search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coonoor"

    • விபத்தில் சிக்கிய ராணுவ அதிகாரிகளுக்கு நஞ்சப்பசத்திரம் பகுதி மக்கள் பல்வேறு உதவிகளை செய்தனா்.
    • 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று மருத்துவ ஆலோசனைகள், மருந்துகளை பெற்று சென்றனா்.

    ஊட்டி, :

    நீலகிரி மாவட்டம், குன்னூா் நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பா் 8-ந் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் முப்படை தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 12 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனா்.

    அந்த நேரத்தில் விபத்தில் சிக்கிய ராணுவ அதிகாரிகளுக்கு நஞ்சப்பசத்திரம் பகுதி மக்கள் பல்வேறு உதவிகளை செய்தனா்.

    இதனைத் தொடா்ந்து நஞ்சப்பசத்திரம் கிராமத்தினை ஓராண்டுக்கு ராணுவத்தினா் தத்தெடுத்து, அவா்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர உறுதியளித்தனா்.

    அதன்படி, தென்னக ராணுவ மையம் சாா்பில் ராணுவ மருத்துவா்கள் மூலம் மாதமாதம் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.அந்த வகையில் இந்த மாதத்திற்கான மருத்துவ முகாம் நேற்று நஞ்சப்பசத்திரம் பகுதியில் நடந்தது.முகாமில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று மருத்துவ ஆலோசனைகள், மருந்துகளை பெற்று சென்றனா்.

    • திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் குன்னூரில்நடைபெற்றது
    • கூட்டத்தில் மாநில சுயாட்சி எனும் தலைப்பில் கழக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா உரையாற்றினார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் குன்னூரில்நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் தலைமை தாங்கினார். மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான் அனைவரையும் வரவேற்றார்.

    மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் உமாநாத், நௌபல், பாபு, நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாநில சுயாட்சி எனும் தலைப்பில் கழக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா, திராவிட இயக்க வரலாறு எனும் தலைப்பில் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி பேசினர்.

    இதில் குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜூ, ஒன்றிய செயலாளர்கள் நெல்லை கண்ணன், பிரேம்குமார், பீமன், லாரன்ஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, வெங்கடேஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் முபாரக், குன்னூர் நகராட்சி தலைவர் ஷீலா கேத்ரின், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், பேரூர் செயலாளர்கள் முத்து, ரமேஷ், சஞ்சீவ்குமார், காளிதாஸ் உட்பட குன்னூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து நகர,ஒன்றிய, பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இளைஞர் அணியினர் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் குன்னூர் நகர செயலாளர் ராமசாமி நன்றி கூறினார்.

    • இரவு நேரங்களில் யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
    • வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டுபட்டறை அருகே உள்ள அம்பிகாபுரம் கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக இரவு நேரத்தில் கிராமத்துக்குள் நுழைந்து குடியிருப்புகளை நோட்டமிடும் சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் இரவு நேரங்களில் யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் தற்போது அந்தப் பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வரவழைக்கப்பட்டது.

    நாள்தோறும் சிறுத்தை வந்து செல்லும் பகுதியில் நேற்று கூண்டு வைக்கப்பட்டது. கூண்டிற்குள் கம்பிகள் சூழ்ந்த தடுப்புக்குள் ஆடுவைக்கப்பட்டுள்ளது. அதே போல் கூண்டை சுற்றி தேயிலை செடிகள் வைக்கப்பட்டுள்ளது.

    சிறுத்தையை பிடிக்க அதே இடத்தில் வனத்துறையினர் இருந்து கண்காணித்து வருகின்றனர்.

    • குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என உறுதி அளித்தனா்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

    குன்னூர்: -

    நீலகிரி மாவட்டம் ஊட்டி-குன்னூா் சாலையில் அமைந்துள்ளது மந்தாடா ராஜ்குமாா் நகா்.

    கேத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட இப்பகுதியில் கடந்த 15 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. சுமாா் 300 குடும்பங்கள் வசித்து வரும் இப்பகுதி சரிவான மலைப் பகுதியில் அமைந்துள்ளது.

    குடிநீா் விநியோகம் தொடா்பாக கேத்தி பேரூராட்சி அலுவலகத்தில் புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்ப டவில்லை. இருப்பினும் கடந்த வாரத்தில் பெய்து வந்த மழையால் மழை நீரையே குடிநீருக்காக பிடித்து வைத்து பயன்ப டுத்தி வந்தனா்.

