search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Children Care"

    குழந்தைகள் எப்போது பேசும்? இயல்பாக குழந்தைகள் பேசுவதற்கு என்னென்ன பயிற்சிகளைக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு பேசபெற்றோர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? என்று அறிந்து கொள்ளலாம்.
    சில குழந்தைகள் விரைவில் பேச தொடங்கும். சில குழந்தைகளுக்கு பேசுவதில் தாமதமாகும். குழந்தைகள் எப்போது பேசும்? இயல்பாக குழந்தைகள் பேசுவதற்கு என்னென்ன பயிற்சிகளைக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு பேச (helping your child speech) பெற்றோர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? இந்தப் பதிவில் இதைப் பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.

    ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு பேசும் திறன், கேட்கும் திறன் இருக்கிறதா என சரிபார்த்துக் கொள்வது நல்லது. 6 மாத குழந்தைகளுக்கு, வாயிலிருந்து ‘ஜொள்ளு வழிதல்’ அறிகுறி தெரியும். பேச முயற்சி செய்யும் அறிகுறிகளும் தென்படும். இதனால் பேச்சு திறனை உறுதி செய்யலாம்.

    குழந்தையிடம் பேசும்போது, வாய் அசைவைப் பார்த்து, சத்தம் வருவதைக் குழந்தை உணர்ந்து கொண்டு ‘உர்’ என எச்சிலை ஊதி தள்ளும். இதுவே குழந்தை பேச தொடங்குவதற்கான முதல் அறிகுறி.

    நீங்கள் பேசும்போது உங்களையே பார்த்துக்கொண்டு தானும் பேச முயலுவதைப் போல ‘ங்… ஞ…ங்க…ஞ…’ என்று குரல் எழுப்பும். நீங்கள் பேசும் சத்தம் பார்த்து தன் கவனத்தைத் திருப்புவதும் நல்ல அறிகுறிதான். காது நன்றாக கேட்கிறது. எனவே, பேச்சும் இயல்பாக வரும் என அர்த்தம்.

    குழந்தை பேசுவதற்கு முன்பு அதன் கேட்கும் திறன் நன்றாக இருக்க வேண்டும். நாம் பேசுவதை குழந்தை நன்கு கூர்ந்து கவனித்த பின்பு, அதற்கு பதில் சொல்லவோ செய்கை செய்யவோ முயற்சி செய்யும். கேட்கும் திறன், புரிந்து கொள்ளும் திறன் சரியாக இருக்க வேண்டும். அதற்கான வளர்ச்சி இருந்தால் மட்டுமே, விரைவில் குழந்தையால் பேச முடியும். பேசவும் தொடங்கும்.

    முதல் ஒன்றிரண்டு மாதங்கள் நாம் பேசுவதை நாம் வாய் அசைப்பதைக் கவனிக்கும். தலை அசைப்பதைக் கவனிக்கும். கை, கால் ஆட்டுவதைப் பார்க்கும்.

    குழந்தைகள் நீங்கள் பேசுவதைௐ கவனிக்கும். மெல்ல மெல்ல ஒவ்வொரு எழுத்தாக குழந்தையும் சத்தம் போட ஆரம்பிக்கும்.

    குழந்தையை சுற்றி பெரியவர்கள் உட்கார்ந்து பேசும் வீட்டில், வெகு விரைவில் குழந்தைகள் பேசுவார்கள்… 10 மாதத்திலே ஒரு குழந்தை இரண்டு எழுத்துகளை கோர்த்து பேசும் அளவுக்கு திறன் கொண்டிருந்தான். அதற்கு காரணம் அந்த வீட்டில் உள்ள அனைவரும் குழந்தையிடம் அவ்வப்போது பேசி கொஞ்சி விளையாடியதே முக்கிய காரணம்.

    அம்மா சொல்லு, அப்பா சொல்லு, அண்ணா சொல்லு என உறவுகளின் பெயரை சொல்ல சொல்லி பழக்குவது குழந்தைகளுக்கான சிறந்த பயிற்சி.



    மா, ப்பா, தா, வா இப்படி ஒவ்வொரு எழுத்தாக குழந்தையிடம் பேசி பேசி கற்பிக்கலாம்.

    குழந்தைகளுக்கு ஏதாவது வார்த்தை சொல்லி தரும்போது அதன் படத்தை காண்பித்து சொல்லி தரலாம். நாய், பூனை படம் காண்பித்து அதன் பின் அந்த வார்த்தை சொல்லி தரலாம். குழந்தைகளுக்கு படங்களுடன் கூடிய புத்தகங்களை காண்பித்து, சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    படங்கள், வார்த்தை, சத்தம், ரைம்ஸ், பாடல்கள்… இதெல்லாம் பேசுவதற்கான பயிற்சிகள்தான்.

    மம்மு, புவா போன்ற மழலை வார்த்தைகளை சொல்லலாம். சாப்பாடு, சாதம், ரசம், குழம்பு, பிஸ்கெட் என நேரடியாக வார்த்தைகளை சொல்லுங்கள்.

    குழந்தைகளுக்கு பாட்டுபாடி காண்பிக்கலாம். ரைம்ஸ் சிடி போடலாம். குழந்தை பாடல்களை ஒலிக்க விடலாம்.

    அதிகமாக வெட்கப்படும் குழந்தைகளின் வெட்கத்தைப் போக்க பெற்றோர் நிறைய பழக வேண்டும். குழந்தையை பாதுகாப்பாக உணர வைக்கலாம். பின்னர் பேச பயிற்சி தரலாம்.

    குழந்தைகளை பெரியவர்கள், மற்ற குழந்தைகள் போன்ற அனைவரிடமும் பழகினால்தான் பேச்சு விரைவில் வரும்.

    அதிகமாக நாம் குழந்தையிடம் நேரம் செலவழிக்கவில்லை எனில் குழந்தை பேச தாமதமாகும்.

    உறவு முறைகளின் பெயர்கள், உங்களது பெயர், விலங்குகள் பெயர் போன்றவற்றை சொல்லி தரலாம்.

