search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drinking"

    கோவை குனியமுத்தூரில் கணவர் குடிப்பழக்கத்தால் விரக்தி அடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் மணியன் (வயது 40). இவரது மனைவி பானு (35). இருவரும் கட்டிடத்தொழிலாளர்கள். இவர்களுக்கு பள்ளி செல்லும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் மணியன் வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார். மனைவி மட்டும் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றினார். சில நேரங்களில் மனைவி வாங்கி வரும் சாம்பளத்தையும் மதுக்குடிக்க வாங்கினார். இதனால் பிள்ளைகளின் கல்வி கட்டணத்தை கட்டமுடியாமல் தவித்தார்.

    கணவரை வேலைக்கு செல்லும்மாறு மனைவி வற்புறுத்தினார். ஆனால் மணியன் இன்று நாளை என்று காலம் கடத்தி வந்தார். இதனால் விரக்தியடைந்த பானு நேற்று இரவு தூக்குப்போட்டார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மணியன் ஓடிச்சென்று தூக்கில் தொங்கிய மனைவியை மீட்டு கயிற்றை அறுத்து எறிந்தார். பின்னர் மனைவியை சமாதானம் செய்து வைத்தார். இன்று காலை எழுந்து பார்த்தபோது பானு தூக்கில் பிணமாக தொங்கினார்.

    தூங்கிய பின்னர் பானு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்ததும் குனியமுத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பானுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முத்திரையர் பாளையத்தில் குடிக்க மனைவி பணம் தராத விரக்தியில் கணவர் தூக்குபோட்டு இறந்து போனார்.
    புதுச்சேரி:

    புதுவை முத்திரையர்பாளையம்  காந்திதிருநல்லூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது57). கொத்தனார். இவருடைய மனைவி  கலையரசி கூலிவேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். மதுகுடிக்கும் பழக்கம் உள்ள சுந்தரமூத்தி தினமும் மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல்  இருந்து வந்தார். மேலும் மனைவி கலையரசியிடம் மதுகுடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். இந்நிலையில் நேற்று சுந்தரமூர்த்தி வேலைக்கு செல்லாமல்  குடிப்பதற்கு  மனைவியிடம் பணம் கேட்டார். அவர் என்னிடம் பணம் இல்லை என்று கூறி வேலைக்கு சென்று விட்டார்.

    இதனால் மனமுடைந்த சுந்தரமூர்த்தி யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் ஜன்னல் கதவில் மனைவியின் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார். சிறிது நேரம் கழித்து மகன் முருகன் அங்கு வந்தார். அப்போது வீடு திறந்து கிடந்தது உள்ளே சென்று பார்த்த போது  ஜன்னல் கதவில் சுந்தரமூர்த்தி தூக்கில் தொங்குவதை கண்டு திடுக்கிட்டார். 

    உடனே  அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சுந்தரமூர்த்தியை தூக்கில் இருந்து கீழே இறக்கி உடனடியாக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுந்தரமூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இது குறித்து கலையரசி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    எய்ட்ஸ், புற்றுநோயை விட கொடியது மது குடிப்பதால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் உயிரிழப்பு ஏற்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. #WorldHealthOrganization

    ஜெனீவா:

    உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் சர்வதேச அளவில் ஏற்படும் மரணங்கள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஐ.நா. சுகாதார துறை சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தி 500 பக்க அறிக்கை தாக்கல் செய்தது. அதில் சர்வதேச அளவில் எய்ட்ஸ், வன்முறை மற்றும் விபத்துக்களால் ஏற்படும் மரணங்களை விட மது குடிப்பதால்தான் அதிக மரணம் ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மது குடிப்பதால் அதில் உள்ள ஆல்கஹால் 200 விதமான நோய்களை உருவாக்குகிறது. கல்லீரல் பாதிப்பு, சிலவகை புற்று நோய்கள் ஏற்படுகின்றன. காசநோய், எய்ட்ஸ், நுரையீரல் சுழற்சி உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.

    மது குடிப்பதால் உடல் நலம் பாதித்து நோய் வாய்ப்பட்டு வருடந்தோறும் 30 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். அது 5.3 சதவீதம் ஆகும்.

    அதே நேரத்தில் எய்ட்ஸ் நோயால் 1.8 சதவீதம் பேரும், சாலை விபத்துக்களால் 2.5 சதவீதம் பேரும், வன்முறை தாக்குதலில் 0.8 சதவீதம் பேரும் மரணம் அடைந்துள்ளனர்.

    எனவே, எய்ட்ஸ், புற்று நோய், நீரிழிவு, சாலை விபத்துக்கள் மற்றும் வன்முறையால் உயிரிழப்பவர்களை விட மது குடிப்பதால் மரணம் அடைபவர்களே மிக அதிகம் என கூறப்பட்டுள்ளது.

    மது குடிப்பதால் அவரின் குடும்பத்தினர் மட்டுமின்றி சமுதாயமும் பாதிக்கப்படுகிறது. போதை தலைக்கேறுவதால் வன்முறையும், அதனால் ஏற்படும் காயத்தால் உயிரிழப்பும் உண்டாகிறது.

    உடல்நலக் கோளாறுகளால் புற்றுநோய், நீரிழிவு, பக்கவாதம், கல்லீரல் பாதிப்பு போன்ற கொடிய நோய்கள் ஏற்படுகின்றன. எனவே குடிபிரியர்கள் மதுவை கைவிட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #WorldHealthOrganization

    ×