நாட்டு நலப்பணி திட்ட நிறைவு விழா

நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கி ணைப்பாளர் மதிவாணன் ஆகியோர் முகாம் குறித்து நோக்க உரையாற்றினர்.நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அன்பு மொழி நன்றி கூறினார். தமிழ் விரிவுரையாளர் சுந்தரி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட நிறைவு விழா  நடந்த போது எடுத்த படம்.
அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட நிறைவு விழா  நடந்த போது எடுத்த படம்.
Published on

புதுச்சேரி:

முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் 7 நாள் முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வந்தது.

முகாம் நிறைவு நாள் விழாவில் புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் கலந்துகொண்டு மாணவி களிடையே சிறப்புரை யாற்றினார்.

முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் தெய்வகுமாரி வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் முதல்வர் எழில் கல்பனா தலைமை தாங்கினார். மாநில நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் டாக்டர் சதீஷ்குமார் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கி ணைப்பாளர் மதிவாணன் ஆகியோர் முகாம் குறித்து நோக்க உரையாற்றினர்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி மற்றும் பள்ளியின் பொறுப் பாசிரியரும் வேதியியல் விரிவுரையாள ருமான செம்பியன், ஓவிய ஆசிரியர் பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவி களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நெருப்பூட்டுதல் நடைபெற்றது. முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அன்பு மொழி நன்றி கூறினார். தமிழ் விரிவுரையாளர் சுந்தரி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

விழாவிற்கான ஏற்பாடு களை நாட்டு நல பணி திட்ட அலுவலர் மனையியல் விரிவுரையாளர் தெய்வ குமாரி செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com