search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Debt Pariharam"

    • புதனுடன் தொடர்புடைய கடனானது வங்கி கடனை திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலையை உருவாக்கும்.
    • குருவுடன் தொடர்புடைய கடனானது கந்து வட்டியில் சிக்க வைக்கிறது.

    குடும்ப கடன்

    1, 2, 6-ம் பாவகங்கள் ஒன்றோடொன்று இணைவு பெறும் போது ஜாதகரின் நடவடிக்கையாலும், குடும்பத்தின் அத்தியாவசிய தேவைக்காகவும் நோயினாலும் கடன் ஏற்படுகிறது. 1,3,6,8,12-ம் பாவக இணைவால் போலீஸ், கோர்ட், கேஸ், கட்டப்பஞ்சாயத்து, நஷ்டம் அவமானமும், தற்கொலை எண்ணம், சிறை தண்டனையும் உண்டாகும் இவர்களில் பெரும்பான்மையானோர், ஷேர், சீட்டு, ரேஸ், தவறான நடவடிக்கைகள் மூலம் பணத்தை தொலைத்து கடனாளியானவர்கள். 6, 7-ம் பாவக இணைவால் தொழில் கூட்டாளியாலும், களத்திரத்தின் மூலமும் கடன் ஏற்படும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு 6, 7-ம் பாவகம் தொடர்பு இருக்கக் கூடாது. 6, 7, 8-ம் பாவக தொடர்பு பெற்ற தம்பதியினர் மற்றும் தொழில் கூட்டாளிகள், போலீஸ் கோர்ட், கேஸ், விவாகரத்து என்று அலைந்தே பாதி வாழ் நாளை தொலைத்து எஞ்சிய வாழ்நாளில் விரக்தியின் உச்ச கட்டத்திற்கு சென்று தவறான முடிவு எடுக்கிறார்கள். பல சந்தர்பங்களில் கணவனால், மனைவியும், மனைவியால் கணவனும் கடன் தொல்லையால் பிரிகிறார்கள். 5,6,9-ம் பாவக இணைவால் பூர்வீக சொத்தைக் காப்பாற்ற கடன், பூர்வீகச் சொத்து வழக்கு, தந்தை மற்றும் தந்தை வழி உறவுகள் மூலமும் உருவாகும்.

    தொழில் கடன்

    6, 10-ம் பாவக இணைவால் தொழில் இழப்பு, தொழில் நட்டமும் ஏற்படுகிறது. இத்துடன் சூரியன், சுக்கிரன் இணைவு பெற்றவர்கள் தொழில் நிர்வாகத்திற்கும், ஆடம்பரத்திற்கும் செலவு செய்தே கடனாளியாகிறார்கள். 6,7,10-ம் பாவகம் தொடர்பு பெற்றவர்கள் கூட்டுத் தொழிலால் கடனாளியாகிறார்கள்.

    நம்பிக்கைத் துரோக கடன்

    3, 11-ம் பாவகம் 6-ம் பாவகத்தோடு இணைவு பெறும் போது உடன் பிறந்த சகோதர, சகோதரிகளாலும், இளைய மனைவியாலும், காதலர்கள் அதீத அன்பால் ஒருவர் பிரச்சினையை அடுத்தவர் சுமப்பது போன்றவைகளாலும் ஏற்படுகிறது. 6-ம், 6-ம் இணைவு பெற்றால் பரிவு மிகுதியால் ஜாமின் போட்டு கடனையும் சத்ருவையும் உருவாக்கி வட்டிக்கு வட்டிகட்டி சொல்ல முடியாத துயரம் ஏற்படும்.

    சுப கடன்

    4 மற்றும் 6-ம் பாவக இணைவால் வீடு, வாகனம், நிலம், விவசாயம், தாய் மற்றும் தாய் வழி உறவினர் மூலமும் கடன் உருவாகும். சுகஸ்தானத்தில் கோச்சார அஷ்டமாதிபதி அல்லது பாதகாதிபதி பயணம் செய்யும் போது நகை அடமானத்திற்கு சென்று விடுகிறது. 5, 6-ம் பாவகம் இணைவால் குழந்தைகளின் கல்வி, திருமணம், நோயினால் கடன் ஏற்படும்.

