என் மலர்
உள்ளூர் செய்திகள்

பைக் மோதி முதியவர் பலி
- வெளியே சென்று வீடு திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை பஜார் தெருவை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 70) ஓய்வு பெற்ற போஸ்ட் மேன்.
இவர் நேற்று பால் வாங்கி கொண்டு வீடு திரும்பும் போது பொன்னையில் இருந்து லாலாப்பேட்டை நோக்கி வந்த பைக் இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயம் அடைந்த பத்மநாபனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






