search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூரில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்
    X

    குன்னூரில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்

    • திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் குன்னூரில்நடைபெற்றது
    • கூட்டத்தில் மாநில சுயாட்சி எனும் தலைப்பில் கழக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா உரையாற்றினார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் குன்னூரில்நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் தலைமை தாங்கினார். மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான் அனைவரையும் வரவேற்றார்.

    மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் உமாநாத், நௌபல், பாபு, நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாநில சுயாட்சி எனும் தலைப்பில் கழக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா, திராவிட இயக்க வரலாறு எனும் தலைப்பில் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி பேசினர்.

    இதில் குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜூ, ஒன்றிய செயலாளர்கள் நெல்லை கண்ணன், பிரேம்குமார், பீமன், லாரன்ஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, வெங்கடேஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் முபாரக், குன்னூர் நகராட்சி தலைவர் ஷீலா கேத்ரின், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், பேரூர் செயலாளர்கள் முத்து, ரமேஷ், சஞ்சீவ்குமார், காளிதாஸ் உட்பட குன்னூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து நகர,ஒன்றிய, பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இளைஞர் அணியினர் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் குன்னூர் நகர செயலாளர் ராமசாமி நன்றி கூறினார்.

    Next Story
    ×