search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chief Minister Rangaswamy"

    • புதுவை அருகே கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் உள்ள அவரின் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • புதுவை மாநில தி.மு.க. சார்பில் மாநில அமைப்பா ளர் சிவா தலைமையில் பாரதி பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பாரதி பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திரபிரியங்கா, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ. ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதைத்தொடர்ந்து கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் உள்ள அவரின் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    புதுவை மாநில பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் ராஜா தியேட்டர் அருகிலிருந்து ஊர்வலம் கிளம்பியது. பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் தலைமை வகித்தார். பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், சிவசங்கர், அசோக்பாபு, ராமலிங்கம், வெங்கடேசன், வெற்றிச்செல்வன், செல்வம் ஆகியோர் ஊர்வலமாக வந்து பாரதி பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    புதுவை மாநில தி.மு.க. சார்பில் மாநில அமைப்பா ளர் சிவா தலைமையில் பாரதி பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

    முன்னதாக லப்போர்த் வீதியில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால்கென்னடி, செந்தில்குமார், சம்பத், துணை அமைப்பாளர்கள் தைரியநாதன், கல்யாணி கிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, சண். குமரவேல், மூர்த்தி, லோகை யன், ஜெ.வி.எஸ். ஆறுமுகம் என்கிற சரவணன், காந்தி, அருட்செல்வி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிர மணியன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி, வைத்தியநாதன்

    எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க் கள் நீலகங்காதரன், அனந்தராமன், காங்கிரஸ் நிர்வாகிகள் இளையராஜா, கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    அ.தி.மு.க. சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் தலைமை கழகத்திலிருந்து அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்தனர். அம்பேத்கர் சாலையில் உள்ள அவரின் சிலைக்கும், பாரதிபூங்காவில் உள்ள சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாராமன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், கணேசன், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், துணைச் செயலாளர்கள், கருணா நிதி, கணேசன், மூர்த்தி, நாகமணி, காந்தி, கிருஷ்ணமூர்த்தி உட்படபலர் கலந்து கொண்டனர்.

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்து பாரதி பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • புதுவை அரசு சுகாதார துறையுடன் இணைந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் சேவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.
    • ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பாளர் ஜெய்சீங், துணை முதல்வர் அருணாச்சலம், இணை பதிவாளர் பெருமாள், துணை மருத்துவ கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் நிகழ்நிலைப் பல்கலைக்கழகம் கீழ் செயல்படும் புதுவை கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, புதுவை அரசு சுகாதார துறையுடன் இணைந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் சேவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலு, அலுவலக சிறப்பு அதிகாரி சாவித்திரி, முதல்-அமைச்சர் தனி செயலர் அமுதன், ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பாளர் ஜெய்சீங், துணை முதல்வர் அருணாச்சலம், இணை பதிவாளர் பெருமாள், துணை மருத்துவ கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த ஒப்பந்தத்தின் படி ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் அபிஷேகப்பாக்கம், அரியாங்குப்பம், ரெட்டியார்பாளையம், முதலியார்பேட்டை ஆகிய சுகாதார நிலையத்தில் மருத்துவ சேவைகள் செய்வார்கள் என தெரிவித்துள்ளனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி, குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணகுமார் ஆகியோர் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்டனர்.
    • 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தனர்.

    புதுச்சேரி:

    ஊசுடு தொகுதி குருமாம்பேட் பகுதியில் எழுந்தருளியுள்ள புற்று மாரியம்மன் கோவில் மற்றும் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண விழா விமர்சையாக நடைபெற்றது.

    இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணகுமார் ஆகியோர் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்டனர்.

    பிரத்தியேகமாக உரு வாக்கப்பட்ட இடத்தில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஊசுடு தொகுதி பா.ஜனதா தலைவர் சாய்.தியாகராஜன், ஊசுடு தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள், கோவில் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவையில் 2021 சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
    • இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவையில் 2021 சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

    தேர்தலுக்கு பின் தமிழகத்தில் அ.தி.மு.க. எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது. புதுவையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. இருப்பினும் அ.தி.மு.க. கூட்டணியான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    அ.தி.மு.க. கட்சிக்குள் நிலவிய குழப்பம் காரணமாக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற ரங்கசாமி அ.தி.மு.க. கட்சித் தலைவர்களை சந்திக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்வு செல்லும் என ஐகோர்ட்டும் தீர்ப்பளித்தது. இதையடுத்து அ.தி.மு.க.வினர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இன்று காலை 9 மணிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி போன் மூலம் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டார். அப்போது, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பதவி ஏற்றதற்கு தனது வாழ்த்துக்களை ரங்கசாமி தெரிவித்தார்.