    பேராசை கடன்

    6-ம் அதிபதி 11-ம் அதிபதியுடன் சம்மந்தப்பட்டால் மூத்த சகோதரிகளால் நஷ்டம், கடன் உருவாகும். சிலர் பேராசை மிகுதியால் உத்தியோகத்தில் இருக்கும் காலத்தில் லஞ்ச ஒழிப்பு துறையிடம் மாட்டி வாழ்வாதாரத்தை இழக்கிறார்கள். அல்லது சேர்மார்க்கெட், சூதாட்டத்தால் கடன்படுகிறார்கள். சிலர் ஆடம்பரச் செலவினால் கடனை விலை கொடுத்து வாங்குகிறார்கள். சிலர் இளைய தாரம் எனும் வைப்பாட்டி கொடுமையால் உடம்பில் உயிரைத் தவிர மீதி அனைத்தையும் கடனுக்காக இழக்கிறார்கள். தங்களுடைய வரவிற்கு அதிகமாக கடன் வாங்கிய பலர் கடன் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் பணக்காரனாக வாழ முடியாவிட்டாலும் பரவாயில்லை கடன் இல்லாமல் வாழ வேண்டும் என்ற மன நிலைக்கு வந்து விடுகிறார்கள். 6-ம் அதிபதியுடன் புதன், குரு, ராகு, கேதுக்கள் இணைவு பெறும் போதும் தசா நடக்கும் போதும் 80 சதவீதம் பேர் தங்களின் தகுதிக்கு மீறிய கடனை சுமக்கிறார்கள். புதனுடன் தொடர்புடைய கடனானது வங்கி கடனை திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலையையும், குருவுடன் தொடர்புடைய கடனானது கந்து வட்டியிலும் சிக்க வைக்கிறது. ஜனன கால ஜாதகத்தில் குரு, ராகு கேதுவுடன் உள்ள தொடர்பே கடன் ஏற்படும் காலத்தையும் நிவாரணம் ஏற்படும் காலத்தையும் உணர்த்தும்.

    • ஆகாச தீபம் ஏற்றப்பட்டால் மகாவிஷ்ணு சந்தோஷப்படுவார்.
    • வீட்டு மொட்டை மாடி போன்ற உயரமான இடத்திலும் தீபம் ஏற்றலாம்.

    கார்த்திகை மாதம் முழுவதும் தினசரி சூரியன் அஸ்தமிக்கும் மாலை வேளையில் வீட்டுக்கு அல்லது ஆலயத்துக்கு அருகில் வீதியில் உயரமான தீபம் ஏற்ற வேண்டும். அல்லது வீட்டு மொட்டை மாடி போன்ற உயரமான இடத்திலும் தீபம் ஏற்றலாம். இந்த தீபத்துக்கு ஆகாச தீபம் என்று பெயர்.

    இதன் ஒளியானது எட்டு திசைகளிலும் பரவ வேண்டும். இன்று (புதன்கிழமை) மாலை சூரியன் மறைந்த பின் தீபம் ஏற்றி சுவாமி சன்னதியில் சங்கல்பம் செய்து கொண்டு மண்அகல் விளக்கில் நல்லெண்ணை விட்டு எட்டு திரி போட்டு ஏற்றி அருகில் உள்ள கோவிலோ தனது வீட்டு மாடியிலோ உயரமான இடத்தில் தீபம் வைத்து வணங்க வேண்டும்.

    கார்த்திகை மாதம் முழுவதும் ஆகாச தீபம் ஏற்ற முடியாதவர்கள் கடைசி 3 நாட்களில் (நவம்பர் 21, 22, 23) ஏற்றலாம். ஒரு நாளாவது ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயம் சென்று தீபம் ஏற்றி வைத்து வணங்க வேண்டும். ஆகாச தீபம் ஏற்றப்பட்டால் மகாவிஷ்ணு சந்தோஷப்படுவார். இதனால் மகாவிஷ்ணு மனம் மகிழ்ந்து தீபம் ஏற்றுபவர்களின் அனைத்து துன்பங்களையும், கடனையும் விலக செய்வார் என்பது நம்பிக்கையாகும்.

    • இந்த பரிகாரத்தை முழு மனதோடு செய்ய வேண்டும்.
    • செவ்வாய்க் கிழமையன்று எந்த ஒரு தர்க்கத்திலும் ஈடுபடக்கூடாது.

