search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bike accident"

    • டிரைவர் கைது
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த மேடல் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது 37). கட்டிட மேஸ் திரி. இவரது மனைவி ரூபா வதி (30). தம்பதிகளுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.

    கணவன்- மனைவி சாவு

    தீனதயாளன் நேற்று மாலை அவரது மனைவி ரூபாவதியுடன் வேடல் காந்திநகரில் இருந்து பைக்கில் அரக் கோணம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது சோளிங்கரில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த சரக்கு ஆட்டோ முன்னால் சென்று கொண்டிருந்த தீனதயாளனின் பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தீனதயாளன் மற்றும் அவரது மனைவி ரூபாவதி ஆகிய இருவ ரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    டிரைவர் கைது

    இதில் கணவன், மனைவி இருவ ரும் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரக்கோ ணம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய சோளிங்கரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமது சலீம் (22) என்பவரை கைது செய்தனர். மேலும் இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி மலர்க்கொடி. இவர்களுக்கு சரவணன், குகன் (வயது 27), என்ற மகன்களும், ஜெயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

    சரவணனுக்கும், ஜெயலட்சுமிக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். குகன் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். குகனுக்கு திருமணம் செய்வதற்காக பெற்றோர் பெண் பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் இன்று நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. இதற்காக நேற்று குகன் ஆற்காட்டில் உள்ள உறவினர்களுக்கு சொல்ல தனது பைக் மூலம் ஆற்காட்டிற்கு சென்றார்.

    பின்னர் ஆற்காட்டில் இருந்து ஆரணிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது போளூர் பைபாஸ் சாலையில் வரும்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் குகன் ஓட்டி பைக் மீது மோதியது. இதில் வாலிபர் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். பின்னர் அந்த வழியாக வந்தவர்கள் படுகாயம் அடைந்த குகனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து ஆரணி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் குகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து குகனை மோதிவிட்டு சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தலையில் பலத்த காயம் அடைந்து பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் அடுத்த சித்தஞ்சி கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி ஜோதி (வயது 50). இவர்களுக்கு அரிகிருஷ்ணன், கணேஷ், என 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் இவரது மூத்த மகன் அரிகிருஷ்ணன் மற்றும் அவரது தாயார் ஜோதி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் அமர்ந்திருந்த ஜோதி தவறி கீழே விழுந்ததில் பின் பக்க தலையில் பலத்த காயம் அடைந்தார்.

    படுகாயம் அடைந்த அவரை உடனடியாக 108 ஆம்பூலன்ஸ் மூலம் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு பரிசோதித்தபோது டாக்டர்கள் ஜோதி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    விபத்து குறித்து ஜோதியின் மகன் கணேஷ் (23) அவளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையை கடக்க முயன்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. அவரது மனைவி சந்திரா (வயது 47). இவர், கடந்த மாதம் 29-ந்தேதி ஆரணி-சேத்துப்பட்டு சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட் டார் சைக்கிள் திடீரென சந்திரா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சந்திரா சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவ மனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையிலும் சேர்க்கப்ப ட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் இறந்த சந்திராவுக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில், மூன்று மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. 4-வது மகளுடன் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குழந்தை சாலையை கடக்க உதவியபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி.

    இவரது மனைவி சின்னகுழந்தை (வயது 63). கணவன் - மனைவி இருவரும் ஆரணி அக்ரா பாளையம் சிறுமூர் சாலையோரம் பூ வியாபாரம் செய்து வந்தனர்.

    கடந்த 26-ந் தேதி பூ கடைக்கு சென்ற சின்னகுழந்தை சாலையை கடந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் காயமடைந்த அவரை ஆரணி அரசு மருத்து வமனை யில் சேர்த்து, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மகன் பழனி ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 பேர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    வேலூர் சைதா ப்பேட்டையை சேர்ந்தவர் முகமது காசிம் (வயது 26). சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் அருண்குமார் (23). இவர்கள் இருவரும் வேலூரில் உள்ள ஒரு சர்வீஸ் சென்டரில் வேலை செய்து வருகின்றனர்.

    இவர்கள் இருவரும் கம்ப்யூட்டர் சர்வீஸ் சம்பந்தமாக நேற்று மதியம் வாணியம்பாடி நோக்கி பைக்கில் சென்றனர்.

