என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Embalam Selvam"

    • மணவெளி தொகுதியில் ரூ.3.95 கோடி மதிப்பில் தவளக்குப்பம் குபேர்நகரில் புதிய தார் சாலை, புதுக்குப்பம் சுனாமி குடியிருப்பு பகுதியில் புதிய தார் சாலை, தவளைகுப்பம் சடா நகர் பகுதியில் கழிவுநீர் வடிகால் வசதி மற்றும் தார் சாலை அமைக்கப்படுகிறது.
    • முகமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜ் இளநிலைப் பொறியாளர்கள், சரஸ்வதி ரகுராமன், சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    மணவெளி தொகுதியில் ரூ.3.95 கோடி மதிப்பில் தவளக்குப்பம் குபேர்நகரில் புதிய தார் சாலை, புதுக்குப்பம் சுனாமி குடியிருப்பு பகுதியில் புதிய தார் சாலை, தவளைகுப்பம் சடா நகர் பகுதியில் கழிவுநீர் வடிகால் வசதி மற்றும் தார் சாலை, தவக்குப்பம் மூகாம்பிகை நகர் பகுதியில் கழிவு நீர் வடிகால் வசதி, தவளக்குப்பம் ராஜா ராம் நகர் பகுதியில் பிரதான சாலை மற்றும் விடுபட்ட சாலைகளுக்கு புதிய தார் சாலை, ஓடைவெளி அணு கார்டன் பகுதியில் தார் சாலை அமைக்கப்படுகிறது.

    தவளக்குப்பம் வி.ஐ.பி. நகர் பகுதியில் சாலை வசதி, டி.என்.பாளையம் பகுதியில் கருமகாரிய கொட்டகை அமைத்தல், மணவெளி மாரியம்மன் கோவில் வீதியில் புதிய தார் சாலை அமைத்தல் பூரணாங்குப்பம் ரோஜா நகர், பொன்னம்பலம் நகர், முழியன் குளம் ஆகிய பகுதிகளில் சாலை வசதி ஏற்படுத்தப்படுகிறது.

    தவளக்குப்பம் ரோகிணி நகர் பகுதியில் புதிய தார் சாலை அமைத்தல், தானம்பாளையம் அம்மன் நகர் அங்காளம்மன் நகர் ஆகிய பகுதிகளில் உட்புற சாலைகளுக்கு தார் சாலை அமைக்கப்படுகிறது.

    தானாம்பாளையம் வெங்கடேஸ்வரா நகர் பிரதான சாலையை தார்சாலையாக அமைத்தல், நோனாங்குப்பம் ஆற்றங்கரை பகுதி ஒன்று முதல் 3-ம் குறுக்குத் தெரு வரை சிமெண்ட் சாலை மற்றும் வடிகால் வசதி அமைத்தல், புது குப்பம் வீரன் கோவில் பகுதியில் தார் சாலை அமைக்கப்படுகிறது.

    நல்லவாடு சமுதாய நலக்கூடம் அருகில் உள்ள பகுதியில் சாலை அமைத்தல், தானம்பாளையம் சரஸ்வதி நகர், தவமணி நகர் ஆகிய பகுதிகளில் உட்புற சாலைகள் அமைத்தல், அபிஷேகப்பாக்கம் பகுதியில் கழிவறை வசதி அமைத்தல், அபிஷேகப்பாக்கம் லட்சுமி நகர் பகுதியில் சாலை வசதி அமைத்தல் நோனாங்குப்பம் ஸ்ரீனிவாசா அவன்யூ பகுதியில் தார் சாலை மற்றும் கழிவுநீர் வடிகால் வசதி அமைக்கப்படுகிறது.