    உங்களுடைய அத்தனை கடன் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கிற எளிய பரிகாரம் ஒன்று உள்ளது. இந்த பரிகாரம் செய்யும் போது அந்த கடனை அடைத்து விடணும் என்று நீங்கள் முழு மனசோடு செயலில் இறங்கணும். அப்புறமா அந்த பரிகாரத்திற்கு சரியான நாள் செவ்வாய் கிழமை.

    செவ்வாய் கிழமைகள் பொதுவாகவே அம்பிகைக்கு உகந்த நாள். நவக்கிரகங்களுள் மிகச்சிறந்தது செவ்வாய் தான். இது தான் மங்கலகரமான கிரகம். செவ்வாய்க் கிழமையன்று எதையும் செய்ய விரும்பாதவர்கள் வாழ்க்கையில் முழுப்பலனை அனுபவிக்கவே முடியாது என்றும் சொல்வதுண்டு. முருகப்பெருமானுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை தான்.

    திங்கள், புதன், வியாழன், வெள்ளி நல்ல காரியங்களைச் செய்வதற்கு ஏற்ற நாள் என்று நினைப்பார்கள். ஆனால் நல்ல நாளாக இருந்தாலும் பிரதமை, அஷ்டமி, நவமி திதிகள் வரும் நாட்களைத் தவிர்க்க வேண்டும். செவ்வாய்கிழமையும் உகந்த நாள் தான். மெளன அங்காரக விரதம் ஒன்று உண்டு. தர்மசாஸ்திரத்தில் இதைப் பற்றி மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமையன்று மெளனவிரதம் அனுஷ்டித்தால் யாகம் செய்த பலனை ஒருவர் அடையலாம் என்கிறது.

    அதாவது செவ்வாய்க் கிழமையன்று எந்த ஒரு தர்க்கத்திலும் ஈடுபடக்கூடாது. அப்படி விவாதம் செய்தால் அது நிச்சயம் தீமையில் சென்று முடியும். இயற்கையிலேயே செவ்வாய் விசுவாசம் நிறைந்த பணியாளாக இருந்தாலும் மூர்க்க குணம் நிறைந்தவர். எதைப் பற்றியும் கவலைப்படாமல் எதையும் யோசிக்காமல் வேகமாக செயல்படக்கூடியவர். அன்றைய தினம் நாம் செய்யும் செயல்கள் தொடரும் என்பதால் தான் கடன் வாங்கியவர்கள் கடனைத் திருப்பித் தரும் போது செவ்வாய்க்கிழமை தந்தால் வெகு சீக்கிரமே கடன் அடையும். தொடர்ந்து மூன்று செவ்வாய் கிழமைகளில் உங்கள் கடனின் ஒரு பகுதியைக் கொடுத்து வர, கடன் விரைவில் அடைப்படும்.

    மீண்டும் கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படாது என்று கூறுவதுண்டு. இந்த நாளில் செவ்வாய் தோஷத்திற்கான பரிகார சாந்தி, துர்கா ஹோமம், ஜென்ம நட்சத்திரத்தின் அடிப்படையில் செய்யும் ஆயுஷ்ய ஹோமம் , சஷ்டி அப்த பூர்த்தி போன்றவற்றைச் செய்யலாம். மனையடி சாஸ்திரம் செவ்வாயன்று பூமி பூஜை செய்வது நல்லது என்றே கூறுகிறது. பயணங்களில் கிழக்கு திசை நோக்கிய பயணம், செவ்வாயன்று இருந்தால் உறுதியான வெற்றியைத் தரும்.

    • இந்த பரிகாரம் செய்தால் பணம் குவியும், அஷ்ட ஐஸ்வர்யமும் பெறலாம்.
    • பைரவருக்கு இந்த பரிகாரம் செய்தால் கடன் தீர்ந்து பலன் உடனே கைகூடும்.

    கடன் வாங்கி வட்டி, அசல் கட்ட இயலாதவர்கள் ஞாயிறு ராகு காலத்தில் காலபைரவருக்கு முந்திரி பருப்பு மாலை கட்டி, செந் தாமரை பூ அணிவித்து, கேரட் அல்வா, கோதுமை அரிசி பலகாரம், அவல், கேசரி, சிவப்பு அப்பிள் படையலிட்டு, புனுகு சாற்றி வெண்பொங்கல் நைவேத்தியம் இடவும்.