    குடியாத்தம் அடுத்த காரம் பட்டி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (45) கிராம நிர்வாக உதவியாளர். இவரது மகன் சுசில் குமார் (15). இவர்களது உறவினரான மாதனூர் அடுத்த பட்டுவாம் பாட்டியை சேர்ந்த பெருமாள் (35). கூலி தொழிலாளி. இவர்கள் 3 பேரும் மின்னூர் அடுத்த வீராங்குப்பம் சாமுண்டீஸ்வரி கோவில் திருவிழா பார்த்துவிட்டு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

    அப்போது மின்னூர் துணை மின் நிலையம் அருகே முகமது காசிம், அருண்குமார் ஓட்டி வந்த பைக்கும், சசிகுமார், சுனில் குமார், பெருமாள் ஆகியோர் வந்த பைக்கும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கும் , ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக பெருமாள் மற்றும் சசிகுமாரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சசிகுமார் மற்றும் பெருமாள் பரிதாபமாக இறந்தனர். மேலும் இது சம்பந்தமாக ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த கேட்டவரம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மனைவி சாந்தி (வயது 58). இவர் நேற்று வீட்டில் இருந்து ஆதமங்கலம் புதூர் செல்லும் சாலையில் நடந்து சென்றார்.

    அப்போது பின்புறமாக வந்த மோட்டார் சைக்கிள் அதிவேகமாக வந்து மோதியதில் சாந்தி படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    சம்பவம் பற்றி தகவல் அறிந்த கடலாடி போலீசார் சாந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    • கப்பலூர், தோப்பூர் ஆகிய பகுதி களில் உள்ள நான்கு வழி் சாலைகளில் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி அருகே உள்ள தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 53). தொழி லாளியான இவர் நேற்று இரவு மோட்டர் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார்.

    தனக்கன்குளம் 4 வழிச்சாலையை கடக்க முற்பட்டபோது அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கணேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் கணேசன் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அருப்புக்கோட்டையை சேர்ந்த பிரதீப் (23) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 பேரையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக இறந்தார். பிரதீப்புக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம், ஆஸ்டின் பட்டி, தனக்கன்குளம், கப்பலூர், தோப்பூர் ஆகிய பகுதி களில் உள்ள நான்கு வழி் சாலைகளில் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இதனால் உயிர் பலியும் ஏற்படுகிறது எனவே போலீசார் உரிய கவனம் செலுத்தி மேற்கண்ட பகுதிகளில் விபத்து நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வேகத்தடை மீது ஏறி இறங்கியபோது கீழே விழுந்தார்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ராமலிங்கம் அடிகள் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சுதா (வயது 32), இவர் ஆற்காடு பஸ் நிலையத்தில் பூக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை பிரபாகரன் சுதாவை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு திமிரியை அடுத்த வரகூர் கிராமத்திற்கு சென்றார். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஆற்காடு நோக்கி வந்தனர்.

    எலாசி குடிசை கூட்ரோடு அருகே வந்தபோது சாலையில் இருந்த வேகத்தடை மீது மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சுதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சுதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவிலுக்கு சென்று திரும்பிய போது விபத்து
    • போலீசார் விசாரணை

    வேட்டவலம்:

    வேட்டவலம் தேரடி வீதியை சேர்ந்த வர் சண்முகம். ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவரது மகன் அரிஹரன் (வயது 24), பொறியியல் பட்டதாரி.

    இவர் நேற்று முன்தினம் இரவு அருகே உள்ள கோவிலுக்கு சென்று வருவதாகபெற்றோரிடம் கூறி விட்டு பைக்கில் சென்றார். சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    இரவு 8.30 மணியளவில் வேட்டவலம் ராஜாஜி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வந்தபோது மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைத் தடுமாறி சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் படுகாயமடைந்த அரிஹரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அரிஹரன் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இதுகுறித்து அரிஹரனின் தந்தை சண்முகம் வேட்டவலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வெளியே சென்று வீடு திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை பஜார் தெருவை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 70) ஓய்வு பெற்ற போஸ்ட் மேன்.

    இவர் நேற்று பால் வாங்கி கொண்டு வீடு திரும்பும் போது பொன்னையில் இருந்து லாலாப்பேட்டை நோக்கி வந்த பைக் இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் படுகாயம் அடைந்த பத்மநாபனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலைக்கு சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி (வயது 42). இவர் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.

    இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் நேற்று வீட்டிலிருந்து மொபட்டில் வேலைக்கு புறப்பட்டார். பெல் பைபாஸ் மலைமேடு ரெயில்வே பாலம் அருகில் வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி மொப்ட் மீது மோதி யது.

    இதில் படுகாயம் அடைந்த ரஜினியை சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்தனர்.

    ஆனால் வழியிலேயே ரஜினி பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×