search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை கார் குண்டு வெடிப்பு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவை சம்பவம் தொடர்பாக கடந்த சனிக்கிழமை தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • 8 மாவட்டங்களில் நடந்த சோதனையில் 4 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

    சென்னை:

    கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

    இந்த குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் இதில் பலியானார்.

    இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கோவை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் கோவை கார் வெடிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

    30 செல்போன்கள், 25க்கும் மேற்பட்ட ஆவணங்கள், 6 ஹார்ட் டிஸ்க்குகள், 20க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆய்வில் கிடைக்கும் தகவலை வைத்து அடுத்தகட்ட சோதனையும், விசாரணையும் நடைபெறும் என்று தேசிய புலனாய்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.

    கோவை சம்பவம் தொடர்பாக கடந்த சனிக்கிழமை தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    8 மாவட்டங்களில் நடந்த சோதனையில் 4 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இளைஞர்களை பயங்கரவாதத்திற்கு கொண்டு செல்ல பல்வேறு மையங்களை நடத்தி வந்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.
    • வழக்கை விசாரித்த நீதிபதி 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

    இதில் குண்டு வெடிப்பு சம்பவத்தை அரங்கேற்ற முயன்ற உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான்.

    இந்த வழக்கினை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்களில் சிலரை போலீசார் காவலில் எடுத்து கோவை அழைத்து வந்து அவர்களது வீடுகளுக்கு நேரில் அழைத்து சென்றும் விசாரணை நடத்தியுள்ளனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த முகமது இத்ரிஸ்(23), போத்தனூர் பொன்விழா நகரை சேர்ந்த தாஹா நசீர்(27) ஆகிய 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இதற்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

    இந்த மனு மீதான விசாரணை நேற்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் முகமது இத்ரிஸ், தாஹா நசீர் ஆகிய 2 பேரையும் பலத்த பாதுகாப்புடன் நேற்று மாலை சென்னையில் இருந்து கோவைக்கு அழைத்து வந்தனர்.

    அவர்கள் தற்போது கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் உக்கடம் ஜி.எம். நகரில் உள்ள முகமது இத்ரிஸ் வீடு மற்றும் போத்தனூர் பொன்விழா நகரில் உள்ள தாஹா நசீரின் வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு வைத்து அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    மேலும் அவர்கள் ஒன்றாக கூடி பேசிய இடங்கள், குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு திட்டம் தீட்டிய இடங்கள், யார், யாரெல்லாம் அதில் இருந்தனர் என்பது குறித்தும் அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    • கைது செய்யப்பட்ட தாஹா நசீர் கோவையில் உள்ள கார் விற்பனை மற்றும் சர்வீஸ் நிறுவனத்தில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.
    • கைதான தாஹா நசீரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை பூந்தமல்லி என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

    இதில் குண்டு வெடிப்பை நிகழ்த்திய ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஜமேஷா முபின் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவையில் பயங்கர நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது.

    இந்த வழக்கில் தொடர்புடையதாக தற்போது வரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் போத்தனூர் திருமலை நகர் மதீனா அவென்யூவை சேர்ந்த தாஹா நசீரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

    கைது செய்யப்பட்ட தாஹா நசீர் கோவையில் உள்ள கார் விற்பனை மற்றும் சர்வீஸ் நிறுவனத்தில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் கோவை சங்கமேஸ்வரர் கோவில் முன்பு நடந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு காரணமான ஜமேஷா முபின் மற்றும் முகமது தவுபிக்குடன் சேர்ந்து சதி செய்ததாக என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    கார் குண்டு தாக்குதல் நடப்பதற்கு முன்பு ஜமேசா முபினின் வீட்டிற்கு தஹா நசீர், முகமது தவுபிக் ஆகியோர் சென்றதாகவும், அப்போது அவர்கள், பயங்கரவாத செயலை செய்ய சதி செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

    தாஹா நசீரின் டிஜிட்டல் சாதனங்களை ஆய்வு செய்தபோது, அவர் ஐஎஸ் அமைப்பு ஊக்கப்படுத்திய இலக்கியங்களை வைத்திருந்தார் என்பதும், கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பின்னர், குறிப்பிட்ட அடிப்படையிலான செல்போன் செயலியை பயன்படுத்தி சட்ட அமலாக்க முகமைகளின் கவனத்தை தவிர்க்க தடயங்களை மறைக்க முயன்றதும் தெரியவந்துள்ளது.