    ஒரு தலை வாழை இலை வைத்து அதன் மீது நெல் 1 படி பரப்பி அதன் மீது ஒரு தலை வாழை இலை வைத்து பச்சரிசி 1 படி குங்குமம் சிறிதளவு மஞ்சள்பொடி, நெய் கலந்து பரப்பி அதைச்சுற்றிலும் ஐந்து எண்ணெய், சிறிதளவு மஞ்சள்தூள் கலந்து முப்பது பழங்களில் மிளகு தீபம் ஏற்றி ஸ்ரீ சொர்ணபைரவரை வழிபடலாம்.

    இந்த வழிபாட்டை செய்யும்போது பைரவி தேவி காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து, ஸ்ரீ பைரவரை ஒன்பது வாரம் தொடர்ந்து அஷ்டோத்திர அர்ச்சனை செய்து வழிபட செல்வச் செழிப்பைப்பெறலாம். பணம் குவியும், அஷ்ட ஐஸ்வர்யமும் பெறலாம்.

    பெரிய பழங்களில் தீபம் ஏற்ற முடியவில்லை என்றால் சிறிய பழங்களில் ஏற்றலாம். அல்லது சிறிய வெங்கல கிண்ணத்தில் முப்பது மிளகைத்தூள் செய்து தீபம் ஏற்றலாம் அல்லது ஒரு பூசணியில் மிளகு தீபம் ஏற்றலாம்.

    இந்த விசேஷ பரிகாரத்தை மாதம் ஒரு முறை வரும் ஜனம அல்லது த்ரிஜன்ம நஷத்திரம் அன்றும் செய்வது சாலச்சிறந்தது. மற்றும் பவுர்ணமியும், வளர்பிறை அஷ்டமி நாளிலும் இந்தப் பூஜையை செய்வதால் நிம்மதியாக வாழலாம். நமது கவலைகள் பிரச்சினைகள், ஏக்கங்கள், சோகங்கள், இப்படி அனைத்தையும் போக்குவதற்கு ஓர் அரிய உபாயம் இந்த பூஜை.

    ஸ்ரீ ஸ்வர்ண பைரவர் மந்திரம் ஜபிக்கும்போது, ஏலக்காய் சிறிதளவு குங்குமம், மஞ்சள், நெய் கலந்து முத்துக்களால் பைரவர் திருவடியில் அர்ச்சனை செய்யலாம். பைரவருக்கு ஏலக்காய் மாலை செலுத்தலாம். ஒரு பிடி ஏலக்காயை பைரவர் பாதத்தில் வெற்றிலை மேல் வைக்கலாம் கடன் தீர்ந்து பலன் உடனே கைகூடும்.

    • பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சரபேஸ்வரர் சிலை, சித்தர்களால் வழங்கப்பட்டது.
    • இந்த கோவிலில் ஸ்ரீ சக்கரம் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் அங்கலக்குறிச்சியில் மேற்கு தொடர்ச்சி மலை சாரலில் எழில் மிகு இயற்கை சூழலில் மூலிகைகள் நிறைந்த தாடகை மலை அடிவாரத்தில் அமைந் துள்ளது ஆத்மநாதவனம். இங்கு சமுக்தியாம்பிகை, கால சம்ஹார பைரவர், சரபேஸ்வரர் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். சித்த வழிபாட்டு முறையை பின்பற்றும் இத்திருக்கோவிலில் அருஉருவமாய் இருக்கும் சித்தர் நடராஜ யாகவ குருவின் வழிகாட்டுதலின்படி பூஜைகள் நடைபெறுகிறது.

