search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chutney"

    • வயிறு தொடர்பான பிரச்சனைகளைச் சரிசெய்யும்.
    • இந்த கீரையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

    தேவையான பொருட்கள் :

    வெந்தயக் கீரை - 2 கட்டு,

    வெங்காயம் - 1,

    தக்காளி - 2,

    இஞ்சி - ஒரு துண்டு,

    காய்ந்த மிளகாய் - 8,

    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க:

    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,

    கடுகு - சிறிதளவு,

    கறிவேப்பிலை

    பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை.

    செய்முறை:

    கீரையை நன்றாக ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயக் கீரை, வெங்காயம், தக்காளி, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, ஆறவைக்க வேண்டும்.

    ஆறியதும் மிக்ஸியில் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தை சேர்த்து தாளித்து துவையலில் சேர்க்க வேண்டும்.

    இப்போது சூப்பரான வெந்தயக்கீரை துவையல் ரெடி.

    • கத்திரிக்காயை வைத்து சாம்பார், புளிக்குழம்பு மட்டுமே செய்திருப்போம்.
    • இன்று கத்தரிக்காயில் அருமையான சட்னி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கத்திரிக்காய் - கால் கிலோ

    தக்காளி - 3

    பெ. வெங்காயம் - 2

    ப. மிளகாய் - 2

    காய்ந்த மிளகாய் - 4

    கடுகு, உளுந்து - 1 ஸ்பூன்

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    கறிவேப்பில்லை - சிறிதளவு

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, கத்தரிக்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் தண்ணீர் ஊற்றி கத்திரிக்காய், 1 வெங்காயம், தக்காளி, ப. மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிடவும்.

    பின்னர் ஆவி அடங்கியதும் தக்காளியின் தோலை மட்டும் நீக்கி கொள்ளவும்.

    தோல் நீக்கிய பின் மிக்ஸியில் இந்த கலவையை நன்கு அரைத்து கொள்ளவும்.

    இப்பொழுது கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.

    பின்னர் நாம் அரைத்து வைத்த கத்திரிக்காய் கலவையை தேவையான தண்ணீருடன் ஊற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.

    எண்ணெய் பிரிந்து கெட்டி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

    இப்பொழுது இட்லி தோசைக்கு சூப்பரான சைடு டிஷ் கத்திரிக்காய் சட்னி தயார்.

    • இட்லி, தோசைக்கு இந்த சட்னி அருமையாக இருக்கும்.
    • இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். ருசியோ அருமை.

    தேவையான பொருட்கள்

    காய்ந்த மிளகாய் - 10

    பூண்டு பல் - 3

    புளி - நெல்லிக்காய் அளவு

    உப்பு

    தாளிக்க:

    நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி

    கடுகு - 1/2 தேக்கரண்டி

    கறிவேப்பிலை

    செய்முறை

    தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தவிர்த்து மற்ற பொருட்களை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியை சேர்த்து 1 நிமிடம் கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும்.

    சுவையான காரசாரமான செட்டிநாடு மிளகாய் சட்னி தயார்.

    இட்லி, தோசையுடன் பரிமாறவும்.

    • முருங்கை கீரையில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி துவையல் செய்து கொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    துளிர் முருங்கைக் கீரை - 1 கப்

    உளுந்தம் பருப்பு - 1 கைப்பிடி

    காய்ந்த மிளகாய் - 8

    புளி - நெல்லிக்காய் அளவு

    வெங்காயம் - 1

    உப்பு - தேவையான அளவு

    பூண்டு - 5 பல்

    கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை

    முருங்கைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில்காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்த பின்னர் அதில் பூண்டு, வெங்காயம், முருங்கைக் கீரை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு மற்றும் புளி சேர்த்து கிளறி கொள்ளவும்.

    10 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து வாணலியை இறக்கி விட வேண்டும்.

    வதக்கிய பொருட்கள் ஆறியவுடன் மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து துவையலில் சேர்க்கவும்.