    கதைகளை சொல்லுங்கள். புதுப்புது வார்த்தைகளைக் குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள். கதை சொல்லுவது அற்புதமான பயிற்சி.
    பெற்றோர் குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் ஒருவர் மனதில் இருப்பதை மற்றொருவர் புரிந்து கொள்ள முடியும்.
    பெற்றோர் குழந்கைளுக்கான உறவு விலைமதிக்க முடியாதது. நல்ல குழந்தையை உருவாக்குவது மட்டுமல்ல எதிர்காலத்தில் எல்லாவற்றையும் சமாளிக்கும் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் ஊட்டும் கடமை பெற்றோருக்கு உண்டு. இன்றைய சூழலில் பெற்றோர் குழந்தைகள் இடையே இடைவெளி அதிகரித்து விட்டது. ‘ஹாய், டாடி’, ‘மம்மி, பைபை’ என்ற அளவில் பேச்சும் உறவும் சுருங்கிவிட்டது. பொருளாதாரரீதியாக குடும்பத்தை சமாளிக்க கணவனும் மனைவியும் வேலைக்கு சென்றாக வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே தங்களது வேலைகளை தாங்களே செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் குழந்தைகளுக்கு.

    7 கிலோ புத்தக பையை சுமந்து பள்ளிக்கு சென்று திரும்பும் மழலைகள் வீட்டுக்கு வரும் போது கதவு பூட்டப்பட்டு இருப்பதை பார்த்து மனதளவில் வாடித்தான் போவார்கள். வீடு வரும் குழந்தைகளை, ‘வா... செல்லம்..’ என்று அன்போடு அழைக்கவும், பள்ளிக்கு சென்று மாலையில் அழைத்து வரவும் கூட பெரும்பாலான வீடுகளில் யாரும் கிடையாது. சீருடைகளை களைந்து உடைமாற்றிய பின்னர் காலையில் அம்மா வைத்துவிட்டுப்போன எதையாவது பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் சாப்பிவிட்டு டியூஷனுக்கு புறப்பட்டு சென்றுவிட வேண்டிய நிலைதான் இந்த பிள்ளைகளுக்கு.

    இரவு எட்டு மணிக்கு டியூஷன் முடிந்து வீடு திரும்பும்போது அப்பாவும், அம்மாவும் வந்து சேருவார்கள். இரவு உணவை தயார் செய்வதற்காக தாய் கிச்சனுக்கு சென்றுவிட தந்தையோ மிச்சமுள்ள அலுவலக வேலைகளை பார்க்கவோ சோர்வில் தூங்கவோ தயாராகி விடுவார். பெற்றோர் இருந்தும் தனிமையில் வீழ்கின்றனர் சிறார்கள். அவர்களுக்குள்ள ஒரே ஆறுதல் டிவியும், அதன் ரிமோட்டும்தான். அவர்கள் மனம்போன போக்கிற்கு சற்று நேரம் பார்த்துவிட்டு இரவு உணவை சாப்பிட்டு தூங்க செல்ல வேண்டியதுதான். பள்ளியில் நடந்த நிகழ்வுகளையோ, நண்பர்களுடனான உரையாடல்களையோ, பாடம் குறித்த சந்தேகத்தையோ தீர்த்து வைக்க வீட்டில் அவர்களுக்கு யாரும் கிடையாது.

    மைதானத்துக்கு சென்று விளையாடுவது அறவே நின்று விட்டது; இந்த நிலையில் தான் தற்போதைய குடும்பங்கள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. எதற்காகவும் எதையும் விட்டுக்கொடுக்க முடியாத கட்டாயத்தில் பெண்களும் தள்ளப்பட்டுள்ளனர். வார விடுமுறை நாட்களில் குழந்தைகளோடு குதூகலமாக இருப்பது என்பது கூட சில பெண்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. குழந்தைகள் வீட்டில் இருக்கும் வார விடுமுறை நாட்களில் பணிக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பெற்றோர் நம்முடன் ஒரு நாள் கூட இருக்க மறுக்கிறார்களே என குழந்தைகளுக்கும், நம்மை புரிந்துகொள்ளவில்லையே என குழந்தைகள் மீது பெற்றோருக்கும் அதிருப்தி ஏற்படுகிறது. முடிந்தவரை இதுபோன்ற முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.

    குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க முயற்சிக்க வேண்டும். எப்படியாவது ஒரு நாளைக்கு சில நிமிடங்களையாவது குழந்தைகளுடன் பேசுவதற்கு ஒதுக்க வேண்டும். அப்போதுதான் ஒருவர் மனதில் இருப்பதை மற்றொருவர் புரிந்து கொள்ள முடியும். குழந்தைகளின் எண்ணவோட்டத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

    பெற்றோர் குழந்தைகளுக்கான இடைவெளி அதிகரித்துள்ளதால் குழந்தைகள் தன்னிச்சையாக செயல்பட துவங்குகின்றனர். இதன் காரணமாக அவர்களது கவனம் சிதறும் அபாயம் உள்ளது. மேலும் சில வீடுகளில் பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு குழந்தைகள் சரியாக மதிப்பளிக்காத நிலையும் உருவாகி வருகிறது. எனவே இந்த காலகட்டத்துக்கு ஏற்ப சூழ்நிலையை புரிந்துகொண்டு அமைதியான மனப்பக்குவத்தோடு குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

    சிறுவர்கள் பல் துலக்குவதற்கு பயன்படுத்தும் பற்பசை விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். அதிக அளவில் பற்பசையை பயன்படுத்துவது பற்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
    சிறுவர்-சிறுமியர்களை காலையில் பல் துலக்க வைப்பதே பெரும்பாலான பெற்றோருக்கு சவாலான விஷயமாக இருக்கிறது. மூன்று, நான்கு வயது கடந்த குழந்தைகள் பல் துலக்குவதற்கு சோம்பேறித்தனம் கொள்வார்கள். அவர்களுக்கு பெற்றோரே பல் துலக்கிவிடும் நிலையும் இருக்கிறது. அது ஒருபுறம் இருக்க, சிறுவர்கள் பல் துலக்குவதற்கு பயன்படுத்தும் பற்பசை விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். சிலர் டூத் பிரஷின் மேல்மட்ட பகுதி முழுவதும் பற்பசையை தடவி கொடுத்துவிடுவார்கள். அப்போதுதான் பற்களை நன்றாக சுத்தம் செய்ய முடியும் என்று நினைப்பார்கள். அது தவறானது.

    மூன்று முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பட்டாணி அளவில்தான் பற்பசையை தடவி கொடுக்க வேண்டும். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பட்டாணி அளவிலும் நான்கில் ஒரு பகுதி அளவுக்குத்தான் பற்பசையை உபயோகிக்க வேண்டும். அதுதான் குழந்தைகளின் பற்களுக்கு ஆரோக்கியமானது.