    இக்கோவிலில் சித்தர் நடராஜ யாகவர் அருஉருவமாய் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாகவும், சித்த புருஷர்களின் இருப்பை உணர முடிவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். இக்கோவிலின் மூலக்கோவிலானது ஆத்மநாதவனத்தில் இருந்து சுமார் 5.கி.மீ. தொலைவில் கோட்டூர் மலையாண்டி பட்டினத்தில் ஜோதி வடிவாக காட்சி தருவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

    அருள்மிகு சமுக்தியாம்பிகை

    அத்திருக் கோவிலின் முதன்மை தெய்வம் "அருள்மிகு சமுக்தியாம்பிகை". 9 அடி உயரத்திலான அழகிய சிலா ரூபத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு அம்பிகை க்கு நித்யபடி நடைபெறும் அபிஷேகங்கள் யாரும் காண முடியாத வண்ணம் திரையிட்டே நடத்தப்படுகிறது. இங்கு அம்பிகைக்கு வருடத்தின் குறிப்பிட்ட நாட்களில் 6 சிறப்பு மஹா அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது. கார்த்திகை மாதம் வளர்பிறை தசமி திதியில் பழச்சாறுகளைக் கொண்டு நடத்தப்படும் மானசாபி ஷேகம் மட்டுமே பக்தர்களால் காண முடியும். இங்கு அம்பிகைக்கு தேங்காய் மாலை வழிபாடு பக்தர்களால் நடத்தப்படுகிறது. இவ்வழிப்பாட்டின் மூலம் திருமணத்தடை நீக்கி, குழந்தையின்மை நீங்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

    கால சம்ஹார பைரவர்

    இக்கோவிலின் பைரவ மூர்த்தியானவர் 8 அடி உயரத்தில் 8 கைகளுடன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். எங்கும் காணமுடியாத வண்ணம் பைரவரின் நாய் வாகனமானது சுவாமியின் திருமுகத்தை பார்த்தபடி இருப்பது தனிச்சிறப்பாகும். இங்கு பிரதிமாதம் தேய்பிறை அஷ்டமி அன்று காலை 11 மணிக்கும் மற்றும் 4 மணிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடை பெறுகிறது.

    அஷ்டமி இரவு 7.50-க்கு நடைபெறும் அர்த்த ஜாம பூஜையின் போது சித்தர்கள் வருவதாகவும் அதனை அங்கு பரவும் நறுமணம் மூலம் உணர்வதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். தேய் பிறை அஷ்டமியன்று திரளாக பக்தர்கள் பூசணி தீபம் ஏற்றியும், பாலாபிஷேகம் செய்தும், தொழில் தடை, கல்வித்தடை, கடன் மற்றும் பணப்பிரச்சினைகளிலிருந்து விடுபட வழிபாடு செய்கின்றனர். கார்த்திகை மாதம் வரும் காலாஷ்டமி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

    கோரிக்கை தேங்காய் வழிபாடு

    தேய்பிறை அஷ்டமியன்று மட்டையுடன் கூடிய முழுத் தேங்காயை பைரவரிடம் சமர்பித்து தங்களது கோரிக்கையை பிரார்த்திக்கின்றனர். பின்னர் அத்தேங்காயை வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். அக் கோரிக்கை நிறைவேறிய பின்பு அந்த தேங்காயை மீண்டும் கோவிலில் செலுத்தி வேண்டு தலை நிறைவேற்று கின்றனர்.

    இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சரபேஸ்வரர் சிலை, சித்தர்களால் வழங்கப்பட்டது. இவ்விக்கிரகம் போல் வேறு எங்கும் இல்லை என்பது தனிச்சிறப்பாகும். நீரால் சூழப்பட்டுள்ள சிறு கரு வறையில் சரபேஸ்வரர் அருள்பாலிக்கிறார். ஒரு சிறு பாலத்தின் வழியே அர்ச்சர்கள் சென்று பூஜை செய்கின்றனர். உடல், மனநோய் மற்றும் கெட்ட சக்திகளின் தொல்லையில் இருந்து விடுபடவும் பவுர்ணமி இரவில் பல மூலிகைகளால் ஆன அவுஷதா அபிஷேகம் நடைபெகிறது.

    இந்த அவுஷதா அபிஷேகம் இக்கோவிலில் மட்டுமே நடைபெறுவது தனிச்சிறப்பாகும். பல்வேறு மூலிகைகளைக் கொண்டு கோவிலிலேயே தயாரிக்கப்படும் பச்சை நிற குங்குமம் அம்பிகையின் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இங்கு தேய்பிறை அஷ்டமி, ஜாம பூஜை மற்றும் பவுர்ணமியன்று வழங்கப்படும் சித்த மூலிகை தீர்த்தம் பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்குகிறது. பொள்ளாச்சியில் இருந்து ஆழியார் மற்றும் கோட்டூர் செல்லும் பஸ்களின் மூலம் அங்கலக்குறிச்சி சென்று அங்கிருந்து ஆட்டோ, கார் மற்றும் நடைப்பயணம் மூலம் ஆத்மநாதவனத்தை அடையலாம்.