    • உள்ளூர் அதிகாரிகள் பயன் பெற முடியாமல் உள்ளது. பதவி உயர்வு கூட கிடைப்பதில்லை. உள்ளூர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தருவதில்லை.
    • யூ.பி.எஸ்.சி.யில் அடாக்கில் அதிகாரிகள் ஓராண்டுதான் இருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம் வருமாறு:சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு:-

    ஐ.ஏ.எஸ்.14, ஐ.பி.எஸ். 9, ஐ.எப்.எஸ். 3 பேர் இருந்தும் மக்கள் பணிகளை செய்யவில்லை. 1967 மக்கள் கணக்குப்படி பதவிகள் உள்ளன. உள்ளூர் அதிகாரிகள் பயன் பெற முடியாமல் உள்ளது. பதவி உயர்வு கூட கிடைப்பதில்லை. உள்ளூர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தருவதில்லை.

    சி.டி.சி. முறையில் ஊதிய உயர்வு சலுகைகள் இல்லை. கூடுதல் பொறுப்பில் 23 பி.சி.எஸ். அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களால் முழுமையாக கவனம் செலுத்த இயலாது. துறைத்தலைவர்கள் இல்லை என்றால் ஊழியர்கள் ஒழுங்காக வேலை செய்ய இயலாது என்றார்

    முதல்-அமைச்சர் ரங்கசாமி: தேவைப்பட்ட இடத்தில் அதிகாரிகள் நிரப்புவோம். சி.டி.சி. முறையில் பெரிய குறை உள்ளது. அடாக் மூலம் தர தொடங்கிய. உள்ளோம். யூ.பி.எஸ்.சி.யில் அடாக்கில் அதிகாரிகள் ஓராண்டுதான் இருக்க வேண்டும் என கூறியுள்ளனர். ரெகுலைஸ் பண்ணாததால் இத்தகைய பிரச்சினை உள்ளது. கே.எஸ்.பி. ரமேஷ்- தலைமைச்செயலர் என்ன முடிவு எடுக்க போகிறார்.?

    முதல்-அமைச்சர் ரங்கசாமி: உடன் செய்ய முடியாது. சில மாற்றங்கள் செய்ய வேண்டும். கடந்த ஆட்சியில் தலைமைச் செயலர் காட்டிய வழியால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே எண்ணத்தில் தற்போதுள்ள தலைமை செய்லாளரும் உள்ளார்.

    சட்டப்படி அவர் செய்துள்ளார். பல சங்கடங்கள் இருக்கிறது. அதை வெளிப்படுத்த முடியாது. நடந்து கொண்டுள்ள பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் தெளிவாக கருத்து சொல்லி உள்ளனர். குறைபாடுகள் நிறைய சொல்லி உள்ளனர். நிர்வாகத்தில் உள்ளது உண்மைதான். இதில் கவனம் செலுத்தி நடைமுறை சிக்கல்கள் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    • வேளான் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 33-வது வேளாண் திருவிழா பூக்கள், காய்கறிகள், பழங்களுக்கான கண்காட்சி ஏ.எப்.டி. திடலில் 3 நாட்கள் நடைபெற்றது.
    • காய்கறி தோட்டம், கல்லூரி வளாக தோட்டம், போன்சாய் மரங்கள் போன்றவை இப்போட்டியில் பங்குபெற்று காண்போரை வியப்படைய செய்தது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் வேளான் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 33-வது வேளாண் திருவிழா பூக்கள், காய்கறிகள், பழங்களுக்கான கண்காட்சி ஏ.எப்.டி. திடலில் 3 நாட்கள் நடைபெற்றது.

    இதில் புதுவை மணக்குள விநாயகர் என்ஜீனியரிங் கல்லூரியின் கீழ் இயங்கும் வேளாண் கல்லூரி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டனர். குறிப்பாக, காய்கறி தோட்டம், கல்லூரி வளாக தோட்டம், போன்சாய் மரங்கள் போன்றவை இப்போட்டியில் பங்குபெற்று காண்போரை வியப்படைய செய்தது.

    மேலும், சுமார் 12 பிரிகளில் பரிசுகளை பெற்றதுடன், இப்போட்டிக்கான சுழற்சி முறை கோப்பையையும் வென்றனர்.

    இறுதி நாளில், முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு, வெற்றிபெற்றவர்களுக்கு கோப்பைகளை வழங்கி வாழ்த்தினர்.

    வெற்றி கோப்பையை மணக்குள விநாயகர் வேளாண் கல்லூரி முதல்வர் முகமது யாசின் முதல்வரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.

    இவ்விழாவில் வேளாண் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும், வெற்றிபெற்ற மாணவர்கள், வெற்றி கோப்பையை மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலான் இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாரன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி ஆகியோரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

    • புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் பல ஆண்டு காலமாக பணிபுரிந்து வரும் அங்கன்வாடி ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்ய வேண்டும், நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
    • இதற்கான பணி ஆணையை வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் முன்னிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் பல ஆண்டு காலமாக பணிபுரிந்து வரும் அங்கன்வாடி ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்ய வேண்டும், நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இது சம்பந்தமாக துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் மதிப்பு ஊதியத்தில் பணிபுரிந்து வருகிற 27 அங்கன்வாடி ஊழியர்கள், 23 அங்கன்வாடி உதவியாளர்கள் என 50 ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

    பணிநிரந்தரம் செய்யப் பட்ட 27 அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதியம் ஒரு மாதத்திற்கு ரூ.6 லட்சத்து 21 ஆயிரமும், 23 உதவியாளர்களுக்கு ஊதியம் ஒரு மாதத்திற்கு ரூ.5 லட்சத்து 11 ஆயிரமும் மொத்தம் ஒரு மாதத்திற்கு ரூ.11 லட்சத்து 32 ஆயிரம் சம்பளம் வழங்கப்படவுள்ளது.