    இந்நிலையில், கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படாததையடுத்து, ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஊட்டி-குன்னூா் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

    இதைத் தொடா்ந்து, கேத்தி பேரூராட்சி அலுவலா்கள் மற்றும் கேத்தி காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

    அப்போது, அடுத்த 2 நாள்களுக்குள் இப்பகுதியின் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என உறுதி அளித்தனா். மேலும், உடனடியாக அப்பகுதிக்கு லாரி மூலம் குடிநீா் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். சாலை மறிய லால் ஊட்டி-குன்னூா் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பூங்கா முழுவதிலும் நடவு செய்ய தோட்டக்கலைத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
    • சுற்றுலா பயணிகள் இதனை ஆர்வத்துடன் கண்டு களித்து செல்கின்றனர்.

    ஊட்டி :

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களில் குன்னூர் சிம்ஸ் பூங்கா முக்கியமான ஒன்று ஆகும். இந்த பூங்காவில் நூற்றுக்கணக்கான அரிய வகை மரங்கள் மற்றும் மலர் செடிகள் உள்ளன.

    சிறப்பாக பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு பல வண்ணங்களிலான ரோஜா மலர்களும் உள்ளன. இந்த நிலையில் சிம்ஸ் பூங்கா பசுமைக்குடிலில், பச்சை ரோஜா வளர்க்கப்பட்டு வருகிறது. பூங்கா நிர்வாகக்தின் புதிய முயற்சியாக வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட பச்சை ரோஜா கட்டிங் தொட்டியில் வளர்க்கப்பட்டு வருகிறது.

    தற்போது பசுமைக்கு டியில் வளர்க்கப்பட்டு வந்த செடியில் ஒரு பச்சை ரோஜா மலர்ந்துள்ளது. இதனை பாதுகாப்புடன் வளர்த்து பூங்கா முழுவதிலும் நடவு செய்ய தோட்டக்கலைத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    சிம்ஸ் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை ஆர்வத்துடன் கண்டு களித்து செல்கின்றனர். கடந்த காலங்களில் சிம்ஸ் பூங்காவில் பச்சை ரோஜா வளர்க்கப்பட்டது. நாளடைவில் அதன் வளர்ச்சி தடைபட்டது. தற்போது வெளியில் இருந்து பச்சை ரோஜா செடி கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வளர்க்கப்படுகிறது.

    இந்த புதிய முயற்சி வெற்றி பெற்றுள்ளது‌. எதிர்காலத்தில் சீதோஷண நிலைக்கு ஏற்ப பச்சை ரோஜா நாற்றுக்களை பூங்கா முழவதும் நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்தனர்.

    சுற்றுலா பயணிகள் இதனை ஆர்வத்துடன் கண்டு களித்து செல்கின்றனர்.  

    • பசு மாட்டின் மீது மண் சரிந்து விழுந்து மாடு உயிர் இழந்தது.
    • குன்னூர் வட்டாட்சியர் , வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    குன்னூர்,

    குன்னூர் அருகே உள்ள லோயர் குரூஸ் பெட் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. விவசாயி. இவர் பசு மாடு ஒன்றை வளர்த்து வந்தார். அதனை தனது வீட்டின் அருகே கட்டி வைத்திருந்தார். அப்போது பலத்த மழை பெய்தது. இதில் பசு மாட்டின் மீது மண் சரிந்து விழுந்து மாடு உயிர் இழந்தது. இதனைக் கேள்விப்பட்ட குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பசு மாட்டின் உரிமையாளர் ராஜூவுக்கு ஆறுதல் கூறினர். இதையடுத்து குன்னூர் தாலுகா அலுவலகத்தில் அரசு சார்பில் பசுமாட்டை இழந்த விவசாயி ராஜூவுக்கு குன்னூர் சப்-கலெக்டர் சிவகுமார் ரூ.30 ஆயிரத்தை வழங்கினார். அருகில் துணை வட்டாட்சியர் நந்தகோபால், அலுவலர் சாரதா மற்றும் வருவாய் அலுவலர்கள் இருந்தனர்.

    • தேயிலை தோட்டங்களும், வனப்பகுதியும் நிறைந்து காணப்படுகிறது.
    • வனத்துறையினர் அந்த பகுதி முழுவதும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என கண்காணித்து வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டம குன்னூர் அருகே உள்ளது கிளிஞ்சாடா கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். மேலும் வீடுகளில், ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர்.

    தேயிலை தோட்டங்களும், வனப்பகுதியும் நிறைந்து காணப்படுகிறது. வனத்தையொட்டி இருப்பதால் வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருகிறது.