    அதிக அளவில் பற்பசையை பயன்படுத்துவது பற்களுக்கு தீங்கு விளைவிக்கும். பல் துலக்கு வதற்கு பயன்படுத்தும் பிரஷ் மென்மையானதாக இருக்க வேண்டும். மென்மையான பிரஷ்தான் பற்களுக்கு பாதுகாப்பு தரும். கடின பிரஷ்களை பயன்படுத்துவது பற்களின் ஈறுகளுக்கு பங்கம் விளைவித்துவிடும். குழந்தைகள் உபயோகப்படுத்தும் பிரஷ் தலைப்பகுதி ஒன்றரை அங்குலம் அளவில் இருப்பது நல்லது.

    குறைந்தபட்சம் இரண்டு நிமிடங்கள் வரையாவது பல் துலக்க வைக்க வேண்டும். ஆனால் நிறைய பேர் ஒரு நிமிடத்திற்குள்ளாகவே குழந்தைகளை பல் துலக்க வைத்துவிடுகிறார்கள். சில குழந்தைகள் பல் துலக்குவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள். அமெரிக்காவிலுள்ள நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் நடத்திய ஆய்வில் 38 சதவீத குழந்தைகள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு பற்பசை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. பட்டாணி அளவில்தான் பற்பசையை பயன்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.
    பச்சிளம் குழந்தைகளையும், ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்த குழந்தைகளையும் தூக்கும்போது பெற்றோரும், உறவினரும் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.
    குழந்தைகளைத் தூக்குவதற்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன. முக்கியமாக, பச்சிளம் குழந்தைகளையும், ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்த குழந்தைகளையும் தூக்கும்போது பெற்றோரும், உறவினரும் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். ஏனென்றால் குழந்தைகளுடைய கழுத்து எலும்பு, முதுகு தண்டுவடம், கை, கால் மூட்டு இணைப்புகள் முழு வளர்ச்சி அடைந்திருக்காது. மிக மிக மென்மையாக இருக்கும்.

    பச்சிளம் குழந்தைகளின் தலை நேராக நிற்பதற்கு நான்கிலிருந்து ஆறு மாத காலம் வரை ஆகலாம். எனவே, அந்தச் சமயத்தில் இன்னும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் கழுத்துக்குக் கீழே கையை சப்போர்ட்டாக வைத்தவாறுதான் தூக்க வேண்டும். அப்படி தூக்காதபட்சத்தில் கழுத்தில் சுளுக்கு, வலி ஏற்படும்.

    தண்டுவட எலும்புகள் அதனுடைய இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு நகர்ந்துவிடவும் கூடும். சுவாசக்கோளாறு ஏற்பட்டு, மூச்சுவிட சிரமப்படுவதும் நடக்கலாம். இத்தகைய சிரமங்களை அனுபவிக்கும் குழந்தை அழத் தொடங்குவதில் அதை உணர்ந்து கொள்ளலாம். குழந்தைகளை உயரே தூக்கும்போது, பூக்களை நுகர்வதைப்போல் நம் மூக்குக்கு நேராகக் கொண்டு போகும் பொசிஷனில் தூக்குவதே பாதுகாப்பானது. அப்படி செய்தால்தான் குழந்தையின் மூச்சுக்குழாய் பாதைக்கு இடையூறு எதுவும் ஏற்படாமல் இருக்கும். குழந்தைகளின் மூச்சுக்குழாய் முன்புறமோ, பின்புறமோ வேகமாக அசையக் கூடாது.

    குழந்தைகளைத் தூக்கும்போது, இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்வது நல்லது. அதாவது, வீணையை எப்படி பெரிதாக இருக்கும் பகுதி மேல்புறமாகவும், சிறிதாக உள்ள பகுதி கீழ்புறமாகவும் இருக்கும் வகையில் தூக்குவோம் இல்லையா? அதேபோன்று தலை மேல்நோக்கி இருக்குமாறும், கால்கள் இரண்டும் கீழே இருக்கும் நிலையிலுமே குழந்தைகளைத் தூக்க வேண்டும். பெரும்பாலானோர் குழந்தைக்கு பால் கொடுத்த பிறகு, ஏப்பம் வர வேண்டும் என்பதற்காக தோளில் தூக்கி வைத்துக்கொண்டு முதுகில் தட்டிக் கொடுப்பார்கள்.அவ்வாறு செய்யக் கூடாது.

    தோளில் வைத்திருக்கும்போது, குழந்தையின் வயிற்றுப்பகுதி அழுந்தாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளைத் தூக்கும்போது, தலை அசையாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்வதும் அவசியம். ஆறிலிருந்து எட்டு மாதங்கள் ஆன பிறகுதான் குழந்தை தானாக உட்கார ஆரம்பிக்கும். அந்தச்சமயங்களில் குழந்தைகளைத் தூக்கும்போது இரண்டு கைகளால் அக்குள் பகுதியை பிடித்தவாறு தூக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒரு கையால் குழந்தையைத் தூக்கக் கூடாது. அதேபோல் குழந்தையை ஒரு கையை மட்டும் பிடித்து இழுக்கவும் கூடாது.

    குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை பெரியவர்கள்தான் கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்களை செய்யக்கூடியவர்களாக பெற்றோர்கள் இருக்க வேண்டும்.
    குழந்தைகள் எதையும் எளிதில் கற்றுக்கொள்வார்கள். அதனால் அவர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களை பெரியவர்கள்தான் கற்றுக்கொடுக்க வேண்டும். அதை குழந்தைகள் கற்றுக்கொள்ளும்போதுதான் வாழ்க்கையில் வெற்றி பெற்று உயர்ந்த நிலையை அடைய முடியும். அதற்கான வழிகாட்டுதல்களை செய்யக்கூடியவர்களாக பெற்றோர்கள் இருக்க வேண்டும்.

    சின்னச்சின்ன நல்ல பழக்கங்கள்தான் உயர்ந்த இடத்தை ஒரு மனிதனுக்கு அளிக்கும். படிப்பு மற்றும் பணம் மட்டும் ஒருவன் மீது மதிப்பை ஏற்படுத்தி விடாது. மாறாக நல்ல பண்புகள் தான் ஒருவருக்கு மதிப்பையும், மரியாதையையும் பெற்றுத்தரக்கூடியது. அதிகாலையில் எழுவது, தன்னுடைய வேலைகளை தானே செய்துகொள்வது, சுத்தம் பேணுவது, பெரியவர்களை மதிப்பது, மற்றவர்களின் கருத்தை காது கொடுத்து கேட்பது போன்ற பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இது ஒவ்வொரு குழந்தையும் நல்லவர்களாக வளர காரணமாக இருந்திடும்.

