search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வாய்க்கால்- கழிவுநீர் தொட்டி புதுப்பிக்கும் பணி-முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
    X

    வாய்க்கால்-கழிவுநீர் தொட்டி புதுப்பிக்கும் பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், நேரு எம்.எம்.ஏ. ஆகியோர் பூமி பூஜை செய்து வைத்த காட்சி.

    வாய்க்கால்- கழிவுநீர் தொட்டி புதுப்பிக்கும் பணி-முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

    • உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட சின்ன வாய்க்கால் வீதியை மேம்படுத்தும் பணி மற்றும் வாய்க்கால் கல்வெட்டுகள் புதுப்பிக்கும் பணி, புதிய வாய்க்கால் கல்வெட்டுகள் அமைக்கும் பணி, பாதாள கழிவுநீர் தொட்டிகள் புதுப்பிக்கும் பணி உள்ளிட்ட பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.3 கோடியே 81 லட்சம் நிதி உதவியுடன் நடைபெறுகிறது.
    • புதுவை பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்ட பிரிவு மூலம் பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜை அண்ணாசாலை சின்ன வாய்க்கால் வீதி இணைப்பு பகுதியில் நடந்தது.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட சின்ன வாய்க்கால் வீதியை மேம்படுத்தும் பணி மற்றும் வாய்க்கால் கல்வெட்டுகள் புதுப்பிக்கும் பணி, புதிய வாய்க்கால் கல்வெட்டுகள் அமைக்கும் பணி, பாதாள கழிவுநீர் தொட்டிகள் புதுப்பிக்கும் பணி உள்ளிட்ட பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.3 கோடியே 81 லட்சம் நிதி உதவியுடன் நடைபெறுகிறது.

    புதுவை பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்ட பிரிவு மூலம் பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜை அண்ணாசாலை சின்ன வாய்க்கால் வீதி இணைப்பு பகுதியில் நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கி பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். அமைச்சர் லட்சுமிநாராயணன், நேரு எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அரசு செயலரர் அருண், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், பொதுப்பணித்துறை நீர் பாசன பிரிவு செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதார செயற்பொறியாளர முருகானந்தம், உதவி பொறியாளர் சம்பந்தம், இளநிலை பொறியாளர் கணேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×