    கிளிஞ்சடா கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் நேற்று தனது மாட்டினை மேய்ச்சலுக்காக அங்குள்ள புல்வெளியில் விட்டு விட்டு வீட்டிற்கு சென்றார்.

    இந்த நிலையில் அங்கு புதர் மறைவில் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று திடீரென பசுமாட்டினை தாக்கி கொன்றது. மாடு கத்தும் சத்தம் கேட்டு, குமார் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு சென்றனர்.

    அப்போது சிறுத்தை ஒன்று மாட்டினை அடித்து கொன்று இழுத்து ெசன்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    உடனடியாக சம்பவம் குறித்து வனத்துறை யினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள்ளாகவே சிறுத்தை அங்கிருந்து வனத்திற்குள் சென்று விட்டது.

    தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதி முழுவதும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சப்-கலெக்டர் தகவல்
    • அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் 1077 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் .

    ஊட்டி

    குன்னூரில் பேரிடர் மேலாண்மை பொதுமக்கள் மீட்பு குழு பயிற்சிக் கூட்டம் தனியார் கல்லூரியில் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பேரிடர் காலத்தில் பொதுமக்கள் எவ்வாறு முன் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்றும், உடனடியாக மின்சாரத் துறை, மற்றும் வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவிக்க வாட்ஸ்-அப் குழுக்கள் அமைத்து ஏதாவது சம்பவங்கள் நடந்ததால் எவ்வாறு தெரிவிப்பது என்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இது குறித்து சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி கூறியதாவது:-

    குன்னூரில் 15 இடங்கள் மற்றும் கோத்தகிரியில் 25 இடங்களில் அபாயகரமான இடங்களாக கண்டு அறியப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக குன்னூர் எம்.ஜி.ஆர்.நகர், கன்னிமாரியம்மன் கோவில், பர்லியார் மற்றும் கோத்தகிரி பகுதியில் உள்ள கட்டபெட்டு பாரதிநகர், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகள் அபாயகரமானது.

    மேலும் குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதியில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வடக்கிழக்கு பருவ மழை சமயத்தில் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதனை கண்காணிக்க குன்னுார் பகுதியில் 750 நபர்களையும், கோத்தகிரி பகுதியில் 713 நபர்களையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே இந்த பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக பொதுமக்கள் 1077 என்ற எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் குன்னூர் வட்டாச்சியர் சிவக்குமார், கோத்தகிரி வட்டாச்சியர் காயத்திரி, அரசு அதிகாரிகள், பொது நல அமைப்புகள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலை தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பச்சை தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
    • பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூ.30 நிர்ணயிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரவேணு:

    நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. சிறு, குறு விவசாயிகள் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலை தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பச்சை தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

    தேயிலை விலை வீழ்ச்சிக்கு தீர்வு காணவும், குறைந்தபட்ச கொள்முதல் விலையாக கிலோவுக்கு ரூ.30 நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுப்பதற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை விவசாயிகளிடம் கேட்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி மாவட்டம் முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஊர்த்தலைவர்கள், விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நீலகிரி மாவட்ட சிறுவிவசாயிகள் சங்கம் சார்பில் கோத்தகிரி அருகே கேர்கம்பை கிராமத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சங்க தலைவர் போஜன் தலைமை தாங்கினார். கேர்கம்பை ஊர்த்தலைவர் நஞ்சாகவுடர் அனைவரையும் வரவேற்றார்.தொடர்ந்து விவசாயிகளிடம் இருந்து ஆலோசனைகள் கேட்கப்பட்டது.

    கூட்டத்தில் ஊட்டியில் அணிக்கொரை கிராமத்தை சேர்ந்த கோபால கிருஷ்ணன் சிலரால் அடித்து கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூ.30 நிர்ணயிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களை சேர்ந்த விவசாயிகளை ஒன்று திரட்டி குன்னூர் தேயிலை வாரிய அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். 10 நாட்களுக்குள் உண்ணாவிரதம் நடத்தும் தேதியை தீர்மானிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் நீலகிரியில் உள்ள சிறு குறு விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

    • குன்னூரில் அண்மையில் பெய்த மழையாலும் பாா்வையாளா்கள் நடந்து சென்றதாலும் புல்தரை சேதமாகியுள்ளது.
    • இரண்டாவது சீசனுக்கு முன்பாக பூங்கா மீண்டும் புதுப்பொலிவு பெறுவதற்கு ஏதுவாக, புல்தரை பராமரிக்கப்பட்டு வருகிறது.

    குன்னூர்

    நீலகிரி மாவட்டம், குன்னூா் சிம்ஸ் பூங்காவிற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவர்கள் பூங்காவில் உள்ள மலர்கள் மற்றும் மூலிகை செடிகளை கண்டு ரசிப்பர்.

