என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
வீடு, வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கும் பணி-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்
- வீடு தோறும் சென்று குப்பைகள் சேகரிக்கும் திட்டமானது தற்போது கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
- இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை விருந்தினராகவும் கலந்து கொண்டு திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி:
பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் புதுவை மாநிலத்தில் நகராட்சிகளில் இயங்கி வந்த வீடு தோறும் சென்று குப்பைகள் சேகரிக்கும் திட்டமானது தற்போது கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி முதன் முதலில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஹெச்.ஆர்.ஸ்கொயர் நிறுவனம் சார்பாக வீடு தோறும் சென்று குப்பைகள் சேகரிக்கும் பணி தொடக்க விழா அரியாங்குப்பம் காமராஜர் திருமண நிலையத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை விருந்தினராகவும் எம்.எல்.ஏ. பாஸ்கர் என்கிற தட்சிணாமூர்த்தி சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை துணை இயக்குனர்கள் கார்த்திக், சிவகுமார் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், ஹெச்.ஆர்.ஸ்கொயர் நிறுவனத்தின் வேளாண் இயக்குனர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்