search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore Car Blast"

    • புழல் சிறையில் இருந்து என்.ஐ.ஏ. கோர்ட்டுக்கு அடிக்கடி கொண்டு செல்ல இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • கடந்த வாரம் கைதான தவ்பீக் உள்பட மேலும் 3 பேர் ஏற்கனவே புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் மாதம் 23-ந்தேதி கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் (வயது 28) என்ற வாலிபர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக ஜமேஷா முபின் கூட்டாளிகள் முகமது அசாருதீன், அப்சர் கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

    இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருவதால் இவர்கள் அடிக்கடி சென்னை அழைத்து வரப்பட்டு என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர். கோவையில் இவர்கள் தொடர்பான அனைத்து விசாரணைகளும் தற்போது முடிந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஜமேஷா முபின் கூட்டாளிகள் அசாருதீன், அப்சர்கான் உள்பட 6 பேரையும் நேற்று காலை 11 மணிக்கு வேனில் ஏற்றி சென்னை புழல் சிறைக்கு கொண்டு வந்தனர். இதற்கான நடவடிக்கையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேற்கொண்டனர். இனி புழல் சிறையில் இருந்து என்.ஐ.ஏ. கோர்ட்டுக்கு அடிக்கடி கொண்டு செல்ல இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த வழக்கில் கடந்த வாரம் கைதான தவ்பீக் உள்பட மேலும் 3 பேர் ஏற்கனவே புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜமேஷா முபின் கூட்டாளிகள் மொத்தம் 9 பேர் புழல் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகம் முழுவதும் கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 43 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது.
    • கைதாகி உள்ள 3 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் விவரங்களை சேகரிக்கும் பணியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

    இதில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவன் கோவையில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு இந்த சம்பவத்தை அரங்கேற்றியதும், அதில் அவனே சிக்கி இறந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இது தொடர்பாக உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக முகமது தல்கா, முகமது அசாரூதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு, கோவை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆட்சேபகரமான மற்றும் மத ரீதியான அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பாடுகள் கொண்ட நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணையும் மேற்கொண்டனர். இதுவரை 50க்கும் அதிகமானவர்களிடம் விசாரணை நடைபெற்றது.

    மேலும் தமிழகம் முழுவதும் கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 43 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகளால் சோதனையும் நடத்தப்பட்டது.

    கார் குண்டு வெடிப்பில் இறந்த முபின் மற்றும் கைதானவர்களின் நண்பர்களையும் கண்காணித்து வந்தனர். குறிப்பாக ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்ததாக கோவையில் 3 பேரை போலீசார் தங்களது கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து தீவிரமாக கண்காணித்தனர்.

    இந்த நிலையில், கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக கோவை போத்தனூரை சேர்ந்த முகமது தவுபிக்(25), பெரோஸ்கான்(28), நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் உமர் பாரூக்(39) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    இவர்கள் 3 பேரும் ஜமேசா முபினுக்கு பல்வேறு வகைகளில் உதவியாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதில் ஆட்டோ டிரைவான உமர்பாரூக் கடந்த 3 மாதத்திற்கு முன்பு உக்கடத்திற்கு வந்து வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் இறந்த ஜமேஷா முபின் மற்றும் தற்போது கைதாகி உள்ள பெரோஸ்கான், உமர் பாரூக் ஆகியோர் குன்னூரில் உள்ள உமர் பாரூக்கின் வீட்டில் சந்தித்துள்ளனர். அப்போது வெடிகுண்டு சதி திட்டம் தீட்டுவதற்கு ரகசிய கூட்டமும் நடத்தி உள்ளனர்.

    அப்போது அவர்கள் முக்கிய இடங்களில் குண்டு வெடிக்க வைக்க சதி திட்டம் தீட்டியிருக்க வாய்ப்பிருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

    இதனால் அவர்கள் ரகசிய கூட்டத்தில் என்னென்ன பேசினார்கள். எங்கெல்லாம் குண்டு வைக்க திட்டமிட்டார்கள், கோவை கார் குண்டுவெடிப்பு குறித்து முபின் இவர்களிடம் தெரிவித்தாரா? என்பது குறித்தும் தீவிரமாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

    இதேபோல் கைதாகி உள்ள முகமது தவுபீக் சில தீவிரவாத செயல்கள் தொடர்பான புத்தகங்களை படித்துள்ளார். அவரது வீட்டில் வெடி பொருட்கள், வெடிக்க வைக்கும் தொழில் நுட்பம் குறித்தும் சில குறிப்பு கையேடுகளும் இருந்துள்ளது. இதனை கைப்பற்றியுள்ளனர்.