    அதிகாலையில் எழுவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் உரிய நேரத்தில் தூங்கச்செல்வதும் முக்கியமானது. அதேபோல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு கொடுக்க வேண்டும். உணவை மீதமாக்காமல் தேவையான அளவுக்கு வாங்கி சாப்பிடவும் கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள பழக்க வேண்டும். அதை அவர்கள் எவ்வளவு சரியாக செய்து முடிக்கிறார்கள் என்பதையும் உடன் இருந்தே கவனிக்க வேண்டும். தவறு செய்கிறபோது அதை திருத்திக்கொள்ளவும், தோல்வியில் இருந்து மீண்டு வரவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

     உடலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணரச்செய்ய வேண்டும். உடல் தான் ஒரு மனிதனின் மிகப்பெரிய சொத்து ஆகும். அதற்கு சேதாரம் ஏற்பட்டால் வாழ்வு சுருங்கி விடும். எனவே உடற்பயிற்சிக்கும், விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அதை குழந்தைகளுக்கு மிகவும் எளிதாக கற்றுக்கொடுக்க வேண்டும்.

    ஆனால் அதே நேரத்தில் குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டியது தான் மிகமிக முக்கியமானது. அவர்கள் எந்த ஒன்றில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும். அதில் அவர்கள் முன்னேற வழிகாட்ட வேண்டும். விருப்பமான துறைகளில் பணியாற்றும்போது தான் ஒருவனின் வாழ்வு மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

    எனவே பெரியவர்கள் முடிவுகளால் மட்டுமே வளர்கிற குழந்தைகள் சுயமாக சிந்திப்பது இல்லை. அது மிகவும் ஆபத்தானது. எனவே சுயமாக சிந்தித்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குழந்தைகளுக்கு எப்போதும் திறந்து இருக்க வேண்டும். அதுதான் அவனை வெற்றியாளனாக உயர்த்தும். 
    குழந்தைகளின் முதுகு வலியின் பின்னணியில் உடல்ரீதியான பாதிப்புகள் இருக்கலாம். அதிலும் 4 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுள்ள குழந்தைகளுக்கு முதுகு வலி வந்தால் அதிக கவனம் அவசியம்.
    குழந்தைகளுக்கு வரும் முதுகு வலி என்பது பெரியவர்களுக்கு வரும் வலியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. குழந்தைகளின் முதுகு வலியின் பின்னணியில் உடல்ரீதியான பாதிப்புகள் இருக்கலாம். அதிலும் 4 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுள்ள குழந்தைகளுக்கு முதுகு வலி வந்தால் அதிக கவனம் அவசியம்.

    முதுகு வலியுடன் கீழ்க்கண்ட அறிகுறிகளும் இருந்தால் உடனே மருத்துவரைப் பாருங்கள். காய்ச்சல் மற்றும் எடை குறைவது, சோர்வு, மரத்துப் போகிற உணர்வு, வலியானது ஒரு காலிலோ அல்லது இரண்டு காலிலோ பரவுவது, சிறுநீரகம் சம்பந்தபட்ட கோளாறுகள், தூக்கமின்மை.

    குழந்தைகளின் முதுகுவலியை உடனடியாக கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால், அது வேறு விளைவுகளை உண்டாக்கிவிடும் அபாயம் உண்டு. எனவே, உங்கள் குழந்தைக்கு 3 நாட்களுக்கு மேல் முதுகு வலி இருந்தாலோ அல்லது வலி அதிகமானாலோ உடனே மருத்துவரைப் பாருங்கள்.

    காரணங்கள்

    குழந்தை விளையாடும்போது எலும்புகள் மற்றும் மூட்டுகளில் அடிபட்டதன் காரணமாகவும் முதுகு வலி வரலாம். பெரும்பாலான குழந்தைகள் தசைகளில் ஏற்படும் வலியையே முதுகு வலியாக உணர்கிறார்கள். போதுமான அளவு ஓய்வெடுப்பதன் மூலமே இந்த வலி சரியாகிவிடும். அரிதாக சில சமயங்களில் Osteoid osteoma என்கிற கட்டியின் காரணமாகவும் குழந்தைகளுக்கு முதுகில் வலி வரலாம்.

    இந்தக் கட்டியானது நடு முதுகு அல்லது அடி முதுகில் தான் வரும். வலி ஒரே மாதிரியாக இருந்துவிட்டு நாளாக ஆக அதிகரிக்கும். இதற்கு தாமதமில்லாத மருத்துவ சிகிச்சை அவசியம்.முதுகு பகுதியில் ஏதேனும் இன்ஃபெக்‌ஷன் ஏற்பட்டிருந்தாலும் வலி வரலாம். முதுகுப் பகுதியில் வீக்கம், சிவந்து போவது போன்றவையும் இருந்தால் இன்ஃபெக்‌ஷனாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும். அது உறுதி செய்யப்பட்டால் ஆன்டி பாக்டீரியா அல்லது ஆன்டி வைரல் மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.
    நன்றாக சாப்பிடும் குழந்தைகள் எடை அதிகரிக்காமல் ஒல்லியாகவே இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    நன்றாக சாப்பிடும் குழந்தைகள் எடை அதிகரிக்காமல் ஒல்லியாகவே இருப்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. குழந்தையை பத்திரமாகப் பெற்றெடுப்பதில் இருந்து அதன் பின் அவர்களைப் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வளர்ப்பது என அவர்களின் கவலைகள் நீண்டு கொண்டே செல்லும்.

    அம்மாக்களுக்கு இருக்கும் முக்கியமான கவலைகளில் ஒன்று குழந்தைகளின் எடை பற்றியது தான். ஏனெனில் குறைவான எடை அவர்களின் ஆரோக்கியக் குறைபாட்டின் அறிகுறி ஆகும்.  நீங்கள் என்ன தான் ஆரோக்கியமான உணவுகளைக் கொடுத்தாலும் குழந்தைகளின் எடை அதிகரிக்காமல் இருக்க சில காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    குழந்தைகள் எடை அதிகரிக்காமல் இருக்க முக்கியக் காரணம் போதுமான அளவு கலோரிகள் எடுத்துக் கொள்ளாதது தான். குழந்தைகள் பல்வேறு காரணங்களால் சாப்பாடு மீது வெறுப்பு காட்டுவதாலும், பெற்றோர்கள் அதனைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதனாலும் குழந்தைகளுக்குத் தேவையான கலோரிகள் கிடைப்பதில்லை. குறிப்பாகக் குழந்தைகள் தாய்ப்பால் சரியாகக் குடிக்காமல் இருப்பது தான் முக்கிய காரணம்.