    தவளக்குப்பம் டி.டி. கார்டன் எம்.ஜி.ஆர். வீதி இளவரசன் நகர், ராம்ஜி கார்டன் ஆகிய பகுதியில் தார் சாலை அமைத்தல், புதுக்குப்பம் வீரன் கோவில் நடுத்தெரு கங்கை அம்மன் கோயில் பின்புறம் ஆகிய பகுதிகளில் புதிய சிமெண்ட் சாலை மற்றும் கழிவு நீர் வடிகால் வசதி அமைக்கப்படுகிறது.

    ஓடவெளி பகுதியில் கரும காரிய கொட்டகை அமைத்தல் ஆகிய பணிகளை விரைந்து மேற்கொள்ள தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜ் இளநிலைப் பொறியாளர்கள், சரஸ்வதி ரகுராமன், சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் வட்டம் -3 சார்பில் மணவெளி தொகுதி தவளக்குப்பம் பகுதியில் உள்ள சுபமங்களா மஹாலில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
    • குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் வட்டம் -3 சார்பில் மணவெளி தொகுதி தவளக்குப்பம் பகுதியில் உள்ள சுபமங்களா மஹாலில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

    விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்காக நடைபெற்ற மாறுவேட போட்டி மற்றும் ஆரோக்கிய குழந்தை ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை திட்ட அதிகாரி கிளாரா, மாநில பா.ஜனதா விவசாய அணி பொறுப்பாளர் ராமு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தாய்மார்கள் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

    • புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு தின தொடக்க விழா நடைபெற்றது.
    • மேலும் விளையாட்டு களின் அவசியத்தை எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார். புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு தின தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    மேலும் விளையாட்டு களின் அவசியத்தை எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார். புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

    பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், கவுண்டன் பாளையம் ஊர் தலைவர் ஜெகதீஸ்வரன், என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் கோபி, பள்ளியின் மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா, பள்ளியின் ஆலோசகர் ரத்தின பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்களின் அணி நடை , யோகாசனம், நடனம், பிரமிடு , போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பந்து சேகரிப்பு போட்டி, பெற்றோர்களுக்கு லக்கி சர்கிள் போன்ற போட்டிகள் நடைபெற்றன. இது அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்திருந்தது.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின்,ப ள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கார்த்திக் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர். 

    • புதுவை மாநிலம் மணவெளி ெதாகுதிக்குட்பட்ட டி.என்.பாளையம் மற்றும் பூரணாங்குப்பம் பஞ்சாயத்துகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை ஊறுதி திட்டத்தின் மூலம் டி.என்.பாளையம் வரதராஜ பெருமாள் நகரில் ரூ.9 லட்சத்து 27 ஆயிரத்து 400 செலவில் மண் சாலை அமைத்தல் பணி நடைபெற்றது.
    • ரூ.12 லட்சத்து 39 ஆயிரத்து 400-க்கான பணிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் மணவெளிதொகுதிக்குட்பட்ட டி.என்.பாளையம் மற்றும் பூரணாங்குப்பம் பஞ்சாயத்துகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை ஊறுதி திட்டத்தின் மூலம் டி.என்.பாளையம் வரதராஜ பெருமாள் நகரில் ரூ.9 லட்சத்து 27 ஆயிரத்து 400 செலவில் மண் சாலை அமைத்தல் மற்றும் பூரணாங்குப்பம் கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட சந்திரகுளத்தை ரூ.1 லட்சத்து 29 ஆயிரம் செலவில் ஆழப்படுத்துதல், காட்டுவா குட்டையில் ரூ.1 லட்சத்து 83 ஆயிரம் செலவில் பராமரிப்பு செய்தால் என மொத்தம் ரூ.12 லட்சத்து 39 ஆயிரத்து 400-க்கான பணிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். பா.ஜனதா விவசாய அணி பொறுப்பாளர் ராமு, தொகுதி தலைவர் லட்சுமி காந்தன், வேளாண் கடன் வழங்கும் சங்கத் தலைவர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் பால சுப்பிரமணியம், வட்டார வளர்ச்சி அதிகாரி காசிநாதன், உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் சிவஞானம், பணி ஆய்வாளர் நற்குணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி மாணவ-மாணவியர்கள் தேர்வினை எளிதாக எதிர்கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு வழிகாட்டியாக வும் சிறந்த வழிமுறைகளையும் ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற நூலில் எழுதி பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டுள்ளார்.
    • இதனை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    பள்ளி மாணவ-மாணவியர்கள் தேர்வினை எளிதாக எதிர்கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு வழிகாட்டியாக வும் சிறந்த வழிமுறைகளையும் 'எக்ஸாம் வாரியர்ஸ்' என்ற நூலில் எழுதி பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டுள்ளார். மாணவர்களுக்கு மந்திரமாக தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் மணவெளி ராதா ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் ஓவியப் போட்டி நடைபெற்றது.