    தொடர்ந்து 3 பேருக்கும் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. இவர்கள் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

    மேலும் கைதாகி உள்ள 3 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் விவரங்களையும் சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு உயிரிழந்த ஜமேஷா முபின் வீடு, சம்பவம் நடந்த இடம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
    • வழக்கில் கைதான 6 பேரின் வீடுகள் மற்றும் சந்தேக நபர்களின் வீடுகளிலும் ஆய்வு செய்யப்பட்டது.

    கோவை:

    கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் காருக்குள் இருந்த அதேப்பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார்.

    இதுதொடர்பாக முதலில் உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் ஜமேஷா முபின் வீட்டில் சோதனை நடத்தி அங்கு இருந்த 75 கிலோ வெடிமருந்துகள் மற்றும் பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுதொடர்பாக ஜமேஷா முபினின் உறவினர் அப்சர்கான் (28), மற்றும் முகமது அசாருதீன் (23), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (26), முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது உபா சட்டம் (சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம்) பாய்ந்தது.

    இதற்கிடையே இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றம் செய்யப்பட்டது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள்.

    அவர்கள், இந்த வழக்கில் ஏற்கனவே கைதான 6 பேரையும் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு உயிரிழந்த ஜமேஷா முபின் வீடு, சம்பவம் நடந்த இடம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    இந்த வழக்கில் கைதான 6 பேரின் வீடுகள் மற்றும் சந்தேக நபர்களின் வீடுகளிலும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் செல்போன், மடிக்கணினி உள்பட சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் யார்? இந்த வழக்கில் ஏற்கனவே கைதான 6 பேரின் நண்பர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், சந்தேக நபர்கள் உள்பட பலரின் செல்போன், இணையதளம் ஆகியவையும் கண்காணிக்கப்பட்டது.

    இந்தநிலையில், கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவை போத்தனூரை சேர்ந்த முகமது தவுபீக் (25), பெரோஸ்கான் (28), நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த ஆட்டோ டிரைவரான உமர் பாரூக் (39) ஆகிய 3 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முகமது தவுபீக், பெரோஸ்கான், உமர் பாரூக் ஆகிய 3 பேரும் ஜமேஷா முபினுக்கு உதவியாக இருந்தது தெரியவந்து உள்ளது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த கைது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கார் வெடிப்பு சம்பவத்துக்கு முன்பு ஜமேஷா முபின் மற்றும் தற்போது கைது செய்யப்பட்டு உள்ள பெரோஸ்கான், உமர் பாரூக் ஆகியோர் குன்னூரில் உள்ள உமர் பாரூக் வீட்டில் சந்தித்து சதி திட்டம் தீட்ட கூட்டம் நடத்தி உள்ளனர். அத்துடன் இந்த 2 பேரும் ஜமேஷா முபின் செய்யும் பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு அளித்து உள்ளனர்.

    அதுபோன்று முகமது தவ்பீக் மதவாதம் தொடர்பாக பல்வேறு புத்தகங்களை வைத்து இருந்ததுடன், வெடிபொருட்கள் தயாரிப்பது குறித்த குறிப்புகளையும் வைத்து இருந்தார். தற்போது அவைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கிஷோர் கே.சாமி மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
    • கோவை வழக்கில் வருகிற 12-ந் தேதி வரை கிஷோர் கே.சாமிக்கு நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.

    கோவை:

    சென்னையை சேர்ந்த வலதுசாரி ஆதரவாளர் கிஷோர் கே.சாமி.

    இவர் கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக தெரிகிறது.

    இது தொடர்பாக கிஷோர் கே.சாமி மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.

    இந்தநிலையில் கடந்த வாரம் சென்னையில் கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டார்.

    இதனை அறிந்த கோவை போலீசார் நீதிமன்ற உத்தரவு பெற்று அவரை கோவை 4-வது குற்றவியில் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணபாபு முன்பாக இன்று ஆஜர்படுத்தினர்.

    இதனையடுத்து கோவை வழக்கில் வருகிற 12-ந் தேதி வரை கிஷோர் கே.சாமிக்கு நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.

    மேலும் மாநகர சைபர் கிரைம் போலீசார் 2 மணி நேரம் மட்டும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். இதனைதொடர்ந்து கிஷோர் கே சாமி தரப்பில் ஜாமீன் கேட்டு 4-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன்0 மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.