    கைதான தாஹா நசீரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை பூந்தமல்லி என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர். தொடர்ந்து அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் உமர் பரூக், பெரோஸ் கான், முகமது தவ்பிக் ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
    • இறுதியாக கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், முகமது இத்ரிஸ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    கோவை:

    கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உக்கடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஜமேஷா முபின் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பயங்கர சதி திட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் இந்த வழக்கில் உமர் பரூக், பெரோஸ் கான், முகமது தவ்பிக் ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

    இதற்கிடையே கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய கோவை உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த முகமது இத்ரிஸ், உக்கடம் அன்பு நகரை சேர்ந்த முகமது அசாருதீன் என்ற அசார் (36) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் பையூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முகமது அசாருதீனை என்.ஐ.ஏ. அதிாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் இறுதியாக கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், முகமது இத்ரிஸ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனுவும் தாக்கல் செய்தனர். கோர்ட்டு 2 பேரையும் விசாரிக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதி வழங்கியது.

    இதனையடுத்து முகமது இத்ரிஸ், முகமது அசாரூதீனிடம் விசாரணை நடத்தி வந்தனர். இவர்கள் 2 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை கோவைக்கு அழைத்து வந்தனர்.

    முகமது இத்ரிசை ஜி.எம். நகரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதே போல முகமது அசாருதீனை அன்பு நகரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடம், கார் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட நபர்களுடன் சந்தித்த இடங்களுக்கும் 2 பேரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் பல்வேறு கேள்விகளையும் கேட்டு விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அந்த பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • தமிழகம் முழுவதும் கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக சுமார் 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
    • கடையநல்லூருக்கு இன்று அதிகாலை 5 மணிக்கு 2 கார்களில் 6 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழு வந்தது.

    கடையநல்லூர்:

    கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி நடந்த கார் வெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை பிரிவு (என்.ஐ.ஏ.) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக சுமார் 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    அதன்படி தென்காசி மாவட்டம் கடையநல்லூருக்கு இன்று அதிகாலை 5 மணிக்கு 2 கார்களில் 6 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழு வந்தது.

    அங்கு ரசாலிபுரம் தெருவை சேர்ந்த முகமது இத்ரிஸ்(வயது 25) என்பவரது வீட்டுக்குள் என்.ஐ.ஏ. குழு நுழைந்தது. என்ஜினீயரான இவர் சென்னையில் ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இன்று அதிகாலை 5.30 மணி முதல் அவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையின்போது, முகமது இத்ரிசின் செல்போனுக்கு அடிக்கடி தடை செய்யப்பட்ட இயக்கத்தில் இருந்து குறுந்தகவல்கள் வந்துள்ளதாகவும், இதன் அடிப்படையில் இன்று என்.ஐ.ஏ. குழுவினர் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    • கோவை கார் குண்டு வெடிப்பில் பலியான முபின் மற்றும் 2 கூட்டாளிகள் கேரள ஜெயிலில் இருந்து அசாருதீனை அடிக்கடி சந்தித்து பேசி உள்ளனர்.
    • கார் குண்டு வெடிப்பு வழக்கில் முகமது அசாருதீன் 13-வது நபராக கைது செய்யப்பட்டு உள்ளார்.

    கோவை:

    கோவை கோட்டை மேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடித்தது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார்.

    ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளராக இருந்த இவர் காரில் வெடிபொருட்களை நிரப்பி வெடிக்கச் செய்து கோவையில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு இருந்தார். ஆனால் அந்த திட்டம் நிறைவேறாமல் தான் தீட்டிய சதியில் தானே சிக்கி பலியானது விசாரணையில் தெரியவந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான முபினுடன் நெருங்கி பழகியவர்கள், கார் வாங்கி கொடுத்தவர்கள், வெடிபொருட்கள் வாங்கி கொடுத்தவர்கள், சதி திட்டம் தீட்டியவர்கள் என இதுவரை 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    அதன்பிறகும் தொடர்ந்து சோதனை, விசாரணை என வழக்கு நீண்டுகொண்டே செல்கிறது. இந்தநிலையில் கோவை உக்கடம் அன்புநகரைச் சேர்ந்த முகமது அசாருதீன் (36) என்பவருக்கு கார் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர் சில காலம் டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    அதன்பிறகு ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளராக செயல்பட்டு வந்த இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு கேரள ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். ஜெயிலில் இருந்தாலும் இவருக்கு கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கிலும் தொடர்பு இருந்ததை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன்பேரிலேயே நேற்று முகமது அசாருதீன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