    சில சமயம் குழந்தைகள் அதிகப்படியான வாந்தி பிரச்சினையால் போதுமான உணவை எடுத்துக் கொள்வதில்லை. இதற்குக் காரணம் குழந்தைகளுக்கு ஏற்படும் அமிலப் பிரச்சினைகள் ஆகும். இது குழந்தைகளின் தசைகளை பலவீனமாக்குவதோடு அவர்கள் எடையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    கணையச் செயல்பாடு சரியாக இல்லாத குழந்தைகளின் எடை அதிகரிக்க வாய்ப்பு இல்லை. இது போன்ற சிக்கல்களால் தளர்வான தசைகள், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். சில நோய்களும் குழந்தைகளின் எடை அதிகரிப்பதைத் தடுக்கின்றன. செலியாக் அல்லது க்ரோன் போன்ற குடல் நோய்கள் குழந்தைக்கு இருக்கும் போது அது எடை அதிகரிப்பைத் தடுக்கும்.

    சில குழந்தைகள் சுறுசுறுப்பாக இருப்பதே அவர்கள் எடை அதிகரிப்பைத் தடுக்கும். கலோரிகள் அதிகம் எரிக்கப்படும் போது குழந்தை களின் எடை அதிகரிக்காது.

    ஹைப்பர் ஆக்டிவ் ஆக இருக்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஒல்லியாகத் தான் இருப்பார்கள்.

    சில சமயம் சிறுநீரகக் கோளாறுகள் கூட குழந்தையின் எடையில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

    சிறுநீரகக் கற்கள் மற்றும் கோளாறுகளால், எடை மட்டுமின்றி குழந்தைகளின் மற்ற வளர்ச்சி களிலும் தடங்கல் ஏற்படும்.

    குழந்தைகளின் மரபணுக்களும் அவர்களின் எடையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அவர்களின் மரபணுக்களில் உள்ள சில மூலக்கூறுகள் அவர்களின் எடை அதிகரிப்பைத் தடுக்கக் கூடும்.
    பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளிடம் அன்பை முதலீடாக்கி, ஆரோக்கியத்தை மேம்படுத்தி வளமான சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்க வேண்டும்.
    ஒவ்வொரு வீட்டையும் அழகு சேர்ப்பவர்கள் குழந்தைகள் தான். கள்ளங்கபடம் இல்லாத குழந்தைப்பருவம் திரும்பவும் வராதா? என ஏங்குபவர்கள் நம்மில் பலர் உள்ளனர். எந்த ஒரு பிரச்சினையையும் உடனே மறப்பதனால் தான் குழந்தையை தெய்வத்திற்கு ஒப்பிடுகிறோம். இன்றைக்கு சமுதாயத்தில் எல்லோராலும் கேட்கப்படும் கேள்வி என்னவென்றால் உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? அவர்கள் என்ன படிக்கிறார்கள்? என்பதுதான்.

    குழந்தைகள் பள்ளியில்தான், பிறருக்கு கொடுத்து உதவும் மனப்பான்மை, விட்டுகொடுப்பது போன்ற நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். பல்வேறு போராட்டங்களுக்கு பின் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளியில் சேர்க்கின்றனர். ஆனால் தங்கள் குழந்தைகள் எந்த வகுப்பில் படிக்கிறார்கள்? அவர்களின் ஆசிரியர் யார்? என்ற விவரங்கள் பெரும்பாலான பெற்றோர்களுக்கு தெரியவில்லை.

    வேலைக்குச் செல்லும் பெற்றோர்களில் சிலர் பள்ளியில் குழந்தைகளை சேர்த்து விட்ட பிறகு பள்ளியை எட்டி பார்ப்பதே இல்லை. குழந்தைகளை பள்ளியில் உரிய வயதுக்கு முன்னரே அவசர, அவசரமாக சேர்த்து விடுகின்றனர். முன்பெல்லாம் குழந்தைகள் ஆறு வயதில் தான் பள்ளிக்குச் சென்றார்கள். இன்றோ இரண்டு மூன்று வயதிற்குள் பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள். போட்டி நிறைந்த உலகில் நம்முடைய குழந்தை முதலாவுதாக படித்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம்.

    குழந்தைகளை அவர்களின் இயல்பில் வளர விடாமல், சாவி கொடுத்தால் ஓடும் பொம்மை போல வளர்க்கிறார்கள். இதற்காக சில பெற்றோர்கள் தனக்கு தெரிந்தவற்றையெல்லாம் குழந்தைகளிடம் திணிக்கிறார்கள்.

    எனக்கு தெரிந்த ஒரு குழந்தைக்கு மூன்று வயது. அவனுடைய தந்தைக்கு ஐந்து மொழிகள் பேசத் தெரியும். அதனால் அந்த குழந்தையிடம் பேசும் போது ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மொழியில் பேசினார். விளைவு குழந்தையால் எந்த மொழியையும் சரி வர பேச இயலவில்லை. கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறுவதற்குப் பதிலாக நாம் என்ன கேட்கிறோமோ? அதையே திரும்ப பேச ஆரம்பித்தான் .

    அவன் தாய் மொழி தமிழையே பேசுவதற்கு நீண்ட நாட்களானது. பொதுவாக 3 வயது நிரம்பிய குழந்தைகளுக்கு அவர்களின் தாய் மொழி மட்டுமே போதுமானது. குழந்தைகள் பேசத் தொடங்கும் போது பல மொழிகள் பேசுவதால் அவர்களுக்கு நாம் எந்த மொழியை பின்பற்ற வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தைகளை அவர்களின் வயதிற்கேற்ப புரிந்து கொண்டு வளர்க்க வேண்டும்.

    சில குழந்தைகள் ஒரு வயதில் கூறக்கூடிய அம்மா, அப்பா, தாத்தா போன்ற சாதாரண வார்த்தைகளை கூட 3 வயதில் மழலையர் பள்ளியில் வந்து தான் பேசுவது மிகவும் வேதனையான ஒன்று.