    • கோவை பெரியகடைவீதி இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் தலைமையிலான போலீசார் முகமது ஹசன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
    • முபின் நட்பு வட்டாரத்தில் இருந்த மேலும் 2 பேரை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

    கோவை:

    கோவை கோட்டைமேட்டில் கடந்த மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான்.

    இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், முபின் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வெடிகுண்டை வெடிக்க வைத்து நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்.

    மேலும் கோவையில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக முகமது தல்கா, முகமது அசாரூதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு தற்போது என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவை மாநகர போலீசார் கடந்த சில தினங்களாக ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்தவர்களின் விபரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது தெற்கு உக்கடம் பொன்விழா நகரை சேர்ந்த துணிக்கடை ஊழியரான முகமதுஹசன்(வயது29) உள்பட 3 பேர் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து கோவை பெரியகடைவீதி இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் தலைமையிலான போலீசார் முகமது ஹசன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையானது சில மணி நேரங்கள் நீடித்தது. சோதனையின்போது, முகமது ஹசனிடமும் போலீசார் விசாரித்தனர்.

    இவருக்கும், ஜமேஷா முபின் வெடிமருந்து பொருட்கள் வாங்கிய விவகாரத்தில் தொடர்பு இருக்கிறதா? என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

    முபின் நட்பு வட்டாரத்தில் இருந்த மேலும் 2 பேரை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். அவர்கள் செல்லும் இடங்கள், அவர்களின் நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் இவர்கள் 2 பேர் முகவரியை கண்டுபிடித்து, அவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்துவதற்கு போலீசார் முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சென்னையில் இன்று மீண்டும் 4 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
    • வேப்பேரி ரித்தர்டன் சாலையில் புகாரி என்பவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

    சென்னை:

    கோவையில் கடந்த மாதம் 23-ந்தேதி கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் வாலிபர் முபின் உயிர் இழந்தார்.

    காரில் சிலிண்டர்கள் மற்றும் வெடி பொருட்களை எடுத்துச் சென்று மிகப்பெரிய தற்கொலை படை தாக்குதலுக்கு முபின் திட்டமிட்டது என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்தது.

    கோவை கார் வெடிப்பு சம்பவம் குண்டு வெடிப்பு சம்பவம் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.

    கார் வெடிப்பு சம்பவத்தின் முழு பின்னணி தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகம் முழுவதும் தொடர் சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் சென்னையிலும் மாநகர போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கடந்த 15-ந்தேதி 5 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் வெளிநாட்டு பணம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதனை ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சென்னையில் இன்று மீண்டும் 4 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். வேப்பேரி ரித்தர்டன் சாலையில் புகாரி என்பவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. தலைமை செயலக காலனி போலீஸ் எல்லைக்குட்பட்ட ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் பி.பிளாக்கில் உள்ள சாகுல் அமீது வீடு, முத்தியால் பேட்டை பிடாரியார் கோவில் தெருவில் உள்ள உமர் பாரூக் வீடு மற்றும் ஏழு கிணறு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு இடம் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது.

    ஓட்டேரியில் அயனாவரம் உதவி கமிஷனர் ஜவகர் தலைமையிலும், முத்தியால்பேட்டை பகுதியில் உதவி கமிஷனர் லட்சுமணன் தலைமையிலும், சோதனை நடத்தினர்.

    கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனை, விசாரணை ஆகியவற்றில் கிடைத்த தகவலின் பேரிலேயே சென்னையில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையிலேயே கடந்த 15-ந் தேதி சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து 4 நாட்களில் இன்று மீண்டும் சோதனை நடைபெற்று உள்ளது.

    திருச்சி அருகே உள்ள இனாம்குளத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் சாகுல் அமீது, சர்புதீன். இவர்கள் இருவருக்கும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்பு முகமை அறிவுறுத்தலின் பேரில் இன்று அவர்களின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது.

    துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிதாசன் தலைமையில் ராம்ஜிநகர் போலீசார் 50 பேர் இன்று காலை அவர்களின் வீடுகளில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் சாகுல் அமீதுவை ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை அழைத்து சென்று விசாரணை நடத்தியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த சோதனையில் சம்பந்தப்பட்ட இருவரின் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர். மேலும் அவர்களின் வீடுகளில் ஒருசில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

    கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிலையில் அவர்களின் பின்னணி மற்றும் சர்வதேச தொடர்புகளை கண்டறிவதற்காகவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் அளிக்கும் தகவலின் பேரில் தொடர் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த வாரம் தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 43 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
    • ஏற்கனவே கைதான 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    கோவை:

    கோவை கோட்டை மேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த மாதம் 23-ந் தேதி கார் வெடித்து முபின் என்பவர் பலியானார்.

    கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி கோவையில் பயங்கர நாசவேலைக்கு சதி செய்த அவர் அதே சதியில் சிக்கி பலியானார்.

    இந்த சம்பவம் தொடர்பாக முபின் கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பலியான முபின் மற்றும் கைதான 6 பேருக்கு யாராவது பண உதவி, பொருள் உதவி செய்து இருக்கலாம் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

    இதற்காக முபின் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் நெருக்கத்தில் இருந்தவர்களை தீவிரமாக கண்காணித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் ஐ.எஸ். ஆதரவு எண்ணம் கொண்டவர்களையும் அவர்கள் தீவிரமாக கண்காணிக்கிறார்கள்.

    இதுதொடர்பாக கடந்த வாரம் தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 43 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். நேற்றுமுன்தினம் சென்னையில் 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் செல்போன், லேப்-டாப் உள்ளிட்ட ஐ.எஸ். தொடர்புடைய சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

    அதன் அடிப்படையில் தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன் ஒரு கட்டமாக கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் செயல்படும் என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு கோவையைச் சேர்ந்த 5 பேர் வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பல மணி நேரம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    அவர்களுக்கும், கார் வெடிப்பு சம்பவத்துக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. விசாரணை முடிவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வர்.

    இதற்கிடையே ஏற்கனவே கைதான 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    • ஐ.எஸ். ஆதரவாளர் என சந்தேகிக்கப்படும் முகமது சப்ரீசின் வீட்டில் இருந்து மேலும் பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவைகளை ஆய்வு செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
    • ஏழுகிணறு, மண்ணடி, முத்தியால்பேட்டை, வடக்கு கடற்கரை உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் இன்று 5 இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் பல்வேறு டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொடுங்கையூர் வள்ளுவர் தெருவில் முகமது சப்ரீஸ் என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 8 செல்போன்கள் சிக்கியுள்ளன.

    முகமது சுப்ரீஸ் மற்றும் அவரது குடும்பத்தினரின் இந்த செல்போன்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    லேப்டாப் ஒன்றையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். ஐ.எஸ். ஆதரவாளர் என சந்தேகிக்கப்படும் முகமது சப்ரீசின் வீட்டில் இருந்து மேலும் பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவைகளை ஆய்வு செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதேபோன்று ஏழுகிணறு, மண்ணடி, முத்தியால்பேட்டை, வடக்கு கடற்கரை உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர்.

    இவைகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இன்று சோதனைக்குள்ளான 5 பேரின் வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவர்கள் யார்-யாருடன் தொடர்பில் இருந்தனர் என்பது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ராயபுரம் கல்மண்டபம் பகுதியில் நடந்த வாகன சோதனையில் தாகூர் மீரான், ஜாகிர் உசேன், நவாஸ் ஆகிய 3 பேர் பிடிபட்டனர். இவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்கள் அடங்கிய வாசகங்கள் இருந்தன. இவர்களில் தாகூர் மீரானை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

    இதேபோன்று 5 பேரின் வீடுகளிலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இவர்களும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது உறுதியானால் கைது நடவடிக்கை பாயும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    • கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் யார்-யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என கண்டறிந்து அனைவரையும் கைது செய்ய அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன்.
    • தமிழகம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து சந்தேகத்துக்கிடமான நபர்களின் வீடுகளில் தொடர்ச்சியாக சோதனை நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    கோவையில் கடந்த மாதம் 23-ந்தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    கார் வெடிப்பில் சிக்கி உயிரிழந்த முபினின் கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இச்சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை கார் வெடிப்பு சம்பவம் குண்டு வெடிப்பு சம்பவம் என அறிவித்துள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் முபின், மிகப்பெரிய தற்கொலை படை தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்ததாக திடுக்கிடும் தகவலையும் வெளியிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து கார் வெடிப்பு சம்பவத்தின் பின்னணி குறித்த முழுமையான விசாரணையில் தீவிரம் காட்டி வருகிறார்கள். தமிழக காவல்துறையினருடன் இணைந்து விசாரணை நடந்து வருகிறது.

    கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் யார்-யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என கண்டறிந்து அனைவரையும் கைது செய்ய அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன்.