    ஆலய தொடர்புக்கு- 94895 09305 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இந்த கோவிலில் ஸ்ரீ சக்கரம் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ சக்கரத்தை வணங்கினால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

    • அம்மனுக்கு புடவை சாத்தி பக்தர்கள் வழிபடுவார்கள்.
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.

    திருச்சி தென்னூரில் சோழ மன்னர்களால் குலதெய்வமாக பூஜிக்கப்பட்டு, பின்னர் கிராம தேவதையாக மக்களை காத்துவரும் உக்கிர மாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    உக்கிர மாகாளியம்மன் கோவிலின் தல விருட்சம் வன்னி மரமாகும். மேலும், இங்கு திருவோடு மரம் இருப்பது தனிச்சிறப்பு. இந்தக் கோவில் தினமும் காலை 6.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடை திறந்து இருக்கும். முற்கால சோழ அரசர்களால் வெற்றியின் தெய்வமாக நிர்மாணிக்கப்பட்டு திருவிழாக்கள் பல எடுத்து வழிபட்ட உக்கிரகாளியம்மன் தான் இங்கே தென்னூரில் வீற்றிருந்து அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது.

    இதற்கு சான்றாக இவ்விரு கோவில்களிலும் கருவறையில் காட்சியளிக்கும் அம்பிகையின் ஒரே மாதிரியான உருவமைப்பு முன் வைக்கப்படுகிறது. மேலும், சோழ அரசர்களால் வழிபட்ட உக்கிரமாகாளியம்மன் சிலை காலப்போக்கில் ஆற்றில் அடித்துவரப்பட்டு தென்னூரில் கரை ஒதுங்கியது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் அம்மனுக்கு கோவில் அமைத்து கடந்த 5 தலைமுறைகளாக வழிபட்டு வருகிறார்கள்.

    உக்கிர மாகாளியம்மனை மனமுருகி வழிபட்டால் எதிரி தொல்லை, கடன் தொல்லை நீங்கும். கண் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் தீர்ந்தவுடன் அம்மனுக்கு புடவை சாத்தி பக்தர்கள் வழிபடுவார்கள்.

    மேலும், தங்களுடைய வேண்டுதல் நிறைவேறியவுடன் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பொங்கல் வைத்து வழிபடுவார்கள். ஒரு சில பக்தர்கள் அம்மனுக்கு ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு வழிபாடு செய்வார்கள். அமாவாசை, பவுர்ணமி மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஆடு, கோழி ஆகியவை பலியிடப்படாது. சித்ரா பவுர்ணமியையொட்டி உக்கிர மாகாளியம்மனுக்கு தென்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பால்குடம், தீர்த்தக் குடம் மற்றும் அக்னி சட்டியுடன் ஊர்வலமாக வந்து வழிபடுவார்கள்.

    வியாபாரம், தொழில் நிறுவனங்களில் கீழ்கண்ட வாஸ்து கடைபிடித்தால் வெற்றி பெறலாம் என்று ஜோதிட நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அது பற்றி பார்ப்போம்:-
    பூஜை இடம்: கடை மற்றும் தொழில் நிறுவனங்களில் ஈசான்ய மூலையில் கடவுள் படங்களையோ அல்லது விக்ரகத்தையோ வைக்கக் கூடாது. தென்மேற்கு, தென் கிழக்கு,வடமேற்கு ஆகிய திசைகளில் ஒன்றில் அவற்றை வைத்து தினமும் வழிபட்டு வியாபாரத்தைத்தொடங்க வேண்டும்.

    வாசற்படி: கடைகளில் வாசற்படியை கடையின் முழு அகலத்திற்கு அமைக்கலாம். கிழக்கு பார்த்த கடையில் படிகளை வடகிழக்கு மூலையில் அமைக்க வேண்டும். மேற்கு பார்த்த கடைகளில் படிகளை வட மேற்கில் அமைக்க வேண்டும். தெற்கு பார்த்த கடையில் தென் கிழக்கு மூலையில் படிகளை அமைக்கலாம். வடகிழக்கு அல்லது கிழக்கு பார்த்த கடைகளில் வட்டம் அல்லது அரை வட்டம் வடிவமும் கடை தோற்றம் அல்லது படிகள் அமைக்கக் கூடாது.