    கைதான முகமது அசாருதீன் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2019-ம் ஆண்டு இலங்கையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்த குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்டவர் ஜஹ்ரான் பின் காசிம் என்பவர். ஐ.எஸ். சித்தாந்த எண்ணம் கொண்ட இவரால் தற்போது கைதாகி உள்ள முகமது அசாருதீன் ஈர்க்கப்பட்டு உள்ளார். அதன்பிறகு முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் அவருடன் அசாருதீன் தொடர்பில் இருந்துள்ளார்.

    இலங்கை குண்டுவெடிப்புக்கு பின் ஐ.எஸ். ஆதரவாளர்களை பிடிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் தென்னிந்தியா முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். கோவையில் நடத்தப்பட்ட சோதனையில் முகமது அசாருதீன் சிக்கினார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள விய்யூரில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    கோவை கார் குண்டு வெடிப்பில் பலியான முபின் மற்றும் 2 கூட்டாளிகள் கேரள ஜெயிலில் இருந்து அசாருதீனை அடிக்கடி சந்தித்து பேசி உள்ளனர். அப்போது கார் குண்டுவெடிப்பு தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

    மேலும் சத்தியமங்கலம் காட்டில் முபினும், அவரது கூட்டாளிகளும் ரகசிய கூட்டம் நடத்தி கார் குண்டுவெடிப்பு பற்றி ஆலோசனை நடத்தி உள்ளனர். அப்போது கேரள சிறையை தகர்த்து முகமது அசாருதீனை மீட்டுக் கொண்டு வந்து விடலாம் எனவும் அவர்கள் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

    கார் குண்டு வெடிப்பு வழக்கில் முகமது அசாருதீன் 13-வது நபராக கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் மேலும் சிலர் கைது ஆவார்கள் என தெரிகிறது.

    • ஜமேஷா முபின் தலைமையில் முகமது இத்ரிஸ் மற்றும் அவர்களது கூட்டாளிகள் கேரளாவில் ஆயுத பயிற்சி பெற்றுள்ளனர்.
    • முகமது இத்ரிஸ் கைதாவதற்கு சில நாட்களுக்கு முன்பு தனது நெருங்கிய கூட்டாளிகள் சிலரை சந்தித்து பேசியுள்ளார்.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி அதிகாலை கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய ஜமேஷா முபின் உயிரிழந்தான்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி ஜமேஷா முபினின் கூட்டாளிகள் 11 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி, சமீபத்தில் என்.ஐ.ஏ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக கோவை உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த முகமது இத்ரிஸ் (வயது 25) கைது செய்யப்பட்டார்.

    என்.ஐ.ஏ. அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில், ஜமேஷா முபினின் நெருங்கிய கூட்டாளியாகவும், அவரது வலது கரமாகவும் முகமது இத்ரிஸ் செயல்பட்டது தெரியவந்தது.

    மேலும் இவர் இந்து கோவில்களை தகர்ப்பது, இந்து தலைவர்களை கொலை செய்யும் சதி திட்டத்துடன் செயல்பட்டது தெரியவந்தது. அவரை கைது செய்தபோது, என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    அந்த செல்போன்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வில் பல முக்கிய தகவல்களை திரட்டி உள்ளனர். மேலும் ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும் இவரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் கைதான முகமது இத்ரிஸ் கேரளாவில் ஆயுத பயிற்சி பெற்ற தகவல் தெரியவந்துள்ளது.

    முகமது இத்ரிஸ் செல்போனை ஆய்வு செய்தபோது சந்தேகத்திற்குரிய சில செல்போன் எண்கள் இருந்தன. அது யாருடையது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    ஜமேஷா முபின் தலைமையில் முகமது இத்ரிஸ் மற்றும் அவர்களது கூட்டாளிகள் கேரளாவில் ஆயுத பயிற்சி பெற்றுள்ளனர். வெடிகுண்டு தயாரிப்பதில் முகமது இத்ரிஸ் திறமைசாலியாக இருந்துள்ளார்.

