search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ceremony"

    • விஜயதசமி தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
    • வீடுகள்,தொழிற்சாலைகள், கடைகளில் ஆயுத கருவிகள், வாகனங்களுக்கு படையலிட்டு வழிபாடு நடைபெற்றது

    அரியலூர்,

    விஜயதசமி தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.நவராத்திரி பண்டிகை கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் அம்மன் 9 வது நாளான திங்கள்கிழமை சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. இதையொட்டி வீடுகள்,தொழில்சாலைகள், கடைகளில் ஆயுத கருவிகள், வாகனங்களுக்கு படையலிட்டு வழிபாடு நடைபெற்றது.

    10 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த நாளில் கல்வியை தொடங்கினால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம்.

    அதன்படி அரியலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் குழந்தைகளை பெற்றோர் ஆர்வமுடன் சேர்த்தனர். மேலும் கோயில்களில் நெல்மணி, அரிசியை பரப்பி அதில் குழந்தைகளை எழுதச்செய்து கல்வியை தொடங்கினர்.

    கல்லங்குறிச்சி கலியுகவரதராச பெருமாள் கோயில், அரியலூர் அலந்துறையார், கோதண்டராமசாமி, சுப்பிரமணியர் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதே போல் திருமானூர், கீழப்பழுவூர், செந்துறை, ஜயங்கொண்டம் உள்ளிட்ட பகுதியிலுள்ள பெருமாள், சிவன், அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    • மயிலம் கல்வி இயக்குனர் செந்தில் சிறப்புரை ஆற்றினார்.
    • மயிலம் செவிலியர் கல்லூரியின் துணை முதல்வர் அருணா நன்றி கூறினார்.

    புதுச்சேரி:

    மயிலம் கல்வி குழுமத்தின் ஓர் அங்கமான மயிலம் செவிலியர் கல்லூரி (பி.எஸ்.சி. நர்சிங்), துணை செவிலியர் படிப்பு (ஏ.என்.எம்.) மற்றும் சுகாதார ஆய்வாளர் (ஹெல்த் இன்ஸ்பெக்டர்) ஆகிய பிரிவுகளில் 5-ம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா நடைபெற்றது.

    விழாவில் தட்சசீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும் மயிலம் சுப்பிரமணிய சுவாமி கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநருமான தனசேகரன் தலைமை தாங்கினார்.

    செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலம் செவிலியர் கல்லூரி முதல்வர் தமிழ்செல்வி வரவேற்றார். மயிலம் கல்வி இயக்குனர் செந்தில் சிறப்புரை ஆற்றினார்.

    விழுப்புரம் சுகாதாரத்துறையின் இணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

    மேலும் விழாவில் மயிலம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் ராஜப்பன், மயிலம் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மெண்ட் முதல்வர் பாலகிருஷ்ணன் மற்றும் கல்வி குழுமத்தின் அனைத்து துறைத் தலைவர்களும், பேராசிரியர்கள் மற்றும் புதிய அறிமுக மாணவர்கள் , பெற்றோருடன் கலந்துகொண்டனர்.

    முடிவில் மயிலம் செவிலியர் கல்லூரியின் துணை முதல்வர் அருணா நன்றி கூறினார்.

    • கரூர் அரசு மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது
    • எனது மண் - எனது தேசம் என்னும் தலைப்பில் மாணவிகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி, பொன்காளியம்மன் கல்வியியல் கல்லூரி, அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் எனது மண் எனது தேசம் என்னும் தலைப்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினரும், அரசு மகளிர் கல்வி நிறுவனங்களின் தலைவருமான நடேசன் தலைமை தாங்கி விழாவினை தொடங்கி வைத்தார். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கோதை நடேசன், செயலாளர் என்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் ஏனோக் ஜெபசிங் பெட்போர்டு வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக நேரு யுவேந்திரா அமைப்பின் வட்ட பொறுப்பாளர் சிறப்புரையாற்றினார், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் தீதன், சரவணகுமார் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சங்கீதா நன்றி கூறினார் . நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்பட 150 பேர் கலந்து கொண்டனர்.

    • தான்தோன்றிமலை மலர் மெட்ரிக் பள்ளியில் சாரணர் இயக்க தொடக்க விழா நடைபெற்றது
    • அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