    கதவுகள்: கடையில் இரண்டுக்கும் மேற்பட்ட ஷட்டர்கள் இருக்கும் போது கீழே கொடுக்கபட்ட விதிகளின் படி அவற்றைக்கையாள வேண்டும்கிழக்கு பார்த்த கடைகளில் வடகிழக்கு ஷட்டர் திறந்திருக்க வேண்டும். தென் கிழக்கு ஷட்டர் மூடியிருக்க வேண்டும். இதற்கு எதிர்மாறாக அமைக்கக் கூடாது. இரண்டு ஷட்டர்களும் வேண்டுமானால் திறந்திருக்கலாம்.

    கிழக்கு பார்த்த கடை: தரை மட்டம் மேற்கில் சற்று உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருக்கவேண்டும். காசாளர் தென்கிழக்கு மூலையில் வடக்கு பார்த்து அமர்ந்திருக்க வேண்டும். பணபெட்டி காசாளரின் இடது பக்கம் இருக்க வேண்டும். தென் கிழக்கு மூலையில் கிழக்கு பார்த்து அமர்ந்தால் பண பெட்டி காசாளரின் வலது புறம் இருக்க வேண்டும். காசாளர் வடகிழக்கு வட மேற்கு ஆகிய இரண்டு திசைகளிலும் அமரக் கூடாது.

    மேற்கு பார்த்த கடை : வடகிழக்கு மூலை சிறிது தாழ்வாக அமைய வேண்டும். காசாளர் தென் மேற்கு மூலையில் வடக்கு பார்த்து அமர வேண்டும். அவரது இடது கைபுறம் பணபெட்டியை வைக்க வேண்டும். கிழக்கு பார்த்து அமர்ந்தால் பணபெட்டி அவரது வலது புறம் அமைய வேண்டும் வடமேற்கு மூலையிலோ அல்லது தென் கிழக்கு மூலையிலோ, வடகிழக்கு மூலையிலோ அமரக்கூடாது.

    வடக்கு பார்த்த கடை: வடகிழக்கு மூலையை சிறிது தாழ்வாக அமைக்க வேண்டும். காசாளர் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கி அமர்ந்தால் பண பெட்டியை வலது புறம் அமைக்க வேண்டும். வடக்கு பார்த்து அமர்ந்தால் பண பெட்டி அவரது இடது கை புறம் இருக்க வேண்டும். தென் மேற்கு மூலையிலும் அமரலாம். ஆனால் தென் கிழக்கு அல்லது வடகிழக்கு மூலையில் அமரக் கூடாது.

    தெற்கு பார்த்த கடை: வடகிழக்கு மூலையை நோக்கி தாழ்வாக தரை அமைக்க வேண்டும். காசாளர் தென் மேற்கு மூலையில் கிழக்கு அல்லது வடக்கு பார்த்து அமரவேண்டும். அவருடைய வலதுபுறம் பண பெட்டி இருக்க வேண்டும். வடக்கு நோக்கி அமர்ந்தால் பண பெட்டி இடதுபுறம் இருக்க வேண்டும். தென் கிழக்கு அல்லது வட மேற்கு மூலையில் அமரக் கூடாது.

    தெற்கு பார்த்த கடைகளில் தென் மேற்கு ஷட்டர் மூடியிருக்க வேண்டும். வடமேற்கு ஷட்டர் திறந்திருக்க வேண்டும். இந்த நியதிக்கு எதிர்மாறாகச் செய்யக் கூடாது. மேற்கு பார்த்தகடைகளில் மேற்கு, வடமேற்கு ஷட்டர்கள் திறந்திருக்க வேண்டும். தென் மேற்கு ஷட்டர்கள் மூடியிருக்க வேண்டும். இதற்கு மாறாக செய்யக் கூடாது. வடக்கு பார்த்த கடைகளில் வடக்கு, வடகிழக்கு ஷட்டர்கள் திறந்திருக்க வேண்டும். வடமேற்கு ஷட்டர்கள் மூடியிருக்க வேண்டும். இதற்கு மாறாக செய்யக் கூடாது.
    ×