    குறுகிய நேரத்தில் வெடிகுண்டை தயாரித்து காட்டி அங்கிருந்தவர்களிடம் பாராட்டினை பெற்றதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளது. இதுதொடர்பான தகவல்கள் அனைத்தும் அவரது செல்போனில் உள்ளது. மேலும் அவர்களுக்கு பலர் நிதியுதவி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. அது தொடர்பான தகவல்களையும் கைப்பற்றியுள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவர்கள் யார் என்பது குறித்தும் விசாரிக்கின்றனர்.

    மேலும் முகமது இத்ரிஸ் கைதாவதற்கு சில நாட்களுக்கு முன்பு தனது நெருங்கிய கூட்டாளிகள் சிலரை சந்தித்து பேசியுள்ளார். மேலும் சிலரை செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

    அப்போது அவர்களிடம் ஏதாவது தெரிவித்தாரா? என்பதை அறிய அவருடன் பேசியவர்கள் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள என்.ஐ.ஏ அதிகாரிகள் அவர்களை தேடும் பணியையும் தொடங்கி உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கார் குண்டு வெடிப்பு வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • கார் வெடிப்பு சம்பவத்தில் பலியான ஜமேஷா முபினின் நெருங்கிய நண்பர் தான் தற்போது கைதாகி உள்ள முகமது இத்ரீஸ்.

    கோவை:

    கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

    இந்த குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் இதில் பலியானார்.

    இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    போலீசார் நடத்திய விசாரணையில் ஜமேஷா முபின், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவையில் பயங்கர நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது.

    இந்த வழக்கில் தொடர்புடையதாக முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது.

    என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி, உமர் பரூக், பெரோஸ்கான், முகமது தவுபிக் ஆகியோரையும் கைது செய்தனர். இதுவரை கார் குண்டு வெடிப்பு வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து கைது செய்யப்பட்ட 11 பேர் மீது அண்மையில் சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த முகமது இத்ரீஸ்(வயது25) என்பவருக்கும் தொடர்பு இருப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

    இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் 2 நாட்களாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முடிவில் நேற்று அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

    தொடர்ந்து போலீசார் அவரை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து சென்றனர்.

    கார் வெடிப்பு சம்பவத்தில் பலியான ஜமேஷா முபினின் நெருங்கிய நண்பர் தான் தற்போது கைதாகி உள்ள முகமது இத்ரீஸ். இவர் குண்டு வெடிப்பிற்கு முன்பு அதற்கான குற்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவரவே அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் அவரை தொடர்ந்து கண்காணித்தும் வந்தனர்.

    குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளாக முகமது இத்ரீசின் செல்போன் அழைப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

    மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவரிகளிடம் விசாரணை நடத்தியதிலும், முகமது இத்ரீசுக்கு குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதன் காரணமாகவே அவருக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி 2 நாட்களாக விசாரணை நடத்தியதும், விசாரணையின் முடிவில் அவரை கைது செய்ததும் தெரியவந்தது.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட முகமது இத்ரீசை என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர். அதன்பின்னர் அவர் ஜெயிலில் அடைக்கப்பட உள்ளார்.

    கைதான முகமது இத்ரீசிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதற்கான நடவடிக்கைகளும் நடந்து வருகிறது.

    கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் 12-வது நபராக முகமது இத்ரீஸ் என்பவரும் கைதாகி உள்ளது இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஐஎஸ் ஆதரவு எண்ண ஓட்டத்தில் உள்ள நபர்களை கண்டறிந்து அவர்களின் செயல்பாட்டை கண்காணிக்க தொடங்கினர்.
    • கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு மாவட்டத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம்.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி கார் வெப்பு சம்பவம் நடைபெற்றது.

    இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் உயிரிழந்தான். அவனது வீட்டில் இருந்து வெடிமருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த முபின் கோவையில் மக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவை மாநகரில் நுண்ணறிவுப் பிரிவினர் (ஐ.எஸ்), மத ரீதியிலான தகவல்களை விசாரிக்கும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவினர் (எஸ்.ஐ.சி.) ஆகியோர் தங்களது ரகசிய கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

    ஐஎஸ் ஆதரவு எண்ண ஓட்டத்தில் உள்ள நபர்களை கண்டறிந்து அவர்களின் செயல்பாட்டை கண்காணிக்க தொடங்கினர். அவ்வாறு கோவையில் 200 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு மாவட்டத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம். குறிப்பாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளில் தீவிரமாக இருப்பவர்களை கண்காணித்து வந்தோம்.இதில் 200 பேர் இருப்பதை கண்டறிந்துள்ளோம்.

