search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Executive Committee"

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. #DMK #Karunanidhi #MKStalin #DMKExecutiveCommittee
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி காலமானதையடுத்து கட்சியின் நிர்வாகக்குழுவில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக கருணாநிதி உடல்நலம் குன்றியதில் இருந்து கட்சியின் செயல் தலைவராக பணியாற்றி வரும் மு.க.ஸ்டாலின், தலைவராக பொறுப்பேற்கலாம் என கூறப்படுகிறது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கருணாநிதி மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் இந்த கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கட்சியின் நிர்வாகக் குழுவில் செய்யப்படும் மாற்றங்கள், பொதுக்குழு கூடும் தேதி ஆகியவை இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என பல்வேறு தகவல்கள் வெளியாகின. ஆனால், தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காகவே இக்கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்திருந்தார்.



    அதன்படி திமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கருணாநிதி மறைவுக்கு முதலில் இரங்கல்  தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் தலைவர்கள் உரையாற்றினர்.

    இந்த கூட்டத்தின் நிறைவில், கட்சி தலைவர் பதவியை ஸ்டாலினுக்கு வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பில் தொண்டர்கள் உள்ளனர். #DMK #DMKExecutiveCommittee 
    கருணாநிதி மறைவைத் தொடர்ந்து திமுக செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கில் இன்று நடைபெறும் என பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். #DMK #DMKExecutiveCommittee
    சென்னை:

    கருணாநிதி மரணம் அடைந்ததால் திமுக தலைவர் பதவி காலியாக உள்ளது. திமுகவின் அடுத்த புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் திமுக பொதுக்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இதற்கிடையே, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுச்செயலாளர் அன்பழகனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து, பொதுச் செயலாளர் அன்பழகன், கட்சியின் செயற்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். 

    அந்த அறிவிப்பில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 10 மணியளவில் திமுக தலைமை செயற்குழு அவசர கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’ என கூறியிருந்தார்.

    இந்தக் கூட்டத்தில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது, கட்சியின் பொதுக்குழுவை கூட்டுவது, கட்சியில் செய்யப்படும் மாற்றங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசப்படலாம் என தெரிகிறது. #DMK #DMKExecutiveCommittee 
    கருணாநிதி மறைவைத் தொடர்ந்து திமுக செயற்குழு 14-ம் தேதி அவசரமாக கூடுவதாக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். #DMK #DMKExecutiveCommittee
    சென்னை:

    கருணாநிதி மரணம் அடைந்ததால் தி.மு.க. தலைவர் பதவி காலியாக உள்ளது. தி.மு.க.வின் அடுத்த புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் தி.மு.க. பொதுக்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பொதுச்செயலாளர் அன்பழகனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இதையடுத்து பொதுச்செயலாளர் அன்பழகன், கட்சியின் செயற்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

    ‘திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 14ம் தேதி காலை 10 மணியளவில் திமுக தலைமை செயற்குழு அவசர கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும். அப்போது தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என அன்பழகன் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார். இக்கூட்டத்தில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

    மேலும் கட்சியின் பொதுக்குழுவை கூட்டுவது மற்றும்  கட்சியில் செய்யப்படும் மாற்றங்கள் தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. மேலும், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியை மீண்டும் சேர்ப்பது குறித்தும் பேசப்படலாம் என தெரிகிறது. #DMK #DMKExecutiveCommittee

    ×