search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குன்னூரில்"

    • குன்னூா் பகுதியில் இருந்து போலீஸ் நிலையம் வரை 700 மீட்டா் தாா் சாலை போடப்பட்டது.
    • பொதுமக்கள் வெறும் கைகளால் தார்ச்சாலையை பெயா்த்தெடுத்து ஆதங்கத்தை வெளிப்படுத்தினா்,

    ஊட்டி,

    குன்னூா் நகராட்சிக்கு உட்பட்ட மேல் குன்னூா் பகுதியில் இருந்து போலீஸ் நிலையம் வரை உள்ள 700 மீட்டா் தாா் சாலை லேம்ஸ்ராக், டால்பினோஸ் சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் சாலையாக உள்ளது. இந்த சாலை புனரமைப்புப் பணி நகராட்சி சாா்பில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் இந்த சாலை தரம் இல்லாமல், தாருடன் ஜல்லிக் கற்கள் பெயா்ந்து வரும் நிலையில் உள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டுநா்கள் கடந்த மூன்று நாட்களாக தங்களது எதிா்ப்பைத் தெரிவித்து வந்தனா். இருப்பினும் சாலை அமைக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வந்தது. தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் வெறும் கைகளால் சாலையை பெயா்த்தெடுத்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படு த்தினா்.தரமில்லாத சாலைப் பணி குறித்து குன்னூா் நகரமன்றத் தலைவா் ஷீலா கேத்தரின் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது அவா்கள் கூறியதாவது:-

    தரமற்ற முறையில் சாலை அமைப்பதாக புகாா் வந்ததை அடுத்து அப்பகுதி யில் ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது. அதில் குற்றச்சா ட்டில் உண்மை இருப்பது தெரிந்ததால் சாலைப் பணியை உடனடியாக நிறுத்தவும், ஏற்கெனவே போட்ட சாலையை அகற்றிவிட்டு மீண்டும் புதிய தாா் சாலையை தரத்துடன் அமைத்துக் கொடுக்கவும் ஒப்பந்ததாரருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றனா்.

    • 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

    ஊட்டி,

    குன்னூர் நகராட்சி 20-வது வார்டிற்கு உட்பட்டது மாடல் அவுஸ் குடியிருப்பு பகுதி. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    அப்பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மேலும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்பட்டது. இங்கு சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி மூலம் ரூ.22 லட்சம் செலவில் இரவோடு, இரவாக சாலை அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் சமீபத்தில் குன்னூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மாடல் அவுஸ் குடியிருப்பு பகுதியில் புதிதாக போடப்பட்ட சாலை மழைநீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் மீண்டும் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. வாகன ஓட்டிகளும் கீழே விழும் நிலையும் காணப்படுகிறது.

    இதற்கு காரணம் இந்த சாலை தரம் இல்லாமல் அமைக்கப்பட்டதாக நகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, தரமற்ற சாலையை அமைக்கும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் பெயர்ந்த சாலையை மீண்டும் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பூங்கா முழுவதிலும் நடவு செய்ய தோட்டக்கலைத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
    • சுற்றுலா பயணிகள் இதனை ஆர்வத்துடன் கண்டு களித்து செல்கின்றனர்.

    ஊட்டி :

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களில் குன்னூர் சிம்ஸ் பூங்கா முக்கியமான ஒன்று ஆகும். இந்த பூங்காவில் நூற்றுக்கணக்கான அரிய வகை மரங்கள் மற்றும் மலர் செடிகள் உள்ளன.

    சிறப்பாக பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு பல வண்ணங்களிலான ரோஜா மலர்களும் உள்ளன. இந்த நிலையில் சிம்ஸ் பூங்கா பசுமைக்குடிலில், பச்சை ரோஜா வளர்க்கப்பட்டு வருகிறது. பூங்கா நிர்வாகக்தின் புதிய முயற்சியாக வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட பச்சை ரோஜா கட்டிங் தொட்டியில் வளர்க்கப்பட்டு வருகிறது.

    தற்போது பசுமைக்கு டியில் வளர்க்கப்பட்டு வந்த செடியில் ஒரு பச்சை ரோஜா மலர்ந்துள்ளது. இதனை பாதுகாப்புடன் வளர்த்து பூங்கா முழுவதிலும் நடவு செய்ய தோட்டக்கலைத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    சிம்ஸ் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை ஆர்வத்துடன் கண்டு களித்து செல்கின்றனர். கடந்த காலங்களில் சிம்ஸ் பூங்காவில் பச்சை ரோஜா வளர்க்கப்பட்டது. நாளடைவில் அதன் வளர்ச்சி தடைபட்டது. தற்போது வெளியில் இருந்து பச்சை ரோஜா செடி கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வளர்க்கப்படுகிறது.

    இந்த புதிய முயற்சி வெற்றி பெற்றுள்ளது‌. எதிர்காலத்தில் சீதோஷண நிலைக்கு ஏற்ப பச்சை ரோஜா நாற்றுக்களை பூங்கா முழவதும் நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்தனர்.

    சுற்றுலா பயணிகள் இதனை ஆர்வத்துடன் கண்டு களித்து செல்கின்றனர்.  

    ×