    படித்தவர்கள், படிக்காதவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர் என எல்லா தரப்பினரும் இதில் அடக்கம். இவர்களின் செயல்பாடுகள், செல்லும் இடங்கள், செல்போன் அழைப்புகள் உள்ளிட்ட விவரங்களையும் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய தகவல்கள் பரிமாறப்படுகிறதா என்பது குறித்தும் கண்காணித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 5 பேர் மீது நேற்று சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. சார்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
    • பழிவாங்கும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு இருந்தனர்.

    கோவை:

    கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஐ.எஸ்.அமைப்பின் ஆதரவாளரான ஜமேஷா முபீன்(வயது 28) என்பவர் பலியானார்.

    விசாரணையில் கோவையில் பல்வேறு இடங்களில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டியதும், இதற்கு ஜமேஷா முபீன் மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 6 பேர் மீது ஏற்கனவே பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    மீதமுள்ள உமர் பாரூக், பெரோஸ்கான், முகமது தவுபீக், ஷேக் இதாயத்துல்லா, சனோபர் அலி ஆகிய 5 பேர் மீது நேற்று சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. சார்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    முகமது அசாருதீன், உமர் பாரூக், ஷேக் இதாயத்துல்லா சனோபர் அலி ஆகியோருடன் இணைந்து ஜமேஷா முபீன் கோவையில் தொடர் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டது வழக்கை விசாரித்த என். ஐ.ஏ. தனிப்படையினருக்கு தெரிய வந்தது.

    தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் வீடியோ மூலம் இது தெரியவந்தது. பழிவாங்கும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு இருந்தனர்.

    இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 11 பேர் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அசாருதீன், அப்சர் ஆகியோர் ஜமேஷா முபீன் வெடி பொருட்களை கொள்முதல் செய்யவும், கலக்கவும் உதவி செய்து உள்ளனர். முகமது தல்கா கார் கொடுத்து உதவி செய்தார்.

    பெரோஸ், ரியாஸ், நவாஸ் ஆகியோர் கியாஸ் சிலிண்டரை காரில் ஏற்ற உதவி செய்தனர். இந்த சதி திட்டம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் தீட்டப்பட்டது. இந்த சதி திட்டத்தில் நீலகிரி குன்னூரை சேர்ந்த உமர் பாரூக்கை தலைவனாக தேர்வு செய்துள்ளனர். அவன் தலைவனாக இருந்து மற்றவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை செய்யுமாறு உத்தரவிட்டு உள்ளார்.

    முகமது தவுபீக்கிடம் ஜமேஷா முபீன் குண்டு தயார் செய்வதற்கான வரைபடங்கள், கையால் எழுதப்பட்ட விவரங்கள் கொண்ட நோட்டு புத்தகங்கள், பயங்கரவாத சிந்தனையை தூண்டும் புத்தகங்கள் ஆகியவற்றை கொடுத்து உள்ளார். இதனை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர்.

    இந்த சதி திட்டத்தை நிறைவேற்ற உமர் பாரூக்கும், ஜமேஷா முபீனும் நிதி வசூலித்துள்ளனர்.

    சனோபர் அலியும் நிதி உதவி அளித்துள்ளார். பெரோஸ்கான் பொருட்களை கொண்டு செல்வதற்கு ஏற்பாடுகளை செய்தார்.

    மேலும் இவர்கள் அரசின் பொதுநிர்வாகம், போலீஸ், நீதித்துறை ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் அரசுக்கு எதிராக போர் தொடுப்பதே இந்த சதி திட்டத்தின் நோக்கம் என கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • இறந்த முபினின் உறவினரான அசாரூதீனின் வீட்டில் இருந்து ஒரு பென் டிரைவ் கைப்பற்றப்பட்டுள்ளது.
    • ஜமேஷா முபினுக்கு அவனது கூட்டாளிகள் உதவியுள்ளனர்.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி அதிகாலை கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரில் இருந்த உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் உயிரிழந்தான். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி முபினுடன் தொடர்பில் இருந்து முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் தனியாக வழக்குப்பதிவு செய்து, கைதான 6 பேரிடமும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஜமேஷா முபினுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக முகமது ஷேக் பரீக், உமர் பாரூக், சீனிவாசன், பெரோஸ்கான் என மேலும் 5 பேரையும் இந்த வழக்கு சம்பந்தமாக கைது செய்தனர். மொத்தம் இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கைதான 11 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தனித்தனியாக காவலில் எடுத்து, கோவை, சத்தியமங்கலம், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இறந்த முபினின் வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.

    தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையில், இறந்த முபினுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்ததும், கோவை உள்பட தமிழகம் முழுவதும் பயங்கர நாசவேலைக்கு திட்டமிட்டதும் தெரியவந்தது.

    மேலும் இவர்கள் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மீது தற்கொலைபடை தாக்குதல் நடத்த சதிதிட்டம் தீட்டியதும், அதற்காக பயங்கர வெடிபொருட்களை சேகரித்து முபினின் வீட்டில் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. திட்டத்தை அரங்கேற்றுவது தொடர்பாக முபின் தலைமையில் குன்னூரில் உள்ள உமர் பாரூக்கின் வீடு, சத்தியமங்கலம் காடுகளில் கூடி, கூட்டம் நடத்தியதும் தெரியவந்தது.

    இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த வழக்கில் தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களை எல்லாம் ஆவணங்களாக திரட்டி குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முதலில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு எதிராக தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையை நேற்று சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

    அந்த குற்றப்பத்திரிகையில் கோவையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்தும், இறந்த ஜமேஷா முபின் குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு கியாஸ் சிலிண்டர் வெடிப்பு என கூறப்பட்டு வந்தது. ஆனால் கோவையில் கோவில் முன்பு நடத்தப்பட்ட தாக்குதல் கியாஸ் சிலிண்டர் வெடிப்பு தாக்குதல் இல்லை என்றும் ஐ.இ.டி எனப்படும் அதி சக்தி வாய்ந்த வெடிகுண்டை கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதலில் ஈடுபட்ட முபின், திட்டமிட்டே இந்த தாக்குதலை கோவையில் அரங்கேற்றியுள்ளார். தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக உறுதி பிரமாணமும் எடுத்துள்ளார்.

    கோவை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்கள், அரசு கட்டிடங்கள், பூங்காக்கள், ரெயில் நிலையங்கள் உள்பட மக்கள் கூடும் இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக எழுதி வைக்கப்பட்டிருந்த குறிப்பு ஒன்றையும் முபின் வீட்டில் இருந்து கைப்பற்றியதாகவும், அதில் இந்த தகவல்கள் இடம் பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இறந்த முபினின் உறவினரான அசாரூதீனின் வீட்டில் இருந்து ஒரு பென் டிரைவ் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் முபின் பேச்சுகள் தொடர்பான வீடியோக்களும் இருந்தன. அந்த வீடியோவில், முபின் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஐஎஸ் அமைப்புகளின் நிர்வாகிகளின் பேச்சை விரும்பி கேட்டதும், அதில் தன்னை இணைத்து கொண்டதும், அந்த ஈர்ப்பில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட தகவலும் இடம் பெற்றிருந்தது.

    மேலும் இறந்த முபின் கடந்த 2019-ம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி நடந்த தாக்குதலில் தொடர்புடைய மதகுருவின் வீடியோக்களையும், அவரது பேச்சுகளையும் அடிக்கடி கேட்டு வந்ததும் தெரியவந்தது.

    கோவையில் நடந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றதாக அந்த அமைப்புக்கு சொந்தமான இணைய இதழான ஐ.எஸ்.கே.பி உறுதி செய்துள்ளது. இதனையும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஜமேஷா முபினுக்கு அவனது கூட்டாளிகள் உதவியுள்ளனர். முகமது தல்கா காரை பெற்று கொடுத்துள்ளார். பெரோஸ், ரியாஸ், நவாஸ் ஆகியோர் காரில் வெடிபொருட்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் நிரப்ப உதவியுள்ளனர். முபினின் உறவினர்களான அசாரூதீன், அப்சர்கான் ஆகியோர் தாக்குதலுக்கு தேவையான ரசாயன மூலக்கூறுகளை வாங்கி கொடுத்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

    இவர்கள் 6 பேர் மீது உபா சட்டம் மற்றும் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    இந்த தகவல்கள் அனைத்தும் என்.ஐ.ஏ. கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.

    கோவையில் நடத்தப்பட்ட தாக்குதல் அதி சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் என கூறப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்ற 5 பேரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று வருகிறது. அதில் அவர்களுக்கு மீண்டும் காவல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அப்படி வழங்கும்பட்சத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவர்கள் 5 பேரையும் தனித்தனியாக விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். அவர்களிடம் இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரிக்க உள்ளனர்.