    இந்த துவையலை சூடான சாதம், இட்லி, தோசை ஆகியவையுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    • இந்த சட்னி இரண்டு நாட்கள் வரை கெட்டு போகாது.
    • இட்லி தோசைக்குக் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    வரமிளகாய் - 7 அல்லது மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி

    வெங்காயம் - 1 பெரியது

    தக்காளி - 1 பெரியது

    புளி - சிறிது,

    பூண்டு - 5 பல்

    உப்பு- 1 /2 தேக்கரண்டி

    தாளிக்க:

    எண்ணெய் - 3 தேக்கரண்டி

    கடுகு - 1 தேக்கரண்டி

    உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி

    பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி

    கறிவேப்பிலை - 1 கொத்து

    செய்முறை :

    வெங்காயம் தோல் உரித்து பெரிதாக வெட்டிக்கொள்ளவும்

    தக்காளியைக்கழுவி பெரிதாக வெட்டிக்கொள்ளவும்

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், தக்காளி, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய் என ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும்.

    நன்றாக வதங்கியதும் ஆற வைத்து மிச்சியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த அரைத்த சட்னியில் ஊற்றி கிளறி பரிமாறவும்.

    இப்போது காரசாரமான மிளகாய் சட்னி தயார்.

    இது இரண்டு நாட்கள் வரை கெடாதிருக்கும் ஆகையால் சுற்றுலா பயணத்திற்கு கூட எடுத்துச்செல்லலாம்.

    • அதிக நார்ச்சத்து உள்ள வாழைப்பூ மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்தாக உள்ளது.
    • மூலநோய், மூல புண்கள், இரத்தம் வெளியேறுதல் பிரச்சனைகளுக்கு வாழைப்பூ சிறந்த மருந்தாகும்.

    தேவையான பொருட்கள்:

    வாழைப்பூ - 1

    கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    புளி - எலுமிச்சை அளவு

    காய்ந்த மிளகாய் - 4

    துருவிய தேங்காய் - கால் கப்

    எண்ணெய் - 3 டீஸ்பூன்

    கடுகு - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    பெருங்காயத்தூள் - சிறிதளவு

    செய்முறை:

    வாழைப்பூவின் தேவையற்ற காம்புகளை நீக்கி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

    சமைப்பதற்கு முன் அதை மோரில் ஊற வையுங்கள்.

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயத்தூள், புளி மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பின் அதனை ஆற வையுங்கள்.

    அதே கடாயில் வாழைப்பூவையும் வதக்கிக்கொள்ளுங்கள்.

    மிக்சியில் முதலில் ஆற வைத்த கடலைப் பருப்பை அரைத்துக்கொள்ளுங்கள்.

    அடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

    கடைசியாக பின் வாழைப்பூ, சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

    கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள துவையலில் கொட்டி கலந்து விடவும்.

    இப்போது சுவையான வாழைப்பூ துவையல் தயார்.

    • வெற்றிலையில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது.
    • இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    வெற்றிலை - 10

    காய்ந்த மிளகாய் - 4

    வெங்காயம் - ஒன்று

    தேங்காய் துருவல் - சிறிதளவு

    பூண்டுப் பல் - 3

    புளி - கோலிக்குண்டு அளவு

    உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

    கடுகு - அரை டீஸ்பூன்

    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    வெற்றிலைத் துவையல்

    வெற்றிலைத் துவையல்

    செய்முறை:

    வெற்றிலையில் காம்பு, நடு நரம்பை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளிக்கவும்.

    அதனுடன் காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு, தேங்காய் துருவல், வெற்றிலை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் புளி, உப்பு சேர்த்துச் சிறிது நேரம் வதக்கி இறக்கவும்.

    ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்த துவையலாக அரைத்து எடுக்கவும்.

    இப்போது சத்தான சுவையான வெற்றிலைத் துவையல் ரெடி.

    • கறிவேப்பிலையில் அதிக அளவில் இரும்பு சத்து போலிக் ஆசிட் நிறைந்து இருக்கிறது.
    • நம் உணவில் அதிகமான கறிவேப்பிலையை எடுத்துக் கொள்வது நல்லது.

    தேவையான பொருட்கள்:

    கறிவேப்பில்லை - ஒரு கப்

    உளுத்தம் பருப்பு - இரண்டு டீஸ்பூன்

    கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

    உப்பு - தேவைகேற்ப

    பச்சை மிளகாய் - இரண்டு

    புளி - சிறிதளவு

    தாளிக்க:

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

    கடுகு - கால் டீஸ்பூன்

    உடைத்த உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்

    கறிவேப்பில்லை - சிறிதளவு

    செய்முறை:

    கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பில்லை போட்டு லேசாக வறுத்து எடுக்கவும்.