    இது தொடர்பாக தமிழகம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து சந்தேகத்துக்கிடமான நபர்களின் வீடுகளில் தொடர்ச்சியாக சோதனை நடைபெற்று வருகிறது.

    கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த முபின் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து முபினை போன்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்களின் வீடுகளை கண்டுபிடித்து போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    அந்த வகையில் சென்னையில் இன்று காலையில் 5 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    சென்னை ஏழுகிணறு, சடையப்ப மேஸ்திரி தெரு, மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெரு, முத்தியால் பேட்டை சைவ முத்தையா தெரு மற்றும் வடக்கு கடற்கரை சாலை பகுதியில் ஒரு இடம் என பூக்கடை துணை கமிஷனர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் 4 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

    துணை கமிஷனர் ஆல்பர்ட்வின் தலைமையிலான போலீஸ் காலை 6 மணிக்கு இந்த சோதனையை தொடங்கினர். காலை 8 மணி வரையில் சுமார் 2 மணி நேரம் சோதனை நடைபெற்றது.

    இதே போன்று புளியந்தோப்பு துணை கமிஷனரின் எல்லைக்குட்பட்ட பகுதியான கொடுங்கையூர் வள்ளுவர் தெருவிலும் சோதனை நடத்தப்பட்டது. துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

    கோவை கார்வெடிப்பு சம்பவம் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் 43 இடங்களில் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் வட சென்னை பகுதியிலும் ஐ.எஸ். ஆதரவாளர்கள் பலர் இருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையிலேயே இன்றைய சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    கொடுங்கையூர் வள்ளுவர் தெருவில் வசித்து வந்த முகமது சப்ரீஸ் என்பவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கி உள்ளன. இதேபோன்று மற்ற இடங்களில் நடத்தப்பட்ட சோதனையிலும் போலீசுக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக கோவை கார் வெடிப்பு தொடர்பாக பல்வேறு முக்கிய தகவல்கள் இன்றைய சோதனையின் போது போலீசுக்கு கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னையில் ஐ.எஸ். ஆதரவாளர்களை குறி வைத்து இன்று நடத்தப்பட்ட சோதனையில் மண்ணடி, முத்தியால்பேட்டை, ஏழுகிணறு, கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் பரபரப்பு நிலவியது. சோதனை நடைபெற்ற வீடுகளின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சோதனைக்குள்ளாகி இருக்கும் 5 பேரையும் தொடர்ச்சியாக கண்காணிக்க முடிவு செய்துள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் பின்னணி தொடர்பாக தமிழகம் முழுவதும் சந்தேக நபர்களின் வீடுகளில் நடத்தப்பட்டு வரும் இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

    கோவை சம்பவம் போன்று வேறு எங்காவது நடந்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தீவிரவாத செயல்களுக்கு துணை புரிவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும் எனவும் போலீஸ் தரப்பில் எச்சரிக்கப்படுகிறது.

    • 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கும் போது, கார் வெடிப்பு வழக்கில் யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என்ற முழு தகவலும் தெரியவரும்.
    • இன்னும் சிலர் சிக்குவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

    கோவை:

    கோவையில் கடந்த 23-ந்தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் முபின் என்ற வாலிபர் உயிரிழந்தார்.

    காரில் சிலிண்டர், ஆணி உள்ளிட்ட பொருட்களை நிரப்பி தீபாவளியை முன்னிட்டு கோவையில் நாச வேலையை அரங்கேற்ற முபின் சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது.

    தற்போது இந்த வழக்கினை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு முபின் மற்றும் கைதானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்களின் வீடுகள் என தமிழகம் முழுவதும் 43 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையின் போது பலரது வீடுகளில் இருந்து செல்போன், டிஜிட்டல் கருவிகள் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்களும் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது.

    தற்போது கைப்பற்றிய ஆவணங்களில் உள்ள விவரங்களின் முழுமையான தகவல்களை சேகரிக்கும் பணியை என்.ஐ.ஏ. அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    முழுமையான தகவல்கள் கிடைத்த பின்னர் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மேலும் சிலர் இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்காக இந்த வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகமது அசாருதீன், முகமது தல்கா, அப்சர்கான், பெரோஸ் இஸ்மாயில், முகமது ரியாஸ், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    காவலில் எடுத்து விசாரிக்கும் போது, அவர்களிடம் இந்த சம்பவத்தில் இவர்கள் மட்டும் தான் ஈடுபட்டார்களா ? வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    மேலும் அவர்களின் வீடுகளில் சோதனை நடத்துவதற்கும் அனுமதி கேட்க உள்ளனர்.