    ஒரு குழந்தை பிறக்கும்போதே இவன் என்ஜினீயர் தான், டாக்டர்தான் என முடிவு செய்யும் பெற்றோர்கள், அந்த குழந்தையிடம் பள்ளியில் என்ன நடந்தது? என்று கேட்பதில்லை. குழந்தையிடம் கொஞ்சு பேசுவது எப்படி? என்பதையே சிலர் மறந்து விட்டனர்.

    சில வீடுகளில் தாயும், தந்தையுமே பேசாமல் இருப்பார்கள். இதனால் அந்த குழந்தை மனதளவில் மிகவும் பாதிக்கப்படும். இதனால் பள்ளி படிப்பில் கவனம் செலுத்த முடியாது. எனவே பெற்றோர்கள் குழந்தைகளிடம் தங்களது பிரச்சினையை வெளிக்காட்டக் கூடாது.

    முன்னொரு காலத்தில் குழந்தையை கவனித்து கொள்வதற்கு தாத்தா, பாட்டி இருந்தார்கள். அவர்கள் குழந்தைகளுக்குத் தேவையான நல்லது கெட்டது கற்று கொடுத்தார்கள். இன்று வீடுகளில் குழந்தைகளுக்கு நல்லது, கெட்டது சொல்லி கொடுப்பது இல்லை.

    இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதனால் குழந்தைகளை வேலைக்காரர்களின் பொறுப்பிலோ, மழலையர் விடுதிகளின் பொறுப்பிலோ விட்டு விடுகின்றனர். அந்த குழந்தை பெற்றோர்களின் அன்புக்காக ஏங்குகிறது.

    அதிலும் பதின்ம வயது குழந்தைகளை வளர்ப்பது பெரும் சவாலாகவே உள்ளது. தங்களுடைய நண்பர்களுக்குத் தான் எல்லாம் தெரியும் என நினைக்கும் பருவம். பெரும்பாலான பெற்றோர்கள் அவர்கள் கூறுவதை காது கொடுத்து கேட்க மறுக்கிறார்கள். பருவ வயது தடுமாறுவதற்கு காரணம் இணையம் எனும் இணையில்லாக் கருவி என்று சொன்னால் மிகையாகாது.

    அந்த நாளில் பெரியவர்கள் தங்கள் அனுபவத்தால் குழந்தைகளை வளர்த்தார்கள். ஆனால் இன்று அறிவியலால் குழந்தைகள் வளர்கிறார்கள். அதனால் இதில் குழந்தைகளிடையே சில ஏற்றத் தாழ்வுகள் இயல்பாகவே உள்ளது.

    இணையத்தில் பல நல்ல கருத்துகள் இருந்தாலும் கூட வேண்டாத கருத்துகளும் பின்னி பிணைந்து உள்ளன. பருவ வயது குழந்தைகள் ஒன்றும் அன்னப்பறவைகள் அல்ல. நீரை விட்டு பாலை அருந்துவதற்கு. வயது வந்த பின் அறிய வேண்டியவற்றை குழந்தைகளாக இருக்கும் போதே தெரிந்து கொள்ள முயற்சிப்பதால் அவர்கள் மனதளவில் கடும் பாதிப்புக்கு உள்ளாகு கிறார்கள். நல்ல வேளையாக சில மாதங்களுக்கு முன்னால் அம்மாதிரியான வலைத்தளங்களை அரசு முடக்கியது சற்று ஆறுதலை தந்துள்ளது.

    இருபது வருடங்களுக்கு முன்னால் தொலைக்காட்சி மற்றும் திரையரங்குகள் மட்டுமே இருந்தது. திரையரங்குகளில் படம் பார்ப்பதற்கு அப்போது பணம் இல்லை. தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளும் குறைவாகவே இருந்தன. தொலைக்காட்சி பெட்டிகளை வைத்திருந்தோரும் மிகச் சிலரே. இதனால் குழந்தைகள் அதிகப்படியான நேரத்தை வெளியே விளையாடச் செல்லுவதிலேயே கழித்தார்கள். அதனால் உடலளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருந்தார்கள்.

    இன்றைய நிலையில் குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவது இல்லை. எந்நேரமும் கையில் தவழும் அலைபேசியோடு பொழுதைக் கழிக்கிறார்கள். திரையரங்கமும், தொலைக்காட்சியும் அலைபேசியில் அடங்கி விட்டது. ஓடி ஆடி விளையாட வேண்டிய வயதில் அலைபேசியோடு விளையாடுவதால் அவர்களின் உடலும், உள்ளமும் பாதிக்கப்படுகிறது.

    குழந்தைகளின் அழுகையை நிறுத்த பொம்மைகளை கொடுத்த காலம் மாறி, விலை உயர்ந்த அலைபேசியை கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அன்றைய காலத்தில் வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் இன்றோ ஆளுக்கொரு அலைபேசியோடு பேசிக்கொண்டும், பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். அதனால் குடும்ப உறவுகளுக்கும் விரிசல்கள் உண்டாகிறது.

    குழந்தைகள் தினம் அன்று அவர்களின் அடிப்படை உரிமைகள், கல்வியின் உறுதிநிலை குறித்து அரசு தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது இவையெல்லாம் பற்றி குழந்தைகளுக்கு தெரியப்படுத்துவதை பெற்றோரும், ஆசிரியரும் கடமையாகக் கொள்ள வேண்டும். எனவே பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளிடம் அன்பை முதலீடாக்கி, ஆரோக்கியத்தை மேம்படுத்தி வளமான சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்க வேண்டும்.

    கே.சீதாலட்சுமி, ஆசிரியை
    குழந்தைகள் வீட்டில் தனி அறையில் உட்கார்ந்து, தனியாக டிவி பார்த்தால் உடல் எடை அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்று முடிவு வெளியிட்டுள்ளது.
    தற்போதைய நாகரிக வளர்ச்சி காலத்தில், பிரைவசி என்ற பெயரில் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தனி அறையையும் அதில் கார்ட்டூன் சேனல்கள் பார்ப்பதற்கான வசதியையும் செய்து கொடுக்கிறார்கள்.

    குழந்தைகளும் அதை முதலில் ஒருவித தயக்கத்தோடு ஏற்றுக்கொண்டு, பின் அதுதான் நம்முடைய உலகம் என்று முழுமனதாக ஏற்று, அதிலேயே மூழ்கிப் போய்விடுகிறார்கள்.

    அடுத்து பெற்றோர்கள் வேலைக்குப் போய்விட்டு வரும்வரை, தங்களுடைய அறைக்கதவை மூடிக்கொண்டு மணிக்கணக்கில் டிவி பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

    அப்படி குழந்தையாக இருக்கும்போது, தனியாக அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பிப்பவர்கள் வளர்ந்த பிறகு, அதுவே மிகப்பெரிய அளவில் உடல்நலக் கோளாறுகள் உண்டாகக் காரணமாக அமைகின்றன.

    குறிப்பாக, அளவுக்கதிகமாக உடல் எடை கூடிவிடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரே வயதில் உள்ள டிவி பார்த்த குழந்தைகளுக்கும் டிவி பார்க்காத குழந்தைகளுக்குமான உடல் எடை சரிபார்க்கப்பட்ட போது, அதில் மிகப்பெரிய வித்தியாசத்தைப் பார்க்க முடிந்தது.

    தனி அறையில் தனிமையில் டிவி பார்க்கும் குழந்தைகளின் உடல் எடை மற்ற குழந்தைகளின் எடையை விட கூடுதலாக இருப்பது தெரிய வந்தது.

    அதனால் குழந்தைகளை மனிதர்களோடு அதிக நேரம் பழக விட வேண்டும். அவர்களுடைய வேலையை அவர்களாகவே செய்துகொள்ளப் பழக்க வேண்டும். 
    குழந்தைகள் தனியறையில் படுப்பது அவர்களது உடல், மன வளர்ச்சிக்கு நல்லதா, கெட்டதா? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குழந்தைகள் தனியறையில் தூங்குவதை `பெட்ரூம் கல்ச்சர்’ என்று அவர்கள் அழைக்கிறார்கள். மேலைநாடுகளில் மட்டுமல்ல, நம் ஊரிலும்கூட இப்போது இந்தக் கலாசாரம் வேகமாகப் பரவிவருகிறது. இங்கேயும்கூட வயது வந்த பிள்ளைகளில் பலர் அவர்களுக்கான தனி அறையில்தான் தூங்குகிறார்கள்.
    இப்படி குழந்தைகள் தனியறையில் தூங்குகின்ற இந்த பெட்ரூம் கல்ச்சர் நம் ஊரிலிருக்கும் குழந்தைகளுக்கு சரிவருமா… குழந்தைகள் தனியறையில் படுப்பது அவர்களது உடல், மன வளர்ச்சிக்கு நல்லதா, கெட்டதா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

    குழந்தைகள் தனியறையில் இருப்பது கெட்டது என்றோ, பெற்றோருடன் சேர்ந்திருப்பது நல்லது என்றோ எதுவும் கிடையாது. ஒரு குடும்பத்தின் பொருளாதார நிலையைப் பொறுத்து இதை இரண்டுவிதங்களாகப் பார்க்கலாம். குழந்தை அதிகச் சிரமமில்லாமல் வளர வேண்டும் என்பதற்காகத் தனியறை ஒதுக்கும் பெற்றோர் இருக்கிறார்கள். குடும்பக் கஷ்டம் தெரிந்து வளர வேண்டும் என்பதற்காக, குழந்தைகளை தங்களுடன் ஒரே அறையில் படுக்கவைத்துக்கொள்ளும் பெற்றோரும் இருக்கிறார்கள். இது அந்தந்தக் குடும்பத்தின் சூழ்நிலை சார்ந்த அணுகுமுறை.

    குழந்தைகள் தனியாகப் படுத்தால் நல்லதல்ல, தனியறையில் இருப்பதால் அவர்கள் தனித்துவிடப்படுவார்கள் என்கிற கூற்றும் உண்மையல்ல. ஒரே அறையில் எல்லோரும் ஒன்றாகப் படுத்துக்கொண்டு குழந்தைகளைத் தனித்துவிடுவதுதான் பிரச்னை. குழந்தைகளுடன் பெற்றோர் நிறைய பேச வேண்டும், அன்பு செலுத்த வேண்டும். அவர்களுடன் நல்ல தொடர்பிலிருக்க வேண்டும். 



    தொலைதூரத்தில் படிக்கச் செல்லும் சில குழந்தைகள் பெற்றோர் நினைவுடனேயே இருப்பார்கள். பெற்றோருடன் வசிக்கும் சில குழந்தைகள் அவர்களை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். எனவே, தூரம் ஒரு பொருட்டில்லை. தனி அறை ஒரு விஷயமே அல்ல. எவ்வளவு தள்ளி இருந்தாலும் பெற்றோர்-பிள்ளை உறவு அன்பானதாகவும், நம்பிக்கைக்குரியதாகவும், ஒளிவு மறைவு இல்லாததாகவும்,  `கம்போர்ட் ஸோன்’ (Comfort Zone) ஆகவும் இருக்க வேண்டும்.

    இப்படியாக அவர்களுக்கிடையே நல்ல புரிந்துணர்வு இருந்தால், தன் பெற்றோர் சார்ந்த நல்ல நினைவுகள் குழந்தைகளை நல்லமுறையில் வழிநடத்தும்.
    பதின்பருவக் குழந்தைகளுக்கு காலையில் நடந்த ஏதோ ஒரு நிகழ்வு குறித்த பயம், குழப்பம், சந்தேகம், நிம்மதியற்ற உறக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். அதிலும் தனியாகத் தூங்கும்போது இந்த உணர்வுகள் அவர்களை அதிகமாக அலைக்கழிக்கும் சூழல்கூட ஏற்படலாம். அப்படியொரு சூழல் ஏற்பட்டால், அதைக் கண்டு பெற்றோர் பதற்றப்படத் தேவையில்லை. குழந்தை தன்  பிரச்னை குறித்து உங்களிடம் பேசுமளவுக்கு அவர்களுக்குத் தேவையான சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டும்.

