 லட்சத்து 39 ஆயிரத்து 400-க்கான பணிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். பா.ஜனதா விவசாய அணி பொறுப்பாளர் ராமு, தொகுதி தலைவர் லட்சுமி காந்தன், வேளாண் கடன் வழங்கும் சங்கத் தலைவர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் பால சுப்பிரமணியம், வட்டார வளர்ச்சி அதிகாரி காசிநாதன், உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் சிவஞானம், பணி ஆய்வாளர் நற்குணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு தின தொடக்க விழா நடைபெற்றது.
    • மேலும் விளையாட்டு களின் அவசியத்தை எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார். புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு தின தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    மேலும் விளையாட்டு களின் அவசியத்தை எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார். புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

    பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், கவுண்டன் பாளையம் ஊர் தலைவர் ஜெகதீஸ்வரன், என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் கோபி, பள்ளியின் மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா, பள்ளியின் ஆலோசகர் ரத்தின பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்களின் அணி நடை , யோகாசனம், நடனம், பிரமிடு , போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பந்து சேகரிப்பு போட்டி, பெற்றோர்களுக்கு லக்கி சர்கிள் போன்ற போட்டிகள் நடைபெற்றன. இது அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்திருந்தது.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின்,ப ள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கார்த்திக் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர். 

    • புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் வட்டம் -3 சார்பில் மணவெளி தொகுதி தவளக்குப்பம் பகுதியில் உள்ள சுபமங்களா மஹாலில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
    • குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் வட்டம் -3 சார்பில் மணவெளி தொகுதி தவளக்குப்பம் பகுதியில் உள்ள சுபமங்களா மஹாலில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

    விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்காக நடைபெற்ற மாறுவேட போட்டி மற்றும் ஆரோக்கிய குழந்தை ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை திட்ட அதிகாரி கிளாரா, மாநில பா.ஜனதா விவசாய அணி பொறுப்பாளர் ராமு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தாய்மார்கள் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

    • மணவெளி தொகுதியில் ரூ.3.95 கோடி மதிப்பில் தவளக்குப்பம் குபேர்நகரில் புதிய தார் சாலை, புதுக்குப்பம் சுனாமி குடியிருப்பு பகுதியில் புதிய தார் சாலை, தவளைகுப்பம் சடா நகர் பகுதியில் கழிவுநீர் வடிகால் வசதி மற்றும் தார் சாலை அமைக்கப்படுகிறது.
    • முகமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜ் இளநிலைப் பொறியாளர்கள், சரஸ்வதி ரகுராமன், சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    மணவெளி தொகுதியில் ரூ.3.95 கோடி மதிப்பில் தவளக்குப்பம் குபேர்நகரில் புதிய தார் சாலை, புதுக்குப்பம் சுனாமி குடியிருப்பு பகுதியில் புதிய தார் சாலை, தவளைகுப்பம் சடா நகர் பகுதியில் கழிவுநீர் வடிகால் வசதி மற்றும் தார் சாலை, தவக்குப்பம் மூகாம்பிகை நகர் பகுதியில் கழிவு நீர் வடிகால் வசதி, தவளக்குப்பம் ராஜா ராம் நகர் பகுதியில் பிரதான சாலை மற்றும் விடுபட்ட சாலைகளுக்கு புதிய தார் சாலை, ஓடைவெளி அணு கார்டன் பகுதியில் தார் சாலை அமைக்கப்படுகிறது.

    தவளக்குப்பம் வி.ஐ.பி. நகர் பகுதியில் சாலை வசதி, டி.என்.பாளையம் பகுதியில் கருமகாரிய கொட்டகை அமைத்தல், மணவெளி மாரியம்மன் கோவில் வீதியில் புதிய தார் சாலை அமைத்தல் பூரணாங்குப்பம் ரோஜா நகர், பொன்னம்பலம் நகர், முழியன் குளம் ஆகிய பகுதிகளில் சாலை வசதி ஏற்படுத்தப்படுகிறது.

    தவளக்குப்பம் ரோகிணி நகர் பகுதியில் புதிய தார் சாலை அமைத்தல், தானம்பாளையம் அம்மன் நகர் அங்காளம்மன் நகர் ஆகிய பகுதிகளில் உட்புற சாலைகளுக்கு தார் சாலை அமைக்கப்படுகிறது.

    தானாம்பாளையம் வெங்கடேஸ்வரா நகர் பிரதான சாலையை தார்சாலையாக அமைத்தல், நோனாங்குப்பம் ஆற்றங்கரை பகுதி ஒன்று முதல் 3-ம் குறுக்குத் தெரு வரை சிமெண்ட் சாலை மற்றும் வடிகால் வசதி அமைத்தல், புது குப்பம் வீரன் கோவில் பகுதியில் தார் சாலை அமைக்கப்படுகிறது.

    நல்லவாடு சமுதாய நலக்கூடம் அருகில் உள்ள பகுதியில் சாலை அமைத்தல், தானம்பாளையம் சரஸ்வதி நகர், தவமணி நகர் ஆகிய பகுதிகளில் உட்புற சாலைகள் அமைத்தல், அபிஷேகப்பாக்கம் பகுதியில் கழிவறை வசதி அமைத்தல், அபிஷேகப்பாக்கம் லட்சுமி நகர் பகுதியில் சாலை வசதி அமைத்தல் நோனாங்குப்பம் ஸ்ரீனிவாசா அவன்யூ பகுதியில் தார் சாலை மற்றும் கழிவுநீர் வடிகால் வசதி அமைக்கப்படுகிறது.

    தவளக்குப்பம் டி.டி. கார்டன் எம்.ஜி.ஆர். வீதி இளவரசன் நகர், ராம்ஜி கார்டன் ஆகிய பகுதியில் தார் சாலை அமைத்தல், புதுக்குப்பம் வீரன் கோவில் நடுத்தெரு கங்கை அம்மன் கோயில் பின்புறம் ஆகிய பகுதிகளில் புதிய சிமெண்ட் சாலை மற்றும் கழிவு நீர் வடிகால் வசதி அமைக்கப்படுகிறது.

    ஓடவெளி பகுதியில் கரும காரிய கொட்டகை அமைத்தல் ஆகிய பணிகளை விரைந்து மேற்கொள்ள தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜ் இளநிலைப் பொறியாளர்கள், சரஸ்வதி ரகுராமன், சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தீபாவளி என்றால் உற்றார்-உறவினர்கள்-நண்பர்கள் சூழ புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து கொண்டாடுவதுதான் வழக்கம்.
    • நரிக்குறவர்கள் தீபாவளியன்று வீடு வீடா சென்று இனிப்பு-பட்டாசு வாங்குவது வழக்கம்.

    புதுச்சேரி:

    புதுவை கிருஷ்ணா நகரில் ஜாலி ஹோம்ஸ் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது.

    ஜாலி ஹோம் காப்பகத்தில் நரிக்குறவர்களின் குழந்தைகளும் ஆதரவற்றோரின் குழந்தைகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். இங்கு தங்க இடம், உடுக்க உடை, உணவு என நின்று விடாமல் கல்வியுடன் பாட்டு, நடனம், விளையாட்டு ஆகியவையும் கற்று கொடுக்கப்படுகிறது. இதனால் இங்குள்ள குழந்தைகள் தீபாவளிக்கு என தனி பாடலை உருவாக்கி உள்ளனர்.

    இவர்களுடன் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தீபாவளி கொண்டாடினார். சிறுவர்கள், குழந்தைகளுக்கு இனிப்பு பட்டாசு வழங்கி உற்சாகப்படுத்தினார்.

    பின்னர் நிருபர்களிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பேசியதாவது:-

    தீபாவளி என்றால் உற்றார்-உறவினர்கள்-நண்பர்கள் சூழ புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து கொண்டாடுவதுதான் வழக்கம். ஆனால் நரிக்குறவர்கள் தீபாவளியன்று வீடு வீடா சென்று இனிப்பு-பட்டாசு வாங்குவது வழக்கம்.

    இதுபோன்று வாழ்வின் விளிம்பு நிலையில் உள்ள மக்களும் முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார்.

    பிரதமரின் வழிகாட்டுதலோடு புதுவை அரசும் இந்த சமூக மக்களுக்கு மட்டுமல்லாமல் வறுமை நிலையில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் தங்கள் வாழ்வின் நிலையை உயர்த்திக் கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்த தீபாவளி திருநாளை ஜாலி ஹோம் இல்ல குழந்தைகளோடு கொண்டாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. எப்போதும் தீபாவளி திருநாளை தொகுதி மக்களோடு இணைந்து கொண்டாடுவேன். இந்த முறை இந்த குழந்தைகளோடு கொண்டாடியது மகிழ்ச்சி அளித்தது.

    இவ்வாறு சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.

    • புதுடெல்லி சென்றுள்ள புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மத்திய ரெயில்வே துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
    • ஏனாம் மக்கள் புதுவைக்கு 120- கி.மீ. பஸ் பயணம் செய்கின்றனர். எனவே இந்த சேவையை புதுவை வரை நீட்டித்து தர வேண்டும் என கோரினார்.

    புதுச்சேரி:

    புதுடெல்லி சென்றுள்ள புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மத்திய ரெயில்வே துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

    மனுவில், புதுவை மாநில பகுதிகளில் ஒன்றான ஏனாம் பிராந்தியம் புதுவையிலிருந்து 800 கி.மீ. தொலைவில் உள்ளது. செங்கல்பட்டில் இருந்து காக்கிநாடா செல்லும் சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரெயிலை அப்பகுதி மக்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ெரயில் செங்கல்பட்டு வரை மட்டும் இயக்கப்படுகிறது.

    இதனால் ஏனாம் மக்கள் புதுவைக்கு 120- கி.மீ. பஸ் பயணம் செய்கின்றனர். எனவே இந்த சேவையை புதுவை வரை நீட்டித்து தர வேண்டும் என கோரினார். இந்த கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் உறுதியளித்தார். 

    • நீர் நிலைகளை ரூ.22.50 லட்சம் மதிப்பில் தூர்வாரி ஆழப்படுத்தும் பணியினை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
    • நல்லவாடு மீனவ கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதிய நபர்களுக்கு பணி அட்டையை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மணவெளி தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் உள்ள நீர் நிலைகளை ரூ.22.50 லட்சம் மதிப்பில் தூர்வாரி ஆழப்படுத்தும் பணியினை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.

    இந்த பணியின் கீழ் நோணாங்குப்பம் பகுதியில் உள்ள தீர்த்தகுளம் ரூ.1.41 லட்சம், அபிஷேகப்பாக்கம் பகுதியில் உள்ள சம்போடை குளம் ரூ.3.45 லட்சம், பூரணாங்குப்பம் பகுதியில் உள்ள சந்திர குளம் ரூ.1.29 லட்சம், கொருக்கமேடு பகுதியில் உள்ள பரப்பன்குளம் ரூ.1.95 லட்சம், அபிஷேகப்பாக்கம் பகுதியில் தேடுவார் நத்தம் முதல் வண்ணான் குளம் வரை உள்ள ஊரல் வாய்க்கால் ரூ.6.48 லட்சம், டி.என்.பாளையம் பகுதியில் உள்ள பெரியகுட்டை குளம் ரூ.6.48 லட்சம் மதிப்பிலும் தூர்வாரி ஆழப்படுத்தி சுத்தம் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து நல்லவாடு மீனவ கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதிய நபர்களுக்கு பணி அட்டையை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.

    நிகழ்ச்சியின் போது அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி காசிநாதன், இளநிலை பொறியாளர் சிவஞானம், பணி ஆய்வாளர் நற்குணம், பா.ஜனதா தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.காங்கிரஸ் தொகுதி தலைவர் மனோகர், கூட்டுறவு கடன் சங்க இயக்குனர் சக்திவேல், பூபாலன், ஹேமாமாலினி, மாயகிருஷ்ணன், செல்வி, மோகன், ராஜா, வீரபாலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×