    6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கும் போது, கார் வெடிப்பு வழக்கில் யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என்ற முழு தகவலும் தெரியவரும்.

    அப்போது இந்த வழக்கில் இன்னும் சிலர் சிக்குவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

    • 6 பேரும் காவலில் எடுத்து விசாரிக்கப்படும் பட்சத்தில் அவர்களது வீடுகள் மற்றும் சதித்திட்டம் தீட்டிய இடங்களுக்கு அவர்களை நேரில் அழைத்துச் சென்று விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டம் வகுத்துள்ளனர்.
    • கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கேட்கவும் முடிவு செய்துள்ளனர்.

    கோவை:

    கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் முபின் என்ற வாலிபர் பலியானார். முபினுடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தற்போது இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். முதல்கட்டமாக அவர்கள் கார் வெடித்த கோட்டைமேடு ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து முபின் மற்றும் கைதானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். கோவையில் 33 இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 43 இடங்களில் இந்த சோதனை நடந்தது. இதில் சில முக்கிய ஆவணங்கள், செல்போன்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

    அடுத்தக்கட்டமாக கைதான 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் ஒரு கட்டமாக 6 பேரையும் சென்னை அழைத்துச் சென்று பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் மீண்டும் அவர்களை கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    இதையடுத்து காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றால் அதற்கு போதுமான காரணங்கள், ஆதாரங்களை என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். அப்போது தான் காவல் அனுமதி கிடைக்கும். அதனால் அதற்கான ஏற்பாடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    அனேகமாக அவர்கள் நாளை கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய அதிகம் வாய்ப்புள்ளது. அல்லது வியாழக்கிழமைக்குள் காவலில் எடுத்து விசாரித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    6 பேரும் காவலில் எடுத்து விசாரிக்கப்படும் பட்சத்தில் அவர்களது வீடுகள் மற்றும் சதித்திட்டம் தீட்டிய இடங்களுக்கு அவர்களை நேரில் அழைத்துச் சென்று விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டம் வகுத்துள்ளனர். இதற்காக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கேட்கவும் முடிவு செய்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே ஜமேஷா முபின் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார்.
    • சம்பவத்தன்று காரில் பயங்கர வெடிபொருட்களை நிரப்பி கொண்டு மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிக்கு சென்று வெடிக்க வைக்க முபின் திட்டமிட்டார்.

    கோவை:

    கோவையில் கடந்த மாதம் 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முபின் தனது கூட்டாளிகளுடன் கோவையில் நாசவேலைக்கு திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக முபினின் கூட்டாளிகள் 6 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    தொடர்ந்து இதுகுறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். முபின் ஐ.எஸ். இயக்கத்தின் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டு அதன் ஆதரவாளராக இருந்து வந்தது அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் உறுதியானது.

    இந்த சம்பவத்தை இவர்கள் அரங்கேற்றுவதற்கு பின்னால் மிகப்பெரிய கும்பலே செயல்பட்டு வந்ததும், முபின் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலக்காட்டில் சதி திட்டம் தீட்டியதும், அதற்காக ஆயுத பயிற்சி மேற்கொண்ட தகவலும் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

    இதையடுத்து முபின் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் பட்டியலை தயாரித்தனர்.

    இந்த பட்டியலின் அடிப்படையில் நேற்று கோவை, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 43 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கோவையில் நடந்தது கார் குண்டு வெடிப்பு என்றும், முபின் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பயங்கர தகவலும் என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியதாவது:-

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முபின் ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர். முபின் ஒரு மதத்தை மட்டும் குறிவைத்து, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவேன் என உறுதிமொழியும் எடுத்துள்ளார்.

    அதன்படி முதலில் கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே ஜமேஷா முபின் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்கு அவரது கூட்டாளிகள் 6 பேர் உடந்தையாக இருந்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து தான் ஜமேஷா முபின் சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது.

    கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்துவதற்காக ஆன்லைனில் வெடிபொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை வாங்கியுள்ளார்.

    பின்னர் சம்பவத்தன்று காரில் பயங்கர வெடிபொருட்களை நிரப்பி கொண்டு மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிக்கு சென்று வெடிக்க வைக்க திட்டமிட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக வெடிகுண்டு வெடித்து, அதில் அவரே சிக்கி இறந்துள்ளார்.

    இந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×