    பிறகு, அதே கடாயில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

    மிக்சியில் வறுத்த பொருட்களை போட்டு அதனுடன் புளி, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பில்லை போட்டு தாளித்து அதில் கொட்டி பரிமாறவும்.

    இப்போது சத்தான கறிவேப்பிலை சட்னி ரெடி.

    • பச்சை மிளகாய் காரம்தான் என்றாலும் அதன் நன்மைகள் எண்ணற்றது.
    • தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள இது அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    பச்சை மிளகாய் - 20

    சின்ன வெங்காயம் - 50 கிராம்

    உளுந்து - 2 டீஸ்பூன்

    பூண்டு - 10

    புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

    சமையல் எண்ணெய் - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    கடுகு, கறிவேப்பிலை

    செய்முறை :

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை நன்றாக கழுவி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    பின் சின்ன வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கியபின் இறக்குவதற்கு முன் புளி சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

    அனைத்தையும் ஆற வைத்து மிக்சியில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த சட்னியில் கொட்டவும்.

    அவ்வளவுதான் சூப்பரான காரசாரமான பச்சை மிளகாய் சட்னி தயார்.

    • எல்லோருக்கும் ஹோட்டல் சட்னி மிகவும் பிடிக்கும்.
    • இன்று இந்த சட்னி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    தேங்காய் - 1 கப் (துருவியது)

    பச்சை மிளகாய் - 1

    இஞ்சி - 1 சிறிய துண்டு

    சீரகம் - ஒரு சிட்டிகை

    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு

    கடுகு - 1 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிது

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை

    முதலில் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின் அரைத்த சட்னியை ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

    பிறகு அதை சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி தயார்.

    • வாரம் ஒருமுறை முட்டைகோஸ் சாப்பிட்டால் புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம்.
    • முட்டைக்கோஸ் உடலில் உள்ள கெட்ட கழிவுகளை நீக்கி உடல் எடையை குறைக்க உதவும்.

    தேவையான பொருட்கள்

    முட்டைகோஸ் - 150 கிராம்

    பச்சை மிளகாய் - 2

    உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்

    புளி - எலுமிச்சை பழம் அளவு

    உப்பு - தேவைகேற்ப

    இஞ்சி - சிறு துண்டு

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    தாளிக்க:

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

    கடுகு - கால் டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 2

    கறிவேப்பில்லை - சிறிதளவு

    செய்முறை

    முட்டைகோஸ், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கோஸ் மற்றும் பச்சை மிளகாயை ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி எடுத்து கொள்ளவும்.

    வறுத்த உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், கோஸ் அதனுடன் புளி, உப்பு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை போட்டு தாளித்து அரைத்த சட்னியில் கொட்டி பரிமாறவும்.

    • பிரண்டைத் துவையலை வாரத்திற்கு இரண்டு நாளாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    • பிரண்டைத் துவையலை 4 நாட்கள் வரை பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்:

    பிரண்டை - 1 கட்டு

    உளுத்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

    பூண்டு - 10 பல்

    இஞ்சி - 1 துண்டு

    காய்ந்த மிளகாய் - 5 முதல் 6

    தேங்காய் - 1 துண்டு

    புளி - சிறிதளவு

    நல்லெண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    பெருங்காயத்தூள் - கால் டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    பிரண்டையில் உள்ள மேல் தோலை நீக்கி விட்டு நன்கு சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    தேங்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்துக் எண்ணெய் சூடானதும் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் பூண்டு, இஞ்சி, புளி, பெருங்காயத்தூள், தேங்காய் என ஒவ்வொன்றாக வறுத்து ஆற வைக்கவும்.

    அடுத்து அதில் பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள பிரண்டையை சேர்த்து வதக்கவும். பிரண்டையை நன்கு வதக்க வேண்டும். பிரண்டையை வதக்கும் போது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

    சூடு ஆறிய பின் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். சுவையான சத்தான பிரண்டை துவையல் தயார்.

    ×