    கரூர்,

    தான்தோன்றிமலை மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாரத் சாரணர் இயக்கம் தொடக்க விழா நிகழ்ச்சி பள்ளி தாளாளர் பேங்க் சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட சாரணர் இயக்க செயலாளர் சாந்தி கலந்து கொண்டு இயக்கத்தை வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட சாரணர் இயக்க கமிஷனர் முத்துசாமி, சாரணர் மாவட்ட ஆர்கனைசிங் ஆணையர் வெங்கடேசன் மற்றும் கோபிகா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். பள்ளியின் முதல்வர் ஜெயசித்ரா அனைவரையும் வரவேற்றார். பள்ளி ஒருங்கிணைப்பாளர் தர்மலிங்கம் அனைவருக்கும் நன்றி கூறினார். இதில் சாரண இயக்கத்தினுடைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட சாரணர் இயக்க செயலாளர் சாந்தி அவர்கள் உறுதி மொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    • கரூர் மாவட்டத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள அஷ்டா தச புஜ மகாலெட்சுமி, துர்க்கா தேவி, சரஸ்வதிக்கு நவராத்திரி 6-வது நாளை முன்னிட்டு மகா அபிஷேக ஆராதனை அலங்கார சர்வ லோக ஷேமம் பிராத்தனை நடைபெற்றது.புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரிஅம்மன் கோவிலில் நவராத்திரி 6- நாளை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரிஅம்மனுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரிஅம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் சேமங்கி மாரியம்மன் கோவில், நன்செய் புகளூர் பாகவல்லி அம்பிகை கோவில், நொய்யலில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில், புன்னம் மாரியம்மன் ,பேரூர் அம்மன் கோவில்,திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை கோவில், மாரியம்மன் கோவில், நன்செய் புகளூர் பத்ரகாளி கண்டியம்மன் கோவில்,அத்திப்பாளையம் பொன்னாச்சி அம்மன், ,உப்பு பாளையம் மாரி யம்மன்,புன்னம் மாரியம்மன் ,பகவதி அம்மன்,பே ரூர்அம்மன், தவுட்டுப்பாளையம் மாரியம்மன் ,பகவதி அம்மன், குந்தாணி பாளையம் நத்தமேடு அங்காள பரமேஸ்வரி அம்மன், மற்றும் நொய்யல் சுற்றுவட்டார அம்மன் கோவில்களில் நவராத்திரி 6-வது நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. .இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • கறம்பக்குடி அரசு பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது
    • கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ, சின்னத்துரை கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கினார்

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவரும் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவருமான சிவ திருமேனிநாதன் தலைமை தாங்கினார். முன்னதாக அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ, சின்னத்துரை கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கினார். மேலும் அவர் பேசுகையில், அரசு வழங்கும் பயனுள்ள திட்டங்களினால் மாணவ மாணவியர்கள் பயன்பெற்று தங்களின் கல்வித் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.மேலும் நிகழ்ச்சியில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் ராஜேஸ்வரி, கறம்பக்குடி நகர தி.மு.க. செயலாளரும் பேரூராட்சி தலைவருமான முருகேசன் அட்மா சேர்மன் முத்து கிருஷ்ணன் , பேரூ ராட்சி துணைத் தலைவர் நைனா முகமது, பள்ளி மேலாண்மை குழு தலைவர் கமலம் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பள்ளியின் ஆசிரிய ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • பொன்னமராவதி சோழீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழாவில் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது
    • சோழீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் சீர்வரிசைகளை எடுத்துவந்தனர்

    பொன்னமராவதி,

    பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் 6ம் நாள் நிகழ்வாக மீனாட்சி திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது.இதனை முன்னிட்டு சித்திவிநாயகர் கோயிலிலிருந்து சோழீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் சீர்வரிசைகளை எடுத்துவந்தனர். தொடர்ந்து வைரவன் சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வழிநடத்த மீனாட்சி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.அதுபோல பொன்னமராவதி நாச்சியம்மன் கோயில், கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் சிறப்பு வழிபாடும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    • நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கி ணைப்பாளர் மதிவாணன் ஆகியோர் முகாம் குறித்து நோக்க உரையாற்றினர்.
    • நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அன்பு மொழி நன்றி கூறினார். தமிழ் விரிவுரையாளர் சுந்தரி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் 7 நாள் முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வந்தது.

    முகாம் நிறைவு நாள் விழாவில் புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் கலந்துகொண்டு மாணவி களிடையே சிறப்புரை யாற்றினார்.

    முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் தெய்வகுமாரி வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் முதல்வர் எழில் கல்பனா தலைமை தாங்கினார். மாநில நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் டாக்டர் சதீஷ்குமார் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கி ணைப்பாளர் மதிவாணன் ஆகியோர் முகாம் குறித்து நோக்க உரையாற்றினர்.

    பள்ளியின் தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி மற்றும் பள்ளியின் பொறுப் பாசிரியரும் வேதியியல் விரிவுரையாள ருமான செம்பியன், ஓவிய ஆசிரியர் பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவி களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நெருப்பூட்டுதல் நடைபெற்றது. முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அன்பு மொழி நன்றி கூறினார். தமிழ் விரிவுரையாளர் சுந்தரி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

    விழாவிற்கான ஏற்பாடு களை நாட்டு நல பணி திட்ட அலுவலர் மனையியல் விரிவுரையாளர் தெய்வ குமாரி செய்திருந்தார்.

    • 10 மணி முதல் 12 மணி வரை பூரணாங்குப்பத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது.
    • அப்துல்கலாமின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு இந்த வகுப்புகள் தொடங்கியதாகவும் அவர் கூறினர்.