    • கோவை கார் குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக அந்த அமைப்பின் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதள பக்கங்களையும் உன்னிப்பாக கண்காணிக்கிறோம்.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி அதிகாலையில் கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

    இதில் காரில் இருந்த ஜமேஷாபின் என்பவன் இறந்தான். போலீசாரின் விசாரணையில் ஜமேஷா முபின் பயங்கராவதி என்பதும், கோவையில் பல இடங்களில் நாசவேலையை அரங்கேற்ற திட்டமிட்ட அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது.

    இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 11 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் காவலில் எடுத்தும் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்களை வீட்டிற்கு அழைத்து சென்று விசாரித்ததுடன், அங்கிருந்து சில முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.

    இந்த சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே கர்நாடகாவிலும் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஷாரிக் என்ற பயங்கரவாதி காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறான்.

    இந்த 2 சம்பவங்கள் குறித்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

    கோவை கார் வெடிப்பில் இறந்த ஜமேஷா முபினும், ஷாரிக்கும் கோவையில் சந்தித்து பேசியதாகவும் கூறப்பட்டது. மேலும் ஷாரிக் தென்னிந்தியாவில் பயங்கரவாத அமைப்பை உருவாக்கி நாச வேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

    இதுதவிர மத்திய மற்றும் தெற்காசியாவில் இருந்து டார்க்நெட் இணையதளம் மூலம் பணம் அனுப்பியதும் கண்டுபிடித்தனர்.

    தொடர்ந்து இந்த 2 சம்பவங்கள் குறித்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவை கார் குண்டு வெடிப்பு மற்றும் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    இது தொடர்பாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு சொந்தமான இதழ் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கோவையில் நடந்த குண்டு வெடிப்பு, நவம்பர் 19-ந் தேதி மங்களூரு குக்கர் குண்டு வெடிப்புகளுக்கு தங்கள் அமைப்பு பொறுப்பு ஏற்பதாக கூறப்பட்டிருந்தது.

    மேலும் தமிழ்நாடு கோவை, கர்நாடகா மங்களூவில் எங்கள் சகோதரர்கள் எங்கள் மதத்தின் மரியாதைக்காக குண்டு வெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றியதாகவும் குறிப்பிட்டிருந்தது.

    இந்த 2 சம்பவங்களுக்கும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றதை அடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை தற்போது தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு சொந்தமான இதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின் நம்பகத்தன்மை குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவை கார் குண்டு வெடிப்பு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றதை அடுத்து, கோவையில் மாநகர போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவாக கோவையில் யாராவது இருக்கின்றனரா? என்பது குறித்தும் கண்காணித்து வருகின்றனர்.

    இதற்காக சிறப்பு அதிகாரி தலைமையில் ஒரு குழுவை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    கோவை கார் குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக அந்த அமைப்பின் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது குறித்து விசாரிக்கிறோம். இது தொடர்பாக என்.ஐ.ஏ.வுடனும் தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறோம்.

    மேலும் கோவையில் ஐ.எஸ். இயக்கத்துடன் யாராவது தொடர்பில் உள்ளனரா என்பது குறித்து கண்காணிக்கிறோம்.

    தற்போது கோவையில் சந்தேகத்திற்கிடமாக உள்ள 200 பேர் பட்டியல் தயாரித்து, அவர்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

    அவர்களின் செல்போன் அழைப்புகளும் பார்த்து வருகிறோம். அவர்கள் யார் யாருடன் பேசி உள்ளனர். அதில் யாராவது சந்தேகப்படும் படியாக உள்ளனரா என்பதை அறிய அவர்களின் அழைப்பு விவரங்கள் அனைத்தையும் சேகரித்து வருகிறோம்.

    இதுதவிர அவர்களின் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதள பக்கங்களையும் உன்னிப்பாக கண்காணிக்கிறோம். அதில் அவர்கள் ஏதாவது கருத்துக்கள் பதிவிட்டுள்ளனரா என்பதையும் ஆராய்ந்து வருகிறோம்.

    இந்த பணியில் மாநகர உளவு போலீசார், சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக சிறப்பு அதிகாரியையும் நியமித்துள்ளோம். அவரது தலைமையில் இந்த குழுவினர் தங்கள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ×