என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
5 இடங்களில் நடந்த சோதனையில் கம்ப்யூட்டர், லேப்டாப்-செல்போன்கள் பறிமுதல்
- ஐ.எஸ். ஆதரவாளர் என சந்தேகிக்கப்படும் முகமது சப்ரீசின் வீட்டில் இருந்து மேலும் பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவைகளை ஆய்வு செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
- ஏழுகிணறு, மண்ணடி, முத்தியால்பேட்டை, வடக்கு கடற்கரை உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர்.
சென்னை:
சென்னையில் இன்று 5 இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் பல்வேறு டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொடுங்கையூர் வள்ளுவர் தெருவில் முகமது சப்ரீஸ் என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 8 செல்போன்கள் சிக்கியுள்ளன.
முகமது சுப்ரீஸ் மற்றும் அவரது குடும்பத்தினரின் இந்த செல்போன்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
லேப்டாப் ஒன்றையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். ஐ.எஸ். ஆதரவாளர் என சந்தேகிக்கப்படும் முகமது சப்ரீசின் வீட்டில் இருந்து மேலும் பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவைகளை ஆய்வு செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதேபோன்று ஏழுகிணறு, மண்ணடி, முத்தியால்பேட்டை, வடக்கு கடற்கரை உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர்.
இவைகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இன்று சோதனைக்குள்ளான 5 பேரின் வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவர்கள் யார்-யாருடன் தொடர்பில் இருந்தனர் என்பது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராயபுரம் கல்மண்டபம் பகுதியில் நடந்த வாகன சோதனையில் தாகூர் மீரான், ஜாகிர் உசேன், நவாஸ் ஆகிய 3 பேர் பிடிபட்டனர். இவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்கள் அடங்கிய வாசகங்கள் இருந்தன. இவர்களில் தாகூர் மீரானை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று 5 பேரின் வீடுகளிலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இவர்களும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது உறுதியானால் கைது நடவடிக்கை பாயும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்