    புதுச்சேரி:

    உலக தமிழ் வளர்ச்சி மன்றம், உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் ஆகியவை இணைந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச திருக்குறள் புத்தகம் வழங்கி, முற்றோதல் பயிற்சி தொடக்க விழா இன்று பூரணாங்குப்பத்தில் நடந்தது. இதில் அரசுப் பள்ளியில் 3-ம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கு பெற்றனர். இதனை தொடர்ந்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தோறும் 10 மணி முதல் 12 மணி வரை பூரணாங்குப்பத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது.

    இதற்கான தொடக்க விழா இன்று காலை பூஜையுடன் தொடங்கியது. இதில் முன்னாள் ராணுவவீரர் நந்தா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கோவில் நிர்வாக அதிகாரி பாஸ்கரன், ஊர் பிரமுகர்கள் புருஷோத்தமன், ஜெயபால், வெங்கடேசன், கார்த்தி, மதி கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உலக திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் பயிற்சியாளர் சங்கீதா கண்ணன் இந்த பயிற்சி வகுப்பை நடத்தி வருகின்றார். இதில் ஸ்டாலின்,மோகன், மணி, தளிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விடுமுறை நாட்களில் மாணவர்கள் செல் போனில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

    அதிலிருந்து அவர்களை வெளி கொண்டு வரும் விதமாக இந்த விழிப்புணர்வு முற்றோதல் வகுப்புகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.   அப்துல்கலாமின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு இந்த வகுப்புகள் தொடங்கியதாகவும் அவர் கூறினர்.

    • அரியலூரில் நவராத்திரி விழா தொடங்கியது
    • அம்மன் கோவில்களில் வைக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகளை பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஆராதனை செய்தனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் நவராத்திரி விழா நேற்று முதல் தொடங்கியது. இதையொட்டி ஆலந்துறையார் கோவிலில் தபஸ்காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் கோவிலில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், அரியலூர் கோதண்டராமசாமி கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களில் வைக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகளை பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஆராதனை செய்தனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    • முகாமில் நாட்டு நலப்பணி திட்டத்தின் முக்கியத்துவம், வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
    • என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர்கள் டேவிட் செயின்ட் அந்தோணி, சசி கலா மற்றும் ஆசிரியர்கள் ராஜேஷ் கண்ணா, சுருதி ஆகியோர் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுச் சேரி அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி மாண வர்களுக்கு வீராம்பட்டி னம் குடியிருப்பு பகுதியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் கடந்த 30-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை நடந்தது.

    முகாமை நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரிகள் சதீஷ்குமார், மதிவாணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

    முன்னதாக பள்ளி துணை முதல்வர் செல்வநாதன் வரவேற்றார். இம் முகாமில் நாட்டு நலப்பணி திட்டத்தின் முக்கியத்துவம், வாழ்க்கையில் ஏற்ப டுத்தும் தாக்கம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    பிறகு மாணவர்கள் அப்பகுதி மக்களிடம் அவர்களின் உடல், மனம், கல்வி சார்ந்த முன்னேற்றம் குறித்து விளக்கினர். மேலும், மக்களின் குடும்ப வருமானம், கல்வித்தகுதி கள் குறித்து கணக்கெடுப்பு, டெங்கு தடுப்பு பற்றிய விழிப்புணர்வு, மருத்துவ முகாம், துப்புரவு பணி, பனை மரக்கன்றுகள் நடு தல் உள்ளிட்ட சமூக பணி யில் ஈடுபட்டனர்.

    முகாமின் நிறைவு விழாவில் முன்னாள் கவுன்சிலர் சக்திவேல், மருந்தியல் கல்லூரியின் முதல்வர் கோபால், அமலோற்பவம் குழுமத்தின் நிறுவனரும், தாளாளரும், முதுநிலை முதல்வருமான லூர்து சாமி, பள்ளியின் முதல் வர் ஆன்டோனியோஸ் பிரிட்டோ ஆகியோர் கலந்து கொண்டு மாண வர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர்கள் டேவிட் செயின்ட் அந்தோணி, சசி கலா மற்றும் ஆசிரியர்கள் ராஜேஷ் கண்ணா, சுருதி ஆகியோர் செய்திருந்தனர்.

    • இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா கடந்த 4-ந் தேதி சுதர்சன ஹோமம் திருமஞ்சனத்துடன் தொடங்கியது.
    • இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரமோற்சவ விழா நடைபெறும். அப்போது திருப்பதியில் நடப்பது போன்று சிறப்பு பூஜையும், அர்ச்சனையும் நடக்கும். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா கடந்த 4-ந் தேதி சுதர்சன ஹோமம் திருமஞ்சனத்துடன் தொடங்கியது.

    விழாவில் தினமும் சாமிக்கு திருப்பதி ஏழுமலையானுக்கு நடப்பது போன்று பூஜையும், தினம் ஒரு வாகனத்தில் வீதியுலாவும் நடக்கிறது. இந்த நிலையில் 7-ம் நாளான நேற்று இரவு வரதராஜப்பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து வீதி உலாவும் நடைபெற்றது இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்

    ×