    இதற்கான பணி ஆணையை வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் முன்னிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார். பணி ஆணையை பெற்றுக் கொண்ட அங்கன்வாடி ஊழியர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆகியோரின் காலில் விழுந்து ஆணையை பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தனர்.

    • உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட சின்ன வாய்க்கால் வீதியை மேம்படுத்தும் பணி மற்றும் வாய்க்கால் கல்வெட்டுகள் புதுப்பிக்கும் பணி, புதிய வாய்க்கால் கல்வெட்டுகள் அமைக்கும் பணி, பாதாள கழிவுநீர் தொட்டிகள் புதுப்பிக்கும் பணி உள்ளிட்ட பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.3 கோடியே 81 லட்சம் நிதி உதவியுடன் நடைபெறுகிறது.
    • புதுவை பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்ட பிரிவு மூலம் பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜை அண்ணாசாலை சின்ன வாய்க்கால் வீதி இணைப்பு பகுதியில் நடந்தது.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட சின்ன வாய்க்கால் வீதியை மேம்படுத்தும் பணி மற்றும் வாய்க்கால் கல்வெட்டுகள் புதுப்பிக்கும் பணி, புதிய வாய்க்கால் கல்வெட்டுகள் அமைக்கும் பணி, பாதாள கழிவுநீர் தொட்டிகள் புதுப்பிக்கும் பணி உள்ளிட்ட பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.3 கோடியே 81 லட்சம் நிதி உதவியுடன் நடைபெறுகிறது.

    புதுவை பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்ட பிரிவு மூலம் பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜை அண்ணாசாலை சின்ன வாய்க்கால் வீதி இணைப்பு பகுதியில் நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கி பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். அமைச்சர் லட்சுமிநாராயணன், நேரு எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அரசு செயலரர் அருண், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், பொதுப்பணித்துறை நீர் பாசன பிரிவு செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதார செயற்பொறியாளர முருகானந்தம், உதவி பொறியாளர் சம்பந்தம், இளநிலை பொறியாளர் கணேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • புதுவை முத்தியால்பேட்டை காந்தி வீதி எம்.எஸ்.அக்ரகாரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
    • ரூ.2½ லட்சத்துக்கான காசோலையை முதல்- அமை ச்சர் ரங்கசாமி வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை காந்தி வீதி எம்.எஸ்.அக்ரகாரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்துக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி வழங்க ெதாகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் நடவடிக்கை எடுத்தார். அதன்பே ரில் மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2½ லட்சத்துக்கான காசோலையை முதல்- அமை ச்சர் ரங்கசாமி வழங்கினார். அப்போது அரசு கொறடா ஏ.கே .டி.ஆறுமுகம், பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.

    • முதலியார்பேட்டை தொகுதி சுதானா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் வகையில் குடிநீர் குழாய்கள் நீர் வந்து குழாய்கள் மற்றும் சாலைகள் மறுசீரமைப்பு பணி ரூ.14.28 கோடி மதிப்பில் மத்திய அரசின் அம்ருத் நிதி உதவியுடன் நடைபெற உள்ளது.
    • முதலி யார்பேட்டை தொகு திக்குட்பட்ட உழந்தை ஏரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி மதிப்பில் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பூமி பூஜையை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை தொகுதி சுதானா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் வகையில் குடிநீர் குழாய்கள் நீர் வந்து குழாய்கள் மற்றும் சாலைகள் மறுசீரமைப்பு பணி ரூ.14.28 கோடி மதிப்பில் மத்திய அரசின் அம்ருத் நிதி உதவியுடன் நடைபெற உள்ளது.

    அதற்கான பூமி பூஜை முதலியார்பேட்டை நாகாத்தம்மன் கோவில் அருகே நடைபெற்றது. முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன், சம்பத் எம்.எல்.ஏ. ஆகியோர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

    இந்த திட்டத்தின் மூலம் சுதானா நகர், முருங்கப்பாக்கம், துலுக்கானத்தம்மன் நகர், சுகாதார ஊழியர்கள் காலனி, திவான் கந்தப்பா நகர், வள்ளலார் நகர், மறைமலைநகர், அரவிந்தர் நகர், பாரதியார் நகர் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள மக்களுக்கு தரமான உரிய அழுத்துத்துடன் குடிநீர் வினியோகிக்கப்படும்.

    இதேபோல் முதலி யார்பேட்டை தொகு திக்குட்பட்ட உழந்தை ஏரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி மதிப்பில் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பூமி பூஜையை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பொதுப்ப ணித்துறை செயலர் அருண், தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் முருகானந்தம், நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் ரங்கராஜ் மற்றும் முதலியார் பேட்டை தொகுதி முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×