    இதனை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பரமானந்தம், தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் மற்றும் பா.ஜனதா கட்சி மாவட்ட தலைவர் தெய்வசிகாமணி, ெதாகுதி தலைவர் லட்சுமிகாந்தன், நிர்வாகிகள் கலை வாணன், எஸ்.வி.எஸ்.குமரன், தங்கதுரை , இளஞ்செ ழியன், செந்தில் முருகன், சசி வெங்கடேசன், முருகன், மதியழகன், சிவப்பிரகாசம், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை அரசு கலைமாமணி விருதாளர் சங்கம் சார்பில், உழவர் திருவிழா, நாட்டுப்புற கலைவிழா, திருவள்ளுவர் தின விழா ஆகிய முப்பெரும் விழா பூரணாங்குப்பம் ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலத்தில் நடந்தது.
    • விழாவில் தொடக்கமாக கலைமாமணி தட்சணாமூர்த்தி குழுவினரின் மங்கள இசை நடைபெற்றது. விழாவையொட்டி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    புதுச்சேரி:

    புதுவை அரசு கலைமாமணி விருதாளர் சங்கம் சார்பில், உழவர் திருவிழா, நாட்டுப்புற கலைவிழா, திருவள்ளுவர் தின விழா ஆகிய முப்பெரும் விழா பூரணாங்குப்பம் ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலத்தில் நடந்தது.

    விழாவிற்கு விருதாளர் சங்க நிறுவனச்செயலாளர் தமிழ்வாணன் வரவேற்றார். சங்க பொருளாளர் ஜோதி செந்தில்கண்ணன் தலைமை தாங்கினார். கலைமாமணி நெல்லைராஜன் முன்னிலை வகித்தார். தலைவர் அரியபுத்திரி நோக்கவுரை ஆற்றினார். கலைமாமணி டாக்டர் கிருஷ்ணமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    விழாவில் தொடக்கமாக கலைமாமணி தட்சணாமூர்த்தி குழுவினரின் மங்கள இசை நடைபெற்றது. விழாவையொட்டி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. உழவு மாமணி விருது கருணாகரன், மறைந்த துளசி மணவாளன், டாக்டர் பாலாஜி கிருஷ்ணசாமி ஆகியோருக்கும், நாட்டுப்புற கலை ரத்னா விருது சிலம்புசேகர், சிவப்பிரகாஷ் ஆகியோருக்கும், திருக்குறள் சுடர் விருது சிறுவன் அமுதன், மாணவி சவுமியா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் சகாதேவன், பரமகேது, ராஜாராம், குமார், ராமலிங்கம் மற்றும் சத்திரிய சேனா சேவகத்தின் பொறுப்பாளர்கள் வெற்றிச்செல்வன், சுவாதிகிருஷ்ணன், பெரியசாமி, ஆனந்தராஜ், சங்கரன், ரவிக்குமார் ஆகியோர் கல ந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் சிவகுமார் நன்றி கூறினார்.

    விழாவில் கடந்த டிசம்பர் மாதம் புதுவை கடற்கரை பகுதியில் நடந்த கர்லாகட்டை சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற குருகுல மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    • வீடு தோறும் சென்று குப்பைகள் சேகரிக்கும் திட்டமானது தற்போது கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
    • இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை விருந்தினராகவும் கலந்து கொண்டு திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் புதுவை மாநிலத்தில் நகராட்சிகளில் இயங்கி வந்த வீடு தோறும் சென்று குப்பைகள் சேகரிக்கும் திட்டமானது தற்போது கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி முதன் முதலில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஹெச்.ஆர்.ஸ்கொயர் நிறுவனம் சார்பாக வீடு தோறும் சென்று குப்பைகள் சேகரிக்கும் பணி தொடக்க விழா அரியாங்குப்பம் காமராஜர் திருமண நிலையத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை விருந்தினராகவும் எம்.எல்.ஏ. பாஸ்கர் என்கிற தட்சிணாமூர்த்தி சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை துணை இயக்குனர்கள் கார்த்திக், சிவகுமார் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், ஹெச்.ஆர்.ஸ்கொயர் நிறுவனத்தின் வேளாண் இயக்குனர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஆண்டியார் பாளையம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என்ற அப்பகுதி மக்கள் கோரிக்கையை விடுத்தனர்.
    • புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம் 5 மாத காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதி ஆண்டியார் பாளையம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என்ற அப்பகுதி மக்கள் கோரிக்கையை விடுத்தனர்.

    இதனை ஏற்று தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் துரித நடவடிக்கை எடுத்து சுகாதாரத்துறை மற்றும் பொதுப்பணித்துறை மூலம் ஆண்டியார் பாளையம் பகுதியில் ரூ.49.31 லட்சம் மதிப்பில் புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

    இந்த புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம் 5 மாத காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

    இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு, ஆரம்ப சுகாதார நிலைய துணை இயக்குனர் டாக்டர் முரளி, பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடக்கோட்ட செயற்பொறியாளர் வல்லவன், உதவி பொறியாளர் பாவாடை, இளநிலை பொறியாளர் ஜோதி மற்றும் தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் டாக்டர்கள் மணிமொழி சாய் ஆனந்த், மினு, ஷர்மிளா ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் ஊழியர்கள் மற்றும் தொகுதி முக்கிய பிரமுகர்கள் பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு தொகுதி தலைவர் லட்சுமி காந்தன், கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார், சக்திபாலன், ஞானசேகர், முன்னாள் கவுன்சிலர் ராஜா, வாழுமுனி கூட்டுறவு சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி, செந்தில் குமார், ரமேஷ், சிவக்குமார், சகாயராஜ், நடராஜன், முத்துராமன், சிவா, செல்வம், பச்சையப்பன், மணி, சேதுபதி, பெருமாள், சடகோபன், சிவராமன், பாண்டியன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களுக்கான 28 மந்திரங்கள் பெற்றோர்களுக்கான 6 மந்திரங்கள் அடங்கிய தேர்வு வீரர்கள் "எக்ஸாம் வாரியர்" என்ற புத்தகத்தையும் மோடி எழுதியுள்ளார்.
    • ஓவியப்போட்டியில் மாணவர்கள் படிக்கும் நேரம், யோகா, உணவு நேரம், குடும்ப நேரம், ஆகிய மந்திரங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து நடத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    மாணவர்கள் தேர்வுக ளின் போது அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க "பரிக்க்ஷா பே சர்ச்சா" என்னும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நடத்தி வருகிறார்.

    இதனை அடிப்படையாகக் கொண்டு அவ்வப்போது மாணவர்களுக்கான 28 மந்திரங்கள் பெற்றோர்களுக்கான 6 மந்திரங்கள் அடங்கிய தேர்வு வீரர்கள் "எக்ஸாம் வாரியர்" என்ற புத்தகத்தையும் மோடி எழுதியுள்ளார். மேலும் மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான அவர்களின் அனுபவங்களையும் உதவிக் குறிப்புக ளையும் பகிர்ந்து கொள்ள மாணவர்களை ஊக்குவிக்கிறார்.