    ஒரு குழந்தைக்குப் பிரச்னை இருந்தால், அந்தக் குழந்தை ஒரே அறையில் பெற்றோருடன் படுத்திருந்தால்கூட பயம், தனிமை உணர்வுடன்தான் இருக்கும் என்கிற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

    சிறந்ததொரு வழிகாட்டியாக நம்மால் இருக்க முடியும். பதின்பருவ வயதில் குழந்தைகள் சில நேரம் சறுக்கத்தான் செய்வார்கள். அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்க முயற்சி செய்யுங்கள். மற்றபடி தனியறைக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் மனச்சிக்கலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
    குழந்தைகள் முழுமையாக நிப்பிளுக்கு அடிமையாவதற்கு முன்னர் அதனை பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மை மற்றும் தீமை பற்றி அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
    பலர் குழந்தையின் அழுகையை நிறுத்த நிப்பிள் பயன்படுத்துகின்றனர். அல்லது விரல் சப்புவதைத் தடுக்க நிப்பிள் பயன்படுத்துகின்றனர். குழந்தைகளுக்கு நிப்பிள் பயன்படுத்துவது நல்லதா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

    நிப்பிள் அறிமுகத்தால் தாய்பால் குடிப்பதில் தடை உண்டாகலாம். பார்ப்பதற்கு இரண்டும் ஒரே விதமாக இருந்தாலும் நிப்பிள் மற்றும் தாய்ப்பால் உறிஞ்சுதலில் வேறுபாடு உண்டு. மேலும் இந்த வேறுபாட்டை குழந்தைகள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள். மத்திய காது பகுதியில் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. நீண்ட காலம் நிப்பிள் பயன்படுத்துவதால் பற்கள் தொடர்பான கோளாறுகள் தோன்றலாம். இரண்டு வருடங்களுக்கு மேல் நிப்பிள் பயன்படுத்துவதால் பல்வரிசை நேர்த்தியாக இல்லாமல் இருக்கும் வாய்ப்புகள் உண்டு, நீண்ட காலம் நிப்பிள் பயன்படுத்துவதால் குழந்தை தாய்ப்பாலை மறப்பது கடினமாக இருக்கலாம். அந்த தருணத்தில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

    குழந்தைக்கு நிப்பிள் பயன்படுத்தத் தொடங்குபோது சிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். குழந்தை தாய்ப்பால் குடிப்பதை பற்றி நன்கு தெரிந்து கொண்ட பிறகு நிப்பிள் பயன்படுத்தத் தொடங்குங்கள். தாய்ப்பால் பருகுவதில் எந்த ஒரு இடையூறும் நேராதபடி சரியான இடைவெளியில் தாய்ப்பால் புகட்டுவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். குழந்தை பால் குடித்து முடித்த பின்னர் அல்லது தாய்ப்பால் குடிக்கும் இடைவெளியில் நிப்பிளை பயன்படுத்துங்கள்.

    குழந்தைக்கு நிப்பிள் பயன்படுத்துவதில் ஆர்வம் இல்லாமல் இருந்தால் அதனை கட்டாயப்படுத்தி பயன்படுத்த வேண்டாம். மேலும், குழந்தை உறங்கும்போது வாயில் இருந்து நிப்பிள் விழுந்துவிட்டால், அதனை மறுபடி வாயில் திணிக்க வேண்டாம்.

    குழந்தையின் வயதுக்கு ஏற்ற நிப்பிள் அளவை உபயோகப்படுத்துங்கள். அடிக்கடி நிப்பிளை மாற்றி விடுங்கள்.
    குழந்தைகளின் நகங்களை வெட்டுவதும், காதை சுத்தம் செய்வதும் எவ்வளவு சிரமமான விஷயம் என்று தாய்மார்களுக்குத்தான் தெரியும். குழந்தையின் நகத்தை வெட்டும் போது கவனிக்க வேண்டியவை.
    குழந்தைகள் மென்மையானவர்கள். அவர்களின் பராமரிப்பிலும் தாய்மார்கள் மென்மையை கடைபிடிக்க வேண்டும். குழந்தைகளின் நகங்களை வெட்டுவதும், காதை சுத்தம் செய்வதும் எவ்வளவு சிரமமான விஷயம் என்று தாய்மார்களுக்குத்தான் தெரியும். அந்த விஷயங்களில் உங்களுக்கு உதவும் எளிய டிப்ஸ் இதோ…

    * குழந்தைகள் விளையாடும் வேளைகளில் அதிகமாக நகங்களை பயன்படுத்துவதால் அதில் ஏராளமாக அழுக்கு படியும். இதனால் நோய் தொற்ற வாய்ப்பு உண்டு. எனவே அதிகமாக வளரும் நகங்களை அவ்வப்போது வெட்டிவிடுவது சிறந்தது.

    * குழந்தைகளின் நகங்களை வெட்ட சரியான நேரம் அவர்கள் தூங்கும் வேளைதான். இல்லாவிட்டால் அவர்கள் வளைந்து, நெளிந்து ஆர்பாட்டம் நடத்துவார்கள். பிறகு அழுகையையும் நிறுத்த முடியாது.

    * குளிப்பாட்டியவுடன் குழந்தைகளின் நகம் மேலும் மென்மையாக மாறிவிடும் என்பதால் அப்போதும் நகங்களை நறுக்கலாம்.

    * குழந்தைகளுக்கு வேகமாக நகம் வளர்ந்து விடும் என்று சொல்வார்கள். அது உண்மையல்ல. மெதுவாகவே வளரும். 2 வாரங்களுக்கு ஒரு முறை நகங்களை வெட்டிவிடலாம்.



    * குழந்தைகளின் கால் நகங்கள், கை நகங்களைவிட மெதுவாகத்தான் வளரும். அதுவும் மிருதுவாகத்தான் இருக்கும். கால்நகங்களை அதிகமாக பயன்படுத்துவதில்லை என்பதால் அடிக்கடி வெட்டிவிட வேண்டிய அவசியமில்லை. நன்றாக வளர்ந்தபிறகு கத்தரிக்கலாம்.

    * நகங்களை வெட்டுவதற்கு குழந்தைகளுக்கான `நெயில்கட்டர்’ கருவியை பயன்படுத்தலாம். கத்தரிக்கோல் கொண்டு வெட்டுவது, சாணைக்கல்லில் நகங்களை உரசுவது போன்றவை கூடாது.

    * காதுகளை சுத்தம் செய்ய சுத்தமான துணியை லேசாக தண்ணீரில் நனைத்து காதை துடைத்தால் போதும். காதுக்குள் குடைந்து எடுக்க வேண்டாம்.

    * காதுகளில் மயிர்க்கால்கள் வளர்வதை உணர்ந்தால் அதை நீங்களே அகற்ற முயற்சிக்க வேண்டாம். குழந்தைகள் நல மருத்துவரை அணுகவும்.

    * காதுக்குள் சொட்டு மருந்துகள் எதையும் டாக்டர்களின் ஆலோசனையின்றி விடவேண்டாம்.

    * கண்களை சுத்தபடுத்தும்போது சுத்தமான துணியை வெதுவெதுபான நீரில் முக்கி பிழிந்துவிட்டு கண்ணின் சுற்றுபுறத்தை துடைத்தால் போதும். சோப்பு கொண்டு கண்களை கழுவக்கூடாது.

    ×