என் மலர்
உள்ளூர் செய்திகள்

குன்னூர் நஞ்சப்பசத்திரத்தில் பொதுமக்களுக்கு மருத்துவமுகாம்
- விபத்தில் சிக்கிய ராணுவ அதிகாரிகளுக்கு நஞ்சப்பசத்திரம் பகுதி மக்கள் பல்வேறு உதவிகளை செய்தனா்.
- 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று மருத்துவ ஆலோசனைகள், மருந்துகளை பெற்று சென்றனா்.
ஊட்டி, :
நீலகிரி மாவட்டம், குன்னூா் நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பா் 8-ந் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் முப்படை தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 12 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனா்.
அந்த நேரத்தில் விபத்தில் சிக்கிய ராணுவ அதிகாரிகளுக்கு நஞ்சப்பசத்திரம் பகுதி மக்கள் பல்வேறு உதவிகளை செய்தனா்.
இதனைத் தொடா்ந்து நஞ்சப்பசத்திரம் கிராமத்தினை ஓராண்டுக்கு ராணுவத்தினா் தத்தெடுத்து, அவா்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர உறுதியளித்தனா்.
அதன்படி, தென்னக ராணுவ மையம் சாா்பில் ராணுவ மருத்துவா்கள் மூலம் மாதமாதம் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.அந்த வகையில் இந்த மாதத்திற்கான மருத்துவ முகாம் நேற்று நஞ்சப்பசத்திரம் பகுதியில் நடந்தது.முகாமில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று மருத்துவ ஆலோசனைகள், மருந்துகளை பெற்று சென்றனா்.