    பிரதமர் கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி காணொளி காட்சி மூலம் மாணவர்களுடன் உரையாடினார்.

    இந்நிகழ்ச்சியை மையமாக கொண்டு மாணவர்களிடையே கலை மற்றும் ஓவியப் போட்டி ஜனவரி 20-ந் தேதி புதுவையில் நடைபெற்றது. ஓவியப்போட்டியில் மாணவர்கள் படிக்கும் நேரம், யோகா, உணவு நேரம், குடும்ப நேரம், ஆகிய மந்திரங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து நடத்தப்பட்டது.

    புதுவையில் உள்ள 4 மாவட்டங்களில் உள்ள சுமார் 3000-க்கும் மேல் அரசு மற்றும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறந்த கலை மற்றும் ஓவிய திறன் கொண்ட மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மொத்தம் 157 மாணவர்க ளுக்கு பரிசுகள், தேர்வு வீரர்கள் (எக்ஸாம் வாரியர்) புத்தகம், மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    ஓட்டல் சற்குருவில் நடந்த இந்நிகழ்ச்சியில் செல்வகணபதி எம்.பி. தலைமை தாங்கி பேசினார். நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. பா. ஜனதாகட்சியின் மாநில பொது செயலாளர் மோகன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

    • மணவெளி தொகுதி தவளக்குப்பம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறப்பு துப்புரவு பணியினை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் தொடங்கி வைத்தார்.
    • கூட்டுறவு சங்க இயக்குனர் சக்திவேல், ஞானசேகர், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மணவெளி தொகுதி தவளக்குப்பம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறப்பு துப்புரவு பணியினை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் தொடங்கி வைத்தார்.

    கிராமப் பகுதிகளில் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கும் பணி குறித்தும், குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜ்,மேலாளர் வீரம்மாள், இளநிலை எழுத்தர் செழியன் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் சக்திபாலன், கிருஷ்ண மூர்த்தி, கூட்டுறவு சங்க இயக்குனர் சக்திவேல், ஞானசேகர், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா மற்றும் பாராட்டு விழா பூரணாங்குப்பத்தில் உள்ள ஜோதி சிலம்பம் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
    • போலீஸ்துறை ஐ.ஜி. சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு கலை மாமணி விருதாளர் சங்கம், ஜோதி சிலம்பம் பயிற்சி மையம் மற்றும் தனசுந்தராம்பாள் அறக்கட்டளை ஆகியவை இணைந்து பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா மற்றும் பாராட்டு விழா பூரணாங்குப்பத்தில் உள்ள ஜோதி சிலம்பம் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் சிறப்பு விருந்தினராக போலீஸ்துறை ஐ.ஜி. சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினர்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் உழவர்கரை நகராட்சி வருவாய் அதிகாரி அய்யனார் தனசுந்தராம்பாள் அறக்கட்டளை நிறுவனர் ஆனந்த் ஜோதி சிலம்ப குரு குலத்தின் நிறுவனர் ஜோதி செந்தில்கண்ணன், பா.ஜனதா கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச்செல்வன்,

    கலைமாமணி விருதாளர் சங்க தலைவர் அரியபுத்திரன் செயலாளர் தமிழ்வாணன் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்த திருவேங்கடம் கணேஷ் கலைவாணி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • மீனவர் நலத்துறை சார்பில், மீனவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
    • போட்டியில் வென்ற மீனவர்களுக்கு பரிசு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், மீனவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது.

    வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா சின்ன வீராம்பட்டினம் சமூதாய நலக்கூட்டத்தில் நடந்தது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கி போட்டியில் வென்ற மீனவர்களுக்கு பரிசு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    மீன்வளத்துறை அதிகாரிகள் சின்ன வீராம்பட்டினம் மீனவ கிராம பஞ்சாயத்தார் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×