    பின்னர் பூங்காவில் உள்ள புல்தரை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் உள்ளது. இதில் சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறியும், குழந்தை களுடன் விளையாடி மகிழ்ந்தும் உற்சாகமாக பொழுதை கழிப்பா்.

    குன்னூரில் அண்மையில் பெய்த மழையாலும் பாா்வையாளா்கள் நடந்து சென்றதாலும் புல்தரை சேதமாகியுள்ளது. இதையடுத்து புல்தரையை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து பூங்காவில் உள்ள புல்தரை தற்காலிகமாக மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் நடைபெறும் இரண்டாவது சீசனுக்கு முன்பாக பூங்கா மீண்டும் புதுப்பொலிவு பெறுவதற்கு ஏதுவாக, புல்தரை பராமரிக்கப்பட்டு வருவதாக தோட்டக்கலைத் துறையினா் தெரிவித்து ள்ளனா்.

    • பொருட்களை வாங்க வந்த பொதுமக்களிடம் வனத்துறை அமைச்சர் நேரில் கேட்டறிந்தார்.
    • தரைகள் மிகவும் மோசமாக இருந்ததை பார்த்து ஊழியர்களை அமைச்சர் எச்சரிக்கை செய்தார்

     ஊட்டி:

    குன்னூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை மற்றும் சிவில்சப்ளை குடோனில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

    கூட்டுறவு பண்டகசாலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் அரிசி எவ்வாறு வழங்கப்படுகிறது. அரிசி நல்ல அரிசியாக வழங்கப்படுகிறதா, பொதுமக்களுக்கு எத்தனை கிலோ அரிசி வழங்கப்படுகிறது,

    எத்தனை கிலோ சர்க்கரை வழங்கப்படுகிறது, கோதுமை மற்றும் பருப்பு எத்தனை கிலோ வழங்கப்படுகிறது, எத்தனை கிலோ கடைகளில் இருப்பு உள்ளது, மண்எண்ணை எத்தனை லிட்டர் ஒரு குடும்ப அட்டைக்கு வழங்கப்படுகிறது, எந்த நாளில் மண்எண்ணை வழங்கப்படுகிறது என்று பொருட்களை வாங்க வந்த பொதுமக்களிடம் வனத்துறை அமைச்சர் நேரில் கேட்டறிந்தார்.

    கடைகளில் வைக்கப்பட்டிருந்த அரிசியை எடுத்துபார்த்து ஆய்வு செய்தும் பருப்பு மற்றும் கோதுமையையும் ஆய்வுமேற்கொண்டார். சில கடைகளில் தரைகள் மிகவும் மோசமாக இருந்ததை பார்த்து ஊழியர்களை அமைச்சர் எச்சரிக்கை செய்தார்

    தமிழக முதல்-அமைச்சர் சிறப்பாக ஆட்சி செய்து வரும் நிலையில ்பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, கோதுமை ஆகியவற்றை எலிகள் வீணாக்குவதை கூட்டுறவு கடை நடத்தும் கடைக்காரர்கள் அதனை தடுக்காமல் வீண் செய்து வருவதை கண்டித்து எச்சரிக்கை செய்தார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

    நீலகிரி மாவட்ட கலெக்டர்அம்ரித், குன்னூர் சப்-கலெக்டர் தீப விக்னேஷ்வரி, குன்னூர் நகரசபை தலைவர் சீலா கேத்தரின் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.  

    • இந்த பூங்காவில் ஏரி உள்ளது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஏரியில் படகு சவாரி நடைபெற்று வருகிறது.
    • சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இதன் காரணமாக பூங்கா ஏரியில் படகு சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது.

    குன்னூர்:

    தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கு

    ன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவ மழை தான் அதிக அளவு பெய்யும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழையும் தீவிரமாக பெய்து வருகிறது. படகு சவாரி நிறுத்தம் கடந்த 2 நாட்களாக காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குன்னூர் பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது. குன்னூரில் முக்கிய சுற்றுலா தளமாக தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான சிம்ஸ் பூங்கா உள்ளது.

    இந்த பூங்காவில் ஏரி உள்ளது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஏரியில் படகு சவாரி நடைபெற்று வருகிறது. ஏரியில் 14 படகுகள் இயக்கப்படுகின்றன. தற்போது தொடர் மழை பெய்து வருவதால் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இதன் காரணமாக பூங்கா ஏரியில் படகு சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது. சவாரி இல்லாததால் படகு இல்லத்தில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ×