என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடிப்பதற்கு மனைவி பணம் தராததால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்26 Sep 2018 12:33 PM GMT (Updated: 26 Sep 2018 12:33 PM GMT)
முத்திரையர் பாளையத்தில் குடிக்க மனைவி பணம் தராத விரக்தியில் கணவர் தூக்குபோட்டு இறந்து போனார்.
புதுச்சேரி:
புதுவை முத்திரையர்பாளையம் காந்திதிருநல்லூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது57). கொத்தனார். இவருடைய மனைவி கலையரசி கூலிவேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். மதுகுடிக்கும் பழக்கம் உள்ள சுந்தரமூத்தி தினமும் மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். மேலும் மனைவி கலையரசியிடம் மதுகுடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். இந்நிலையில் நேற்று சுந்தரமூர்த்தி வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டார். அவர் என்னிடம் பணம் இல்லை என்று கூறி வேலைக்கு சென்று விட்டார்.
இதனால் மனமுடைந்த சுந்தரமூர்த்தி யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் ஜன்னல் கதவில் மனைவியின் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார். சிறிது நேரம் கழித்து மகன் முருகன் அங்கு வந்தார். அப்போது வீடு திறந்து கிடந்தது உள்ளே சென்று பார்த்த போது ஜன்னல் கதவில் சுந்தரமூர்த்தி தூக்கில் தொங்குவதை கண்டு திடுக்கிட்டார்.
உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சுந்தரமூர்த்தியை தூக்கில் இருந்து கீழே இறக்கி உடனடியாக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுந்தரமூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கலையரசி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X